Yearly Archive: 2016

வெள்ளைக்கார கணவன…

​நண்பர்கள் உட்பட மற்றவர்கள் வரமுடியா ஒரு மனிதனின் உள்வட்ட எல்லைக்குள் வரக்கூடிய உரிமை கொண்ட ஓர் உன்னத உறவு ‘மனைவி’. மனையை ஆள்பவள் என்பதால் ‘ மனையாள்’ என்று காரணப்பெயர்க் கொண்ட இவ்வுறவு பார்க்கப்படும் விதம் அந்தந்த சமூகத்தைப் பொறுத்தும் தனிமனித மனநிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.  தனது குடும்பத்திற்காக தனது விருப்பு வெறுப்புகளை அதிகம் துறந்தது… (READ MORE)

Uncategorized

jesus

இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

  வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத்… (READ MORE)

Religion, Self Help, பொரி கடலை

, , , , , ,

‘டியர் ஸிந்தகி’ – ‘அன்புள்ள வாழ்க்கையே…’ : திரை விமர்சனம்

ஆண் பெண் உறவுச் சிக்கலை கையாளத்தெரியாமல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தனது வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் கல்லாக இறுகி நிற்கும் நகரத்து வாழ் இந்தத் தலைமுறை இளம்பெண் ஒருத்தியின் வாழ்வில் மனத்தை மலர்ச்சி பெறச் செய்யும் ஒரு மனிதன் வந்தால் என்னவாகும், எதையுமே வெளிப்படையாய் சொல்லாமல் உள்ளேயே அழுத்தியழுத்திப் பூட்டி வைக்கும்  அவளை எப்படித்… (READ MORE)

Uncategorized

வண்ணதாசனுக்கு வணக்கம்…

​ஒரே குடும்பத்திலிருந்து தந்தையும் மகனுமென இருவர் சாகித்திய விருதுகள் வென்றெடுத்த நிகழ்வு  இந்தியாவிலேயே இதுவரை நடந்திருக்காதென்றே எண்ணுகிறேன். அந்த முத்திரையைப் பதித்து, தந்தை தி.க. சிவசங்கரனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கங்கள்.  “பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கி விடுவான். ஆளுக்குத் தக்க… (READ MORE)

Uncategorized

அறுபதாங்கோழி…!

​என்ன ஏது என்று உணர்வதற்குள் சில அரிய விஷயங்கள் நடந்தேறி முடிந்து விடுகின்றன. முக்கியத்துவம் உணர்ந்த பிறகு திரும்ப அந்தக் கணங்களுக்கு போகவோ, ‘ரீவைண்டு’ பண்ணியோ வாழ முடிவதில்லை. பறம்பு மலைக் காட்டுச் சரிவில் கொற்றவை கூற்றின் போது  ஈச்சங்கள்ளுக்கு ஏதுவாக இருக்குமென்று கபிலருக்கு தர வேண்டுமென்று அந்நிலத்தையாண்ட தலைவன் வேள்பாரி விரும்பிய காட்டுப் பறவை… (READ MORE)

Uncategorized

அழகான விஷயங்களை…

​மனதைக் கவரும் அழகான விஷயங்கள் சிலவற்றை தூரயிருந்து பார்ப்பதே சிறந்தது. இறங்கித் தொடும் அனுபவம் உயிருக்கே ஆபத்தாய் முடியும். சென்னை நோக்கிப் பயணிக்கும் என் விமானத்திற்கே வெளியே வென் பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டம்!  😜 #வணக்கம் சென்னை!  Facebook.com/ParamanPage

Uncategorized

அதிர வைக்கும் எளிய  மனிதர்கள்… 

வாழ்க்கை ‘எதனால்?’ என்று அறுதியிட்டுக் கூற முடியாத அவிழ்க்க முடியா பல புதிர் முடிச்சுக்களைக் கொண்டது. எல்லாம் கொண்ட இவர்களுக்கு ஏன் இந்த நிலை? ஒன்றுமே இல்லாத இவர்களுக்கு ஏன் இந்த உச்சம்? போன்ற கேள்விகளுக்கு ‘இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம்’ போன்ற யூகங்களைக் கடந்த ‘இதுதான்!’ என்ற நிச்சயமான உண்மையான பதில் காணமுடிவதில்லை என்பதே… (READ MORE)

Uncategorized

நாசகார புயலே வர்தா, நாங்கள் எழுகிறோம் இதோ!

​ மரங்கள் என்றால் இலையும் கிளையும் வான் பக்கம்,  வேரும் தண்டும் பூமிப் பக்கம் என்றல்லவா கொண்டிருக்கும்? வேர்களை வானுக்குக் காட்டி இலைகளை தரையில் பரப்பி கிளைகள் ஒடிந்து சரிந்து வீழ்ந்து கிடக்கின்றனவே எம்மரங்கள்! ஐயோ! என்னவாயிற்று என் நகருக்கு, அனுமன் புகுந்த அசோகவனமாய் குதறப்பட்டு சின்னாபின்னமாகி கிடக்கிறதே என் சென்னை! மேகத்திலிருந்து மழையைத்தானே கேட்டோம்,… (READ MORE)

Uncategorized

காட்டிலிருந்து…

​ஒரு காலத்தில் விலங்குகள் அதிகம் திரிந்த அதிகம் வேட்டையாடப்பட்ட காட்டுப் பகுதியாயிருந்து, வேட்டைக்காரர்கள் மெல்ல மெல்ல குடியேறிய பகுதியாய் மாறி ‘வேட்டைக்காரன்புதூர்’ என்றான பகுதிக்கும் டாப்ஸ்லிப்பிற்கும் இடையில் இருக்கிறேன். நேற்றிரவு காட்டுக்குள் இங்கிருப்போர் துணையோடு வண்டியெடுத்துக் கொண்டு போனதில், கண்களில் அதிகம் மாட்டாத கருஞ்சிறுத்தைகள் இரண்டை பார்க்கும் பெரும் வாய்ப்பு கிட்டியது. மின்னும் கண்களை வைத்து… (READ MORE)

Uncategorized

ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை…

வந்தோர் அனைவரும் வரிசையாய் அமர்ந்து கண்மூடி மௌனமாய், ஒரு வித தியான நிலையில்… அட… ஆன்மீக குருக்கள் செய்ய முடியாததை கண் மருத்துவர்கள் செய்து விடுகிறார்கள், இரண்டு சொட்டு மருந்து போட்டு! #கண்மருத்துவமனை  :பரமன் பச்சைமுத்து சென்னை 07.12.2016 Www.ParamanIn.com

பொரி கடலை

,

jaya

மக்களின் ‘அம்மா’விற்கு மலரஞ்சலி…

நானும் இருக்கிறேன் என்று வாழ்வது வாழ்க்கையல்ல; இருக்குமிடத்தில் நான் தனியாகத் தெரிவேன் என்று தடம் பதித்து வாழ்வது வாழ்க்கை. அதில் இதில் என்றில்லை எதில் இருந்தாலும் தடம் பதித்து தலை திருப்பிப் பார்க்கச் செய்வேன் என்று வாழ்வது தலை வாழ்க்கை. எப்போது வந்தோம் எப்போது போனோம் என்பதைத் தாண்டி எத்தனை பேர் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்… (READ MORE)

Politics

,

nathi-5

நதி போல ஓடிக்கொண்டிரு… 

‘இறைவன் மிகப் பெரியவன்!’ என்று சொல்வது ஒரு நிலை. அதையே உள்ளூர உணர்வது வேறு நிலை. முன்னது உதடுகளில் உதிப்பது, பின்னது உள்ளத்தினுள்ளே உணர்வது. அந்நிலை வரும்வரையில் அதன் ஆழம் புரிவதில்லை. உணர்ந்ததாக எண்ணுபவர்கள் கூட அந்நிலை வரும்போதே அதன் உண்மை நிலை கண்டு ஆழம் கண்டு கசிந்துருகிப் போகிறார்கள். ‘நான்… நான்… நான்தான்!’ என்றே… (READ MORE)

Media Published, Self Help

man

அனுபவங்களால் ஆனவன் மனிதன்

வாழ்க்கை எல்லா மனிதர்களின் வாழ்விலேயும் எண்ணற்ற பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் வெளிச்சம் பெறாமலேயே போய் விடுகின்றன. அந்த நிகழ்வுகள் மனிதர்களை என்ன செய்கின்றன, அந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பனவற்றைக் கொண்டே சிலசமயம் அவர்களது வாழ்வு மாறிவிகிறது. ஒவ்வொரு மனிதனும் சில பல அனுபவங்களால்… (READ MORE)

பொரி கடலை

,

e

எழுத்து என்பது…

எழுத்து என்பது நாம் எழுதி வருவதில்லை. அது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எழுதுபவனின் உள்மன அடுக்குகளில் படிந்திருக்கும் துகள்களை பூசிக்கொண்டு அது வெளி வருகிறது. இடம், நிலை, சுற்றுச்சூழல், காலம் என எதுவும் உண்மையில் அதைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதை வெளிப்பட வைக்கும் ஒத்த ஓர் அலைவரிசையில் உள்ளம் இருக்கும் தருணங்களில்… (READ MORE)

பொரி கடலை

பொள்ளாச்சி

மழை வந்தால் பனி இருக்காது என்பது மற்ற ஊர்களுக்கு எப்படியோ, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு அது பொருந்தாது போல. நகரில் இறங்கும்போது ‘நேத்து முச்சூடும் பேஞ்சுதுங்க!’ என்று யாரோ சொன்னதை நம்பமுடியவில்லை. ‘சூரியன் வரட்டும், அப்புறம் போறேன் நான்!’ என்பதுபோல இறங்கி அப்படியே நகரின் மேலேயே நிற்கிறது பனி, ‘இப்போதைக்கு நான் வர்றதா இல்லையே!’… (READ MORE)

பொரி கடலை

paraman-trans-pollachi

இசை ஒரு மாய நதி…

பொள்ளாச்சியில் ‘வளர்ச்சிப் பாதை’ தொடங்குவதற்கு முன்பாக இளையராஜாவின் இசைத் துண்டு ஒன்றில் நாங்கள் கரைந்து கொண்டிருந்தோம். இருக்குமிடத்திலிருந்து எங்கேயோ ஓர் ஆழத்திற்கு எங்களை எடுத்துப் போய்விட்டது அந்த இசை. மூழ்கிக்கிடந்த போது முன்னே வந்து பதிவு செய்திருக்கிறார் படமெடுப்பவர். பதிவின் நோக்கம் படத்தை காட்டுவதல்ல; இசையின் ஆழம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை சொல்வது. இசை ஒரு… (READ MORE)

பொரி கடலை

wpid-wp-1479018568328.jpg

‘அச்சம் என்பது மடமையடா’ – திரை விமர்சனம் 

தூங்கி நண்பர்களோடு ‘மாவு’ மாதிரி பொழுதைக் கழிக்கும் ஒருவனது வாழ்வில் திடுமென இனிமையான சில விஷயங்களும் கூடவே ‘வலி’மையான சில விஷயங்களும் நடந்தேறுகின்றன. வாழ்க்கை என்பது இந்தப் புள்ளியில் தொடங்கி அந்தப் புள்ளியில் போய் சேரும் நேர்க்கோடாய் எல்லா நேரங்களிலும் இருந்துவிடுவதில்லை. அது எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத இன்பத்தையும் அதிர்ச்சியையும் அள்ளித் தெளித்துவிடக் கூடியது. அப்படி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

nathi

நதி போல ஓடிக் கொண்டிரு… தொடர் 

​‘லுக் அட் திஸ்! ஹீ கேன் குக் வாட் ஹீ வாண்ட்ஸ் அட் ஹிஸ் வொர்க் டெஸ்க்!’ சிவநெறித்தேவனின் மேசையைக் காட்டி ஜப்பானிலிருந்து வந்திருக்கும் பெரும்நிறுவன வாடிக்கையாளப் பெண்மணியிடம் சொன்னார் நிறுவன இயக்குனர். ‘ஆய்… ஆய்…!’ என்று மாடு ஓட்டி வாய் பிளந்து பார்த்தாள் அவள். ‘சிவா! ஜப்பான்காரி அப்படிப் பாக்குறா உன்ன. ப்ராஜெக்ட் வந்தா… (READ MORE)

Media Published

, , , ,

வைரமுத்து – கம்பன் ஆய்வுப் பதிவு

​வைரமுத்து தந்த ஆய்வுத் தமிழில் தோய்ந்து போனோம் இன்று மாலை. ‘தமிழுக்குப் புனை பெயர் கம்பன்’ என்ற தலைப்பில் அவர் பிய்த்து எறிந்ததை துய்த்து மகிழ்ந்தோம்.  நாளை தினமணியில் வெளியாகும்  இக்கட்டுரையை இன்று அவர் குரலிலேயே கேட்கும் மகிழ்வு கிட்டக் காரணமான தினமணி வைத்தியநாதனுக்கு நன்றி. முன்பு பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், பாரதி, இப்போது கம்பன் என்று… (READ MORE)

Uncategorized

ஊமை காக்கை ஒன்று…

​அலுவலக சங்கதிகள் சிலவற்றிற்காக என் வீட்டிற்கு வந்திருந்த கோமு தங்கம் வரவேற்பரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சமையலறையைத் தாண்டி சன்னலின் கண்ணாடிகளில் ‘டக் டக் டக்’ சத்தம். நாங்கள் தொடர்ந்து பேசினோம். சப்தம் அதிகரித்தது. தொடர்ந்து பேசினோம். ‘கா…கா…கா…’ என்று கரையும் சத்தம் இப்போது. ‘தங்கம் ஒரு நிமிஷம் இருங்க, காக்கா சாப்பாடு கேக்குது, அதுக்கு… (READ MORE)

Uncategorized

நதி போல ஓடிக் கொண்டிரு… 5 

​ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அதற்கு நெருங்கிய நண்பராக இருந்துதான் செய்ய வேண்டியது இல்லை. நெருக்கம் இல்லாமலே கூட செய்ய முடியும். அதுவே நடந்தது ஹரீஷின் வாழ்விலும் அன்று. ஹரீஷ் அந்த மென் பொருள் இணையதள நிறுவனத்தின் இணையதள கட்டமைப்பை கவனித்துக் கொள்ளும் பொறிஞன். வெப் சர்வர்கள், அதை அப்படியே நகலெடுத்து பதிவேற்றி பாதுகாப்பாய் வைத்துக்… (READ MORE)

Uncategorized

நிலமடந்தைக் கெழில் ஒழுக நீர் வேண்டும்…

பனிப்பொழிவால் தள்ளிப் போன எங்கள் பருவமழையே வா!  நிலமடந்தைக் கெழில் ஒழுக… நீர் வேண்டும் அல்லவே! நீர் வேண்டும் அதனால் ‘நீர் வேண்டும்’  வா!  அண்டை மாநிலங்கள் தரமறுப்பதை ஆண்டவன் தருவானென்று தெரியும்,  அரிய நீரே வா, ஆற்றாமை தீர்க்க வா! ஒரு மாதத்து மழையை ஒரே நாளில் மதம் பிடித்து கொட்டாமல், இரண்டோ மூன்றோ… (READ MORE)

Uncategorized

தவம் ஒரு வகையில்…

​பண்டிகை முடிந்து பல ஊர்களிலிருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் பெரும் போக்குவரத்தில்  கண்ணிமைக்காமல்  கால் நீட்ட கார் விட்டிறங்காமல் குடும்பத்தினரை பாதுகாப்பாய் கொண்டு சேர்க்க  பல மணி நேரங்கள் கார் ஓட்டி வருவதும் ஒரு வகையில் தவமே! வணக்கம் சென்னை! 

Uncategorized

‘கொடி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒருவன் பயந்தவன் மற்றவன் பலமானவன் அவன் இடத்தில் ஒருநாள் இவன் என்ற அதே அரதப்பழசான கதையில்,  அப்பாவின் ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலனும் சொந்த ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலியும் அரசியல் காய் நகர்த்தலில் எதிரெதிராய் நின்றால் ‘உயிர்’க் காதல் என்னவாகும் மனித மனம் எப்படி இயங்கும் என்றொரு புதுக் கதையை பின்னி இணைத்து களம்… (READ MORE)

Uncategorized

காட்டு ஐயனார் கோவில்…

​ஊருக்கு வெளியே காவல்தெய்வங்களாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் எல்லைச்சாமிகளை பார்த்திருக்கிறீர்களா? காடுகள் அல்லது மரங்களடர்ந்த பகுதிகளில் தனியாக வைக்கப் பட்டுருப்பவை அவை. ‘ஐயனார் ராத்ரியில் குதிரையில வேட்டைக்குப் போனாரு…’  ‘கருப்பு தொரத்துது!’ போன்ற கட்டுக் கதைகளையும், யூகங்களையும் காலங்காலமாக சேர்த்து வைத்திருக்கும் பிரதேசங்கள் இவை.  சிலைவழிபாடு, தெய்வம் என்பதைத் தாண்டி பயம் தரும் விஷயம் என்பதால்… (READ MORE)

Uncategorized

கீழடி – ஏன் அவசரமாய் மூட வேண்டும்?

​எதிரியமாக ஒரு பதிவிடுகிறேன் என்று எனக்கே நெருடுகிறது என்றாலும் இடவே செய்கிறேன். தொல்லியல் துறைக்குக் கிடைத்த புதையல் குவியல் ஒன்றை திறந்து பார்த்துவிட்டு தீயிட்டுக் கொளுத்துவார்களா யாரேனும், கொளுத்தி மண் மூடி புதைப்பார்களா எவரேனும். செய்கிறார்களே! அகழ்வாராய்ச்சி செய்து அரிய புதையல்களை கண்டெடுத்தனர் கீழடியில். சிந்து சமவெளிக்கு முன்னரே முந்து தமிழ் நாகரீகம் இருந்ததன் சான்றுகள்… (READ MORE)

Uncategorized

வரட்டும் ‘வேள் பாரி’

​ சு. வெங்கடேசன் இருக்கும் இடத்திலிருந்தே நம்மை பச்சைமலைத் தொடருக்கும், வேட்டுவன் பாறைக்கும் கடத்திப் போய் விடுகிறார். மணியம் செல்வம் பறம்பு மலை வீரனையும், கபிலரையும் காட்சிப் படுத்தி உயிர் தந்துவிடுகிறார். ‘வேள் பாரி’ இன்னொரு ‘பொன்னியின் செல்வன்’ ஆகுமா தெரியாது. ஆனால், தமிழ் உலகின் தலைமுறைகள் கடந்து தாக்கத்தை உருவாக்கும். இதைத்தான் பெரும் ஊடகங்கள்… (READ MORE)

Uncategorized

இருட்டில் இருந்திருக்கிறீர்களா…

​இருட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை இதில். கண்கள் இருட்டுக்குப் பழகி, மெதுவே பொருள்கள் புலப்பட்டு, பின்பு அவை மறைந்து நாம் மட்டுமே இருக்கும் உணர்வு அது. பார்வை உண்டு ஆனால் பொருள்கள் மறைந்து நீங்கள் மட்டுமே இருக்கும் அதிசயம். உலகம் பற்றிய பிரஞ்ஞை எதுவும்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே சாம்பிராணி…

​இவ்வளவு அதிகாலையில் எழுந்து ஊர் வயல்வெளி வாய்க்கால் என எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகை போட்டது யார்!  அட… பனி!  (மணக்குடி – சிதம்பரம் வழித் தடம் நெடுக) பரமன் பச்சைமுத்து 21.10.2016

Uncategorized

நல்ல நதி நாளை வரும்…

​வெள்ளையர்கள் கொள்ளையர்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லைதான். கொள்ளை கொண்டதை தள்ளிக் கொண்டு போக அவன் பயன்படுத்தி பின் தந்துவிட்டுப் போன உன்னத நீள நீர்வழித் தடத்தை சாக்கடையாக்கி நாறச் செய்துவிட்டோம்.  நல்லதையே சாக்கடையில் வீசக்கூடாது, நாம் நல்லதில் சாக்கடையையே கொண்டு வந்து விட்டுவிட்டோம். திரும்பவும் இது ஓர் நதியாகி, இதன் வழியே நீர்ப் போக்குவரத்து… (READ MORE)

Uncategorized

தேவதைகளின் அருகில்…

​தேவதைகளின் அருகாமையிலிருக்கும் தருணங்களில்  அசுரன்கள் கூட அழகாகி விடுகிறார்கள்! ( நான், என் மகள்களோடிருக்கும் தருணங்களைப் பற்றிக் கூறினேன்)

Uncategorized

‘ஸல்லி’ –  திரை விமர்சனம்

விமானப் பயனம் என்பது மற்றப் பயணங்களைப் போலல்ல.  ட்ரெயினில், காரில், பேருந்தில், கப்பலில் என எதில் இஞ்சின் பழுதடைந்தாலும் குறைந்த சேதங்களோடு நிறுத்தி இருப்பவர்களை காப்பாற்றி விடலாம். உயரப் பறக்கும் விமானத்தின் நிலை அப்படி இல்லை. பழுதானால் விழ வேண்டியதுதான். விழுந்தால் முடிந்தது கதை. அப்படி நூற்றைம்பத்தியைந்து பேரை அவர்களது கனவுகளோடு சேர்த்து சுமந்து உயரப்… (READ MORE)

Uncategorized

அந்த வீட்டின் முன்னே

​இரவெல்லாம் பயணித்து அதிகாலை விடியும் முன் அந்த வீட்டின் முன் வந்து நிற்கிறேன். இழவு வீடென்றும் சொல்ல முடியாது, நேற்று மாலை போஸ்ர்ட் மார்ட்டத் செய்து பொட்டலமாய் வந்த பிரேதத்தை எடுத்துப் போய் அடக்கம் செய்துவிட்டனர். நான் இப்போதுதான் வருகிறேன். எங்கும் போகாமல் நேராய் இங்கு வந்து நிற்கிறேன். உள்ளே கதவை தாழிட்டுக் கொண்டு உறங்கிக்… (READ MORE)

Uncategorized

நண்பன் ஒருவன்…

​நண்பன் ஒருவன் என் வகுப்பிலமர்ந்ததில்லை இதுவரை. பலர் பரிந்துரைக்கவே மலர்ச்சி வகுப்பிற்குள் வந்தான் அவன்.  நண்பனை மாணவனாக பார்க்க வேண்டும் என்பது எனக்கும், நண்பனை ஆசிரியனாக பார்க்க வேண்டும் என்பது அவனுக்குமான புதிய பரீட்சை. நிறைய அனுமானங்களோடு நிறைய எண்ணங்களோடு நிறைய எதிர்பார்ப்புகளோடு வந்திருந்தானவன்.  இருவரும் வகுப்பிற்குள் நுழைந்தோம்.  செவ்வாய், வியாழன் என இரு வகுப்புகள்… (READ MORE)

Uncategorized

திருவரங்க வீதியோரத்துப் படிகட்டுகளில்…

​திருமண ஒப்பந்த விழா ஒன்றிற்காக வந்து திருவரங்கத்தில் உலாத்திக் கொண்டிருக்கிறேன்.  உலாத்தவில்லை, இடதும் வலதும் குறுக்கும் நெடுக்கும் என திருவரங்கத்தை கடைந்து கொண்டிருக்கிறேன்.  எந்த இலக்குமில்லை. உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி காவிரி மண்ணில் காவிரி மணல் (மணல்தான், நீரில்லை!) பட்ட காற்றில் காலையிலேயே ஆயிற்று.  வேட்டியை தழையவிட்டு வீதியின் ஓரத்து படியொன்றிலமர்ந்து வருவோர் போவோரை வாசித்துக் கொண்டிருக்கிறேன்…. (READ MORE)

Uncategorized

உளுந்தூர்ட்டை…

​மனம், இப்படித்தான் என்று விளக்கமுடியா விதத்தில் சங்கதிகளை சங்கிலியாய்க் கோர்த்து விளங்கமுடியா முடிச்சுக்களிட்டு நினைவகத்தில் பதியச்செய்து மேலாண்மை புரியும் ஓர் அதிசயம்.  சில இடங்களின் பெயர்கள், மனிதர்களின் பெயர்களைச் சொன்னால் அதனோடு(அவர்களோடு) தொடர்புடைய சில சங்கதிகளை நினைவகத்தின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து மேலே போட்டுவிட்டு போய் விடுகிறது.  இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால்,… (READ MORE)

Uncategorized

‘ஜோக்கர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஐம்பது கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வந்தால்,  ‘ஐம்பது கோடி எல்லாம் ஒரு பெரிய ஊழலா அவரவர்கள் பதினேழு லட்சம் கோடிக்கு பண்ணுகிறார்கள், போய்யா! கேவலமா இருக்கு!’ என்று  சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் மனநிலையால்,  பின்தங்கி கிடக்கும்  பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தின் வெளி உலகம் அதிகம் அறியா ஒரு மன்னர்மன்னனின் வாழ்க்கை… (READ MORE)

Uncategorized

சுடச்சுட குடிக்க

​ஆர்டர் செய்து வாங்கிய கேப்பச்சீனோக்களும் லாத்தேக்களும் ஆறிக்கொண்டிருக்க,  செல்லிடப் பேசிக்கு சுடச்சுட குடிக்க தங்களைத் தந்துவிடுகிறார்கள் இங்கே பலர். #ஸ்டார்பக்ஸ் #அண்ணாநகர்  (வெளியில் வரும் போது எழுதியது)  Facebook.com/ParamanPage

Uncategorized

ரொடீனிய பூமிப்பரப்பு 

​துண்டு துண்டாக உடையாமல் ஆழி சூழ ஒரே நிலப்பரப்பாக ‘ரொடீனியா’வாக இருந்த இந்தப் பூமிப்பரப்பு அப்படியே இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அமெரிக்காவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும், சிட்னிக்கும் சைக்கிளிலில் சென்றிருப்பார்கள் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்து தனுஷ் போல.  ராயப் பேட்டை நண்பர்கள் குழு ரியோ ஒலிம்பிக்ஸ் பார்க்க ராயல் என்ஃபீல்டில் கிளம்பியிருக்கும். ஆனால் அப்போது ராயப்பேட்டை மடகாஸ்கரில்… (READ MORE)

Uncategorized

நண்பன் என்றதும்…

​ஊரின் ஒதுக்குப்புறமாய் குளத்து மூலையில் எங்கள் வீடு இருந்தது அப்போது. வீட்டு வாசலில் எப்போதும் தண்ணீர் ஓடும் ஒரு சிறு வாய்க்கால். ஒரு மரத்தை குறுக்கே போட்டு பாலமாக மாற்றி வைத்திருந்தார் அப்பா. பின்புறம் செட்டியாரின் வயல். அந்த என் அரைக்கால் சட்டை வயதின் பொழுதுகளில் பெரும்பாதி ஆளவந்தாரால் நிரப்பப்பட்டவை. மூன்று வீடுகள் தள்ளி இருந்த… (READ MORE)

Uncategorized

wpid-wp-1469229993189.jpg

‘கபாலி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

மலேசிய மண்ணில் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வஞ்சத்தால் வீழ்த்தி, குடும்பத்தை சின்னாபின்னமாக்கி தன்னைச் சிறையில் தள்ளிய எதிரிகளை, சிறையிலிருந்து வந்து ஸ்டைலாக ‘செய்யும்’ நாயகன் மற்றும் அவன் வாழ்வில் எதிர்கொள்ளும் திருப்பங்களை களமாகக் கொண்ட கதை. ‘வயசான மனுஷன், என்ன பிரச்சினை வரப்போவுது, ரிலீஸ் பண்ணுவோம்!’ என்று பேசும் மலேசிய சிறையதிகாரிகள், சிறையறையிலிருந்து வரும் முன்னே… (READ MORE)

Manakkudi Talkies

,

அய்யோ… இறைவா! 

அவனம்மா தெருவில் யாரிடமோ பேரம் பேசி எதையோ வாங்க முயற்சித்து, பேரம் படியாத ஆற்றாமையில் திட்டிக்கொண்டே வீட்டினுள் வந்தாள். அவளது சத்தத்தில் கண்விழித்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். தூங்கி எழுந்ததும் இயல்புநிலைக்குத் திரும்ப வெகுநேரம் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளைப் போல வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்கும் சில மனிதர்களைப் போலில்லை அவன் நிலை இன்று.  தூக்கக்… (READ MORE)

Uncategorized

அன்பென்பது…!

நீர் பருகலாமென்று சமையலறைக்குள் போகிறேன். கூடவே பேசி சிலாகித்துக் கொண்டு வருகிறாள் செல்ல மகள், தான் இப்போது படித்து முடித்த ஒரு நூலைப் பற்றி. ‘அப்பா… யூ நோ… தி எண்ட் ஆஃப் த புக் ஈஸ் ஆஸம்! என்ன ஆகும் தெரியுமா….?’ கிட்டத்தட்ட ‘பாபநாசம்’ க்ளைமாக்ஸ் மாதிரி முடித்திருப்பார்கள் என்று சொல்லப் போகிறாள் என்று… (READ MORE)

Uncategorized

மரங்கள் என்பவை வெறும் நிழலுக்கானவையல்ல…

​எங்களூருக்கு கிழக்கே ஓர் அய்யனார் கோவில் உண்டு. சுரபுன்னை மரங்களும், பனையும், வேம்பும், இன்ன பிற கொடிகளும் சேர்ந்து பின்னிப் பிணைந்திருக்கும் வெயில்புக முடியா அக்காட்டில், சில சிலைகள் இருக்கும். ‘தச்சக்காடு’ அய்யானார் கோவில் என்று பெயர் அதற்கு. குருவிகளும், காட்டுப்பூனைகளும், பாம்புக் குட்டிகளும் வசித்த அந்தக்காட்டிற்கு சென்று வழிபடுவது அந்த வயதில் பயமாக இருந்தாலும்,… (READ MORE)

Uncategorized

தனிமைத் தவம்

கூட்டமாய் குதூகலித்து மகிழ எவ்வளவு பிடிக்குமோ, தனித்து இருக்கவும் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. சில திரைப்படங்களை சிலரோடு மட்டுமே பார்க்க வேண்டும் என்பதுபோல, சில படங்களை தனியாகவே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். தனியாக இருக்க பயம் கொள்பவன், தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் துணை வைத்துக்கொள்கிறான். தூங்கும் போது மட்டுமே… (READ MORE)

Uncategorized

iraivi

‘இறைவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

குலதெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய ‘இறைவி’களின் உன்னதம் உணராமல், அவமதித்து, தங்களது சுய உணர்ச்சி ஆதாயங்களுக்காக நெறி பிறழ்ந்தும் கூட எதையும் செய்யும், கொஞ்சம் கொஞ்சமாய் ‘இறைவி’களின் வாழ்வை விற்றுவிடும் ‘நெடில்’ கொண்ட ‘ஆ’ண்களின் கதை. விமர்சனம் செய்பவர்கள் கதையை சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளதால், இதற்குமேல் சொல்லவில்லை. மூலக்கதை சுஜாதாவுடையது… (READ MORE)

Manakkudi Talkies

,

“நதி போல ஓடிக் கொண்டிரு…” ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில்

டோக்கியோ, ஜப்பான் ‘அரிகாதோ கொசைமாசே…!’ ஒரு அழகிய சிவந்த ஜப்பானிய இளம்பெண் கிட்டத்தட்ட ‘ட’வை கவிழ்த்துப் போட்டதை போல இடுப்பை ஒடித்து குனிந்து ‘வருகை புரிந்ததற்கு நன்றீய்…!’ என்பதாக ஜப்பானிய மொழியில் கூவிக் கொண்டிருந்தாள். நன்றியைக் கூட சத்தமாக கூவி உடல்மொழி கொண்டு வெளிப்படுத்துகிறார்கள் ஜப்பானியர்கள். வெளியே ஒரு இருபது பேர் இடம் பிடிக்க ஒழுங்கான… (READ MORE)

Self Help

aadukalam

தன் மீது நம்பிக்கை கொண்டவன்…

The one who beleives on himself will never hide, from where and whom he learnt what. How he sees things is his strength. அட்ட காப்பி அடிப்பவர்களெல்லாம் அசல்தான் என்பதாக காட்டிக்கொள்ளும் உலகில், மெக்சிகோவின் ‘அமோரஸ்பெரோஸ்’ நாய் சண்டையை மனதில் கொண்டு சேவல் சண்டையை செய்தேன் என்று… (READ MORE)

Self Help, பொரி கடலை

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த…

நடிகர் சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞர் என்ற அந்த செய்தி கவனம் ஈர்த்தது என்பதைவிட சூர்யாவின் மீதான மரியாதையை உயர்த்தியது என்றே சொல்வேன். அந்தப் பெண்மணி தன் காரில் பிரேக் போட்டார், பின்னே வந்த இளைஞரின் பைக் இடித்தது. இருபக்கமும் பாதிப்பு. வண்டியை நிறுத்தி சண்டை. சூரியா தாக்கினார் என்று அந்த… (READ MORE)

பொரி கடலை

சென்னைப் புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் அவ்வளவாக தமிழ் நூல்கள் கிடைக்காத அந்நாட்களில், அங்கிருந்து பயணித்து வந்து அள்ளிப் போவோம் நூல்களை. அமெரிக்காவிலிருந்து திரும்பி அப்படியே காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த கண்காட்சியில் புதையல்களை அள்ளிக் கொண்டு, நண்பர்களோடு இரவுக்காட்சி ‘ஆளவந்தான்’ பார்த்து விட்டு நள்ளிரவிற்கு மேல் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக பேருந்து பிடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. இரண்டான்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

Great teacher is

Great teacher is one who gives great learning from simple things! An ordinary student become extraordinary when he goes in the hands of a great teacher! சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்களை கற்பிக்கிறார்கள் சிறந்த ஆசிரியர்கள். ‘எது விஷயம்?’ என்று பார்க்கும்போது மாணவனாய் இருப்பவன், அதை… (READ MORE)

Self Help

சீனப் பயணி …

17 வருடங்கள் காடு, மலை, பேரறுவி, பேய்ப் பள்ளத்தாக்கு, ரத்தம் உறையச் செய்யும் குளிர், வழிப்பறி கொள்ளை, கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள், வரும் வழிகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடமுடியாது என்று சட்டம் பேசிய மன்னர்கள், பசி, பாலைவனம், கடக்க முடியா நீர் மண்டலம், உயிருக்கு ஆபத்தான பேராசை பிடித்த மனிதர்கள் என எல்லாவற்றையும்… (READ MORE)

பொரி கடலை

Paraman Parotta Ooty

அக்னி நட்சத்திர வெய்யிலில்

அக்னி நட்சத்திர வெய்யிலில் அடுப்பைப் பற்ற வைத்து சத்துமாவைக் கொதிக்க வைத்து உருண்டை பிடிக்காமல் கிண்டிக் கிண்டி இறக்கி கஞ்சியாக்கும் போது… மனைவியின் மீது மரியாதை பெருகுகிறது! ‪#‎மனைவி‬ ஊரில் இல்லை.

பொரி கடலை

24 one

’24’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இந்த மணித்துளியிலிருந்து இருபத்தி நான்கு மணி நேரம் முன்னும் பின்னும் பயணிக்க வைக்கும் ஒரு கால எந்திர கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை களவாடி கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள ஒருவன் முயற்சித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இருபத்தியாறு வருடங்கள் கழித்து இருவர் சரி செய்யும் முயற்சியில் பின்னோக்கிப் பயணித்தால்… எப்படி இருக்கும்? அந்த ’24’லிருந்து ’26’ என்பதே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

o-LIFE-AFTER-DEATH-facebook

உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன்…

வாழ்க்கை, உலகத்தின் ஆகச் சிறந்த ஆசிரியன். ஒவ்வொரு நாளும், பல நிகழ்வுகளை நாம் நடந்து போகும் பாதையில் வைத்து கடந்து போக வைத்து அதில் அனுபவம் கொள்ளச் செய்து நம்மை வார்க்கிறது, வளர்க்கிறது. நான் என்பவன், நான் கடந்து வந்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவன். நீங்கள், நீங்கள் பயணித்த பாதையில் சந்தித்த அனுபவங்களினால் வார்க்கப்பட்டவர்.

Self Help

, , , , , ,

TheManWhoKnewInfinity_Trailer

திரை விமர்சனம் : ‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ : பரமன் பச்சைமுத்து

  கணிதத்தின் அறிந்துகொள்ள முடியா பெரு முடிச்சுகளின் ஆதாரங்களை அவிழ்த்துப் போடும் சூத்திரங்களை உள்ளே வைத்துக் கொண்டு, அதை நிரூபிக்க வெளியே தினம் தினம் போராடிய நம் தமிழ் மண்ணின் கணித மேதை ராமானுஜத்தைப் பற்றிய ஹாலிவுட் படம். (‘த மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி’ – ‘முடிவிலியை முன்பே கண்டவன், முன்னமே அறிந்தவன்’ !!!?) சிறுவயதிலேயே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

exclamation

வியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்

ஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்!’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான்! ‘வாவ்’ எதற்கு? – என்பதே என் எண்ணமாக இருந்தது. ‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , ,

House_Crow_in_Kolkata

காக்கை அணிலோடு மதிய உணவு

எட்டு காக்கைகளோடும், ஓர் அணிலோடும் பகிரும் அனுபவமாய் அமைந்தது என் இன்றைய மதிய உணவு! ஆறு மணிக்காக்கைகள் கீரைச்சோற்றையும், இரு அண்டங்காக்கைகள் தயிர் சோற்றையும், இவைகள் கொத்தி விட்ட மற்ற எல்லாவற்றையும் அணிலும் உண்டன. என் தட்டைக் கழுவி, நீர் நிரப்பி வைத்ததும் ஒன்பது உயிர்களும் பருகின என்பது என் பரவசம்.  (மலர்ச்சி அலுவலகம் மேலே)… (READ MORE)

பொரி கடலை

aram1

ஆழ்ந்து அசந்து போக வைத்த எழுத்து – ஜெயமோகன்

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

நாலு முழமா எட்டு முழமா – பழசு

நாலு முழமா, எட்டு முழமா என்று அளவு கேட்ட கடைக்காரரை, 28-30ஆ 30-32ஆ என்று சைஸ் கேட்க வைத்துவிட்டன ‘ஒட்டிக்கோ, கட்டிக்கோ’ வெல்குரோ வேட்டிகள்! #ராம்ராஜ் வெல்குரோ

Uncategorized

Theri - Copy

‘தெறி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு ‘நிர்பயா’ இறக்கும் தருவாயில் ‘அண்ணே’ என்று சொல்லி உயிர் விட, அண்ணனாக பொறுப்பேற்ற நாயகன் அந்த அபலையின் சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து அதேவிதமாகத்  தண்டிக்க, அதனால் வெகுண்டெழுந்த அவனது பெரும்புள்ளி அப்பா பதிலுக்கு என்னவெல்லாம்  செய்கிறார், எப்படியெல்லாம் எதிர்கொள்ளப் படுகிறார் என்பதைச் சொல்லும் கதைக் களம். விஜய்யின் உடையலங்காரம் மிக… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

மனதில் நீர்வார்த்த வானிலை அறிக்கை!

வட இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர்ப் பஞ்சம், நீரின்றி தவித்து வறட்சியால் கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது, சட்லஜ் – பாக்ரா நங்கல் நீர்ப் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது, ‘ஐபிஎல்’ஐயே தடை செய்யவேண்டும் என்ற பொதுநலவழக்குப் போடுமளவிற்கு மகாராஷ்டிரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்று தினம் வரும் செய்திகளைப் படித்து விட்டு மாநில செய்திகளைப்… (READ MORE)

பொரி கடலை

வேலூர் சரவணபவன்

நேற்று முன்தினம் பெங்களூரூவிற்குப் பயணிக்கும் போது மதிய உணவு சாப்பிட வேலூர் சரவணபவன் வந்தேன். இன்று சென்னை நோக்கிப் பயணிக்கும் வழியில் மதிய உணவிற்காக அதே வேலூர் சரவணபவன். இரண்டுக்குமிடையே நிறைய நடந்துவிட்டன. ஒரு மலையில் ஏறியது, ஒரு அனுபவக் கட்டுரை, உறவினர் ஒருவர் வீட்டில் தடாலடியாக புகுந்து மகிழச்செய்தது, உயிர் நண்பனோடு ஓரிரவு தங்கி… (READ MORE)

Uncategorized

‘மலைகள் அழகானவை’ அல்லது ‘மலேய்டா…!’

மலைகள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. ‘குணா’ பார்த்து விட்டு ‘புண்ணியம் செய் மனமே’ அந்தாதி சொன்ன கமலஹாசன் பாத்திரம் நம்மைப்போலவே இருக்கிறதே என்று வியந்திருக்கிறேன்.  கர்நாடகாவில் இருந்த காலங்களிலெல்லாம் மலைமுகடுகளில் திரிந்திருக்கிறேன். சென்ற ஆண்டு சாவன்துர்கா, மேற்குத் தொடற்சியின் கல்கொத்தி மலை மற்றும் போளூர் அடுத்த பர்வதமலை ஏறிய போது கால்கள் விரையும் வேகங்கண்டு ‘மனிதக்… (READ MORE)

Uncategorized

cicketposter - Copy

Life Vs Cricket #India-WestIndies

#India-WestIndies match வரையறை என்பது ஒரு மெல்லிய கோடு;  நாம் கோட்டிற்கு உள்ளே இருந்துகொண்டு நம் வீச்சு கோட்டைத் தாண்டி பயணிக்கும்படி செய்யும்போது பெரும் வெற்றி , நாமே கோட்டைத் தாண்டிப் போகும்போது நமது முயற்சிகள் முழுதும் வீண் என்பது கிரிகெட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும். – பரமன் பச்சைமுத்து 01.04.2016 சென்னை    

Self Help

, , ,

london_has_fallen_2015_movie-wide - Copy

‘லண்டன் ஹேஸ் ஃபாலன்’ – திரை விமர்சனம்

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகையும், அதிலிருக்கும் அதிபரும் அவர்களது பெருமை. தேசியக்கொடியை உள்ளாடையில் பிரிண்ட் செய்து போடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளும் அவர்கள், வெள்ளை மாளிகைக்கோ, அமெரிக்க அதிபருக்கோ அந்நிய தேசத்தால் ஒரு கரும்புள்ளி வருவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலத் திரைப்படம். பிரித்தானிய பிரதமரின் மறைவிற்கு இரங்கல் செலுத்த ஏகப்பட்ட… (READ MORE)

Manakkudi Talkies

, ,

அமெரிக்க அதிபர் கியூபா பயணம் பற்றி அன்றே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ

‘கருப்பின மகனொருவன் அமெரிக்க ஜனாதிபதியாகவும், லத்தீன் அமெரிக்க மனிதரொருவர் ‘போப்’ ஆகவும் இருக்கும் நாளில்… அமெரிக்கா நம்மிடம் வந்து பேசும்!’ என்று ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூன்றிலேயே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ பிரமிக்க வைத்துவிட்டார்! ‪#‎American‬ President in Cuba after 88 years. Present Pope is from ‪#‎Argentina

பொரி கடலை

, ,

அறுபத்து மூவர் இன்று…

‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கு அடியேன்…’ என்று பதிகத்தில் பதிவு பெற்ற சிவனடி நிழல் பெற்ற நாயன்மாறர்களுக்கென்றே நடக்கும் பெரு உற்சவம் இன்று இங்கே.  மயிலைத் தெருக்களில் தொடங்கி மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் என் வீடு வரை சாலையோரத்தில் மோர் விநியோகிக்கிறார்கள், நீர் தருகிறார்கள், உணவு சமைக்கிறார்கள்.  எந்த அரசியல் அல்லது… (READ MORE)

Uncategorized

மயிலை தேர்…

‘ஏங்க எடம் இல்லீங்க… வழியில்லீங்க. இப்படி போக முடியாது’ ‘ஏனு… எல்லி ஹோகி…ஹலோ… மர்த் பிடு’ ‘ஏம்மா நின்னு போனாதான் என்னம்மா’ நெஞ்சு, முதுகு, அடி வயிறு என மொத்த உடம்பையும் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லாரும் அழுத்திக் கொண்டேயிருக்க, எல்லாப் பக்கமும் சப்தம், நகரமுடியாது, நினைத்த பக்கமும் போகமுடியாது, கும்பலோடு சேர்ந்து நீங்கள் கடத்தி நகரத்தப்… (READ MORE)

Uncategorized

Sethupathi - Copy

‘சேதுபதி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வீட்டில் ஒரேயடியாய் குதூகலம், டூட்டியில் ஒரேயடியாய் விறைப்பு என்று இருக்கும் முறுக்கு மீசை போலீஸ்காரர் ஒருவரின் வாழ்க்கையில் ஆள்-அம்பு-சேனை என்று வாழும் எதற்கும் பயப்படாத தாதா ஒருவர் குறுக்கிட்டுவிட்டால் என்னவாகும், அவர்களிடையே நடக்கும் மோதல்கள் என்ற ‘மூன்று முகம்’ காலத்தைய, எல்லா ஹரி படத்திலும் பார்த்த கதைதான். ஆனால் கொடுத்த விதத்தில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

visaranai2 - Copy

‘விசாரணை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

  ஆட்டோ ஓட்டும் ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டெழுதிய ‘லாக்கப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட படமாம். நாவல் எழுதியவரை உலகத் திரைப்பட விழாவிற்கே கூட்டிச் சென்றும், படத்தில் பெயர் போட்டும்  கௌரவித்து விட்டார் இயக்குநர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கும் உயர் அதிகாரம் கொண்டவர்களுக்கு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,

கருந்துளைகளைத் தாண்டி கணக்கிட முடியா பெரியவன்’ :

அறிவியல் உலகம் ஆர்ப்பரிக்கிறது. ஊடகங்கள் உற்சாகத் தலைப்புகளிட்டு செய்திகள் தருகின்றன. வானியல் அறிவியலில் அடுத்த கட்டம் இது என்கிறார் டேவிட் ரிட்ஸ், லிகோ அமைப்பின் திட்ட செயல் இயக்குநர் (லேசர் இன்ட்டெர்ஃபெரோமீட்டர் க்ராவிடேஷனல்-வேவ் ஆப்சர்வேட்டரி). இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் நினைவுக்கு வருகிறது சிலருக்கு. ‘சூரியனைப் போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள்… (READ MORE)

Uncategorized

, , , ,

கரிகுப்பம் பவர் ப்ளாண்ட்டும், ‘கெயில்’ வயல் வழியும்

நெல் வயல்களின் ஊடே மின்சார கம்பி தூக்கும் மின் மரங்கள் நடப்போவதாகவும், அந்த இடத்தை மட்டும் வெறுமனே விட்டுவிட வேண்டும், பயிர் வைக்கக் கூடாது, இடம் தருவதற்கு இவ்வளவு பணம், கரிக்குப்பம் பவர் ப்ளாண்ட்டிலிருந்து தரகர்கள் வந்து பேசிக்கொண்டுள்ளனர் என எங்கள் கிராமமே பரபரப்பாய் இருந்தது.  அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது கரிகுப்பம் பவர்… (READ MORE)

Uncategorized

stills - Copy

‘இறுதிச் சுற்று’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

சாதனை எதுவென்பது வாழ்வின் நிலையைப் பொறுத்து மாறிவிடுகிறது. விளையாட்டு வீரனாய் இருக்கும்போது அவனது சொந்த வெற்றி சாதனை. ஆசிரியனாய், பயிற்சியாளனாய் மாறும்போது, மாணவனின் வெற்றியே சாதனை! முந்தைய நிலையில் அரசியல் காரணங்களால் விட்ட வெற்றியை பிந்தைய நிலையில் பிடிக்க முயற்சிக்கும், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை திமிர் தெனாவெட்டு கொண்ட, அதைவிட அதிகமாய் குத்துச் சண்டை விளையாட்டு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

திருமண நாள்

‘ப்பா… ஹாப்பீ எய்ட்டீன்த் வெட்டிங் அஏன்னிவெர்ஸரி!’ மகள் கட்டிக்கொண்டு சொல்லும் போதுதான் பதினெட்டு வருடங்கள் ஓடியே விட்டன என்பது புரிகின்றது.’எத்தனை பேர் வாழ்த்தி வளர்ந்த திருமண வாழ்க்கை!’ என்று மனம் நெகிழ்கிறது. பயணித்த பாதைகள் மனதில் ஓடுகின்றன. ‘எங்கும் நிறைந்தவனே, எல்லை இலாதானே, எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே… நன்றி!’ மனம் கை கூப்புகிறது…. (READ MORE)

Uncategorized

mental-hed - Copy

மனநிலை?

‘மனநிலை சரியில்லாத மகனை சுத்தியால் அடித்துக் கொன்ற பெற்றோர்!’ என்ற செய்தி படிக்கையில் எழும் கேள்வி, ‘யாருக்கு மனநிலை சரியில்லை?’

ஆ...!, பொரி கடலை

wpid-images.jpg

அம்மாவின் தவம்…

சிலர் சிலவற்றை செய்யும் போது, வெறுமனே அதை பார்க்கும் நம்மையும் அது தொற்றிக் கொள்கிறது. உணர்ந்திருக்கிறீர்களா? சிலர் பிரார்த்தனை செய்யும் பாங்கு,  வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு உள்ளே வந்து ஒரு இறையுணர்வை ஏற்படுத்திவிடும். ஒரு அழகான குறத்தி அதை செய்துவிட்டாள் இன்று எனக்கு. தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்து விடுதியில் தேநீர் அருந்த இறங்கிய போது… (READ MORE)

Self Help

, , ,

ஏறுமுகம்…

உங்களை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதில் தொடங்குகிறது உங்கள் ஏறுமுகம்.   உங்களுக்கு உங்களிடம் பிடித்த ஒரு விஷயம் என்ன? – பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage

Self Help

wpid-unnamed.jpg

தாரை தப்பட்டை – திரை விமர்சனம்: பரமன்பச்சைமுத்து

சென்ற வருடம் முகநூலில் ஒரு விவாதத்திற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். ‘அன்பென்பது என்ன, நீ அழுது கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை நான் பக்கத்திலிருக்க இடம் வேண்டும் என்பதா? அல்லது நான் தூரமாகப்  போனாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதா?’ என்று கேட்டிருந்தேன். அதற்கான இயக்குநர் பாலாவின் பதில் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம். ராஜாவும்,… (READ MORE)

Manakkudi Talkies

சாமி முன்ன வை…

சுடச் சுட அச்சகத்திலிருந்து வந்த என் முதல் நூலை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து அப்பாவின் முன் வைத்தேன். ‘எந்த நல்லதையும் சாமிகிட்ட மொதல்ல வைக்கணும்ன்னு தெரியாதா! சிவசிவா’ என்று சொல்லி பூஜையறைக்கு எடுத்துப் போகிறார். ‘சாமி முன்னதான் வைச்சேன்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைக்கிறேன் நான்! பரமன் பச்சைமுத்து மணக்குடி 16.01.2015

Uncategorized

Ethuvum nirpathillai yenbathey - Copy

ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…

சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர்.  வைரமுத்து தனது நூலொன்றில்,  ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்!  நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , , , , , , , , ,

wpid-images1.jpg

விகடன் விருதுகள்…

அனிருத்தின் தர லோக்கலுக்கு ‘மாரி’ தனுஷ் போட்ட குத்தாட்டத்திற்கு, ‘காக்கா முட்டை’ படத்திற்கு, சிறுவர்களுக்கு மற்றும் இயக்குநருக்கு, ‘மாயா’ மற்றும் ‘காதும்மா’வாக வடிவெடுத்து உயர்ந்து நிற்கும் நயன்தாராவிற்கு, புத்தரின் அமைதியும் அபிமன்யுவின் தீவிர செயல்பாடுகளையும் கொண்ட அபூர்வ கலவை ‘சித்தார்த் அபிமன்யூ’ ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமிக்கு, ‘மௌவாலா வா சலீம்’ பாடலுக்காக ஏ.ஆர். அமீனுக்கு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

Marathinayam - Copy.jpg

மரத் தியானம்…

தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது.  தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)

Self Help, Spirituality

, ,

Perungu

நல்லதைப் பாராட்டுவோம் – பெருங்குடி ஏரி காக்கும் பேரார்வலர்கள்…

இரண்டு லட்சம் பேர் வெறுமனே புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, இருபது பேர் இறங்கிச் செய்தால் எல்லாம் மாறும் என நிரூபித்திருக்கிறார்கள்  ‘பி-எல்-ஏ-என்’ (பெருங்குடி லேக் ஏரியா நெய்பர்ஹூட்) தன்னார்வலர்கள்.  பெருங்குடி ஏரிக்குள் இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்கிறார்கள். ஜனவரி இருபத்தியாறன்று ‘பெருங்குடி ஏரித் திருவிழா’ கொண்டாடுகிறார்கள். பெய்யெனப் பெய்த பேய்… (READ MORE)

பொரி கடலை

opnness

பிரச்சினைகளின் ஆணி வேர்…

‘இதுதான் நான்!’ ‘இப்படி நினைத்திருந்தேன்’ ‘இப்படிச் செய்துவிட்டேன்’ என்று உள்ளதை உள்ளபடி உரைக்காமல் மறைப்பதில் தொடங்குகின்றன வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகள். உண்மையை போட்டு உடைப்பவனுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அதை சொல்லும் தருணத்தில். மறைப்பவனுக்கு ஓராயிரம் பிரச்சினைகள், காலம் முழுக்க. மலர்ச்சி வணக்கம்! -பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage

Uncategorized

vetti

வேட்டி ‘தினம்’!

தமி்ழர் பற்றி அதிகம் பேசாதவர் என் தந்தை. தமிழை உயிராகக் கொண்டு தமிழனாகவே வாழ்கிறார் கிராமத்தில் அவர். தமிழர் பற்றி அதிகம் பேசி, ஆங்கிலம் அதிகம் பேசி அவ்வப்போது தமிழில் பேசி தமிழ் வளர்ப்பது பற்றி நிறைய பேசி நகரத்தில் வாழ்கிறேன் நான். அவருக்கு வேட்டி ‘தினம்’. எனக்கு ‘வேட்டி தினம்’! அப்பாவைப் போல, பாட்டனைப்… (READ MORE)

பொரி கடலை

aram - Copy

ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. ஆனால்..

ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. பெங்களூர் வாழ் காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். மணக்குடியான் டாட் காம் தளத்தில் வந்திருந்த அப்போது வெளியான ‘நான் கடவுள்’ படத்தின் எனது விமர்சனத்தை தனது இணைய தளத்தில் அவர் இணைத்திருந்தது அப்போதைய பெரும் மகிழ்ச்சி எனக்கு அந்நாளில்.  ‘கடல்’ படத்தின் ஆரம்ப காட்சி வசனங்கள் (அர்விந்த் சாமி, சின்னப்… (READ MORE)

பொரி கடலை

பிஜேபி, காங்கிரஸ், தீவிரவாதிகள்…

காலையில் தில்லியில் காப்பி, மதியம் லாகூரில் லஞ்ச், இரவு காபூலில் உணவு என்று கனவு காண்பதாக அன்று மன்மோகன் சிங் சொன்னபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள், இன்று அதையே ‘காபூலில் காலை உணவு, லாகூரில் லஞ்ச், டில்லியில் டின்னர்’ என்று மாற்றி செய்திருக்கும் போது எதிர்க்கிறார்கள்.  காங்கிரஸைத் தவிர, உலகத் தலைவர்கள் உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர் என்பது… (READ MORE)

Uncategorized