சென்னை கடற்கரை சாலையின் மத்தியில் நிற்கும் கம்பீரமான சிவாஜிகணேசனின் சிலையைப் பார்த்து ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ‘ஹூ ஈஸ் தட் மேன்?’ என்று எழுப்பும் கேள்வியோடு தொடங்கும் எனது முந்தைய நூலான ‘அகமும் புறமும்’ குறித்த புத்தக மதிப்புரையை இன்று ‘தினத்தந்தி’ வெளியிட்டிருக்கும் வேளையில், அந்த சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் இல்லை இப்போது.
‘பல்வேறு தலைப்புகளில் பரமன் பச்சைமுத்து எழுதிய 25 கட்டுரைகள் கொண்ட நூ…ல். சிவாஜி கணேசன் பற்றிய கட்டுரை அருமை’ என்று பதிப்பித்திருக்கிறது தினத்தந்தி.
என்னை அதிகம் பேரிடம் கொண்டு சேர்த்த என் ஆறு நூல்களிலும் அதிகம் விற்பனையான எனது இரண்டாவது நூல் ‘அகமும் புறமும்’.
தினத்தந்திக்கு நன்றி!