நேற்று,
ஓடி ஓடி உழைத்து,
வேளா வேளைக்குப்
பசியார உணவுண்டேன்,
உடல் நலம் கண்டேன்.
இன்று,
ருசியார உணவு கண்டு,
கண்ட வேளையில் உண்டேன்,
உடல் கெட்டேன்,
ஓடி ஓடி உழைக்கிறேன்,
நலம் பெற.
இப்படிக்கு,
இக்கால மனிதன்
By – பரமன் பச்சைமுத்து
[இன்ஃபினி இதழில் பிரசுரமாயிற்று]