Yearly Archive: 2018

kanaa 1

கனா : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து :

வாழ்வின் பேரிழப்பு ஒன்றின் போது கூட கிரிக்கெட் ஆர்வத்தைக் துறக்க முடியா ஈர்ப்பு கொண்ட, காவிரி வள குளித்தலை பகுதியின் பெரும் விவசாயி முருகேசனின் கிரிக்கெட் பேரார்வம் அவரது மகள் கௌசல்யாவிற்கு கடத்தப்பட்டு, இந்திய நாட்டிற்காக விளையாடி வெற்றி வாங்கித் தரவேண்டும் என்ற ‘கனா’வாக மாறினால்? தேசத்தின் ஒரு மூளையில் இருக்கும் குளித்தலையிலிருந்து எதுவும் தெரியா… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

seethakathi_151607775300

‘சீதக்காதி’: திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து

இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும், மற்றவர்கள் எவரும் தொடக் கூட அஞ்சும் ஒரு கதையை எடுத்துக் கொண்டு முயற்சித்துப் பார்க்கும் அந்த துணிச்சலுக்காகவே ஒரு பூங்கொத்துத் தரலாம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும். ஐம்பது நிமிடத்திற்குக் குறைவாக வந்தாலும், நிறைவாக நிதானமாக கேட்டதை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி ‘எந்தப் படத்தில் எந்த ரோலில்… (READ MORE)

Manakkudi Talkies

, ,

என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது…

என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது. பொறிஞன், தொழில் நுட்பம் தெரிந்தவன் என்றாலும் வெட்கம் பிடுங்கித்தின்னும் நடுத்தர வர்க்கத்துப் பையனாகவே இருந்து அடியிலேயே உழன்று கொண்டிருந்த எனக்கு வாழ்வின் முக்கியக் கதவுகள் திறந்தது பெங்களூருவில்தான். சென்னை ‘ஆஃபீஸ் டைகர்’ (இன்றைய ‘ஆர் ஆர் டொனாலி’) ப்ராஜெக்ட்டில்… (READ MORE)

Uncategorized

மார்கழி மாலை

சென்னை நகரில், காற்றோட்டமான அமைப்பு கொண்ட வீடுகளில் பகல் நேரங்களில் மின்விசிறிகள் ஓடவில்லை. வயதானோர் இருக்கும் வீடுகளில் மாலை நான்கரை மணிக்கு சன்னல்கள் அடைக்கப்படுகின்றன, வேகமாய் வீசும் காற்றில் குளிரெடுக்கிறது அவர்களுக்கு என்பதால். அதிகாலையில் மெதுவாய் எழுந்து பின்பு தடதடவென்று புறப்பட்டு எட்டரைக்கு மேல் வீட்டுக்கு வெளியே வரும்படியான வாழ்வு முறையைக் கொண்ட நகரத்து மக்கள்,… (READ MORE)

Uncategorized

aquaman-movie-poster

திரை விமர்சனம் : ‘அக்வா மேன்’ : பரமன் பச்சைமுத்து

    நாட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தின் காப்பாளரின் கண்களில், கரையில் அடிபட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு பெண் அகப்படுகிறாள். அன்பும், அரவணைப்பும், மருந்தும் புகட்டப்பட்டு  சுயநினைவு பெற்று அவள் எழுந்து உட்கார்ந்ததும் அவள் வேறு ஓர் உலகத்தை சேர்ந்தவள் என்றும், கடலின் அடியில் இருக்கும் அட்லாண்டிஸ் தேசத்தின் ராணி ‘அட்லாண்டா’ அவள் என்றும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

இறைவா நன்றி!

கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் இருக்கும் மலர்ச்சி மாணவர் ஒருவரோடு திருவான்மியூர் ஹாட்சிப்சில் காபி அருந்தி விட்டு எதிர்ப்புறம் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மிகப்பெரிய’ கடையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். ‘பரமன் சார்… எப்படி இருக்கீங்க! இது நாலாவது ப்ராஞ்ச். உங்க க்ளாஸ் அட்டெண்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் பெரிய டேர்னிங் பாயிண்ட் எனக்கு. அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது!’ என்று… (READ MORE)

Uncategorized

சிட்னி ஷெல்டனின் காட்சிகளை தமிழ்ப்படுத்தி கண் முன்னே நிறுத்தியவர் ரீ.கி. ரங்கராஜன்.

ஆங்கில நாவல் உலகில் அடித்து ஆடியவர் சிட்னி ஷெல்டன். அக்காலங்களில் அதிகம் விற்றது அவரது நாவல்கள்தான் என்று சொல்வோர் உண்டு. ஆங்கிலமறியாமல் இருந்த அந்த இளம்பிராயத்தில் சிட்னி ஷெல்டனின் நாவல்களை என்னுள் போட்டு, அந்தக் கதாபாத்திரங்களோடு என்னை உலவ விட்டவர் ரா.கி. ரங்கராஜன். ‘குமுதம்’ வார இதழில் வரும் ‘ட்ரேஸி விட்னி’க்காக வாரம் முழுக்கக் காத்திருந்து… (READ MORE)

Uncategorized

பாரதி விருது – தினமணி அசத்தல்

பாரதியின் பெயரால் ஒரு விருது வேண்டும், பாரதியைப் பற்றி ஆய்வு செய்வோர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அவ்விருதையும், ஒரு லட்சம் ரூபாயும் அளித்து வெகுமதி செய்ய வேண்டும் என்று கவியரசு கண்ணதாசன் கண்ட பாரதி கனவு இத்தனையாண்டுகள் கழித்து இன்று மெய்ப்பட்டிருக்கிறது. ‘மேல் நாடுகளில் ஷெல்லிக்கு ஒரு கூட்டமென்றால், ஷேக்ஸ்பியருக்கு ஒரு கூட்டமென்றால் மக்கள் கூட்டம் வருகிறது…. (READ MORE)

Uncategorized

‘நெல்’ ஜெயராமனுக்கு மலர் அஞ்சலி

‘அரிசிதான் உங்களது உடல் பருமன், சர்க்கரை என எல்லா நோய்களுக்குமான காரணம்!’ என்றொரு பிரச்சாரம் ஒரு பக்கமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் ‘இந்தா கருப்பு கவுனி, இதோ மாப்பிள்ளைச் சம்பா, இதோ குழியடிச்சான், இத சாப்டுட்டு அப்புறம் சொல்லு!’ என்று பாரம்பரிய ரக நெல்களை மீட்டுத்தந்து இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தவர் ‘நெல்’ ஜெயராமன். 174… (READ MORE)

Uncategorized

எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது என்றொரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் அசல் ‘பட்சிராஜன்’ஆகிய சலீம் அலியை அந்நாட்களில் தனது எழுத்துக்களின் மூலம் எனக்கு அறிமுகம் செய்தவர் எஸ்ரா. என்னுள்ளே பல சன்னல்களை திறந்து விட்ட எழுத்தாளர்களில் எஸ்ராவும் ஒருவர். ‘நூலைப் படித்துவிட்டு ஒரு வாசகன் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதே எழுத்தாளனுக்குப் பெரிய அங்கீகாரம்!’… (READ MORE)

Uncategorized

Gaja Cyclone

காவிரிப் படுகையின் மக்களுக்குத் தேவை இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, நிவாரணம் தாண்டிய நாளைக்கான வழி!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் கிராமம் இரண்டு லட்சம் மரங்களை இழந்து நிற்க, அதே ஊரின் விவசாயி சீனு மட்டும் ஒரு பாதிப்புமின்றி நூற்றுக்கணக்கான தென்னைகளோடு நிற்கிறார். ஊரின் எல்லா வீடுகளையும் கலைத்துப் போட்ட ‘கஜா’ இவரது வீட்டை மட்டும் விட்டுவிட்டது எப்படி? குறைந்த சேதாரங்களோடு நிற்கிறார் விவசாயி சீனு. ‘கஜா புயல் கடலூருக்கும்… (READ MORE)

Media Published

, , , , , , , , , ,

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து பறவைகளை நேசித்து பறவைகளுக்காகவே வாழும் சூழலியல் ஆர்வலர், பல்கிப் பெருகிவிட்ட செல்லிடப் பேசிகளின் அளவுக்கதிகமான அலைவரிசை வீச்சினால் அழியும் பறவைகளைக் காக்க வேண்டி அரசு, நீதிமன்றம், மக்கள் என்று எல்லா மட்டங்களிலும் போராடுகிறார். எவரும் செவிமடுக்கவே மறுப்பதோடல்லாமல் அவரை ஏளனம் செய்ய, ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

சிந்து சமவெளியைப் படித்த அறிஞருக்கு மலர்ச்சி வணக்கம்!

உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்று என்று ஒத்துக்கொள்ளப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில், திராவிட முத்திரைகள் உள்ளன என்று படித்துக்காட்டி உலகத்தை ஒத்துக் கொள்ளச் செய்து அதிர்வுகளை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன். ‘கஜினி முகம்மதுவை பதினேழு முறை ஓட ஓட விரட்டிய சோழனின் கல்லறை எங்கேடா?’ வகையில் கட்செவியஞ்சலில் வரும் புருடா பகிர்வுகளைப் போல அல்லாமல்… (READ MORE)

Uncategorized

சுமந்து செல்லும் சங்கதிகளால் கழுதைக்கும் மரியாதை வருகிறது

கோவையில் இறங்கிய விமானம் விட்டு இறங்கி பெட்டியை பெற்றுக் கொள்ளும் வரிசையில் நிற்கிறேன். யாரோ நம்மையே உற்றுக் கவனிப்பது போலொரு பிரஞ்ஞை வந்து அப்பக்கம் பார்க்கிறேன். சிரித்து கை நீட்டுகிறார் ஒருவர். ‘பரமன் சார்… நான் @#*#@*#”, பொள்ளாச்சி நேச்சுரல்ஸ்!’ ‘ஓ மகாலிங்கம் பார்க் கார்னர் ஹெச்டிஎஃப்ஸி பக்கத்துல!’ ‘ஆமாங்க!’ …. கோவையில் தோசார்ட் திறப்பு… (READ MORE)

Uncategorized

வேள்பாரி

காக்கா விரிச்சி, குலநாகினி, ஆட்கொல்லி விதை, கொடிகுலத்து வள்ளி, வேளிர் குலத்து மகள், குறிஞ்சி நிலத் தலைவன், காடறியும் ஆசான், கார்த்திகை நட்சத்திரங்கள், தேவவாக்கு விலங்கு, கொற்றவை கூத்து, துடும்பு, நட்பின் கபிலர், நாகரக்கரடு, விரலிமேடு, பகழியம்பு, சுருளம்பு, மூவிலைவேல், செங்கனச்சோழன், குலசேகரப்பாண்டியன், உதியஞ்சேரல், காடர்கள், திரையர்கள், கூவல்குடியினர், தந்தமுத்துக்காரர்கள், தட்டியங்காட்டுப் போர் என ஈராண்டுகளாக… (READ MORE)

Uncategorized

நினைவூட்டும் வசதிகள்

தொலைபேசி வழியே மட்டுமே தொடர்பு என்றிருந்த அந்தக்காலங்களில் முக்கிய நபர்களின் எண்களை மனனம் செய்து பதிய வைத்திருந்த தலைமுறையின் கடைசி எச்சங்களில் நானுமொருவன். அதே வழக்கத்தில் செல்லிடப்பேசி எண்ணையும் உள்ளே பதிய வைக்கும் பழக்கம் வந்தது. செந்தில்நாதன் என்றால் 9841025530 என்று பதினெட்டாண்டுகளுக்கு முன்பு பதிய வைத்தது இன்றும் உள்ளே நிற்கிறது. நவீன முறையில் சேமிக்கும்… (READ MORE)

Uncategorized

துடும்பு

பறம்பு நிலத்தில் கொற்றவைக் கூத்தின் போது பாரியின் மக்கள் பல்வேறு கருவிகளோடு துடும்பையும் இசைத்து காட்டையதிரச் செய்வார்கள் என்று சு.வெங்கடேசனின் வரிகளின் வழியே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இன்று க்ராண்ட்ஸ்கொயர் மாலில் மலர்ச்சி மாணவர் உதய்ஷங்கரின் நிறுவனக்கிளை திறக்கப் போன போது அதை தொட்டனுபவிக்க முடிந்தது. ஊர்ப்புறங்களில் ஊராட்சி அலுவலக அறிவிப்புகளை வெளிப்படுத்தும் முன் அடிக்கப்படும்… (READ MORE)

Uncategorized

‘நான் யார்?’

‘நான் யார்?’ ‘எப்படி அறிவது?’ என்ற கேள்விகளை வைத்துக் கொண்டு அலைபவர்களுக்கு… எதற்கு அறிய வேண்டும் இப்போது? நீ நீதான்! பிறிதொரு ஆழம் உனக்கு வேண்டியிருந்தால் வேண்டிய தருணத்தில் அதுவாக வெளிப்படட்டுமே, உன் இருத்தலை அனுபவி இப்போது. – பரமன் பச்சைமுத்து சென்னை 10.11.2018 Www.ParamanIn.com

Uncategorized

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

இரவு உணவிற்குப்பின் மீதி கால் வயிற்றை நட்சத்திரங்கள் கொண்டு நிரப்பலாமேயென்று வானம் பார்க்க வாசலுக்கு வெளியே வந்தேன். அடுக்ககத்தின் பார்க்கிங் பகுதியில் காரில் முதுகை சாய்த்துகொண்டு நட்சத்திரம் தேடியபோது, விழுந்த விளக்கொளியில் முதலில் தெரிந்தது மரக்கிளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் இருந்த இருட்டைவிட கருப்பான சில காக்கைகள். இரவைப் பகலாக்கும் தொழில்நுட்பங்கள், ஒளியை உமிழும் விளக்குகள்,… (READ MORE)

Uncategorized

சர்கார் – திரை விமர்சனம்

விஜய் அழகாக கச்சிதமாக இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். கேட்டதை அழகாகக் கொடுத்துள்ளார். ‘டெங்கு கொசு ஒழிப்பு – பொதுப்பணித்துறை’ என்பதில் தொடங்கி படம் நெடுக ஏ ஆர் முருகதாஸ் ஏமாற்றி விட்டார். வீ டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சர்கார்’ – சறுக்கல்.

Uncategorized

20181105_112134-2396744489192963227.jpg

சோளக்கொல்லை…

அண்ணாசாலையை இன்னும் ‘மவுண்ட் ரோடு’ என்றும், சென்னையை இன்னும் ‘மெட்ராஸ்’ என்றும், ரஜினியை ‘சிவாஜி’ என்றும், தனுஷை ‘வெங்கட் பிரபு’ என்றும், சூர்யாவை ‘சரவணன்’ என்றும் இன்னும் யாரேனும் விளிக்கக்கூடும்தானே. அப்படித்தான் ‘சோளக்கொல்லை’ என்பது எங்களுக்கு. முத்து முதலியாரின் கொல்லை அது என்பதெல்லாம் பிற்பாடு வெகு ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வந்தது. அரைக் கால்சட்டை அணிந்து… (READ MORE)

Uncategorized

ஊரே அடங்கிவிட்டது

மொத்த மணக்குடியும் உறங்கிவிட்டது. இரவுப் பூச்சிகளும் தவளைகளும் இடைவிடாது சாதகம் செய்கின்றன. புகையாய் இறங்கும் பனியின் கனம் மலர் விட்டிருக்கும் என் மருதாணிச் செடியை தலை கவிழ வைத்திருக்கிறது. இரவு கவிழ்ந்த வீதியைப் பார்த்துக்கொண்டு நான் மட்டும் விழித்தபடி. 09.40pm பரமன் பச்சைமுத்து மணக்குடி

Uncategorized

வளர்ச்சிதானே!

‘இதை நீ படிக்க வேண்டும்!’ என்று நாம் பரிந்துரைத்ததைப் படித்த மகள்கள், ‘இதை நீ படிக்க வேண்டும்!’ என்று பரிந்துரைக்கிறார்கள். வளர்ச்சி இருபுறமும்! – பரமன் பச்சைமுத்து, சென்னை 19.10.2018 Www.ParamanIn.com

Uncategorized

pariyerum-perumal-tamil-mal-20180913111705-14476447102633552130547.jpg

‘பரியேறும் பெருமாள்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

என்ன படிக்க வேண்டும் ஏன் படிக்க வேண்டும் என்று தெரியாத, ஒரு விழாவிற்குப் போவதற்குக் கூட அடுத்தவரிடம் போய்தான் நல்ல சட்டை கடனாக வாங்கி உடுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள, ஒதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒரு சமூகத்திலிருந்து ஒரு பிள்ளை படித்துத் தலையெடுக்க நிமிர்ந்தால்… அவனை எழவே விடாமல் குலைத்துக் கலைத்துப் போட விரும்பும்… (READ MORE)

Manakkudi Talkies

,

பரமன் பச்சைமுத்துவின் வரிகளை பதிவு செய்த’நாம் தமிழர்’ சீமான் அவர்கள்

பரமன் பச்சைமுத்துவின் மலர்ச்சி வாழ்வியல் விதிகளை, ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமான் பயன்படுத்தினால்…!: கட்செவியஞ்சலில் வந்தது ஒரு காணொளி மலர்ச்சி மாணவர் ஸ்ரீநிவாசகா முத்துவிடமிருந்து. சீமானின் குரல் பதிவில் வருபவற்றை கண்டு கேட்டு அதிர்ந்து போகிறேன். அட… எல்லாமே என் வரிகள்! மலர்ச்சி மாணவர்களுக்காக நான் எழுதியவற்றில் தேர்ழ்தெடுக்கப்பட்டவை சில. என் வளர்ச்சி விதைகள்’… (READ MORE)

Uncategorized

96_153856405820.jpg

’96’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆழ் கடல் உயிரிகள், பனிமலைகள், பறவைகள் என அதிகம் பேச்சற்று இயற்கையில் கரைந்து வேறு கண் கொண்டு பார்க்கும், மற்றவர்களால் சிறுபிள்ளைத் தனம் கொண்டவனாகப் பார்க்கப்படும் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன், இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்து தனது வகுப்புத் தோழர்களை சந்திக்கும் போது தனது அகத்தைத் திறந்து கொஞ்சம் வெளிப்படுத்தி, அதன் ஆழத்தால்… சிரிக்க, நெகிழ,… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , ,

தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச வள்ளலாருக்கு…

  ‘கடவுள் ஒருவரே, சிறு தெய்வ வழிபாடு கூடாது, சாத்திரங்களும், புராணங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை, மூடப்பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும், எளியோர்க்குப் பசி தவிர்த்தலாகிய இரக்கமும் உருக்கமுமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்று கூறி தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச… (READ MORE)

Religion

‘இடக்கை’ – எஸ் ராமகிருஷ்ணன்

மன்னர்களின் நினைவுகள் மட்டுமே திரும்பத் திரும்ப காலங்களைக் கடந்தும் கடத்தப்பட்டாலும், வரலாறு என்பது சாமான்யகளாலும் ஆனதுதானே. பாரத கண்டத்தின் பெரும் பாதுஷா இறக்கும் தருணங்களிலிருந்து ஆஜம்கான், பகதூர்ஷா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஹேஸ்டிங், பென்டிங் வரும் வரையில் சாமானயர்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை புனைவு செய்து கண் முன்னே விரிக்கிறது இந்நாவல்.ராணிகள், ஆசை நாயகிகள், சேவகர்கள், பணியாளர்கள்… (READ MORE)

Uncategorized

புற்றுத் தேன் உண்டிருக்கிறீர்களா?

‘தேசனே தேனாரமுதே சிவபுரனே!’ பக்தியில் திளைத்து இதை மாணிக்கவாசகர் பாடும்போது, புற்றுத் தேனின் சுவையின் நினைவில் பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது இன்று எனக்கு. ‘உன் பேரைச் சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே’ என்ற கார்த்திக் ராஜாவின் இசையில் வந்த ‘டும் டும் டும்’ படப் பாடல் வரியைப் போல, புற்றுத் தேன் என்று எழுதும் போதே… (READ MORE)

Uncategorized

நம்மால் இல்லை, நம் வழியே

எழுத்து என்பது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வெளி வருவது.  ஒரு அலைவரிசையில் ஒத்திசைவு பெற்று இருக்கும் போது, அதுவாக உருவெடுத்துக் கொண்டு எழுதுபவனின் உள்ளக்கிடக்கையில் காலங்காலமாகப் படிந்து கிடங்கும் படிமங்களை ஒட்டிக் கொண்டு வெளிவருகிறது. பல நேரம் அதுவாக வரும், சில நேரங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அது வருவதில்லை.  நாளை காலைக்குள் இத்தனைப்… (READ MORE)

Uncategorized

Chekka-Chivantha-Vaanam-Movie-Posters

‘செக்கச் சிவந்த வானம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆளு, அம்பு, சேனை குவித்து ஊரையே ஆளும் தாதா பெரியவர் சேனாதிபதியின் மெத்துமெத்தென்ற பெரிய இருக்கையில் உட்கார்ந்து கொள்ள ஒவ்வொருக்கும் உள்ளூர ஆசை. வல்லிய பெரியவரைச் சாய்த்து விட தாக்குதல் நடக்கிறது. பெரியவரைக் கொல்ல முயன்றது யார்? உள்ளூரின் போட்டி தாதா சின்னப்பதாசா, இல்லை வெளியூரில் இருக்கும் பிள்ளைகளா, பெரியவரைக் கொன்றால் யாருக்கு ஆதாயம் என்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Boys2

கடைசியில் ஒரு வகையில் எல்லாமே நினைவுகள்தானே…

மதுரை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு மலர்ச்சி உரையாற்ற பாண்டியன் எக்ஸ்ப்ரெஸில் டிக்கட் போட்ட  போது திருநெல்வேலியில் இறங்கி குறுக்குத்துறை சென்று தாமிரபரணியில் குளிப்போம் என்றேன். குமரன், கார்த்திகேயன், ராமசாமி, நான் என நால்வரும் திருநெல்வேலியில் இறங்கி ‘நாடார் மெட்டல்ஸ்’ என்ற ஒரே பெயரில் பல கடைகள் இருக்கும் அந்தத் தெருவில் இருந்த ‘போத்தீஸ்’ஸின் உள் நுழைந்து… (READ MORE)

பொரி கடலை

images-202454794691736318737..jpg

‘இமைக்கா நொடிகள்’ : திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘ஒரு சிங்கம் பார்த்துப் பார்த்து திட்டம் போட்டு வேட்டையாடுச்சாம். எங்கிருந்தோ திடீர்னு வந்த கழுதைப்புலி மான் கறிய தின்னுட்டுப் போயிடுச்சாம். அந்த சிங்கத்துக்கு எப்படி இருக்கும்? கோவத்துல, அவமானத்துல பழி வாங்க அது துடிச்சதாம்!’ என்று கதாபாத்திரத்தின் குரல் வழியாகவே மொத்தத்தையும் சொல்லிவிட்டு அதை ஒரு நல்ல த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர். நல்லவராகத் தெரிபவர் உண்மையில்… (READ MORE)

Manakkudi Talkies

செம்பியன் மாதேவியின் மண்ணை…

திருவையாறு அருகேயிருந்த செம்பியன்குடி குறுநில மன்னன் மழவராயனின் மகள் செம்பியன் மாதேவி, சிவன் மீதுள்ள பக்தியால் சிவாலயங்களுக்குச் செலவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தஞ்சை மன்னன் கந்தராதித்யர் பார்த்து காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாராம். அவர்களுக்குப் பிறந்தவன் மதுராந்தகன் (உத்தம சோழன்) என்பதும், கந்தராதித்யர் இளம் வயதிலேயே இறந்து போக… (READ MORE)

Uncategorized

இலங்கை மங்கலக் குத்து விளக்கு தெரியுமா!?

முதல் முறை இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் மங்கலக் குத்து விளக்கைக் கவனித்தேன். கொழும்புவின் பம்பலப்பிட்டி பகுதியின் சரஸ்வதி ஹால் மக்களால் நிரம்பியிருந்தது. நம் இலங்கை நண்பர்களின் ஏற்பாட்டில் நடக்க இருந்த ‘உறவுகளில் உன்னதம்’ மலர்ச்சி உரை தொடங்க இருந்த நேரத்தில், அறிவிப்பாளர் ‘ஐங்கரனைத் தொழுது மங்கல குத்து விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி’ என்று சொல்லி முக்கிய… (READ MORE)

Uncategorized

நிறைவுற்றது – ‘அச்சம் தவிர்…ஆளுமை கொள்!’ தொடர்

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒன்பது மாதங்கள் (முப்பத்தியைந்து வாரங்கள்) பறந்தோடி விட்டன. வாராவாரம் படித்ததை செயல்படுத்தி, ஓடிவந்து மின்னஞ்சல் மூலமும், ஈரோடு – திருச்சி – திருவண்ணாமலை – வேலூர் பகுதிகளில் நிகழ்ச்சிக்குச் சென்ற சில இடங்களில் அடையாளம் கண்டு அருகில் வந்து செய்த பகிர்வுகளின் மூலமும், வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி. ‘சார்… நான்… (READ MORE)

Uncategorized

கோகோ

‘கோலமாவு கோகிலா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

கும்மிடிப்பூண்டியில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரவிற்கும் செலவிற்கும் இழுத்துப் பிடித்துக் கொண்டு அல்லாடும் ஒரு குடும்பத்தில், அதன் மைய ஆதாரமான தாய்க்கு உயிர்க்கொல்லியான நுரையீரல் புற்று நோய் வந்தால் என்னவாகும், எப்படி அதை எதிர்கொள்வார்கள் அவர்கள் என்பதை நகைச்சுவை தெளித்துத் திரையில் தருகிறார்கள். பயம், சோகம், தனிமை, அழுத்தம் என எதையும் தனியாகக்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

ஆளுமைக்கழகு… அச்சம் தவிர், ஆளுமை கொள்

தினமலரில் ஞாயிறன்று வரும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ என்ற எனது தொடரின் இரண்டாம் பாகம், அத்தியாயம் 32. நம்மூரின் கிராமப் பஞ்சாயத்தில் ஆளுமையாக உருவெடுத்து உலக நாடுகளை உற்றுக் கவனித்து வரச்செய்த ஒரு மனிதர் பற்றிய கட்டுரை இவ்வாரம். பார்க்க – இணைப்பு Facebook.com/ParamanPage

ஆளுமை கொள்

அந்தரத்தில் தூக்கியெறிந்து சுழற்றி

சிறுவர்களை பின்பக்கமாகத் தூக்கி அந்தரத்தில் சுழற்றியெறிந்து முன்பக்கம் பிடிப்பது ஒரு த்ரில் அனுபவம். தூக்கி காற்றில் விடும் போது, சிறுவன் கையை விட வேண்டும், இல்லையென்றால் களேபரமாகிவிடும். வரும் மே மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குரு என்கிற மோகனேஸ்வரன் ( பேட்ச் 8) குழந்தையாக இருந்த போது பயந்து கையை இறுக்கி விட, தலைகுப்புற… (READ MORE)

Uncategorized

பல்லாயிரக்கணக்கானோரின் பயணங்கள் தொடரும்…

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் அதிகம் பைக்கில் பயணித்தவர்கள் என்று கணக்கெடுத்தால் என் பெயர் முதல் பட்டியலில் வரக்கூடும். டிசம்பர் மாத நள்ளிரவில் பதினாறு டிகிரி வந்த 2001ன் பெங்களூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மலை கடந்து சாலையோரம் உடல் நடுங்க விறைத்து தேநீர் குடித்துத் தொடர்ந்திருக்கிறேன் நண்பன் செந்திலோடு. லாரிகள் வரிசையாக நிற்கும் சாலையோர தேநீர்க்… (READ MORE)

Uncategorized

நம்பிக்கை வை… நம்பி கை வை – பரமன் பச்சைமுத்து, தினமலர்

தினமலரில் வரும் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் 31வது அத்தியாயம். ‘நம்பிக்கை வை… நம்பி கை வை ‘ Facebook.com/ParamanPage

Uncategorized

நல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து

இந்தப் பூமிப் பந்து என்பது புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்க்குமானது. மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. மொத்த பூமியும் எனக்குத்தான் என்று மனநிலையில் ஆக்கிரமிக்கும் மனிதனால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் தடைபடுகிறது. இயற்கையின் சுழற்சியில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றுமே ஒரு சங்கிலிப் பிணைப்பால் இணைக்கப் பட்டு மொத்த சூழலும் காக்கப்… (READ MORE)

Uncategorized

சிவப்பு நிலா

‘குறுக்கே வந்து நின்று எனக்கு வரும் வெளிச்சத்தை மறைத்தாய் இல்லை? போ!’ என்று பூமியின் மீது சினம் கொண்டு சிவந்தது நிலா. #BloodMoon #சந்திரகிரகணம் #சிவப்புநிலா Facebook.com/ParamanPage

Uncategorized

‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று பெயர் பெற்ற சஞ்சய் தத்தின் கதையை வைத்து ராஜ்குமார் ஹிராணி செய்திருக்கும் திரைப்படம் – சஞ்சு. துவக்க காலத்தில் போதையில் சிக்கிய சஞ்சய் தத், வெகு நாட்களுக்குப் பிறகு ஏகே – 56 வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு வழக்கில் சிக்கி சிறை சென்ற சஞ்சய் தத் என்ற இரண்டு பகுதிகளை… (READ MORE)

Uncategorized

images-12.jpeg

திரை விமர்சனம் – ‘கடைக்குட்டி சிங்கம்’ : பரமன் பச்சைமுத்து

காலம்காலமாய் பார்த்துப் பழகிய அதே குடும்பத்தோடு பாசத்தில் நெகிழும் ஊர்க்கார நாயகன், அவன் வழியில் குறுக்கிடும் காதலும் வில்லனும் என்ற வகை கதைதான். ஆனால் அதை ரசிக்கும் படி கொடுத்த விதத்தில் வெற்றி பெற்று விட்டார்கள். வயலும் வரப்பும் காடும் கழனியும் கூடவே பஞ்சவன் மாதேவி, வானவன் மாதேவி, கண்ணுக்கினியாள், தாமரை மணாள செண்டாளன் போன்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

போர்ட்டோ நோவா தெரியுமா உங்களுக்கு?

ஓர் இடத்தின் அல்லது ஒரு மனிதனின் பெயருக்குப் பின்னே காரணங்கள் இருக்கலாம், விளக்கங்கள் இருக்கலாம், யாருடைய சிந்தனையோ இருக்கலாம். ‘இடுகுறிப் பெயர்’ ‘காரணப்பெயர்’ என்றெல்லாம் பாடங்கள் வைத்துக் கற்பித்த நம் மொழி சொல்லுவதும் இதைத்தானே. ஒரு மொழியில் வழங்கப்படும் பெயரை வேற்று மொழியிலிருந்து வருபவனொருபவன் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத போது, பெயர் நாறடிக்கப் படுகிறது. அதன்… (READ MORE)

Uncategorized

தி ஜானகிராமனின் ‘கமலம்’ – காலச்சுவடு

ஒரு சிற்றூரின் வயல்களைத் தாண்டிய வாய்க்காலின் மதகில் தன் மாமாவோடு கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து மீன்கொத்தியை பார்க்கும் எம்ஏ படித்த காசு சேர்க்கத் தெரியாத ஒருவன், தன் அனுபவமாக அவ்வூரில் நடந்த நிகழ்வுகளைச் சொல்வதாகத் தொடங்கும் கதை மெள்ள மெள்ள படமாகக் காட்சியாக விரிந்து உச்சத்தில் ‘பொளேர்’ என்ற ஓர் அறையுடன் முடிந்து நிற்கிறது…. (READ MORE)

Uncategorized

கடல்மல்லை

சிறை பிடிக்கப்பட்டு நாடுகடத்தப் பட்ட பார்த்திபனைத் தேடி இளைய குந்தவை தேரில் ஓடிய பாதையில்… சிற்பி மகள் சிவகாமியோடு சிறு வயது சிநேகம் கொள்ள சிறுவன் நரசிம்ம வர்மன் தன் தந்தையோடு குதிரையில் பயணித்த பாதையில்… தமிழிலும் ப்ராக்ருத மொழியிரும் பெரும் புலமை கொண்ட கலைக் காதலன் காஞ்சித் தலைவன் மகேந்திர பல்லவன் பயணித்த பாதையில்…… (READ MORE)

Uncategorized

முடிவற்ற சாலை… எஸ். ராமகிருஷ்ணன்

ரயில் பயணங்கள் பற்றி, பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஓடும் ரயிலின் வயிற்றுப் பெட்டிக்குள் உண்டு. உறங்கி வசித்துப் பயணிக்கும் அனுபவம் பற்றி ‘வளர்ச்சி’ இதழில் எழுதிய கட்டுரைகளை மீண்டும் கொண்டு வந்து மனதில் நிழலாட வைத்தது, எஸ். ராமகிருஸ்ணனின் தொடர் ஒன்றை இன்று படித்த போது. ஒரிசாவிலடித்த புயலொன்றின் போது மின்சாரமற்ற இருட்டொழுகும் மழையில்… (READ MORE)

Uncategorized

IMG-20180709-WA0108.jpg

ஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து

‘ஓங்கி உயர ஆசை’ – பரமன் பச்சைமுத்து எனது அடுத்த நூல். எழுத்துப் பிரசுரம் / ஜீரோடிகிரி பப்ளிஷிங் வெளியீடு. விரைவில்…. https://m.facebook.com/story.php?story_fbid=10216557528196615&id=1410976678

Paraman's Book

, , , , , ,

அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ முதல் பாகம் முற்றிற்று.

குகவேலனின் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு தொடங்கியது தினமலரில் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடர். அச்சில் வந்த முதல் தொடரின் பதிப்பைப் பார்க்க, நாகை தஞ்சைப் பதிப்பு தினமலர் தேடி மணக்குடியிலிருந்து பயணித்து சிதம்பரம் வழியே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து தைக்காலில் ஒரு தேநீர்க்கடையில் போய் வாங்கினோம். தேநீர்க்கடையிலேயே தினமலரை நான் பிடித்துக்… (READ MORE)

Uncategorized

வேம்புகள் அணிவகுக்கும் சாலை

நெடுஞ்சாலையின் இருமங்கிலும் புளியமரங்களைப் பார்த்திருக்கிறேன். தூங்குமூஞ்சி அல்லது ஐரோப்பிய ‘ஃபாரஸ்ட் பயர்’ மரங்களைப் பார்த்திருக்கிறேன். வரிசையாய் தொடர்ச்சியாய் ஆயிரம் வேப்பமரங்களைப் பார்த்ததில்லை. அதுவும் வெறும் வேப்ப மரங்கள் மட்டுமே. பல்லடம் வழியே பொள்ளாச்சி செல்லும் வழியில் கௌசிகா நதியையும், நொய்யலையும் கடந்ததும், நெகமத்திற்கு சற்று முன்னே வருகிறது இந்த வேம்பு அணிவகுக்கும் இடம். எவர் இதைச்… (READ MORE)

Uncategorized

நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே வளர்ந்து நிற்பதைக் காணுமனுபவம் அலாதியானது

நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே நெடுநெடுவென்று வளர்ந்து நிற்பதை பார்க்குமனுபவம் அலாதியானது. ஒரு பச்சிளம் குழந்தையைப் போல நம் கைகளில் தவழ்ந்த கன்று இன்று வேரூன்றி வளர்ந்து தலை(தழை)யசைப்பதைக் காண்கையில், தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் பிள்ளையைப் பார்க்கும் தகப்பனைப் போன்றொரு கிளர்ச்சி வருகிறது. நகரையே நாசம் செய்த வர்தாப் புயலின் மீது… (READ MORE)

Uncategorized

நாடுகளிலுள்ளோரின் நாக்குகளின் வழியே நடக்கட்டும் தமிழ்…

ஒரு மொழி, எத்தனை வளமுள்ள மொழியானாலும் அது வழக்கிலிருந்து ஒழிந்து போனால் சாவை நோக்கிச் சரிந்து விடும். செம்மொழியானாலும் எம்மொழியானாலும் பேசா மொழியானால் அவை வாழா மொழியாகி வீழும். இலக்கியங்களும், காப்பியங்களும், நூல்களும், கல்வெட்டுக்களும் மொழியின் செழுமையை மொழியின் பழமையை காலம் தாண்டிக் காட்ட உதவும். மொழியினுள்ளே மாந்தரை ஈர்க்க உதவும், நனைந்து திளைத்து மகிழச்… (READ MORE)

Uncategorized

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய ஆட்டம்

😳😳😳 பத்து ஆண்டுகளுக்கு முன்பு பரமன் பச்சைமுத்து பெங்களூருவில் ஒரு விளையாட்டுப் பையன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடையில் இருப்பான். அதிகம் ‘பப்ளிக் ஸ்பீக்கிங்’ போட்டிகள்தான் என்றாலும், ஆட்டம் பாட்டம் என எதையும் தவறவிட்டதில்லை. அல்மாமாட்டர் நாட்களில், ஏதோ ஒரு பேட்ச் பட்டமளிப்பு விழாவில் பெங்களூரில் ஆடிய காணொளித் துண்டின் இணைப்பு கிடைத்தது இப்போது. சிறிது… (READ MORE)

Uncategorized

இந்து தமிழ் திசை பெயர் மாற்றம்

பன்னெடுங்காலமாக மக்கள் வாழ்வில் கலந்து விட்ட ஆங்கில நாளிதழ், புதிதாக வந்த அதன் தமிழ் தினசரி… இரண்டும் ஒரே பெயரில் என்ற போது துவக்கத்தில் பெயர் குழப்பம் வரவே செய்தது. குழப்பம் தவிர்க்க மக்களாகவே ‘இந்து தமிழ்’ என்று சொல்லத் தொடங்கினர். இரண்டு குழுமங்களாகப் பிரிக்கும் போது, இதை கருத்திலெடுத்த நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம். நடுப்பக்கம் எப்படியிருக்க… (READ MORE)

Uncategorized

வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்…

🌸🌸 வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்… #ValarchiTamilMonthly Facebook.com/MalarchiPage

Uncategorized

images-7.jpeg

பெண் குயில், பட்டாம் பூச்சி… கருவேப்பிலை மரம்

குயிலென்றால் கருப்பாயிருக்கும், கன்னங்கரேலென்று இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நாற்பது ஆண்டுகளாக இப்படி நினைத்தே வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் கொஞ்சம் அவமானமாக இருக்கிறது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது இன்னும் என்னை. ‘பெண் குயில் பாத்திருக்கீங்களா? அங்க பாருங்க, வந்து உட்காந்திருக்கு!’ என்று பால்கனிக்கு வெளியே பார்த்தவாறே அத்தை அவசரத்தை குரலில் ஏற்றி அதேசமயம் அதிராமல் மெல்லியதாய் கூப்பிட்ட… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , ,

ஷாவோலின் – திரைப்படம்

மதம் பிடித்த யானை புகுந்த ஒரு வாழைத்தோட்டம் போல ஒரு பெரும்போரில் மிதிபட்டு நசுங்கி கிடக்கும் ஊரின் இடிபாடுகளிலிருந்து சடலங்களை கண்டெடுத்து அப்புறப்படுத்தி புத்தரின் பெயரால் சேவை செய்கிறார்கள் அவ்வூருக்கு வெளியே இருக்கும் ‘ஷாவோலின்’ கோயிலின் சீடர்கள். குவிந்து கிடக்கும் சடலங்களுக்கிடையே கொஞ்சம் முக்கலும் முணகலும் கேட்க, ‘ஹேய், இங்க ஒருத்தன் உயிரோட இருக்கான்!’ என்று… (READ MORE)

Uncategorized

இணைப்பில் இல்லாதபோதே பார்த்ததும் சார்ஜ்…

‘இன்னைக்கு என்னவோ நடந்திருச்சி. வளர்ச்சிப்பாதையில ரெண்டு எடத்துல உள்ளுக்குள்ள அப்படியே ஒரு உதறல் வந்துடிச்சி! இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் விட இந்த வளர்ச்சிப்பாதை வேற ஆழம்!’ – திருவண்ணாமலையில் வளர்ச்சிப்பாதை முடிந்தவுடன் பாபு பகிர்ந்தது. ‘இன்னும் க்ளாஸ் வைக்கலியே. ஏம்மா எப்பம்பா க்ளாஸுன்னு எல்லாருகிட்டயும் ஃபோன் பண்ணி கேட்டுகிட்டே இருந்தேன். பரமன், வாரம் ஒரு வீடியோ… (READ MORE)

Uncategorized

சாலைப்பயணத்தோடு நிலா

திருவண்ணாமலையில் வகுப்பெடுத்துவிட்டு வளைந்து வளைந்து செல்லும் பாதையில் பயணிக்கிறேன். வேலூருக்கு என் கூடவே வருகிறது நிலாவும். – பரமன் பச்சைமுத்து 21.06.2018 பாகாயம் Facebook.com/ParamanPage

Uncategorized

வெள்ளியை விதைத்தாயிற்று

குழந்தைகள் மிக எளிமையானவர்கள், விதைப்பதை பட்டென்று உறிஞ்சி உள்ளே பதித்து வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். நாம் வெகு இயல்பாய் செய்யும் எதை எப்போது பிடித்துக் கொள்வார்கள் என்பது தெரியாது. ஒரு மலர்ச்சி மாணவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் இரு வாரங்களுக்கு முன்பு. உரையாடி மகிழ்ந்து விடைபெற்று வெளியே வந்து காரேறும் போது அவ்வீட்டின் சிறுமியிடம் வானத்தைக்… (READ MORE)

Uncategorized

அட…தாரை கருவி

ஊதல், தூம்பு, உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, எக்காளம், குழல், கொம்பு, சங்கு, நமரி, நாதசுவரம், திருச்சின்னம், தாரை என பாரம்பரிய ஊது(காற்று) இசைக் கருவிகள் பற்றி பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்று, ஈரோட்டில் நம் மாணவர்கள் லதா – ராமலிங்கம் – ராஜேஷ் இல்லத்திருமணத்தில் தாரை இசைக்கருவியை அருகிலிருந்து அனுபவிக்க முடிந்தது.”தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் பாக்கலியோ?’… (READ MORE)

Uncategorized

ஈரோடு தினமலரில் நம் எழுத்து

நாம் போகும் ஊரில் நம்மை நம் எழுத்து வரவேற்றால்… மகிழத்தானே செய்வோம்! பிரித்தானியர்களை எதிர்த்து போரிட்ட திப்பு, தீரன் சின்ன மலை ஆகியோர் வசமிருந்த மண் கோட்டை இருந்த பகுதியில், நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டு எண்ணூற்றியைம்பது ஆண்டுகளாக வழிபடப்படும் ஆருத்ர கபாலீஸ்வரர் ஆலயம் அருகில், நமது எழுத்தைத் தாங்கி நிற்கும் ஞாயிறு தினமலரை ஏந்தி மகிழ்கிறேன்… (READ MORE)

Uncategorized

காவிரி வருகிறது

கேரள வயநாடுப் பகுதியில் பெருமழையைத் தந்ததன் மூலம் கர்நாடக கபினியை நிரம்பச் செய்து தமிழகத்துக்கு நீரைத் திறக்கச் செய்து, எல்லாருக்கும் மேலே நானிருக்கிறேனாக்கும் என்று கூறி இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கிறது பெரும் இயற்கை! பெரும் சக்தியைப் போற்றுதும்! – பரமன் பச்சைமுத்து சென்னை 15.06.2018 Facebook.com/ParamanPage

Uncategorized

‘கலகக் கலைஞன்’ – ஜெயகாந்தன் – கவிஞர் வைரமுத்து கட்டுரை

தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை கவிஞர் வைரமுத்து வாசிக்கும் நிகழ்ச்சிக்கு உடல்நலம் குன்றிய எழுத்தாளர் சிவசங்கரி இருமல்களுக்கிடையே தலைமையுரை ஆற்றும் போதே புரிந்தது, ‘பரமன், இந்த ஆளுமை செய்யும் இந்தப் பகிர்வுகள் தவறவிடக்கூடாதவை. நல்லவேளை நீ வாய்க்கப் பெற்றாய்!’ என்று பல்லி கத்தியது மண்டைக்குள்ளே. ‘வடகிழக்கு – வடக்கு இந்தியாவின் இலக்கியத்தோடு என்னை… (READ MORE)

Uncategorized

20180613_175723.jpg

லேனா… ஆ…ஆ!

நாம் பார்த்து பார்த்து பெரும் உவமையாகக் கொண்டு வளர்ந்த ஆளுமைகளை, வாழ்க்கை திடீரென்று நம் முன்னே நிறுத்தினால் மகிழ்வில் திளைக்கத்தானே செய்வோம்! கூடவே எதிர்பாரத வகையில் அவர்களுக்கு நம்மைத் தெரிந்திருக்கிறதென்று வேறு அறிந்தால்… அதிர்ந்து போகத்தானே செய்வோம் இன்பத்தில்! கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரையாற்றும் ஜெயகாந்தன் பற்றிய நிகழ்ச்சிக்கு அரங்கம் நோக்கி் நடக்கையில், அரங்கத்தின் வாயிலுக்குள்… (READ MORE)

பொரி கடலை

, ,

plastic

பிளாஸ்டிக் தடை – நல்ல செய்தி!

வரும் ஜனவரி முதல் குறிப்பிட்ட சில பயன்பாடுகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. நல்ல செய்தி! சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் பல்லுயிர்ச்சூழல் கெடாது காக்கப்படலாம். பிளாஸ்டிக் பைகளை விழுங்கி வயிறு சரிந்து மாயும் யானைகளும், பிளாஸ்டிக்கால் வதைபடும் குரங்குகளும், மீன்களும், மனிதர்களும் மற்ற பிற உயிர்களும் கொஞ்சம் காக்கப்படும். அப்படியே… கர்நாடாகாவிலும், இலங்கையிலும் இருப்பதைப்… (READ MORE)

பொரி கடலை

kaala-3600x2025-rajnikanth-karikaalan-tamil-telugu-hindi-4k-2018-8104

‘காலா’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

    சிவப்புத் திலகம் தீட்டிக்கொண்டு ‘தூய்மை மும்பை, ஒரே மும்பை’ ‘டிஜிட்டல் மாநிலம்’ என்று இயங்கும் ராமனை துதிக்கும் அதிகார வர்க்கத்தினர், அவர்களது கண்ணிற்கு கருப்பாக அழுக்காக தெரியும் ராவணனையும் அவனது மக்களையும் அழித்து அவர்களது நிலத்தை கைக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்ற களத்தில் திரைக்கதை பின்னி  ரஜினியையும் நானா படேகரையும் வைத்து ப.ரஞ்சித் தந்திருக்கும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

Vazhgai_finel2.jpg

‘வாழ்க்கைப் பாசறையில்’ – பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல்

முன்னுரை ‘தேர்ட்டி சிக்ஸ்த் சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எழுபதுகளின் இறுதியில் வந்து உலகைக் கவர்ந்த ஓர் அட்டகாசமான திரைப்படம் அது. ஓர் ஊரில் அதிகாரத்தில் உள்ளவர்களால் சொந்த மக்கள் அடித்துக் கொல்லப்படும்போது, காயங்களுடனும் தாங்கொணா வலியுடனும் உயிரைக் காத்துக்கொள்ள ஊரை விட்டு ஓடுவான் சிறுவனொருவன். பலம் மிக்க எதிரிகளிடமிருந்து தப்பிக்க காடு… (READ MORE)

Paraman's Book

, , , , , , ,

இலங்கையின் வீரகேசரி வெயிட்டிருக்கும் எனது திரைவிமரிசனம்

👏👏👏👏 👍👍👍 இலங்கை நாட்டின் மிகப்பெரிய தேசிய நாளிதழான ‘வீரகேசரி’ வெளியிட்டிருக்கும் எனது திரை விமரிசனம். எனது பெயரைப் போட்டாலும் போடா விட்டாலும் தெரிந்தேயிருக்காது எனக்கு. வேறு தேசத்தில் வசிக்கும் எனக்கு ‘வீரகேசரி’ பத்திரிக்கை பார்வைக்கே வராது. எனது எழுத்துக்களை எடுத்து அப்படியே வேறு பெயரில் வெளியிட்ட, பெயரில்லாமல் வெளியிட்டவர்களைக் கண்ட வலியான தொடக்க கால… (READ MORE)

Uncategorized

அம்மாவான மனைவி

‘கணவன் சரியில்லை! அவர் அம்மா பேச்சையே கேட்கிறார்!’ என்று பிரச்சினை செய்த மனைவி, குழந்தைகளை கணவனிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போனாள்… ‘என் பேச்சைக் கேட்கற மாதிரி ஒழுங்கா வளக்கனும் இதுங்கள!’ என்று கூறி. – பரமன் பச்சைமுத்து 24.05.2018 Www.ParamanIn.com

Uncategorized

‘நடிகையர் திலகம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆந்திர விஜயவாடாவின் அருகிலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்ட தந்தையை இழந்த ஒரு சிறுமி, தமிழ் – தெலுங்கு சினிமாவின் ‘நடிகையர் திலகம்’ ஆக உயர்ந்து,  இறுதியில் தன் வாழ்வை எப்படி முடித்துக் கொள்கிறாள் என்பதை ஒரு படமாகத் தந்து, நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். ஒரு திரைப்படம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

இலங்கை – கட்டுரை நிறைவுப் பகுதி

‘நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி, தாரிடை உறங்கும் வண்டு…’ என்று கோசல நாட்டைப் பற்றிக் கம்ப நாட்டாழ்வான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது இலங்கையின் குறுக்கே பயணிக்கும் போது, அப்படி ஒரு செழிப்பு. ‘கேரளாவைப் போல் இருக்கிறதே!’ என்று தொடக்கத்தில் தோன்றினாலும், அதை விட செழிப்பான சூழல் என்று போகப்போக உணர முடிகிறது. அறுவடை… (READ MORE)

Uncategorized

, ,

20180520_232944-1.jpg

போய் வாருங்கள் பாலகுமாரன், உங்கள் ராஜேந்திர சோழன் சென்ற உலகத்திற்கு…

வாழ்க்கை மட்டும் ‘இதுதான் அறிய தருணம், இனி இது திரும்பக் கிடைக்காது!’என்று சப்-டைட்டில் போட்டு நிகழ்வுகளை அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்படி மட்டும் இருந்திருந்தால், அன்று என் அடுக்ககக் குடியிருப்பின் முகப்பில் உங்களைப் பார்த்த தருணங்களை இன்னும் பயன்படுத்தியிருப்பேன், ‘பரமனை நமது விழாவிற்கு அழைக்கலாம், கூப்பிடுங்கள்!’என்று ரகுராமிடம் நீங்கள் தகவல் சொன்னபோது ஓடி வந்திருப்பேன்…. (READ MORE)

பொரி கடலை

,

இலங்கை ‘கதிர்காமக் கேள்வி!’

தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளாலும் பின்னப்படும் நம்பிக்கைகளாலுமே தலங்களும் அதன் கடவுளர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ‘கதிர்காமத்துல விபூதி செய்யறது இல்ல. அங்க விபூதி வெளையுது. மலையிலேருந்து வெட்டி எடுக்கறாங்க!’ – இது என் ஐந்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் போது இலங்கை போய் வந்த என் அப்பா என்னிடம் சொன்னது. ‘எல்லா ஊரிலும் நேரில் போய்… (READ MORE)

ParamanInSriLanka

, , ,

இலங்கை – இலை அப்பம்

இலை அப்பம் வேணுமா? கதிர்காமத்திலிருந்து கொழும்புவை நோக்கிய சாலைப் பயணம் கொஞ்சம் நீண்டதுதான். ஐந்து மணி நேரங்கள் பிடிக்கும். ஒரே பயணத்தில் வியர்க்க வைக்கும் வெயில், வாகனம் ஓட்ட பார்வை மறைக்குமளவிற்கு ‘மவனே… வச்சுக்கோ!’ என்று அடித்துப் பெய்யும் மழை, குளுமை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. இருமங்கிலும் பெரும் நீர்நிலைகள், மலைகள், வயல்கள், ரப்பர்… (READ MORE)

ParamanInSriLanka

, , , , ,

இலங்கையின் நெல் வயல்கள்

நீர் வளம் மிகுந்த இலங்கையின் நெல் வயல்கள். நெல் வயல்களில் எருவிட்டு உழுது ( இதன் பெயர் ‘புழுதி ஏர்), நீர் பாய்ச்சி ஊற வைத்து திரும்பவும் ஏர் உழுது சேறாக்கி மட்டப் பலகையை வைத்து சேற்றை ஒரே சீராக்கும் பழக்கம் சோழ தேசத்தில் இன்றும் உண்டு. ‘பறம்படித்தல்’ என்று பெயர் அதற்கு. காவிரி பொய்க்காத… (READ MORE)

ParamanInSriLanka

, , , ,

புத்தரின் பல்

புத்தர் இறந்த பிறகு அவரது நினைவாக இருக்கட்டுமென அவரது பல்லை புத்த பிக்கிணி ஒருவர் எடுத்து வைத்ததாகவும், வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்திய நாட்டினருக்கு புத்தரின் மகத்துவம் புரியவில்லை, மதிக்கத் தெரியவில்லை, மதிக்கப்படும் இடத்தில் இது இருக்கட்டும்!’ என்று கூறி தந்த குமருவும் ஹேமமாலாவும் இலங்கை மன்னனிடம் அந்தப் பல்லைத் தந்ததாகவும் இலங்கையில் நம்பப்படுகிறது. அந்தப்… (READ MORE)

Uncategorized