17 வருடங்கள் காடு, மலை, பேரறுவி, பேய்ப் பள்ளத்தாக்கு, ரத்தம் உறையச் செய்யும் குளிர், வழிப்பறி கொள்ளை, கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள், வரும் வழிகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடமுடியாது என்று சட்டம் பேசிய மன்னர்கள், பசி, பாலைவனம், கடக்க முடியா நீர் மண்டலம், உயிருக்கு ஆபத்தான பேராசை பிடித்த மனிதர்கள் என எல்லாவற்றையும் கடந்து பயணித்தானென்றால் அந்த மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான்! அவன் வெறும் யாத்ரீகன் இல்லை. சீனப் பயணி என்ற வார்த்தைகளில் அடக்க முடியா ஆளுமையாகத் தெரிகிறான் அவன். யுவான் சுவாங் ஓர் அதி உன்னத ஆச்சர்ய திகைப்பு எனக்கு!
-பரமன் பச்சைமுத்து
Facebook.com/ParamanPage