Tiruvarur Meet – Batch 91 – Avccp – Feb 2021

’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′

13,14,15 Feb 2021

பல பகுதிகளிலிருந்தும் 91 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புத் தோழர்கள், திருவாரூரில் ஒரே இடத்தில் குவிந்து கலந்து களித்து மகிழ்ந்தோம்.

தம்பதி சமேதராய் மணிமாறன், நப்பின்னை, மீனாட்சி சுந்தரி, வசுமதி, ராஜவேல் ஆகியோர் வந்திருந்து அசத்த, நெடிதுயர்ந்த மகனோடு வந்து மகிழ்வித்தார் ஜகதீஸ்வரி.

சனி மாலை, ‘ திருவாரூர் – கமலாலய தெப்பக் குளம் – இடது’ என வழி தேடி வனிதா வீட்டிற்கு வந்த போது, ஏற்கனவே வந்திருந்த அமுதா, நப்பின்னை, வசுமதி, ஜகதீஸ்வரி, ராஜவேல் குடும்பம், மணிமாறன் குடும்பம் என அனைவரையும் ஒரே இடத்தில்  கண்ட முதல் உணர்வு ‘குபீர் மகிழ்ச்சி!’  வலசை போன பறவைகள் திரும்பி வந்தமர்ந்தது போல வட்டமாய் உட்கார்ந்து திளைத்துப் பருகினோம்.    

முரளியும், பாலமுருகனும், சுந்தர்ராஜனும் வந்து சேர கூடுதல் உற்சாகத்தோடு உணவருந்தினோம். இரவு உணவின் கேசரியும், எலுமிச்சை சேவையும் இரண்டாம் முறை கேட்டு வாங்கும் படி சிறப்பு.

வனிதாவின் கணவர் பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்திருந்தார், ‘ஹோட்டல் செல்வி’ வரை வந்து ஒவ்வொருவருக்குமான அறையை பார்த்துக் கொடுத்து நெகிழச்செய்தார்.

இரவு தனியாக வந்த நாங்கள் திருவாரூர் பேருந்து நிலைய தேநீர் கடைக்கு பால் குடிக்க சென்றோம். தம்பதியராய் வந்தவர்கள் பால் குடிக்க கடைக்கு வரவில்லை. 

இரவு, ஒரு மணி வரை நாங்கள் கதைத்திருக்க, நம் வகுப்புத் தோழிகள் பக்கத்து அரங்கில் அடுத்த நாளுக்கான ஏற்பாடுகளை நள்ளிரவு தாண்டியும் செய்தனராம்.

ஞாயிறு காலை, காலை உணவிற்கு மீனாட்சி சுந்தரியும் கணவரோடு வந்து சேர்ந்தார். மீனாட்சி சுந்தரியின் கணவர் நம் ஆசிரியர் டிகே( கார்த்திகேயன் )யின் சகோதரர் என்று அவரே சொல்லக் கேட்டு அதிர்ந்தோம்.  காலை திருவாரூர் கோயிலுக்கு நாங்கள் புறப்பட்ட போது அவரும் சேர்ந்து கொண்டு மகிழச்செய்தார்.

மணமக்களோடு நண்பர்கள் உறவினர்கள் கொண்ட ‘டீ பார்ட்டி’ என்று வனிதா ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டோம். மணமகளின் தோழர்கள், மணமகளின் அம்மாவின் தோழர்கள், உறவினர்கள் என அரங்கு நிறைந்திருந்தது.  ‘மைக்’கை வாங்கி மேடையில் ஏறி கொஞ்சம் பேச வேண்டியதாக போயிற்று. எல்லாருமாக சேர்ந்து பிரார்த்தித்து வாழ்த்தும் நிகழ்வை முன்னெடுக்கும் பணியை வாழ்க்கை வழங்கியது நமக்கு. 

மதிய உணவிற்கப்புறம் எங்களை ஐங்கரன் காப்பி கடைக்கு முத்து கூட்டிப் போனதை ஒரு தனி நூலாகவே எழுதலாம்.

மாலை திருமண நிகழ்வு திருமண மண்டபத்தில்…

( அடுத்த பகுதியில் முடிப்போம்)

வந்திருந்தோர்:

1. Vanitha, Tiruvarur
2. Napinnai, Puducherry
3. Jagadeeswari, Puducherry
4. Amudha, Kochin, Kerala
5. Vasumathy, Tiruppur
6. Meenakshi Sundari, Chennai
7. Rajavel, Chennai
8. Manimaran, Sirkali
9. Muralunarayanan, Bengaluru
10. Balamurugan, Bengaluru
11. Sundararajan, Krishnagiri
12. Amirthalingam, Chennai
13. Chandramouli
14. K Thiruneelakandan
15. Prakash R, Chennai
16. Muthu, Chennai
17. Meikandan, Vaitheeswaran koil
18. Sabanayakam, Thiruvannamalai
19. Sridhar, Chennai
20. Paraman Pachaimuthu, Chennai

– பரமன் பச்சைமுத்து
சென்னை
15.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *