இறைவா நன்றி!

கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் இருக்கும் மலர்ச்சி மாணவர் ஒருவரோடு திருவான்மியூர் ஹாட்சிப்சில் காபி அருந்தி விட்டு எதிர்ப்புறம் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மிகப்பெரிய’ கடையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தேன்.

‘பரமன் சார்… எப்படி இருக்கீங்க!
இது நாலாவது ப்ராஞ்ச். உங்க க்ளாஸ் அட்டெண்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் பெரிய டேர்னிங் பாயிண்ட் எனக்கு. அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது!’ என்று கையைப் பிடித்து சொன்னவர் அந்தக் கடையின் உரிமையாளர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனது வாழ்வியல் பயுற்சிக்கு வந்திருந்த அவர் அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்ததால், தொடர்பிலும் இல்லாததால், சில நிமிடங்கள் ஆனது எனக்கு அவரை நினைவு கூர்ந்து மீட்டெடுக்க.

பெரும் நிறைவோடு அவரை கடந்து நண்பரோடு நடந்து என் கார் நோக்கி வரும்போது நண்பர் சொன்னது, ‘இந்த மாதிரி நெறைய பேர் மாறி ஏறி வந்துருக்காங்க, வந்துருப்பாங்க. உங்களுக்கு தெரியாமலே இருக்கும்!’

காரிலேறி உட்கார்ந்ததும் என் வாய் முணுமுணுக்கிறது…

‘கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
17.12. 2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *