நெடுஞ்சாலையின் இருமங்கிலும் புளியமரங்களைப் பார்த்திருக்கிறேன். தூங்குமூஞ்சி அல்லது ஐரோப்பிய ‘ஃபாரஸ்ட் பயர்’ மரங்களைப் பார்த்திருக்கிறேன். வரிசையாய் தொடர்ச்சியாய் ஆயிரம் வேப்பமரங்களைப் பார்த்ததில்லை. அதுவும் வெறும் வேப்ப மரங்கள் மட்டுமே.
பல்லடம் வழியே பொள்ளாச்சி செல்லும் வழியில்
கௌசிகா நதியையும், நொய்யலையும் கடந்ததும், நெகமத்திற்கு சற்று முன்னே வருகிறது இந்த வேம்பு அணிவகுக்கும் இடம்.
எவர் இதைச் செய்தாரோ, அவர் குலம் வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
நெகமம்,
04.07.2018