தமி்ழர் பற்றி அதிகம் பேசாதவர் என் தந்தை.
தமிழை உயிராகக் கொண்டு தமிழனாகவே வாழ்கிறார் கிராமத்தில் அவர்.
தமிழர் பற்றி அதிகம் பேசி, ஆங்கிலம் அதிகம் பேசி அவ்வப்போது தமிழில் பேசி தமிழ் வளர்ப்பது பற்றி நிறைய பேசி நகரத்தில் வாழ்கிறேன் நான்.
அவருக்கு வேட்டி ‘தினம்’.
எனக்கு ‘வேட்டி தினம்’!
அப்பாவைப் போல, பாட்டனைப் போல தமிழைப் பண்பாடாகக் கொண்டு வளர அருள்புரி தமிழன்னையே!
– பரமன் பச்சைமுத்து