சென்னை நிலத்தடி நீர் உயர்வு…

அக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது.

கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பு வைத்த அத்தனை பேருக்கும் நன்றி!

சிதம்பரத்தில் குளங்களில் மழைநீர் வந்து சேர்கிறது என்று தகவல்கள் படங்கள் வருகின்றன. குளங்களை மீட்டு, தூர் வாரி, நீர் வரத்து வழிகளை ஒழுங்குபடுத்தி சீர் செய்த குழுவிற்கு நன்றி!

மழை கொடுப்பதை மதிக்கத் தொடங்குவதில் தொடங்குகிறது இயற்கை வளம் காத்தல்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை,
16.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *