வாரும் மகாபலி…

Onam

வாரும் மஹாபலி!

தான் கொடுத்த வாக்கைப் பலியீந்து தன்னைக் காப்பவன்,  சில காலம் மண்ணில் வாழ்வான்.

தன்னையே பலியாய் ஈந்து தன் வாக்கைக் காப்பவன் மண் பூமி இருக்கும் வரை அழியாப் புகழ் பெறுவான்.

அசுரனே என்றாலும்
அன்பினால் ஆட்சி செய்தவனை
அவன் மக்கள் கொண்டாடுவார்கள்!

வாரும் மஹாபலி,
வளம் பல தாரும் மஹாபலி!

என் இதயத்தை அன்பினால் நிறைக்க,
வார்த்தைக்கு மதிப்பளித்துக் காக்க
அருள் புரி!

“ஹ்ருதயம் நிறஞ்ச ஓணம் ஆஷாம்ஸகல் !”

: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *