வேறு வேறு தேடல்கள்
வேறு வேறு இலக்குகள் கொண்டு
வேறு வேறு தளங்களிலிருந்து
மனிதர்கள் மலர்ச்சிக்குள் வருகிறார்கள்.
மெதுவே மாணவர்களாய் மலர்கிறார்கள்,
மலர்ச்சி அவர்களுக்குள் நுழைகிறது. வளர்ச்சி வருகிறது.
ஒவ்வொரு பேட்ச்சிற்கும் இது இயல்புதானென்றாலும்,
ஒவ்வோரு பேட்ச்சும் சிறப்பென்றாலும்,
இறையருளால்
இது இன்னும் சிறப்பு!
‘முழுமலர்ச்சி
இருபத்தியைந்தாவது பேட்ச்!’
இறையருளோடு
இன்று மாலை
இனிதே தொடங்குகிறது
இருபத்தியைந்தாவது திரள்!
இறைவா துணையிரு!
வாழ்க! வளர்க!
பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
06.11.2017
சென்னை