Uncategorized

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு நவீன் K ,ஏழாம் வகுப்பு,மகரிஷி வித்யாமந்திர்,சென்னை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 1 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’:… (READ MORE)

Arumbugal-Mottugal, Uncategorized

எவர்க்ரீன் எல் ஆர் ஈஸ்வரி

நேற்றைய ப்ளாக்பஸ்டர் படம். பாலதண்டாயுதம் சித்தப்பா அதிகம் சிலாகித்தப் படங்களின் வரிசையில் பார் மகளே பார், பாச மலர், கௌரவத்திற்கு அடுத்து வரும் படம் இது. ஜில்ஜில் ரமாமணி, ரோசாரமணி ஆகிய இந்தப்பாத்திரத்தின் பெயர்களை ராஜவேலு – முத்தையா – சடாட்சரம் சித்தப்பாக்கள் மறக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். மனோரமா கதாபாரத்திரம் செய்த இதே பாட்டை… (READ MORE)

Uncategorized

எவர்க்ரீன் எல் ஆர் ஈஸ்வரி

நேற்றைய ப்ளாக்பஸ்டர் படம். பாலதண்டாயுதம் சித்தப்பா அதிகம் சிலாகித்தப் படங்களின் வரிசையில் பார் மகளே பார், பாச மலர், கௌரவத்திற்கு அடுத்து வரும் படம் இது. ஜில்ஜில் ரமாமணி, ரோசாரமணி ஆகிய இந்தப்பாத்திரத்தின் பெயர்களை ராஜவேலு – முத்தையா – சடாட்சரம் சித்தப்பாக்கள் மறக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். மனோரமா கதாபாரத்திரம் செய்த இதே பாட்டை… (READ MORE)

Uncategorized

இருவீட்டார் திருமணம்

ஊரார் இல்லாமல் உற்றார் இல்லாமல் சுற்றம் இல்லாமல் நட்பும் வாராமல் ‘இப்ப ஏன் வைக்கனும் கல்யாணத்தை’ என்றோரும்‘இப்ப எப்படி போவறது?’ என்றோரும் எவரும் வரமுடியாமல் பெண்ணையும் சேர்த்து பெண்வீட்டார் ஏழு பேர் அதேயளவு மாப்பிள்ளை வீட்டாரென அசல் ‘இருவீட்டார்’ திருமணமாக  போன திங்களன்றுநடந்தேறியதாம் சங்கரியின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள் கொரோனா காலங்களிலும் நடந்தேறுகின்றன. –… (READ MORE)

Uncategorized

மதுவில்லாத் தமிழகம்

மதுக்கடைகள் இல்லாமலிருந்தால் மடிந்துவிடுவார்கள் குடிமகன்கள், போதையில்லாமல் போனால் போதைக்குப் பழகியவர் பொலபொலவென விழுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். போதை தேடி ஜசோப்ரோபைல் ஆல்ஸகாலை, மருந்தக ஸபிரிட்டை குடிக்க முயன்று செத்தவர்கள் வெறும் பத்துப் பேருக்குக் கீழேதான் மொத்தத் தமுழ்நாட்டிலும். மீதி குடிமகன்கள் என்னவானார்கள்? முப்பத்தேழு நாட்களாய் குடியின்றிதானே முழுதாய் வாழ்கிறார்கள். அப்படியானால்… எந்த மருத்துவமும், எந்த ஆலோசனையும்… (READ MORE)

Uncategorized

மூச்சு

🌸🌸 சன்னலை அடித்துத் திறந்து உள்ளே சாரலை ஊற்றும் பெருங்காற்றோடும் பெருமழையோடும் விடிகிறது இக்காலை. சாலிகிராமத்திலிருந்து சாந்திதேவியும், ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து முத்துமாலையும் மழையை காணொளிப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள் அவரவர் மலர்ச்சி க்ரூப்புகளில்.… 🌸 கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வளர்ச்சிப்பாதை நேரலையின் காணொளிப்பதிவை இதுவரை 1494 பேர் பார்த்திருக்கிறார்கள். நெடுநாளாய் உள்ளிருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்ததென்றும்,… (READ MORE)

Uncategorized

‘இப்படியொரு திரைப்படத்தை தமிழில் எடுத்தால் திரையிடவிடுவோமா?!’ ‘ட்ரான்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

:அயல் சினிமா: மலையாளம் – தமிழ்: ‘துன்பம் தாளாமல் நான் தற்கொலை செய்துகொள்ள போகையில் என்னை நோக்கி குரல் வந்தது… ‘ஜோஷுவா!’ நான் எழுந்து பார்த்தேன்!’ ‘அழைத்தது யாரானும்?’ ‘ஜீசஸ்.. இறைவன் இயேசு நாதர்!’ ‘இயேசுவா!’ ‘ஆமாம் இயேசுவேதான்! ‘ஜோஷுவா, இந்த வாழ்வு நான் கொடுத்தது, அதை முடித்துக்கொள்ள உனக்கு உரிமையில்லை. நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்! எழுந்து… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,

ஊரடங்கு காலத்திலும்

இந்த ஊரடங்கு – வீட்டடங்கு காலத்தில் மட்டும் நடந்த மலர்ச்சி மாணவர்களுக்கான மூன்று வளர்ச்சிப்பாதைகள் நேரலை, கார்காத்தார் பிஸினஸ் ஃபோரம், கோவை – ஈரோடு – கரூர் டெக்ஸ்டைல்ஸ் அசோஸியேஷன் ஆகியவற்றிற்கான ‘மலர்ச்சி உரை’ நேரலை என இது வரை நேரடியாக 6,000 பேர் பார்த்திருக்கிறார்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.  ‘நிமிர்ந்து உட்காருகிறோம்! தெளிவாக புரிந்து கொண்டோம்,… (READ MORE)

Uncategorized

ஜெயகாந்தன்

அடுத்தது என்ன என்ற விறுவிறுப்பு, கதை சொல்லலில் கீழே வைக்க முடியா வண்ணம் சுவாராசியம், ‘ப்பா!’ என்று வியக்க வைக்கும் செறிவுள்ள வாழ்வியல் கருத்துக்கள், ‘பொளிச்’ என்று அறையும் நிதர்சனங்கள், ‘உணர்க்கை’ போன்ற வித்தியாச சொல்லாடல்கள், எல்லா இலக்கணங்களையும் உடைக்கும் கதாபாத்திரங்கள்… ஒவ்வொரு எழுத்தாளரும் இவற்றில் சிலவற்றைக் கொண்டிருப்பார்கள். ஒரே எழுத்தாளர் ஒரு நூலில் இத்தனையையும்… (READ MORE)

Uncategorized

தட்டைப் பயிரு

மதியத்திற்கு மனைவி செய்த தட்டைப்பயிறு குழம்பின்தட்டைப்பயிரை மட்டும் அள்ளிபோட்டு சூடு பண்ணிசாயந்திரம் தின்போமே! ஊட்டத்துக்கு ஊட்டமும் ஆச்சுவூட்டுக்கு உருப்படியாவும் ஆச்சு! #குவாரண்டைன்-அட்ராசிட்டீஸ் பரமன் பச்சைமுத்து 12.04.2020

Uncategorized

தினமலரில் வெளியான என் கட்டுரை

இன்று வெளியான தினமலரில் பதிப்பாகியுள்ளது என் கட்டுரை. இணைப்பு இதழ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மெயின் எடிஷனிலேயே ‘வாரமலர்’ பகுதியில் வெளியாகியிருக்கிறதாம். தினமலர் திருச்சி – மயிலாடுதுறை – நாகை – தஞ்சை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை பதிப்புகளில் வெளிவந்துள்ளது. வேலூர் பதிப்பிலிருந்து படமெடுத்து அனுப்பிய நமது மாணவர் குணசேகரனுக்கு… (READ MORE)

Uncategorized

சோப்பு நுரை

கை கழுவும் போது சோப்பு நுரை நீர்க்குழாயின் முனையில் பட்டுவிட்டால் கவனமாக சோப்பு நுரை போகும் வரை அதையும் கழுவி விடும் வழக்கம் கொண்டவன், இப்போதெல்லாம் சோப்பு நுரையை நீர்க்குழாயின் திருகு நாதாங்கி, கதவின் கைப்படி என எல்லாவற்றிலும் படட்டுமென  தடவி விடுகிறேன் சிரத்தையாக. கொரோனா காலம்! – பரமன் பச்சைமுத்துசென்னை09.04.2020 Facebook.com/ParamanPage

Uncategorized

என் சினிமா விமர்சனத்தை தினமலர் வெளியிட்டுள்ளது

‘அயலூர் சினிமா’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைவிமர்சனத்தை, தினமலர் இன்று வெளியிட்டுள்ளது. தினமலர் திருச்சி – தஞ்சை – நாகை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை – நாகை பதிப்புகளில் இது வெளியாகி உள்ளது. வாழ்க! – பரமன் பச்சைமுத்து

Uncategorized

தகப்பன் மனசு

‘அப்பா, டெல் மீ ஈஃப் திஸ் ஈஸ் டூ லைட். ஈஃப் த டேஸ்ட் ஈஸ் நாட் ஓக்கே, கிவ் இட் டு மீ, ஐ வில் ட்ரிங்க்’ ‘அது எப்படி இருந்தாலும் நான் குடிப்பேன் செல்லமே, நீ போட்டங்கறதுக்காகவே!’ மகள்கள் என்றதும் ஊற்று பெருக்கிறது தகப்பன்களுக்கு ##குவாரன்டைன்-நேர-களிப்புகள் பரமன் பச்சைமுத்து 04.04.2020

Uncategorized

புதிய வானம் காட்டும்

தினமலர் ஆசிரியர் குழுவிலிருந்து அழைப்பு. …. ‘பரமன் சார்.. கொரோனா பிரச்சினைல, ஏஜென்ட்ஸ் சப்ளிமெண்ட் பேப்பரே வேணாங்கறாங்க. ஞாயிறு மலர்லேருந்து எல்லாத்தையும் சுருக்கி ரெண்டு பக்கமாக்கி மெயின் எடிஷன்லே பிரிண்ட் பண்ணிடறோம்.  நீங்க நல்லா எழுதுவீங்க. இப்ப நிலைமைல பெரிய கட்டுரை வேண்டாம், போட முடியாது. சின்னதா வேணும். டைனி ஆர்ட்டிக்கிள்.  கொரோனா பத்தி் வேணவே… (READ MORE)

Uncategorized

விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் – நல்ல செய்தி!

இன்று விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் செய்திருக்கிறது அரசு. மிக மிக நல்ல செய்தி.  தர்ப்பூசணிப் பழங்களை, வெள்ளரிக்காய்களை இனி மனம் நொந்து வீதியில் கொட்ட மாட்டார்கள் விவசாயிகள். தவிர, தோட்டங்களில் விளைவது மக்களுக்குத் தொடர்ந்து சென்றால்தான் விவசாய உற்பத்தியாளர்கள் நுகரும் பொது மக்கள் என இருபுறங்களிலும் தொடர்ந்த சீரான இயக்கம் இருக்கும். பொருட்களும் கிடைக்கும்… (READ MORE)

Uncategorized

கப சுரக் குடிநீர் – கொரோனாவிற்கு

…… குத்தாலிங்கம்: பரமன், ஆக்னஸிடமிருந்து கேள்வி வந்திருக்கிறது. பதில் வேண்டும். Agnes Batch 47: I have got one (Kaba Sura Kudi neer). Please guide how to make the medicinal drink.….. பரமன்: கப சுர குடிநீர் என்பது சித்த மருத்துவத்தில் தரப்படும் முக்கிய மருந்து (கஷாயம்). நில வேம்பு… (READ MORE)

Uncategorized

, , ,

இந்தியா இரண்டு நிமிட கைதட்டல் – 22 மார்ச்

ஐந்தாக மூன்று நிமிடம் இருக்கையிலேயே கைதட்டத் தொடங்கிவிட்டனர் இங்கு பக்கத்து குடியிருப்பில். கைதட்டுங்கடான்னா, மாட்டுப் பொங்கல் கொண்டாடற மாதிரி, தட்டு கரண்டி வச்சி தட்றானுவோ இங்க சிட்டியில! நம்ம பழக்கத்துல வாய் உடனே ‘பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங கள்!’ன்னு கத்துது! 😀👏👏

Uncategorized

நல்ல படங்கள் சொல்லுங்களேன்.

கேள்வி: கொரோனோ வைரஸ் பிரச்சினையால் வீட்டில் அடைந்து கிடைக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைமில் பார்க்க நல்ல படங்கள் சொல்லுங்களேன். இது வரை வளர்ச்சியில் வி-டாக்கீஸில் சொல்லப்பட்டப் படங்களை பார்த்துவிட்டோம். பரமன்: சமீபத்தில் நான் பார்த்த நல்ல படங்கள் சிலவற்றை சொல்கிறேன். (இந்தப் படங்களின் பட்டியலை இப்போது நான் தந்தாலும், இந்த இதழ் அச்சாகி வெளிவரும் போது மார்ச் 31 ஆகியிருக்கும்…. (READ MORE)

Uncategorized

மருத்துவமனையில் புத்தகம்

காலையில் மருத்துவமனை வார்டின் உள்ளே நுழைகிறேன். நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலம் தேறி வரும் அம்மா மருத்துவமனை கவுன் அணிந்து பெட்டில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறார்.  நின்று கவனிக்கிறேன். சித்தி சொல்கிறார், ‘நேத்தி சித்தப்பா வச்சுட்டுப் போச்சி இல்ல, அந்த புக்!’ என்ன புத்தகம் என்று பார்க்கிறேன்…. (READ MORE)

Uncategorized

ரஜினி சொல்லியிருக்கலாம்

ரஜினி நிறைய சிந்தித்திருக்கிறார், வியூகம் செய்தார், கள ஆய்வு செய்தார் என்பதெல்லாம் சரி.  தனது திட்டங்களை, ஆசைகளை சொன்னதெல்லாம் நன்று. ஆனால், வரவில்லை என்றால் ‘வர மாட்டேன்!’ என்று தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். நேரடியாக ‘இதான் மேட்டரு!’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டும். ‘மக்கள்கிட்ட எழுச்சி வரணும், இல்லன்னா இது சாத்தியம் இல்ல!’ என்பதெல்லாம் சரியில்லை…. (READ MORE)

Uncategorized

,

wp-15836895900933147889544007306507.jpg

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு நாயகன், அவனுக்கு ஒரு நண்பன், அவன் மனதை ஈர்க்கும் ஒரு நாயகி, அவளுக்கு ஓர் தோழி. ஆண்கள் இரண்டு பேருக்கும் இந்த வேலை, பெண்களுக்கு அந்த வேலை என்று தொடங்கும் ஒரு திரைப்படத்தில், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய ரசிகர் ஒருவரால், அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்ன காட்சிகள் வருமென ஓரளவிற்கு… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

திருமணம் என்னும் நிக்கா

‘பரமன் சார் உங்கள பள்ளிவாசல்ல பாத்ததில அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு!’ ‘நீங்க ?’ ‘நான் அப்ளைடு சைக்காலஜி டீச்சர். உங்கள் வீடியோக்களை பாத்திருக்கேன்’… புரசை கார்டன் ஆயிஷா இல்லத்து ‘வலிமா நிக்கா’விற்காக அழைப்பின் பேரில் புரசைவாக்கம் பள்ளிவாசல் சென்றிருந்தேன்.  பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் அங்கீகரிக்கும் மத குருமார்களும் மௌலானக்களும் நிரம்பி வழிந்த… (READ MORE)

Uncategorized

பூமி சுழலவே செய்யும். நாள்கள் கழியவே செய்யும்.

உள்ளுணர்வு அலாரம் எழுப்ப துயிலெழுபவனுக்கு செல்லிடப்பேசியில் அடிக்கும் வெளி அலாரம் இரண்டாம் கட்ட ஏற்பாடே.  செல்லிடப்பேசி அலறியபோதும் கண் திறக்க இயலவில்லை இன்று. உடம்பு கொதிக்கிறது. ‘இன்னும் சில நிமிடங்கள் கொடேன்!’ என்று கண்களும் உடலும் கெஞ்சுகின்றன.  ‘ஐயப்பா ஸ்கூல்ல ப்ரோக்ராம் இருக்கு, கோட் அயர்ன் பண்ணனும். உடற்பயிற்சி, ஓஎம்ஆர் ட்ராஃபிக்…’ என அறிவு முணுமுணுத்தது…. (READ MORE)

Uncategorized

வியக்கிறேன்

‘அப்பா… அங்க பாரு, ஃப்ளைட் நிக்குது!’ விமான நிலைய வாயிலிலிருந்து ஓடுதளத்திற்கு பேருந்தில் வரும் போது, கண்ணாடியின் வழியே தூரத்தில் நிற்கும் விமானமொன்றைப் பார்த்து பரவசப்பட்டு கூச்சலிடுகிறான் சிறுவன். மொத்த பேருந்தும் புன்னகைக்கிறது. ‘அப்பா… அங்க பாரு கபாலி ஃப்ளைட்!’ ஸ்பைஸ்ஜெட் விமானமொன்றைப் பார்த்துக் கூவுகிறான். ‘அப்பா, நம்ம போற ட்ரூஜெட் எப்பப்பா வரும்?’ பேருந்து… (READ MORE)

Uncategorized

கங்கை கொண்ட சோழபுரம்

வணக்கம் பாலா. உண்மையாகவும் இருக்கலாம், பின்னே வந்தவர் தன் பார்வையில் பட்டதை ‘இதுதான் நிஜம்!’ என்று பரப்பியுமிருக்கலாம். பெருவுடையார் கோவில் ராஜராஜனின் ஆட்சியின் 25ஆம் ஆண்டின் 275ஆம் நாளில் கட்டி முடிக்கப்பட்டது. ராஜேந்திரனுக்கு அப்போது இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. சோழப்படை தலைவனாகவே ராஜேந்திரன் இருந்தான். இருவரும் ஒன்றாக 25 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கி.பி. 1014ல்… (READ MORE)

Uncategorized

கஃபே உடுப்பி ருச்சி

ஓர் உணவகத்தின் உள்ளே நிகழும் சிறு சிறு வெளிப்பாடுகளே போதுமானதாக இருக்கிறது, நம்மை கண்டு கொள்ள. இடப்பறம்: ‘மாவு இப்பத்தான் அரைக்கறாங்களா?’ சீருடையணிந்த பணியாளர் வருவதைக் கண்டு அவரிடம், ‘பூரி சுட்டுக் குடுக்கனும். நேரம் ஆவும் சரி. இட்லிக்கு என்னா? ஒரு இட்லி ஏன் இவ்ளோ நேரம்! இத்தனைப் பேர் வேலை பாக்கறீங்க, ஒரு இட்லிக்கு… (READ MORE)

Uncategorized

காலத்திற்கேற்ப…

பெரியாரின் கொள்கையிலிருந்து பிரிந்து அரசியல் இயக்கமாக உருவான அன்றிலிருந்து திமுகவின் வரலாற்றிலேயே இது நடந்ததில்லை என்கிறார்கள். இறைமறுப்பு, பகுத்தறிவு என்பதே கொள்கையாகக் கொண்டதால் இதுவரை நடந்த 9 மாநாடுகளிலும் கொடியேற்றித் தொடங்குவதே தொடக்கமாக இருந்தது. இப்போது திருச்சியில் நடந்த 10வது மாநாடு இதுவரை எப்போதும் இல்லாத முறையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு மங்கள இசை ஒலிக்கப்பட்டு… (READ MORE)

Uncategorized

wp-15801816657922380032534699239519.jpg

காகங்களின் மொழி

‘கா… கா…. கா…. கா….’ ‘அத்தை ஏன் இப்படி கத்துது அது? சாப்பாடு வச்சாச்சா?’ ‘தோ வைக்கறேன்!’ – அத்தை ‘கா… க்க்கா…’ ‘யேய்… சாதம் வச்சாச்சில்ல, நீ சாப்டேன். எல்லாரையும் கத்திக் கூப்பிடறியா!’ ‘ஏங்க நான் கிளம்பறேன்!’ மனைவி ‘க்கா… க்ரகா…கா’ ‘சோறு வைக்கலன்னு கத்தனே. இப்பதான் சோறு வச்சாச்சே, நீ சாப்டேன். ஏன்… (READ MORE)

Uncategorized

கை கொடுக்க வேண்டும் நாம்…

‘பரமன்… என் காலேஜ்மேட் எல்ஸா லீனா பத்து மாடி கட்டடத்திலிருந்து குதிச்சி தற்கொலை பண்ணிகிட்டாளாம். இப்பதான் நியூஸ்ல பாத்தேன். ஃபீலிங் பேட். டிப்ரஷன்ல இருந்தா, ட்ரீட்மெண்ட்ல இருந்தா, கணவனோட இல்ல, ஒரு குழந்தை வேற இருக்கு!  மலர்ச்சி அவளுக்குக் கெடைச்சிருந்தா, வாழ்க்கையே வேறய இருந்திருக்கும், எழுந்து நின்னு நிறைய செஞ்சிருப்பா!’ மலரவள் ஒருவரிடமிருந்து சற்று முன்… (READ MORE)

Uncategorized

மலர்ச்சி தினம் 2020

திருவண்ணாமலை, புதுச்சேரி, வேலூர், சேலம், பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை என பல இடங்களிலிருந்தும் வந்து குவிந்திருந்த மலரவர்களின் உண்மையான கொண்டாட்டங்களால் ‘மலர்ச்சி தினம் 2020’ மிகச் சிறப்பாக நடந்தேறியது ( 22.01.2020) ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஜனவரி 22ல் மலர்ச்சியைத் தொடங்கி வைத்த தந்தையை நினைத்து கொஞ்சம் நான் தடுமாற, நான் தடுமாறுவதை உணர்ந்து… (READ MORE)

Uncategorized

பெரும் நன்றி…

கலகலவென்று கதைத்துக் கொண்டு கஞ்சியின் கடைசி மிடறு குடித்தவர் அப்படியே உறைந்து சுய நினைவு இழந்தார் என்ற செய்தி கேட்டு ஊருக்குப் புறப்பட்டேன்.  புதுச்சேரியில் மருத்துவமனையில் வைத்து சில மணி நேரங்கள் போராடினோம். தந்தையின் அருகில் நின்று கதறுவதைத் தவிர இறைவனை வேண்டுவதைத் தவிர வேறெதுவும் இயலவில்லை அத்தருணங்களில்.  உடல் விட்டு உயிர் பிரிந்த அவ்வேளையில்… (READ MORE)

Uncategorized

அமாவாசை என்பது

‘அமாவாசை’ என்பது ஒரு வார்த்தை, மாதாமாதம் வரும் ஒரு நாள், நிலவு இல்லாத நாள்… தந்தையை இழக்கும் வரை நீத்தாரை நினைக்கிறேன். பரமன் பச்சைமுத்து சென்னை 24.01.2020 –

Uncategorized

திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு…

திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு, மன்னிக்கவும். இன்று மாலை உங்களுக்கு வளர்ச்சிப்பாதை வகுப்பு எடுத்திருக்க வேண்டும். சிவாகமப்படி மரபு செய்யும் வழக்கம் கொண்ட குடும்பத்தில் சிவலோக பதவி அடைந்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அடுத்த நாள் சமாதி பூசை செய்து விட்டால், அடுத்த வேலைகளில் ஈடுபடலாம். தீட்டு என்பதெல்லாம் இல்லை. என் பாட்டி இறந்து சிவாகம முறைப்படி… (READ MORE)

Uncategorized

20170507_184158.jpg

தந்தையை இழந்த தனயனாக

வந்தால் செல்வர் என்பது வாழ்வின் பெரும் விதி, நிலையாமை விதியே வாழ்வின் நிலைத்த விதி என்பதையெல்லாம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும், தோட்டத்தின் ஒவ்வொரு செடியும் மரமும் தந்தையை நினைவு படுத்துகின்றன, கையறு நிலையில் கண்ணீர் பெருக்கவே செய்கிறது. சென்னை – புதுவை – திருவண்ணாமலை – வேலூர் – மயிலாடுதுறை –… (READ MORE)

Uncategorized

, , , ,

wp-15776884944169090575625827339882.jpg

ஏவிசிசிபி அலுமினி் மீட் – பகுதி 1

‘AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ ஏதோ ஓர் இடத்தில் புள்ளி வைத்து இதைத் தொடங்கி வைத்த ஜி கே வனிதாவிற்கும், முரளிப்பிரகாஷுக்கும் எங்களது நன்றிகள்! திருவாரூரிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும், சென்னையிலிருந்தும் என பல மைல்கள் பயணித்து வந்த தோழிகளுக்கும், அவர்களை கொண்டு வந்து விட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் நன்றிகள். நாளை அதிகாலை பெங்களூருக்குவுக்கு… (READ MORE)

AVCCP, Uncategorized

, , , ,

முதியவரும் பதின்மரும்

‘ஃபேனைப் போட்டுகிட்டு தலையை சீவாங்கதிங்கன்னு சொன்னா கேக்கறதில்ல. வீடு முழுக்க முடி. சொன்னா அதுக்கு ஒரு வியாக்யானம் பேசுவாளுங்க. எல்லாம் பெரிய மேதாவிங்க!’ 😀 பதின்ம வயதுப் பெண்களும் முதிய பெண்மணியும் வீட்டிலிருந்தால், வீடு நிறைந்து விடுகிறது. நிறைய புன்னகைக்க சிரித்து மகிழ முடிகிறது. வாழ்க்கை உன்னதமானது 😀 – பரமன் பச்சைமுத்து சென்னை 17.12…. (READ MORE)

Uncategorized

எனது பதினோறாவது நூல்

கொண்டாடும் தருணமிது எனக்கு! நான் ஓர் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளுமளவிற்கு இன்னும் வரவில்லை, ஆனால் அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன், இறையருளால். இந்தப் பயணத்தில் ஒரு மைல் கல் இது என எண்ணுகிறேன். இன்று, என் பதினோராவது நூலை முழுதாக முடித்து அவர்களது வடிவில் அச்சேற்ற பதிப்பகத்தாரிடம் தந்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை பெரு மகிழ்ச்சியூட்டும்… (READ MORE)

Uncategorized

இன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது,

கடைசி வரிசையில் இருந்த அருண் சுப்பு ரங்கன், பாலகிருஷ்ணன், ஹரிஹரன், தேவநாதன் எல்லாம் வெகு தூரத்தில் இருப்பது போல ‘அரங்கு நிறைந்த’ வளர்ச்சிப் பாதை இன்று மாலை, புதுச்சேரியில். சிதம்பரத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் மலரவர்கள் கூடியிருந்தனர். வள்ளி விலாஸ் ரமேஷ், சதீஷ் (விநாயக முருகன் பேக்கரி), வெங்கட லட்சுமி, சூர்யா என்டர்ப்ரைஸ்ஸ் ரமேஷ், நித்யரமா… (READ MORE)

Uncategorized

தானாய் நடைபெறும் சுவாசம்

உடலை உற்றுக் கவனிப்பதில் ஒன்று புரிகிறது. நம்மால் உணரமுடியா அதிசயங்கள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தேறுகின்றன. நாசியின் வழியே உள் நுழைந்து உடலியக்கத்திற்கு உறுதுணையாய் நிற்கும் காற்று ஓர் அதிசயம். அதைக் கொண்டு உடல் செயல்படும் விதம் ஓர் அதிசயம். மூச்சுப் பயிற்சியில் காற்றை இழுத்தல் – நிரப்பி நிறுத்தல் – வெளியேற்றுதல் தாண்டி – வெற்றிடத்தை… (READ MORE)

Uncategorized

சென்னை சிறந்த நிலையில்

மழை, மழைக்குப் பின்பான மஞ்சள் வெய்யில், ஏரி குளங்களில் நீர், பச்சைப் பசேலென்று கிளர்ந்து நிற்கும் மரங்கள், மகிழ்ச்சியாய் வட்டமிடும் பறவைகள், கட்டுக்குள் வளி மாசு, மின் விசிறி கூடத் தேவையில்லா தட்பவெப்பம் என சிறந்த கார்த்திகை சென்னையில்! வாழ்க! 09.12.2019

Uncategorized

இந்தூரில் தொடங்கிய அதிசயம் இந்தியாவெங்கும் நிகழட்டும்!

அதிசயங்கள் பல நேரங்களில் சாமானியர்களால் நிகழ்த்தப் படுகின்றன. ஒரு மாவட்ட ஆட்சியரும் அவரது அத்தனை ஊழியர்களும், நகரின் மாநகராட்சி ஆனையரும் அவரது அனைத்துப் பணியாளர்களும் வாரத்தில் ஒரு நாள் தங்களது வாகனங்களைப் பயன்படுத்தாமல் அரசுப் பேருந்தில் மட்டுமே பயணிப்போம் என்று முடிவெடுத்து செயல்படுத்தினால் எப்படியிருக்கும்! மக்களும் இணைவார்கள்தானே! மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் வாரத்தில் வெள்ளிக்கிழமைதோரும்… (READ MORE)

Uncategorized

, ,

அந்தக் கையை தொட்டுப் பாக்கணும், இப்படிக் கொடுங்களேன்

நாம் அசந்து போய் நிமர்ந்து பார்க்கும் ஆளுமைகளை சட்டென்று அருகில் நிறுத்தி வியப்பிலாழ்த்தி விடுகிறது வாழ்க்கை. சுஜாதா, வண்ணதாசன், நாஞ்சில் நாடன், வாலி, வைரமுத்து, எஸ் ராமகிருஷ்ணன், சிட்னி ஷெல்டன் (ரா கி ரங்கராஜன் வழியே) என பலரை எனக்கு முதல் அறிமுகம் செய்து வைத்ததற்காக குமுதத்திற்கும் விகடனுக்கும் நான் பெரும் நன்றிக் கடன்பட்டவன். அப்படி… (READ MORE)

Uncategorized

சென்னை மழை மனிதர்கள்

சென்னையில் பெய்யும் கனமழையால் அரும்பாக்கத்தின் பாஞ்சாலி அம்மன் கோவில் பின்புறமுள்ள தாழ்வான பகுதியில் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியேறவே முடியாத மக்களை மனதில் கொண்டு இன்று அதிகாலையில் வீடுவீடாகச் சென்று பால் பாக்கெட், சேமியா / ரவை பாக்கெட்டுகள் / காய்கறி அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெயர் தெரியாத அந்தத் தன்னார்வத் தொண்டர்களுக்கு… மலர்ச்சி வணக்கம்…. (READ MORE)

Uncategorized

சிங்கத்தின் கோட்டையில்..

கடல் மட்டத்திலிருந்து 4320 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வந்து ஏறுவதற்குக் காரணம், முக்கிய நிகழ்வுகள் திருப்புமுனைகள் நடந்த வரலாற்றுச் சின்னமிது என்பதால் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மலையேற்றத்தைப் போலல்லாமல் எவ்வளவு ஏறினாலும் உடல் நடுங்கினாலும் மூச்சிறைத்தாலும் வியர்க்கவே வியர்க்காத வெப்ப நிலை, இந்த உயர்ந்த மலையைச் சுற்றி எல்லா… (READ MORE)

Uncategorized

யோகாவைத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்

‘யோகப் பயிற்சியை தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நான் அடிக்கடி சொல்வதற்குக் காரணம் அது மதமோ கடவுளோ தந்தது எனும் பொருள் கொண்டு அல்ல, அது கொடுக்கும் உணர்வையும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கண்டு அசந்து சொல்வது அது. நாள் தவறாது தினம் யோகப்பயிற்சி செய்யும் தந்தையைப் பார்த்தே வளர்ந்தவனாகையால், அதன் பால் கொண்ட ஈர்ப்பு… (READ MORE)

Uncategorized

சன்னல்கொத்தி

இரண்டு நாட்களுக்கு முன்பு என் பால்கனிக்கு வெளியே மாமரக்கிளையை கொத்திய மரங்கொத்தி, இன்று காலை என் அடுக்கக் குடியிருப்பின் மூன்றாம் தளத்து வீடொன்றின் சன்னலைக் கொத்தியது. ‘அப்பா… அப்பா, அங்க பாரு!’ என்று என் மகள் அன்று காட்டிய போது மாட்டாத அந்த மஞ்சள் அழகி, இன்று காலை ஓட்டப்பயிற்சி முடித்துவிட்டு வந்து பாதாம் மரத்தடியில்… (READ MORE)

Uncategorized

பாலாறு

தமிழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கிலோ மீட்டர் அளவு அகலம் கொண்ட ஓர் ஆற்றைக் கடக்கிறோமென்றால், அதிக பட்ச வாய்ப்பு அது பாலாறாக இருக்கலாம். சென்னைக்கும் – இடைக்கழிநாடு, காத்தான்கடை மரக்காணம் பகுதிக்கும் இடையே எப்போதும் மணல்வெளியாகவே காட்சி தரும் பாலாற்றில் இன்று நீர் இருப்பதைக் கண்டு இறங்கி விட்டேன். ஆந்திரத்திலிருந்து வந்து ஓடும்… (READ MORE)

Uncategorized

போட்றா டிக்கெட்ட…

இவ்வளவு ஆண்டுகள் எல்லாம் பார்த்த பிறகும் செய்த பிறகும், சாலையோரத்தில் பஸ் நிறுத்தத்தின் அருகில் பதற்றத்தோடு நிற்கும் ஆட்களோடு வரிசையில் நின்று நகர்ந்து நகர்ந்து இண்டர்வ்யூக்குப் போனால் எப்படியிருக்கும்? ….. அமெரிக்க விசாவிற்காக, சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகில் கிட்டத்தட்ட சஃபையர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தையும் தாண்டிய நீண்ட வரிசையில் வெய்யில் பனி மழை பாராமல்… (READ MORE)

Uncategorized

மகளிர் கால்பந்து படம்

மகளிர் ஹாக்கியை மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதையில் பயிற்சியாளராக ஷாருக்கான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சக்தே’. அதே கதையை மகளிர் ஹாக்கிக்குப் பதில் மகளிர் கால்பந்தாக மாற்றி, பயிற்சியாளராக வருபவருக்கு சில ஆக்‌ஷன் மசாலா சங்கதிகள் சேர்த்து அரைத்து, கூடவே சில கிளை கதையொன்றையையும் பின்னி வைத்தால்… அது ‘பிகில்’ ஆக… (READ MORE)

Uncategorized

தண்ணீர் தேங்கி நின்றால்

தண்ணீர் தேங்கி நிற்கிறதென்றும் சூழலை ஒழுங்காக வைத்திருக்கவில்லையென்பதாலும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறது ஒரு பள்ளிக்கு. ‘தண்ணீர் தேங்கியுள்ளது’ என்று சென்ற ஆண்டு இப்படி டெங்கு அபராதங்கள் விதித்த சில நாட்களில் மழை வந்து ஊரே தண்ணீர்க்காடாகி கிடந்தது, ‘உங்களுக்கு யாரு இப்ப அபராதம் போடறது?’ என்று மக்கள் நினைக்கும் படியானது. அபராதம்… (READ MORE)

Uncategorized

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்

நான் ஓர் ஆசிரியன், வாழ்வியல் பயிற்சியாளன். வளர்ச்சியைக் கண்டுபிடித்து நல்லதைக் கண்டுபிடித்து அடுத்தவர்க்கு விருது வழங்கி மகிழ்வித்து மகிழ்பவன். விருது வழங்கப்படும் எத்தனையோ விழாக்களில் விருதாளர்களையும் அங்கம் வகிப்போரையும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை நோக்கி நகர வைக்க உரை நிகழ்த்துபவன். கலந்து கொள்ளும் இடங்களில் உரையாற்றி முடிந்ததும் அவர்கள் பெயரும் எனது பெயரும் பொறித்த ‘ஷீல்டு’ நினைவுப்… (READ MORE)

Uncategorized

இழந்ததை நினைத்து அல்ல, கிடைத்ததை நினைத்து…

08.20க்கு என் விமானம், 07.20க்கு நான் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். எனக்கு முந்தைய பேச்ணாளர்களால் நிகழ்ச்சி தாமதமாகி நான் என் மலர்ச்சி உரையை முடிப்பதும் குறித்த நேரம் தாண்டிப் போனது. நிகழ்ச்சி முடித்து என்னைக் காரிலேற்ற லீ மெரீடியனிலேயே 07.05 ஆகிவிட்டதால் அடித்துப் பிடித்து ஓட்டி வந்தார் டிரைவர். ஓடி வந்து போர்டிங் பாஸ்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே ஆரூடம் சொல்பவருக்கு, உலக நிதர்சனம் சொல்ல வேண்டியிருந்தது

‘இருவது நிமிஷத்துல நாலு பேருட்ட நாலு வாட்டி சொல்லிட்டேன். அதுக்கப்புறந்தான் தண்ணி தர்றீங்க. வந்து உக்காந்த உடனே தண்ணி வைக்கனும். அதுதான் சர்வீஸு. சாப்பாடு நல்லாருக்கு. காப்பி அருமை. ஆனா, தண்ணி தர மாட்றீங்க. முதல்ல ஒரு க்ளாஸ் தண்ணி தரனும்! முதல்ல தண்டி தம்ளர்ல…’ ஒரு வரியில் வெளிப்படுத்த வேண்டிய இந்த சங்கதியை ஒன்பதே… (READ MORE)

Uncategorized

தமிழ் தமிழகப் பற்று!

சீன அதிபர் ஜீ ஜின் பிங்கின் இந்திய வருகையை சென்னையையொட்டிய மாமல்லபுரத்தில் நடத்துவதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க முயல்கிறார் பிரதமர் மோடி. வழக்கமாக தில்லியில் நடைபெறும் இத்தகைய சந்திப்புகள் தெற்கே தமிழகத்தில் நிகழ்த்தப்படுவதற்கு இரு காரணங்கள். ஒன்று – சீன அதிபர் தில்லியில் இறங்கியதும் அவர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் தலாய்… (READ MORE)

Uncategorized

எப்போதும் vs எப்போதாவது

திருவண்ணாமலைக்கு பயணித்த வழியில் தேநீருக்கு இறங்கிய திண்டிவனம் நெடுஞ்சாலைத் தேநீர் கடையில் எவரோ ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஏ… ஒரு மாசம்… ஒரு மாசம் ஃபுல்லா எதுவும் தொட மாட்டோம் பாத்துக்க. பொரட்டாசி மாதம்! முழு சுத்தமா இருப்பமே நாங்க!’ ‘நாங்க கூடத்தான், சபரிமலைக்கு மாலை போடும் போது!’ …. ‘எப்பவுமே எல்லா மாசமுமே… (READ MORE)

Uncategorized

அளவில்லாமல் அடாவடி செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்! : பரமன் பச்சைமுத்து 

திருச்சியில் உள்ள ஒரு நகைக் கடையொன்றில் இரவில் கன்னம் வைத்து கொள்ளை நடந்துள்ளது என்ற ஒரு செய்தி படங்களோடு முதலில் கட்செவியஞ்சலிலும் ஊடகங்களிலும் அடுத்த நாள் செய்தித் தாள்களிலும் வந்தன. முகமூடியணிந்த கொள்ளையர்களின் கண்காணிப்புக் கேமரா படங்கள், துளையிட்ட சுவரின் படம் என எல்லாமே வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டன. அடுத்த நாள் கடையின் உரிமையாளர் சென்னையிலிருந்து… (READ MORE)

Uncategorized

தினம் காமராஜர்

எப்போதும் காமராஜரைப் பற்றியே பேசுபவனுக்கும் எண்ணுபவனுக்கும் காமராஜர் தினம் இல்லை,… ‘தினம் காமராஜர்!’ பெருந்தலைவருக்கு மலர்ச்சி வணக்கம்! – பரமன் பச்சைமுத்து 02.10.2019

Uncategorized

வாஞ்சி மணியாச்சி

நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ரயில்நிலையத்தில்தான் புரட்சி செய்தான் வாஞ்சி.திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்கு முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த பிரித்தானிய கலெக்டர் ஆஷ்ஷை, இதே மணியாச்சி ரயில் நிலைய மேடையில் உலாத்தியபடியே கவனித்து துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றான் புரட்சியாளன் வாஞ்சி.வெகுகாலத்திற்குப் பிறகு மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் மாற்றம் செய்ய… (READ MORE)

Uncategorized

இனி, துரைசிங்கத்தின் வசனங்கள் வராது; தூத்துக்குடி என்றால் சொல்வதற்கு நினைப்பதற்கு நிறைய நல்ல சங்கதிகள் இருக்கிறது எனக்கு.

தூத்துக்குடியில் இறங்கிக் கால் வைக்கும் போது… உலகின் மிகச் சிறந்த உப்பு உற்பத்தியாகும் இடம், வ.உ.சியின் சுதேசிக் கப்பல், கிரேக்க தாலமி குறிப்புகள், எரித்ரேயன் பெரிப்லஸ், ஆதிச்ச நல்லூர், மார்க்கோ போலோ குறிப்பிட்டிருந்த முத்துக் குளித்தல், ஆதிகுடி மக்களான வலையர் குல மக்கள், டச்சுக்காரர்கள், கிழக்கிந்திய கம்பெனி, பரதவர்கள் வணங்கும் பனிமயமாதா, அனுமனை சீதையைத் தேட… (READ MORE)

Uncategorized

நடிகர் விஜய்யின் அப்பா, ஆளுஞர் தமிழிசை அவர்களோடு பயணித்தத் தருணங்கள்

நேற்று இரவு மலர்ச்சி பட்டமளிப்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி ஒரு குறிப்பை சொல்லிவிட்டு, அதிகாலை தூத்துக்குடி விமானத்தில் ஏறி அமர்ந்தால், எனக்கு முன்னிருக்கையில் மேதகு ஆளுநர் – தெலுங்கானா திருமதி தமிழிசை சௌந்த்தரராஜன் அவர்கள். உள்ளே நுழைந்த உடனேயே குட்மானிங் மேடம், யு ஆர் இன்ஸ்பயரிங்!’ என்று நான் சொன்னதை புன்னகைத்து தலையசைத்து ஏற்றுக்… (READ MORE)

Uncategorized

நன்றாக இருக்கிறது திரும்பிப் பார்க்க

‘திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. ‘மகளிர் தின விழா’வில் பேச வந்திருந்தார் பரமன் பச்சைமுத்து அவர்கள். உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் பரமனிடமே ‘பரமன், எப்ப நான் உன்னை சேல்ஸ்ல ஜெயிக்க முடியும்?’னு கேட்டாராம். ‘நீ முடிவு பண்ற அன்னைக்கு!’ என்று பரமன் பதில் சொன்னாராம். இது நிகழ்ச்சியில்… (READ MORE)

Uncategorized

பொதினா புளித் துவையல்

உணவில் உயிர்ச்சத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது அரைத்த துவையல்களை சட்னிகளை வழித்துச் சுவைப்பவன் நான். அப்படியொரு துவையலோடு வந்திருந்த என் வீட்டு மதிய உணவை இன்று பிரித்த போது உடனிருந்த சில அன்பர்களோடு பகிர நேர்ந்தது. ‘ஐயோ… சூப்பரா இருக்கே! இது என்ன துவையல் பரமன்?’ என்பது அனைவரின் பொதுக் கேள்வியாக இருந்தது. அவர்களுக்குப்… (READ MORE)

Uncategorized

images4896631818316080130.jpeg

‘ஒத்த செருப்பு ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு கொலைத் தொடர்பாக ஒருவனைப் பிடித்து வந்து ஒரு காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கையில் அந்த ஒருவன் வெளிப்படுத்தும் சங்கதிகளால் உருவாகும் ஒரு கலவையான அனுபவத்தை ஒரு முழுப்படமாக வடித்து ஒரே ஓர் ஆள் மட்டுமே நடித்து ஒரு மிரட்டலோடு அதைத் தந்தால் – ‘ஒத்த செருப்பு’ இரண்டு மணி நேரத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , ,

சிங்க முக யாளி

காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்கி விட்டு் ‘பாவை மன்றம்’ முன்னே நின்று மாதவியை கலியன் ஆசிரியர் விளக்கிய போது, அரைக் கால்சட்டை அணிந்த மூன்றாம் வகுப்புப் பையனாகிய நான் அந்தச் சிலைகள் உயிர் பெற்று நிற்பதைப் போல் அதிசயித்தேன். கோவலனையும் சேரன் செங்குவட்டுவனையும் இளங்கோவடிகளையும் தொட்டு, ‘டாய் பரமன் தொடக்கூடாது!’ என்று இரண்டாம் வகுப்பு எண்ணாவரம் வாத்தியார் சொன்ன… (READ MORE)

Uncategorized

அன்பென்பது பிரஞ்ஞை கடந்தது

கோவை விமான நிலையத்தில் ஒரு வசதி, விமானத்திலிருந்து இறங்கி தனிப் பேருந்தில் பயணித்து விமான நிலையத்திற்கு வர வேண்டாம். விமானம் விட்டு இறங்கி நடந்தே விமான நிலையம் வந்து பேக்கேஜ் கலெக்‌ஷன் பெல்ட்டிற்கு வந்து விடலாம். இன்று கோவையில் விமானத்திலிருந்து இறங்கும் போதே கண்ணை ஈர்த்தது ஒரு நிகழ்வு. இதே விமானத்தில்தான் வந்திருக்க வேண்டும் அவர்கள்…. (READ MORE)

Uncategorized

மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது!

புளிக்கு ஜிஎஸ்டி இல்லை, பெருநிறுவன வரிகள் குறைப்பு, பங்குச்சந்தை குறியீடு உயர்வு என்று ஊடகங்கள் கொண்டாடும் வேளையில் கொண்டாட முக்கிய மற்றொன்றும் இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால், சென்ற மாதம் மைதானமாகக் காட்சியளித்த புழல் மற்றும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது! மழையே நன்றி!… (READ MORE)

Uncategorized

தினமணிக்கு மலர்ச்சி வணக்கம்

கடலூரை சொந்த ஊராகக் கொண்ட அவர் தினமணியில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தொடரை எழுதினார், பின்னாளில் நூலாக வந்து அவருக்கும் சாகித்ய அகாதெமி விருதினை தமிழுக்கும் வாங்கித் தந்தது. அந்த புதிய எழுத்தாளர் பின்னாளில் ஜெயகாந்தன் என்ற ஆளுமையாக அறியப்பட்டார். லால்குடிக்காரரான ராமாமிர்தம் தினமணியில் ‘சிந்தா நதி’ என்ற தொடர் எழுதினார். பின்னாளில்… (READ MORE)

Uncategorized

,

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’ புதிய கிளையை திறந்து வைப்பதற்காகப் சாலையில் பயணித்து குண்ட்டூர் சென்று இறங்கியதும் எனை நோக்கி வைக்கப்பட்ட, நான் எதிர் கொண்ட முதல் கேள்வி. கடவுளுக்கு ‘தேவுடு!’ என்கிற வார்த்தையை மட்டும்தான் நான் அறிவேன். அதுவும் என்டிஆரை மக்கள் அப்படி விளிப்பார்கள் என்பதாலும், ரஜினி படத்துப்… (READ MORE)

Uncategorized

ரேய் துஸ்லிகா பச்சிடிரா’

‘ரேய் துஸ்லிகா பச்சிடிரா’ ‘க்கோர்சிக்கிடிக்காய் பச்சடி தீஸ்கோண்டி’ ‘மஜ்லிகா புளுஸு’ இந்தச் சத்தங்கள் நிறைந்த அந்த உணவகத்தினுள் நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். திருப்பதி போகும் போதெல்லாம் மினர்வா கிராண்டில் அல்லது மயூராவில், பெங்களூருவில் நாகார்ஜுனாவில், வேறு வழியில்லாத போது சென்னையில் அமராவதியில் என்ற அளவிலேயே ஆந்திர சாப்பாட்டைப் பற்றிய அனுபவங்கள் கொண்ட நம்மை ‘ஆத்தன்டிக் அக்மார்க்… (READ MORE)

Uncategorized

வெப்ப பூமி வளமான கதை – முதலிப்பட்டி, விளாத்திகுளம் வேம்பு சக்தி இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முதன்மையாகக் கொண்ட ஒரு சிற்றூர் முதலிப்பட்டி. வானம் பார்த்த பூமியான முதலிப்பட்டியில் 15 ஏக்கர் அளவுள்ள கண்மாய் இருந்தும், 8 ஏக்கர் துர்ந்து மேடாகி கருவேல மரங்களால் நிறைந்தும், மீதியுள்ள 7 ஏக்கர் சேறு சகதியுமாகவும் ஆகிப் பயன்பாட்டிற்கு அருகதையற்றுப்… (READ MORE)

Uncategorized

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு?

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு? புதுச்சேரியில் மலரவர் கோவிந்தராஜுலு மகன் திருமணத்திற்குப் போன இடத்தில், ‘பரமன், யு ஷுட் ட்ரை திஸ் ப்ளீஸ்!’ என்று பரிந்துரைத்தார்கள். வெற்றிலையில் விளக்கேற்றி நதியில் விடுவது போல் வெற்றிலையை விரித்து பீடா சங்கதிகள் இட்டு ‘பட்’டென்று பற்ற வைத்து நெருப்போடு நம் திறந்த வாய்க்குள் தள்ளுகிறார்கள். ( நம் சிவவேலன்… (READ MORE)

Uncategorized

தமிழ் செழிப்பாக வாழ்கிறது அயலகத் தமிழ்களின் இல்லங்களில்

ஓர் இனத்தின் அழிவில் மட்டுமல்ல, உறவின் முறைகளை விளிக்கும் வழக்குச் சொற்கள் வேற்றுமொழிச் சொற்களால் மாற்றப்படும் போதும் தேயத் தொடங்குகிறது ஒரு மொழி. உறவின் முறைகளை தங்கள் மொழிச்சொற்களிலேயே விளிக்கும் போது விழுதுகள் விடுகின்றது மொழி. ஓர் இனத்தின் மக்கள், உறவுகள் அவ்வப்போது அல்லது விழாக்களில் கூடும் பொழுதுகளில் தங்களுக்கான முறைகளைத் தொடரும் போது பெருமளவில்… (READ MORE)

Uncategorized

கொழும்பில் ஒரு சிறு பெண்

‘திருச்சிற்றம்பலம்’ என்று தொடங்கி ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்…’ என்ற பதிகத்துடன் ஒரு பள்ளியின் நிகழ்ச்சி தொடங்கினால் எப்படியிருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு! கொழும்புவில் உள்ள முக்கிய மகளிர் கல்லூரியான ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்விலும் சரி, சில தினங்களுக்கு முன்பு நாவலப்பிட்டியவில் கதிரேசன் மத்திய கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியிலும்… (READ MORE)

Uncategorized

ரஜினி கட்சி தொடங்கினால்…

ஜனவரி 2020க்குப் பிறகு ரஜினி கட்சி தொடங்கினால் என்ன செய்வார்கள் இவர்கள்! தொடங்கிவிடுவார் போலத் தோன்றுகிறது. – பரமன் பச்சைமுத்து நாவலப்பிட்டிய, கண்டி, இலங்கை 06.09.2019

Uncategorized

இயற்கையே… கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரறிவே!

‘ ம்க்கூம்… உலகம் முழுக்கக் காடு காடுன்னு கத்தும். ஆனா, அதக் காப்பாத்த என் நாட்டோட நிலப்பரப்ப பொருளாதாரத்த இழக்க வேண்டிருக்கு! எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியும். நீங்க ஷட் அப் பண்ணுங்க!’ – இது ‘ஐயோ காட்டையழிக்கிறார்கள்… காட்டையழிக்கிறார்கள்! நிறுத்துங்கள்!’, என்று சில மாதங்கள் முன்பு கதறிய உலகத்தினரின் முகத்தை நோக்கி பிரேசிலின் புதிய… (READ MORE)

Uncategorized

சென்னை மழைநீர் சேமிப்பு

சாலையோரங்களில் உறை கிணறு, பயன்படுத்தாமல் விடப்பட்ட நூற்றுக் கணக்கான பாழுங்கிணறுகளை கண்டறிந்து சீர் செய்து மழை நீர் சேமிப்பு என செயலில் இறங்கியுருக்கும் சென்னை நகராட்சியை எழுந்து நின்று பாராட்டுகிறோம். இந்தத் தொடக்கம் பல்கிப் பெருகி எங்கும் பரவட்டும், வாங்கும் வான் மழையை தாங்கும் நிலத்தினுள் அனுப்புவோம். நிலத்தடி நீர் உயரட்டும் உயிர்கள் செழிக்கட்டும்! வாழ்க!… (READ MORE)

Uncategorized

வழுக்கி விழும் வஸ்தாதுகள்

பெங்களூரு வேலூர் நெடுஞ்சாலையில் பயணித்து வந்து தான் ஓட்டி வந்த கண்டெயினர் லாரியை ஆம்பூரின் அருகில் உணவகத்தின் வெளியே நிறுத்தி விட்டு சாப்பிடப் போனாராம் ஓட்டுநர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தால் கண்டெயினர் லாரியைக் காணோமாம். பதறிய ஓட்டுநர் தனது உரிமையாளரை உடனே அழைத்து தகவல் தர, சிதறாத உரிமையாளர் ஜிபிஎஸ்ஸை வைத்து லாரி எங்கே… (READ MORE)

Uncategorized

யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு இருந்த உடல் உள்ளத்து நிலையும் அவற்றை செய்த பின்பு இருக்கும் உடல் உள்ளத்தின் நிலையும் வேறாக மாறிவிடுகின்றன. யோகப்பயிற்சியை கண்டு பிடித்துத் தந்தவன் உண்மையில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்! வியந்து போகிறேன்! – பரமன் பச்சைமுத்து 23.08.2019

Uncategorized

, , ,

சிவராஜ் தெரியுமா?

கடலூர் ஓ.டி எனப்படும் பழைய நகரத்திலுள்ள பள்ளியொன்றில் மாணவர்களுக்கு மலர்ச்சி உரையாற்றுவதற்காகப் போகிறேன். பள்ளியின் நிறுவனர், தாளாளர், உள்ளூரின் முக்கியப் பிரமுகர்களோடு அமர்ந்திருக்கிறேன். சிறப்பு விருந்தினர் என்று கூறி சிறப்பு செய்கிறார்கள். பக்கத்திலிருக்கும் பள்ளியின் முக்கிய நிர்வாகியிடம் சபை நாகரீகத்திற்காகப் பேசுகிறேன். பதிலுக்கு அவர் என்னிடம் வினவுகிறார். ‘உங்க வீடியோவெல்லாம் பாத்தோம். ரொம்ப மோட்டிவேட்டிங்கா இருந்தது…. (READ MORE)

Uncategorized

ஒரு பெருநாளில் தொடங்கப்பெற்றது…

‘அப்பா… உனக்கு ஹாலிடே இல்லையா, எங்களுக்குல்லாம் இன்னிக்கு ஹாலிடே!’ இவை, விடுமுறை என்பதைக் குதூகலாகமாக கொண்டாடும் ஒரு மகள் தனது தந்தையிடம் வெளிப்படுத்திய வாக்கியங்களாகத் தெரியலாம் உங்களுக்கு. இவை, எனக்கு என் வாழ்வின் புதிய உலகத்திற்கான பெருங்கதவைத் திறந்துவிட்ட திறவுகோல். பெங்களூரு பிடிஎம் லே அவுட்டில் இரண்டாம் தளத்திலிருந்த வீட்டின் கூடத்தில் பாய் விரித்து யோகப்… (READ MORE)

Uncategorized

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,

ராமசாணிக்குப்பம் பள்ளிக்கு பாராட்டுகள்

அரசுப் பள்ளி மாணவர்களால் ஒரு சிறு காடு உருவாக்கப்பட்டு பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டது என்றால் பாராட்டுவீர்கள்தானே! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி வியப்பிலாழ்த்துகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு நில்லாமல் பானைகளையும், மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் போத்தல்களையும் நீள்குழல்களையும் வைத்துக் கொண்டு சொட்டுநீர் பாசன முறையில் செடிகள் வளர்க்கத் தொடங்கி… (READ MORE)

Uncategorized

, , ,

spidermanfarfromhomeposter8421605940772536348.jpg

‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்குப் பள்ளித் தோழர்கள் ஆசிரியர்களோடும், பாரீஸின் உயர்ந்த ஈஃபில் டவரில் வைத்து எம்ஜேவிடம் தனது காதலை எப்படியாவது சொல்லி விடலாம் என்ற வகை காதல் கனவுகளோடும் நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் பீட்டர் பார்க்கரின் இன்பச் சுற்றுலா, அவெஞ்சர்ஸை வைத்து பிரபஞ்சம் காக்கும் பெரியண்ணன் நிக் ஃப்யூரியின் அழைப்பாலும், அதிகார அழிப்பு வெறி கொண்ட வில்லன்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

,

20190709_1010267680153292561573311.jpg

டை

டை என்னைப் பொறுத்த வரை எவருக்கும் அழகு சேர்க்கும் ஓர் உடை. என்ன உடுத்தினாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று எண்ணும் வேளைகளில் ‘அட!’ என்னுமளவிற்கு அழகுக் கூட்டி அசத்தி விடுவது டை என்பது என் தனிப்பட்டக் கருத்து. ‘மைக்ரோலாண்ட்’டில் ஐடி இஞ்சினியராக இருந்த பெங்களூரு – சென்னைக் காலங்களில் வெள்ளைச்சட்டையும் டையும் எங்கள் ட்ரெஸ்… (READ MORE)

Uncategorized

சாலை வழியே சிங்கப்பூருக்கு…

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சாலைவழிப் பயணமாக வந்தேன் இன்று. லட்சக்கணக்கான தென்னைகளும் செம்பனைகளும் இருமங்கிலும் கொண்ட சிறப்பான நெடுஞ்சாலை சாலையில் 320 கிமீ தூரம் பயணித்து எல்லையைக் கடந்தேன். இரண்டு் நாடுகளுக்குமிடையே இரண்டுக்கும் சொந்தமில்லாத ‘நோ்மேன்ஸ் ஐலண்ட்’டும், அதில் காரிலமர்ந்தபடியே கடவுச்சீட்டு பரிசோதனை குடியமர்வு ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றைச் செய்ததும் புதுவனுபவங்கள். இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கு… (READ MORE)

Uncategorized

பூவில் வண்டு தேன் பருகுவதை பார்த்திருக்கிறீர்களா?

பூவில் வண்டு தேன் பருகுவதை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா? வெறும் மணத்தைக் கொண்டே ஈர்க்கப்பட்டு மலரையடைந்து, ஒரு ஹெலிகாப்டரின் விசிறியின் வேகத்திற்கு அடிக்கும் இறக்கையை சட்டென குறைத்து அலுங்காமல் குலுங்காமல் மலரின் மெல்லிய இதழ்களில் ‘லேண்ட்’ ஆகி சூல் பகுதியில் இறங்கி, அதற்கென உறிஞ்சு கொடுக்குக் குழலை செலுத்தித் தேன் பருகும் லாவகத்தைக் கவனித்திருக்கிறீர்களா! ஒரு மலரை… (READ MORE)

Uncategorized

செலாமத் பெட்டாங் மலேசியா!

‘மதிப்புக்குரிய தாய்மார்களே, மாண்புமிகு ஆண்களே… வானவெளியில் காற்று மண்டலத்தில் கொந்தளிப்பு இருக்கிறது. உங்கள் இருக்கையில் அமருங்கள்’ என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வரும் அறிவிப்பிலும், இறங்கிய உடன், ‘டிஃபன் சாப்பிட்டீங்களா?’ என்பதற்குப் பதிலாக, ‘விமானத்தில் பசியாறக் குடுத்தாங்களா?’ ‘நீங்க பசியாறிட்டீங்களா?’ என்று மலேசியத் தமிழர்கள் கேட்பதிலுமே புரிகிறது, மலேசியாவில் தமிழ் அதிகம் கலப்பில்லாமல் வாழ்கிறதென்று. ஒன்றாம்… (READ MORE)

Uncategorized

பத்துமலை முருகன் கோவில்

நாகரீகம் வளராத இயற்கையோடு மனிதர்கள் இயைந்து வாழ்ந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டாற்றின் கரையில் இருந்த ஒரு பெரு மலையின் பெருங்குகையில் தோமுவான் என்றழைக்கப்பட்ட பழங்குடியினர் வாழ்ந்தனர். காலப்போக்கில் அம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளைப் பயிரிட்ட சீனர்கள், அம்மலையின் பெருங்குகைகளில் பெரும்படிமமாகக் கிடந்த வௌவால் கழிவுகளை (தமிழகத்தில் ‘புழுக்கைகள்’ என்றும், மேசியத் தமிழர்களால் ‘சாணம்’… (READ MORE)

Uncategorized

மலேசிய ஏஸ்ட்ரோ விண்மீன் HD தொலைக்காட்சியில் பரமன் பச்சைமுத்து

‘ரிகர்சல் செய்ய வேண்டியிருக்கும்!’ என்று சொல்லி குழுவாக வந்தமர்ந்து தொடங்கியவர்கள், அவர்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கியதும், ‘இவருக்கு ரிகர்சல் வேண்டாம். நேரலை போயிடலாம்!’ என்றார்கள். மலேசியாவின் பெரும் ஊடகமான ஏஸ்ட்ரோவின் விண்மீன் HD தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றிருந்தோம் இன்று காலை. முதலில் பதிவு, அப்புறம் வெட்டி நகாசு செய்தல் என எதுவும் செய்ய… (READ MORE)

Uncategorized

வணக்கம் சென்னை

எத்தனை பேர் பிழைக்க வந்து குடியமர்ந்தாலும் அத்தனை பேரையும் தன்னகத்தே கொண்டு ஏந்தி நிற்கும்… சென்னையில் நுழைகிறேன்! வணக்கம் சென்னை! – பரமன் பச்சைமுத்து சென்னை 16.06.2019

Uncategorized

இயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்!

‘நேத்து பொன்னியம்மன், மாரியம்மன், பனையாத்தாள் வீதியுலா. மணக்குடியில சித்திரை திருவிழாயில்லையா! அதான் கொஞ்சம் கண்ணு முழிச்சிட்டோம்!’ என்று சொல்லிடப்பேசி வழியே அப்பா சொல்லிக் கொண்டே போகையில், அவரைக் குறுக்கிட்டுக் கேட்க முயற்சிக்கும் போதே அவரே சொன்னார், ‘எப்பயும் போல மழையை எதிர்பார்த்தோம். மழை வந்தது. வாசல் தெளிச்சது போல தூத்தலோட போயிடுச்சி!’ அவருக்கும், எனக்கும், இங்கு… (READ MORE)

Uncategorized

28 ஆண்டுகள் கழிந்து…

எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து வாய் பிளக்க வைப்பதை வாடிக்கையாக செய்வதில் வல்லமை பெற்றது வாழ்க்கை. மயிலாடுதுறை அப்படி ஓர் அனுபவத்தைத் தந்து விட்டது.எல்லா ஊரையும் போலல்ல மயிலாடுதுறை எனக்கு. எம்ஜியாரால்மயிலாடுதுறை என்று மறுபெயராக்கம் செய்யப்பட்ட மாயவரத்தில்தான் நான் படித்தேன். ஏவிசி கல்லூரி வளாகமே என் கல்வி வளாகம்.’சின்ன சங்கதி… பெரிய வளர்ச்சி!’ என்ற மலர்ச்சி… (READ MORE)

Uncategorized

நீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி

‘வளர்ச்சி பத்திரிக்கைங்களா? நான்எத்திராஜ், வேளச்சேரியிலிருந்து. ஜூன் மாத இதழில் ‘நீர் முடிச்சு’ பற்றி எழுதியிருந்தீர்கள். தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டி வேர் எல்லாவற்றிலும் எவ்வளவு போட்டு முடி போட வேண்டும்? பரமன்: தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டிவேர், மிளகு, ஜீரகம் ஒவ்வொன்றும் 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் சேர்ந்தாலே கையளவு வரும். இவர் கை ஒரு… (READ MORE)

Uncategorized

, , ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,

சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:

சிக்கிம் – நிறைவுக் கட்டுரை: சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை: நாதுலா பாஸ் எனப்படும் சிக்கிம் சீன எல்லையில் பயணிப்பதற்கு முன்பே கடவுச்சீட்டு வாங்க வேண்டும். சிக்கிம் புறப்படும் முன்னரே அதற்கான சரியான ஏற்பாடுகளைச் செய்யவும். ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், இங்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வருவது… (READ MORE)

Uncategorized