சாமி முன்ன வை…

சுடச் சுட அச்சகத்திலிருந்து வந்த என் முதல் நூலை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து அப்பாவின் முன் வைத்தேன்.
‘எந்த நல்லதையும் சாமிகிட்ட மொதல்ல வைக்கணும்ன்னு தெரியாதா! சிவசிவா’ என்று சொல்லி பூஜையறைக்கு எடுத்துப் போகிறார்.

‘சாமி முன்னதான் வைச்சேன்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைக்கிறேன் நான்!

பரமன் பச்சைமுத்து
மணக்குடி
16.01.2015

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *