இன்னுமொரு உயிரை கேன்சர் கடித்து ருசித்து காவு வாங்கிவிட்டது.
சுவாச இயக்கத்தின் கடைசி சில மூச்சுகளை முடித்து, மார்பின் மீது மருத்துவர்கள் ஏறி அழுத்தி போராடியும் என்னெதிரே ஓர் பிரிந்தது இன்று.
முப்பத்தியைந்து வயது இறப்பதற்கான வயதில்லை என்பதையெல்லாம் புற்று நோய் புரிந்து கொள்வதில்லை. போய் விட்டாள் மகராசி. உடலைக் கவனியுங்கள் உடலை கவனியுங்கள் என்று ஊருக்கெல்லாம் சொல்லும் எனக்கு, என் கண் முன்னேயே என் சொந்தம் ஒன்று உயிர் துறப்பதை பார்க்க முடியவில்லை.
சென்னையின் வேறொரு மூலையில் இருந்த என்னை இழுத்து வந்து உயிர் பிரியும் மூன்று நிமிடம் முன்னால் எதற்கு நிறுத்தியது வாழ்க்கை என்று புரியவில்லை.
காலை உணவிற்கு சாப்பாட்டுப் பொட்டலங்கள் கொண்டு வந்த அவள் தம்பியோடு, அவளையே பொட்டலமாகக் கட்டி ஆம்புலன்ஸில் அனுப்பிவிட்டு சில கிலோமீட்டர் இடைவெளியில் மணக்குடி நோக்கிப் பயணிக்கிறேன்.
தயவு செய்து உடலை பேணுங்கள். தவறினால் ஒரு நாள் திடீரென உதிரும். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் மிக மிக முக்கியம்.
பரமன் பச்சைமுத்து
தம்பிக்கு நல்லான் பட்டினம்.
10.10.2017