‘நான் அவரோடு இணைந்து செயல்படுவதாக சொல்கிறார்கள். இல்லை. நான் என் மகளுக்காகவும் எனக்காகவும் உழைக்கிறேன். அவர் என் சம்பளப் பாக்கியை இன்னும் தரவில்லை. ஆதாரங்கள் உள்ளன’ என சுட்டுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார் கௌதமி.
ஸ்ரீதேவி மகள்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்ப வந்த கமலிடம் அதைக்கேட்டும் விட்டனர் நிருபர்கள். ‘சம்மந்தம் இல்லை என்று அவர் சொல்லிவிட்டார். சம்பளப் பாக்கியை சினிமாக் கம்பெனி அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று பதிலும் தந்துவிட்டார்.
இனி, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் கௌதமியை அழைத்து வந்து உட்கார வைத்து கமலை நோக்கி சமையல் செய்வார்கள்.
– பரமன் பச்சைமுத்து
28.02.2018