இறையே நன்றி

‘என்னோட வீக்னஸ் என்னன்னு தெரிஞ்சுது இப்பதான். இனிமே சரி பண்ணி ஜெயிச்சிடுவேன்’ என்று கை தூக்கிப் பகிர்ந்தாள் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பதின்ம வயது மாணவி ஒருத்தி.

அதிகாலை புறப்பாடு, நான்கரை மணிநேரம் போக நான்கரை மணி நேரம் வர என்று ஒன்பது மணி நேர சாலைப் பயணம், மணி நேரம் நின்று எடுத்த வகுப்பு என்று ஒரு நாளின் மொத்த மெனக்கெடல்களும் பூத்து கனமான அர்த்தம் பெற்றன அந்த ஒரு நொடியில்.

அந்த அறுநூறு பெண்களில் ஒரு முன்னூறு பேராவது நம்பிக்கையோடு உறங்கச் செல்வார்கள் இன்று.

இன்றும் கூட உறங்குகையில் கனவில் சிரிப்பேனோ என்னவோ!

இறையே நன்றி!

: பரமன் பபச்சைமுத்து
10.01.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *