அதிக ஆசைகள் கொண்டவன் நான்…

அதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால்,  ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும்.

ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க,

திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய,  யுரால் மலையில் ஆசியாவில் ஏறி ஐரோப்பாவில் இறங்க,  அமேசான் நதியின் அழகை ரசிக்க, ஏதோவொரு காட்டில் ஈரிரண்டு நாட்கள் வாழ என்று என் எத்தனையோ ஆசைகளோடு, இன்று புதிதாய் சேர்ந்தவை…

கங்கையில் நீந்திக் களிக்க வேண்டும், தாமிரபரணியில் தாள் நனைய நிற்க வேண்டும்!

 

சடுதியில் கைகூடும்,

சட்டென நிறைவேறும்!

 

– பரமன் பச்சைமுத்து

பெங்களூரூவிலிருந்து.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *