அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்…
அரை மணி நேரத்தில் கடக்கும் ஆயிரம் வாகனங்கள்,
அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி
சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்…
‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று திட்டும் வாகன ஓட்டிக்கு வழிதந்து கோபப்படாமல் சிரிக்கும் பெரியவர்…
வெயிலில் அமர்ந்து கொண்டு வியர்வைப் பொருட்படுத்தாது, புலம்பல்கள் செய்யாது
தவமாய் பழம் விற்கும் அதே அமிஞ்சிக்கரை மார்க்கெட் அக்கா…
எந்த சூழலிலும் விரும்பிய வண்ணம் வாழலாம் என்று கற்பிக்கிறது சென்னை!
வணக்கம் ‘நம்ம’ சென்னை!
– பரமன் பச்சைமுத்து