பொள்ளாச்சியில் ‘வளர்ச்சிப் பாதை’ தொடங்குவதற்கு முன்பாக இளையராஜாவின் இசைத் துண்டு ஒன்றில் நாங்கள் கரைந்து கொண்டிருந்தோம். இருக்குமிடத்திலிருந்து எங்கேயோ ஓர் ஆழத்திற்கு எங்களை எடுத்துப் போய்விட்டது அந்த இசை. மூழ்கிக்கிடந்த போது முன்னே வந்து பதிவு செய்திருக்கிறார் படமெடுப்பவர்.
பதிவின் நோக்கம் படத்தை காட்டுவதல்ல; இசையின் ஆழம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை சொல்வது. இசை ஒரு மாய நதி. அருகில் வருபவரை ஆழத்திற்கு இழுத்துப் போய் அழுக்குகளை அடித்துக் கழுவி குளிப்பாட்டி பிறகு கரையில் கொண்டு சேர்ப்பிக்கிறது.
செவிக்கு இசை தருபவர்கள் புண்ணியவன்கள். செவி மடுத்து கேட்பவர்கள் பாக்கியவான்கள்.
Facebook.com/ParamanPage