பூஜையறைக் குரங்கு…

Thumbnail - Poojaiyarikkurangu - Copy

Poojaiyarikkurangu

வயிற்றுப் பசி தீர்க்க
திறந்திருந்த பால்கனி வழியே
எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து
டாட்டா ஸ்கை பாக்சை தள்ளிப் பார்த்து,
ஏதும் கிடைக்காமல் அருகிலிருந்த பூஜையறைக்குள் புகுந்து
விக்ரகத்தின் மீதிருந்த சாமந்தியையெடுத்து பிய்த்துப் பிய்த்துப் போட்ட வேளையிலே,
அடுத்த அறையிலிருந்து வந்த
அத்தை அலறியது பார்த்து பாய்ந்து ஓடிப் போனது.

பசிக்கு வழி தேடி பால்கனி வழியே வந்த மந்தியா அல்லது
பார்த்தசாரதி படத்தின் முன்னால் பக்தியில் சாமந்தி போட்ட மந்தி பக்தமாருதியா என்பது
அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.

– பரமன் பச்சைமுத்து

1 Comment

  1. nithya venkatesh

    Wow saggezza.As usual you have beautifully portrayed,we see life depending on the attitudes we hold.Thank you for the reinforcement saggezza.
    Loving you saggezza

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *