மக்களின் ‘அம்மா’விற்கு மலரஞ்சலி…

jaya

jaya

நானும் இருக்கிறேன் என்று வாழ்வது வாழ்க்கையல்ல;
இருக்குமிடத்தில் நான் தனியாகத் தெரிவேன் என்று தடம் பதித்து வாழ்வது வாழ்க்கை.

அதில் இதில் என்றில்லை எதில் இருந்தாலும் தடம் பதித்து தலை திருப்பிப் பார்க்கச் செய்வேன் என்று வாழ்வது தலை வாழ்க்கை.

எப்போது வந்தோம் எப்போது போனோம் என்பதைத் தாண்டி எத்தனை பேர் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் தந்தோம் என்று வாழ்வது பெரும் வாழ்க்கை!

கடைசி நிமிடம் வரை போராளியாகவே இருந்து பெரும் வாழ்க்கை வாழ்ந்து ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட
மக்களின் ‘அம்மா’விற்கு
மலரஞ்சலி!

– பரமன் பச்சைமுத்து
06.12.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *