வாழ்க்கை ஒரு பெரும் நீதிபதி. யார் மூலமாகவோ எதன் மூலமாகவோ நல்லதுக்கும் கெட்டதுக்கும் தீர்ப்பு வழங்கிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்குரிய தீர்ப்புகளை காலம் கடந்தும் கூட தந்து கொண்டேதான் இருக்கிறது.
வலி மிகும் தீர்ப்புகள் வரும் போது தனது தவறால்தான் வந்தது இது என்று உணராமல் சுட்டிக்காட்டுவோர் மீது கோபம் கொள்வோர் அடுத்த பெரிய தவறை நோக்கி அவசரமாக நகர்கிறார்கள்.
தவறை உணர்ந்து ஏற்பவர்கள் வேறு திசையில் நகர்ந்து பக்குவப்பட்டு உயர்கிறார்கள்.
:பரமன் பச்சைமுத்து
சென்னை
16.02.2017
Facebook.com/ParamanPage