ரஜினி கட்சி தொடங்கினால்…

ஜனவரி 2020க்குப் பிறகு ரஜினி கட்சி தொடங்கினால் என்ன செய்வார்கள் இவர்கள்! தொடங்கிவிடுவார் போலத் தோன்றுகிறது. – பரமன் பச்சைமுத்து நாவலப்பிட்டிய, கண்டி, இலங்கை 06.09.2019

Uncategorized

இயற்கையே… கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரறிவே!

‘ ம்க்கூம்… உலகம் முழுக்கக் காடு காடுன்னு கத்தும். ஆனா, அதக் காப்பாத்த என் நாட்டோட நிலப்பரப்ப பொருளாதாரத்த இழக்க வேண்டிருக்கு! எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியும். நீங்க ஷட் அப் பண்ணுங்க!’ – இது ‘ஐயோ காட்டையழிக்கிறார்கள்… காட்டையழிக்கிறார்கள்! நிறுத்துங்கள்!’, என்று சில மாதங்கள் முன்பு கதறிய உலகத்தினரின் முகத்தை நோக்கி பிரேசிலின் புதிய… (READ MORE)

Uncategorized

சென்னை மழைநீர் சேமிப்பு

சாலையோரங்களில் உறை கிணறு, பயன்படுத்தாமல் விடப்பட்ட நூற்றுக் கணக்கான பாழுங்கிணறுகளை கண்டறிந்து சீர் செய்து மழை நீர் சேமிப்பு என செயலில் இறங்கியுருக்கும் சென்னை நகராட்சியை எழுந்து நின்று பாராட்டுகிறோம். இந்தத் தொடக்கம் பல்கிப் பெருகி எங்கும் பரவட்டும், வாங்கும் வான் மழையை தாங்கும் நிலத்தினுள் அனுப்புவோம். நிலத்தடி நீர் உயரட்டும் உயிர்கள் செழிக்கட்டும்! வாழ்க!… (READ MORE)

Uncategorized

வழுக்கி விழும் வஸ்தாதுகள்

பெங்களூரு வேலூர் நெடுஞ்சாலையில் பயணித்து வந்து தான் ஓட்டி வந்த கண்டெயினர் லாரியை ஆம்பூரின் அருகில் உணவகத்தின் வெளியே நிறுத்தி விட்டு சாப்பிடப் போனாராம் ஓட்டுநர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தால் கண்டெயினர் லாரியைக் காணோமாம். பதறிய ஓட்டுநர் தனது உரிமையாளரை உடனே அழைத்து தகவல் தர, சிதறாத உரிமையாளர் ஜிபிஎஸ்ஸை வைத்து லாரி எங்கே… (READ MORE)

Uncategorized

யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு இருந்த உடல் உள்ளத்து நிலையும் அவற்றை செய்த பின்பு இருக்கும் உடல் உள்ளத்தின் நிலையும் வேறாக மாறிவிடுகின்றன. யோகப்பயிற்சியை கண்டு பிடித்துத் தந்தவன் உண்மையில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்! வியந்து போகிறேன்! – பரமன் பச்சைமுத்து 23.08.2019

Uncategorized

, , ,

சிவராஜ் தெரியுமா?

கடலூர் ஓ.டி எனப்படும் பழைய நகரத்திலுள்ள பள்ளியொன்றில் மாணவர்களுக்கு மலர்ச்சி உரையாற்றுவதற்காகப் போகிறேன். பள்ளியின் நிறுவனர், தாளாளர், உள்ளூரின் முக்கியப் பிரமுகர்களோடு அமர்ந்திருக்கிறேன். சிறப்பு விருந்தினர் என்று கூறி சிறப்பு செய்கிறார்கள். பக்கத்திலிருக்கும் பள்ளியின் முக்கிய நிர்வாகியிடம் சபை நாகரீகத்திற்காகப் பேசுகிறேன். பதிலுக்கு அவர் என்னிடம் வினவுகிறார். ‘உங்க வீடியோவெல்லாம் பாத்தோம். ரொம்ப மோட்டிவேட்டிங்கா இருந்தது…. (READ MORE)

Uncategorized

ஒரு பெருநாளில் தொடங்கப்பெற்றது…

‘அப்பா… உனக்கு ஹாலிடே இல்லையா, எங்களுக்குல்லாம் இன்னிக்கு ஹாலிடே!’ இவை, விடுமுறை என்பதைக் குதூகலாகமாக கொண்டாடும் ஒரு மகள் தனது தந்தையிடம் வெளிப்படுத்திய வாக்கியங்களாகத் தெரியலாம் உங்களுக்கு. இவை, எனக்கு என் வாழ்வின் புதிய உலகத்திற்கான பெருங்கதவைத் திறந்துவிட்ட திறவுகோல். பெங்களூரு பிடிஎம் லே அவுட்டில் இரண்டாம் தளத்திலிருந்த வீட்டின் கூடத்தில் பாய் விரித்து யோகப்… (READ MORE)

Uncategorized

Nerkonda-Paarvai-Tamil-Ringtones-For-Cell-Phone

‘நேர் கொண்ட பார்வை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இலக்குகளை நோக்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் மாநகரின் மாதுக்கள் மூன்று பேரின் வாழ்வில் நடைபெறும் ஒரு சம்பவத்தால், வாழ்வின் போக்கே மாறிவிட, திக்கற்றுத் திணறி நிற்கும் அவர்களுக்கு உதவிட பழைய பஞ்சாங்கமாகிப் போன ஒருவர் வந்தால், அதிகார பலமும் பண பலமும் கொண்ட பெரும் புள்ளிகளிடமிருந்து புள்ளிமான்களை சட்டத்திற்குட்பட்டு காப்பாற்ற முடியுமா, என்னவாகிறார்கள் அவர்கள்? என்பனவற்றை கதையாக்கி… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,

ராமசாணிக்குப்பம் பள்ளிக்கு பாராட்டுகள்

அரசுப் பள்ளி மாணவர்களால் ஒரு சிறு காடு உருவாக்கப்பட்டு பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டது என்றால் பாராட்டுவீர்கள்தானே! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி வியப்பிலாழ்த்துகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு நில்லாமல் பானைகளையும், மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் போத்தல்களையும் நீள்குழல்களையும் வைத்துக் கொண்டு சொட்டுநீர் பாசன முறையில் செடிகள் வளர்க்கத் தொடங்கி… (READ MORE)

Uncategorized

, , ,

அத்திவரதர் – பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும்

அத்திவரதரைப் போய் பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்ட என் மனைவியையும் வயதான அத்தையையும் லட்சோபலட்சம் பேர் கூடும் பெருங்கூட்டத்தில் எப்படித் தனியே அனுப்புவது என்று தயங்கையில், ஒரு வாய்ப்பு வந்து கதவைத் தட்டி நின்றது. காஞ்சிபுரத்தில் மலர்ச்சி வகுப்பெடுக்க போகும் நாட்களில் அங்கு தங்கிய நாட்களில் என் விருப்பத் தேர்வு தேவராஜ சுவாமி என்றழைக்கப்படும் வரதராஜப்பெருமாள் கோவிலின்… (READ MORE)

Spirituality

, ,

spidermanfarfromhomeposter8421605940772536348.jpg

‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்குப் பள்ளித் தோழர்கள் ஆசிரியர்களோடும், பாரீஸின் உயர்ந்த ஈஃபில் டவரில் வைத்து எம்ஜேவிடம் தனது காதலை எப்படியாவது சொல்லி விடலாம் என்ற வகை காதல் கனவுகளோடும் நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் பீட்டர் பார்க்கரின் இன்பச் சுற்றுலா, அவெஞ்சர்ஸை வைத்து பிரபஞ்சம் காக்கும் பெரியண்ணன் நிக் ஃப்யூரியின் அழைப்பாலும், அதிகார அழிப்பு வெறி கொண்ட வில்லன்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

,

20190709_1010267680153292561573311.jpg

டை

டை என்னைப் பொறுத்த வரை எவருக்கும் அழகு சேர்க்கும் ஓர் உடை. என்ன உடுத்தினாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று எண்ணும் வேளைகளில் ‘அட!’ என்னுமளவிற்கு அழகுக் கூட்டி அசத்தி விடுவது டை என்பது என் தனிப்பட்டக் கருத்து. ‘மைக்ரோலாண்ட்’டில் ஐடி இஞ்சினியராக இருந்த பெங்களூரு – சென்னைக் காலங்களில் வெள்ளைச்சட்டையும் டையும் எங்கள் ட்ரெஸ்… (READ MORE)

Uncategorized

houseowner8235457821587935743.jpg

‘ஹவுஸ் ஓனர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்னை அசோக்நகரில் ஒரு வீடு, தன் மொத்த சம்பாதித்யத்தையும் அதில் போட்ட முன்னாள் ராணுவ அதிகாரியும் இந்நாள் அல்ஜைமர் நோயாளியுமான ‘ஹவுஸ் ஓனர்’, அவரைத் தாங்கு தாங்கென்று குழந்தையெப் போலத் தாங்கும் அவரது மனைவி, இவர்களோடு சென்னையின் பெருமழை… இவற்றை வைத்து உணர்வுப் பூர்வமாக ஒரு படம் தந்து பிரமிக்க வைத்துள்ளார் இயக்குநர். ‘என்னம்மா இப்படிப்… (READ MORE)

Manakkudi Talkies

, ,

சாலை வழியே சிங்கப்பூருக்கு…

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சாலைவழிப் பயணமாக வந்தேன் இன்று. லட்சக்கணக்கான தென்னைகளும் செம்பனைகளும் இருமங்கிலும் கொண்ட சிறப்பான நெடுஞ்சாலை சாலையில் 320 கிமீ தூரம் பயணித்து எல்லையைக் கடந்தேன். இரண்டு் நாடுகளுக்குமிடையே இரண்டுக்கும் சொந்தமில்லாத ‘நோ்மேன்ஸ் ஐலண்ட்’டும், அதில் காரிலமர்ந்தபடியே கடவுச்சீட்டு பரிசோதனை குடியமர்வு ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றைச் செய்ததும் புதுவனுபவங்கள். இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கு… (READ MORE)

Uncategorized

பூவில் வண்டு தேன் பருகுவதை பார்த்திருக்கிறீர்களா?

பூவில் வண்டு தேன் பருகுவதை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா? வெறும் மணத்தைக் கொண்டே ஈர்க்கப்பட்டு மலரையடைந்து, ஒரு ஹெலிகாப்டரின் விசிறியின் வேகத்திற்கு அடிக்கும் இறக்கையை சட்டென குறைத்து அலுங்காமல் குலுங்காமல் மலரின் மெல்லிய இதழ்களில் ‘லேண்ட்’ ஆகி சூல் பகுதியில் இறங்கி, அதற்கென உறிஞ்சு கொடுக்குக் குழலை செலுத்தித் தேன் பருகும் லாவகத்தைக் கவனித்திருக்கிறீர்களா! ஒரு மலரை… (READ MORE)

Uncategorized

செலாமத் பெட்டாங் மலேசியா!

‘மதிப்புக்குரிய தாய்மார்களே, மாண்புமிகு ஆண்களே… வானவெளியில் காற்று மண்டலத்தில் கொந்தளிப்பு இருக்கிறது. உங்கள் இருக்கையில் அமருங்கள்’ என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வரும் அறிவிப்பிலும், இறங்கிய உடன், ‘டிஃபன் சாப்பிட்டீங்களா?’ என்பதற்குப் பதிலாக, ‘விமானத்தில் பசியாறக் குடுத்தாங்களா?’ ‘நீங்க பசியாறிட்டீங்களா?’ என்று மலேசியத் தமிழர்கள் கேட்பதிலுமே புரிகிறது, மலேசியாவில் தமிழ் அதிகம் கலப்பில்லாமல் வாழ்கிறதென்று. ஒன்றாம்… (READ MORE)

Uncategorized

பத்துமலை முருகன் கோவில்

நாகரீகம் வளராத இயற்கையோடு மனிதர்கள் இயைந்து வாழ்ந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டாற்றின் கரையில் இருந்த ஒரு பெரு மலையின் பெருங்குகையில் தோமுவான் என்றழைக்கப்பட்ட பழங்குடியினர் வாழ்ந்தனர். காலப்போக்கில் அம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளைப் பயிரிட்ட சீனர்கள், அம்மலையின் பெருங்குகைகளில் பெரும்படிமமாகக் கிடந்த வௌவால் கழிவுகளை (தமிழகத்தில் ‘புழுக்கைகள்’ என்றும், மேசியத் தமிழர்களால் ‘சாணம்’… (READ MORE)

Uncategorized

20190621_1619473270350158394201439.jpg

தினம் யோகா என்பவனின்  யோகா தினம்!

தினம் யோகா என்பவனின் யோகா தினம்! என் தந்தை தினசரி் யோக ஆசனப்பயிற்சிகள் செய்வதைப் பார்த்தே நான் வளர்ந்தேன். வளர வளர யோகம் என்பது வெறும் ஆசனப்பயிற்சிகள் அல்ல வாழ்வியல் முறை என்று உணர்ந்து பழகிய போது வயது நின்று போவதை சக்தி பெருகுவதை உணர்ந்தேன். ‘யோகத்தைக் கொடுத்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நண்பர்களிடமும்… (READ MORE)

Spirituality

, , , , , , ,

மலேசிய ஏஸ்ட்ரோ விண்மீன் HD தொலைக்காட்சியில் பரமன் பச்சைமுத்து

‘ரிகர்சல் செய்ய வேண்டியிருக்கும்!’ என்று சொல்லி குழுவாக வந்தமர்ந்து தொடங்கியவர்கள், அவர்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கியதும், ‘இவருக்கு ரிகர்சல் வேண்டாம். நேரலை போயிடலாம்!’ என்றார்கள். மலேசியாவின் பெரும் ஊடகமான ஏஸ்ட்ரோவின் விண்மீன் HD தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றிருந்தோம் இன்று காலை. முதலில் பதிவு, அப்புறம் வெட்டி நகாசு செய்தல் என எதுவும் செய்ய… (READ MORE)

Uncategorized

வணக்கம் சென்னை

எத்தனை பேர் பிழைக்க வந்து குடியமர்ந்தாலும் அத்தனை பேரையும் தன்னகத்தே கொண்டு ஏந்தி நிற்கும்… சென்னையில் நுழைகிறேன்! வணக்கம் சென்னை! – பரமன் பச்சைமுத்து சென்னை 16.06.2019

Uncategorized

இயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்!

‘நேத்து பொன்னியம்மன், மாரியம்மன், பனையாத்தாள் வீதியுலா. மணக்குடியில சித்திரை திருவிழாயில்லையா! அதான் கொஞ்சம் கண்ணு முழிச்சிட்டோம்!’ என்று சொல்லிடப்பேசி வழியே அப்பா சொல்லிக் கொண்டே போகையில், அவரைக் குறுக்கிட்டுக் கேட்க முயற்சிக்கும் போதே அவரே சொன்னார், ‘எப்பயும் போல மழையை எதிர்பார்த்தோம். மழை வந்தது. வாசல் தெளிச்சது போல தூத்தலோட போயிடுச்சி!’ அவருக்கும், எனக்கும், இங்கு… (READ MORE)

Uncategorized

28 ஆண்டுகள் கழிந்து…

எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து வாய் பிளக்க வைப்பதை வாடிக்கையாக செய்வதில் வல்லமை பெற்றது வாழ்க்கை. மயிலாடுதுறை அப்படி ஓர் அனுபவத்தைத் தந்து விட்டது.எல்லா ஊரையும் போலல்ல மயிலாடுதுறை எனக்கு. எம்ஜியாரால்மயிலாடுதுறை என்று மறுபெயராக்கம் செய்யப்பட்ட மாயவரத்தில்தான் நான் படித்தேன். ஏவிசி கல்லூரி வளாகமே என் கல்வி வளாகம்.’சின்ன சங்கதி… பெரிய வளர்ச்சி!’ என்ற மலர்ச்சி… (READ MORE)

Uncategorized

நீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி

‘வளர்ச்சி பத்திரிக்கைங்களா? நான்எத்திராஜ், வேளச்சேரியிலிருந்து. ஜூன் மாத இதழில் ‘நீர் முடிச்சு’ பற்றி எழுதியிருந்தீர்கள். தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டி வேர் எல்லாவற்றிலும் எவ்வளவு போட்டு முடி போட வேண்டும்? பரமன்: தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டிவேர், மிளகு, ஜீரகம் ஒவ்வொன்றும் 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் சேர்ந்தாலே கையளவு வரும். இவர் கை ஒரு… (READ MORE)

Uncategorized

, , ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,

சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:

சிக்கிம் – நிறைவுக் கட்டுரை: சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை: நாதுலா பாஸ் எனப்படும் சிக்கிம் சீன எல்லையில் பயணிப்பதற்கு முன்பே கடவுச்சீட்டு வாங்க வேண்டும். சிக்கிம் புறப்படும் முன்னரே அதற்கான சரியான ஏற்பாடுகளைச் செய்யவும். ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், இங்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வருவது… (READ MORE)

Uncategorized

சிக்கிம் டைரி – 2

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம் மாநிலத்திற்கு மேல் இருப்பவரெல்லாம் வட இந்தியர்களே. கிழக்கின் சிக்கிமிஸ் கூட வடக்கர்களே நமக்கு. ஒரு வகையில் நமது இருப்பைப் பொறுத்து அது உண்மைதானென்றாலும், பொது வழக்கில் இருப்பது வேறு.உண்மையான வடக்கர்களை இன்று காலை உணவகத்தில் பார்த்தேன். இட்லி, தோசை, உப்புமாவிற்குப் பறக்கிறார்கள். ‘சாம்பர்… சாம்பர்..’ என்று சாம்பாருக்கு உற்சாகமடைகிறார்கள். (உற்சாகம்… (READ MORE)

Uncategorized

சிக்கிம் டைரி

மரணத்திற்குப் பின் என்ன என்பதைப் பற்றி அதிகம் கை காட்டாமல் இப்போது இரு இக்கணமே வாழு என்று அறிவுறுத்திப் போன புத்தனின் மார்க்கம் நூற்றாண்டுகளைக் கடந்து வரும் போது பல சங்கதிகளையும் தன்னுள் சேர்த்து கொண்டே வந்துள்ளது. ‘ஊழி வந்து உறுத்த’ என்று இளங்கோவடிகள் சொன்ன ஊழை நம்புகிறார்கள் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும் சிக்கிமிய… (READ MORE)

Uncategorized

இமயமலையின் அடிவாரத்து சாங்கு ஏரியில்…

பரந்து விரிந்த உயர்ந்த இமயமலையின் அடியில் ஓர் எறும்பு ஊர்வது எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது இமயமலை ரேஞ்சில் வளைந்து வளைந்து ஊர்ந்து டொயாட்டோ இன்னோவாவில் நாம் பயணிப்பது. 15,000 பனியாறுகளைக் கொண்டிருக்கிறது, எப்போதும் உறைந்திருக்கும் உலகின் உயர்ந்த சிகரத்தைக் கொண்டிருக்கிறது, பூமியினடியில் ஆசிய தட்டுகளுக்குள் ஐரோப்பிய தட்டுகள் உள்நுழைகின்றன, இதனால் இம்மலை ஆண்டுக்கு ஐந்து மீட்டர் உயருகிறது,… (READ MORE)

Uncategorized

‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தேசத்தின் முக்கியப் பொறுப்பிலும், கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் முக்கியத் தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் போது இறந்து போகிறார். மருத்துவமனை வாசலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கொந்தளிக்கும் தொண்டர்கள் கூட்டம். ஆட்சியையும் கட்சியையும் எடுத்துக் கொள்ளப் போவது யார்? பழம் தின்றுக் கொட்டைப் போட்ட பழுத்த அரசியல்வாதிகள் கூட்டமாய் விவாதிக்கும் வேளையில்,… (READ MORE)

Uncategorized

சேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்

சேத்தன் பகத்தின் புதிய நூலான ‘இண்டியா பாஸிட்டிவ்’ வெளியீட்டு விழா தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்ட விருந்தினர்களின் மத்தியில் சென்னை லீலாபேலஸில் இன்று நடந்தேறியது. நேச்சுரல்ஸ் சிகேகுமரவேலின் அழைப்பின் பேரில் கலந்து கொள்ள நேரிட்டது. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே நடக்கும் நிகழ்ச்சி என்பது தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது. சிகேகுமரவேல் மிக அழகாக பேசினார். இன்றைய அரசியல் நிலையை… (READ MORE)

Uncategorized

செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்

இன்றைய ஸ்பெஷல் – *செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்* ( மாஸ்டர் செஃப் – பரமன் பச்சைமுத்து 😜 ) (வள்ளியம்மை & வள்ளி வீட்டிலிருந்து ‘பரமன், தோட்டத்தில பறிச்ச ஃபரெஷ் மாங்கா, கட் பண்ணி மிளகாய்தூள் போட்டிருக்கேன்’ என்ற குறிப்போடு நேற்று வந்த சங்கதியை வைத்து இன்று புது சாண்ட்விச் பண்ணிட்டோம்ல! நமக்கு… (READ MORE)

Uncategorized

அவேங்கேர்ஸ்

அவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

” // எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் வாழும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘ஒரு எலி அசைந்ததால் ஓர் எறும்பு எழுகிறது, எறும்பின் எழலால் மறு எழுச்சி பெறுகிறது உலகம்’ // “ ………….. பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட சக்தி கற்களை போராடிக் கைப்பற்றி தனது கை விரல்களுக்கு மேல் பதித்துக் கொண்ட… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

தி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்

நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் சுட்டெரிக்கும் நெருப்புக் குழாய்க்குள் நுழைந்து வெளியே வரும்படியான சோதனை ஒன்றை நடத்தி மனிதர்களையும் சிறப்பு சக்தி பெற்றவர்களையும்(வேதாளம்!) பிரித்துப் பார்ப்பதாக ஒரு காட்சி வரும். வேங்கிக்கால் – தண்டராம்பட்டு – சோமாசிப்பாடி – திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அப்படியொரு சக்தி பெற்ற வேதாளங்களைப் போலவே தெரிகிறார்கள். கொளுத்தும்… (READ MORE)

Uncategorized

கடவுளின் கதை : நேஷனல் ஜியாக்ரஃபிக்

‘திடீரென எழுந்த ஒரு பெரிய சுனாமி அலையால் எங்கள் கப்பல் தாக்கப்பட்டு நான் தூக்கியெறியப்பட்டேன். கடலின் அடியாழத்திற்குள் விழுந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தேன். வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ ஓர் ஒளி வருகிறது. ஒளியை நோக்கிப் போகையில்தான் நான் தனியே செயலற்றுக் கிடக்கும் என் உடலைப் பார்க்கிறேன், இறந்து விட்டேனென்று அறிகிறேன். அந்த ஒளி, ‘உனக்கு… (READ MORE)

Uncategorized

‘இண்டிகோ விமானம் ஏறி கோவை வந்த திருவண்ணாமலைத் தண்ணீர்’: பரமன் பச்சைமுத்து

மார்வாடி மொழி பேசும் ராஜஸ்தானிய இன பெரும் புள்ளி ஒருவரது இல்லத் திருமணத்தின் விருந்திற்கு விமரிசையாக வேண்டும் என்று திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆட்களை பெருந்தொகை கொடுத்து வரச் செய்தார்களாம். சென்னையில் வந்து இருட்டுக்கடை அல்வா செய்து தர ஆள், அம்பு, சேனை, சாமான், செட்டு என்று நெல்லையிலிருந்து எல்லாமும் கொண்டு வந்த அவர்கள்… (READ MORE)

Uncategorized

பூமியில் இருந்தாலும், வானத்தில் பறந்தாலும் விடாது இது என்னை!

குறிப்பு: மலர்ச்சி மாணவர்கள் / என்னிடம் வாழ்வியல் பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே இது நன்றாகப் புரியும். 🌸🌸 சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். இருக்கையில் இருந்த என்னிடம் வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்… ‘மிஸ்டர் பரமன்’ ‘ஸார்… யு ஹேவ் பீன் புக்டு வித் ஸ்பெஷல் சர்வீஸஸ். அண்டு ஹியர் ஈஸ்… (READ MORE)

Uncategorized

காடை

‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)

Manakkudi Manithargal, ஆ...!, பொரி கடலை

, , , , ,

20190418_0843233679278638902612156.jpg

ஒரேயொரு வாக்கைப் பதிவு செய்ய ஒரு நாள் ஒதுக்கி ஊருக்குப் போய் வருவது

வாக்குப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக மணக்குடி வந்தேன். வாக்கு பதிவு மையம் பொதுவான மற்ற இடங்களைப் போல மணக்குடியிலும் பள்ளிக்கூடம்தான். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வாக்குச் சாவடியின் வாயிலில் பெரும் வளைவும், வாழைமரங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணிகள் மிக அமைதியாக நடந்தேறும் வாக்குச்சாவடியாம் இது. விருது பெற்ற வாக்குச்சாவடி… (READ MORE)

Uncategorized

p_ho000066265157473412004423994.jpg

 ‘சூப்பர் டீலக்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

திருமணத்திற்கு முன்பு உயிராய்க் காதலித்த பழைய காதலன், கணவன் இல்லாத போது வீட்டிற்கு வரவே, அவனோடு உறவு கொள்கையில் அவன் இறந்து விடுகிறான்; வீட்டை விட்டு ஓடிப் போன மனிதன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறானே என்று மனைவியும் மகனும் தவித்துக் காத்திருக்க, அவன் அப்பாவாக வராமல் அம்மாவாக வருகிறான்; பதின்ம வயது விடலைகள்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

கீத்து காஞ்சிடும்

‘புது இயர்ஃபோன் சரியாயிருக்கான்னு சோதிக்கனும்ப்பா!’ என்று மறுமுனையிலிருந்து பேசும் மகன் பரமனிடம், ‘தென்னங்கீத்து வெட்டி காயப் போட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதை பின்னனும். இல்லன்னா வடிவம் மாறிடும், பின்ன முடியாது. அப்புறம் கூப்டட்டுமா!?’ என்று சொல்லும் தந்தை பச்சைமுத்து. மணக்குடி வீட்டின் பின்புறம். படமெடுத்து உதவியவர் – பரிக்‌ஷித். 🌸

Uncategorized

Captain Marvel1

‘கேப்டன் மார்வல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வான வெளியில் நடக்கும் ஒரு பெருஞ்சண்டையில் கரணம் கொஞ்சம் தப்பி வழியில் இருக்கும் சி-54 என்ற கிரகத்தில் ‘தொப்’ என விழுகிறாள் வீராங்கனை வேர்ஸ். (சி-54 என்பது மனிதர்கள் வாழும் பூமி!). ஹாலா கிரகத்தின் க்ரீ இனப்பெண்ணான அவளை அவளது பரம எதிரிகளான ஸ்க்ரல்ஸ் இனத்தாரும், உள்ளூர் காவலர்களும் துரத்துகின்றனர். ‘என்னாது வேற கிரகமா, யாருகிட்ட… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

சோப்பு நுரை

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்துள்ள, வீராணத்தை விடப் பெரிதான ஏரியொன்றின் மேற்பரப்பில் எவரோ சோப்பு நுரையைப் போட்டு வைத்தது போல் இருக்கிறது விமானத்திலிருந்து வான வெளியைக் காண்பதற்கு. கீழே எல்லாமும் எறும்பைப் போல் தெரியும் இந்த உயரத்தில் இருக்கையில், உயரப் பறக்கும் ராஜாளிப் பறவையின் ஆற்றலின் மீது பெரும் மரியாதை வருகிறது. உயரப் பறக்கும்… (READ MORE)

Uncategorized

peranbu_15265294990

‘பேரன்பு’ : திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

பெற்ற தாயால், உற்றாரால் உலகத்தாரால் வெறுக்கப்படும் குறைபாடுகள் உள்ள யாரோடும் ஒத்துப்போக முடியா மகளை வைத்துக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு தந்தையின் கதை படம் முழுக்க வாயைக் கோணிக்கொண்டு கைகளை திருகிக்கொண்டு நடிப்பது எளிதல்ல, பின்னிப் பெடலெடுத்திருக்கிறாள் ‘பாப்பா’வாக வரும் அந்தப் பெண். ‘மம்மூட்டிய எதுக்கு போட்டீங்க?’ என்று இயக்குநர் ராமை கேட்டவர்கள், படத்தைப்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்!’

….. Post from MALARCHI App….. ….. ‘சார் வண்டி பத்து நிமிஷம் நிக்கும் டீ காப்பி டிபன் சாப்டறவங்க சாப்படலாம்’ வகை அறிவிப்புகளும், ‘முருக்கேய், மொளவடேய்! இஞ்சிமரபா!” வகை கூவிக்கூவி நடைபெறும் விற்பனைகளும் இல்லா விமான சேவை என்பதால் மட்டுமல்ல, கொஞ்சம் மண்டை உள்ள பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் அதிக மதிப்பெண்… (READ MORE)

Uncategorized

images-9.jpeg

‘மேதகு மனைவி’ : த வைஃப் : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அதிகாலை அரைத்தூக்கத்தில் இருக்கும் மூத்த தம்பதிகளை தொலைபேசி மணியின் சிணுங்கல் எழுப்புகிறது. படுத்தவாறே தூக்கக் கலக்கத்தில் ரிசீவரை எடுத்து ‘ஹலோ!’ என்று சொன்ன மனிதன், அரை வினாடியில் அதிர்ந்து எழும்பி உட்காருகிறான். ‘திரு ஜோசப் கேஸில்மேன், நான் நோபல் பரிசுக் கமிட்டியிலிருந்து பேசுகிறேன். உங்களது எழுத்திற்காக, இந்த ஆண்டின் நோபல் பரிசுக்கு நீங்கள் தேர்வாயிருக்கிறீர்கள்.’ என்கிறார்… (READ MORE)

Manakkudi Talkies

, ,

சென்னைப் பனி

விடிந்து எட்டு மணியாகியும் விலகாமல் சூழ்ந்து நிற்கிறது ஐஐடியையும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையும் இணைத்து நிற்கும் பனி!

Uncategorized

20190206_0633175241252973266149949.jpg

ஓரிடத்தில் விதைத்தது ஓராறு இடங்களில் முளைக்கிறது

வளர்ந்து வரும் மகளிடம் வளர்க்கலாம் ஒரு பண்பையென்று வளர்த்தேன் ஓராசை கொஞ்சி மகளையழைத்து கொஞ்சம் மண் கொஞ்சம் விதைகள் ஈந்தேன் சிறு தொட்டியில் மண்ணையிட்டு சிறு மகளின் கைகளினால் சிறு விதைகளை ஊன்றினேன் வெண்டை வெடித்து முளைத்தது வீடு மகிழ்ந்து திளைத்தது இன்முகம் வந்தது – படம் இன்ஸ்டாக்ராமில் பறந்தது தோழிகளுக்கெல்லாம் ஆசையாம் தோட்டமொன்று மாடியில்… (READ MORE)

Uncategorized

, ,

மாறி நிற்கிறது தமிழ்நாடு மனம் மகிழ்கிறது நிறைவோடு

சாலையோர இளநீர்க்கடை சனங்கள் நிறை காஃபி ஷாப்புக் கடை வணிக வளாக ஃபுட் கோர்ட் வகைவகை பழச்சாறு அவுட்லெட் வந்தன எங்கும் காகிதக் குழல்கள் (பேப்பர் ஸ்ட்ரா)! மரக்கன்று வளர்க்கும் மாணவனே கூடுதல் மதிப்பெண்கள் இனியுண்டே – மகிழ்வூட்டுகிறார் மாண்புமிகு அமைச்சர் பொறித்த கிழங்கு விற்ற பன்னாட்டு நிறுவனம் அவித்த கிழங்கு விற்கிறது இந்நாட்டு மக்களுக்கின்று… (READ MORE)

Uncategorized

யோகப் பயிற்சிகளை உலகிற்குப் போதிக்கும் யாவரும் – வாழ்க!

தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கேயுரிய உள்ளத்து நல்லுணர்ச்சி, அடுத்தவருக்கு விளக்கவே முடியாத ஓர் அலாதியானது.தசைகளை உறுதியாக்கும் எடை தூக்கும் பயிற்சி, இதயத்தை நுரையீரலை சீர் செய்யும் ஓட்டப் பயிற்சி, நடைப்பயிற்சி, கருவிகள் எதுவுமின்றி தரையில் செய்யக்கூடிய சிறு சிறு தடகளப் பயிற்சிகள் என சில வகைப் பயிற்சிகளை எனக்கானத் தொகுதிகளாகப் பிரித்து மாற்றி மாற்றி பயிற்சி செய்பவன்… (READ MORE)

Uncategorized

எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது.

எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது. பின்னிரவு வரை புதுச்சேரியில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டு, இரவு பயணித்து நள்ளிரவில் வீடுவந்து, அதிகாலையே புறப்பட்டு தாம்பரத்தைத் தாண்டி பூந்தண்டலத்திற்கு பயணித்து கல்லூரி வளாகத்தில் போய் நிற்கும் போது… அறுநூற்றைம்பது ஏழை மாணவர்களின் வாழ்வில் மாற்றம்… (READ MORE)

Uncategorized

ஆளுயர தட்சிணா மூர்த்தி

பார்த்து விட்டு சட்டென்று கடக்க முடியா ஓர் அழகு அல்லது அமைதி அல்லது இரண்டும் கொண்ட ஒரு தட்சிணா மூர்த்தியை பார்த்தேன் இன்று, சிதம்பரம் கோவிலில். மற்ற இடங்களில் இருப்பது போலவே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து ஒரு காலை மடித்து இன்னொரு காலின் மீது போட்டு அமர்ந்திருக்கும் அதே உருவகம்தான். ஆனால், இது பிரமிக்க… (READ MORE)

Uncategorized

20190113_2249318551722713569734407.jpg

பொங்கலுக்கு மணக்குடியில் நான்!

பால் நிலவொளியில் பனியிறங்கிக் குளிர்ந்து விறைத்து நிற்கும் எலுமிச்சை இலைகள் எட்டு மணிக்கே இரவு உணவை முடித்து ஏறக்கட்டி அடங்கிவிட்ட ஊர் எலந்தாரிப் பையன்கள் எல்லாம் பிழைக்கப் பட்டினம் போனதால் இரவு இன்றும் இரவாகவே இருக்கிறது எங்களூரில், எந்த தொலைக்காட்சி வந்த போதும்! பொங்கலுக்கு மணக்குடியில் நான்! – பரமன் பச்சைமுத்து மணக்குடி 13.01.2019

Uncategorized

இந்தப் பிள்ளைகளின்  வாழ்வு மேம்படட்டும் இன்னும் இன்னும்…

முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்தும் வியர்க்காத, காலை எட்டே முக்கால் மணிக்கும் ’17 டிகிரிதான் இங்க, போவியா!’ என்று குளிர்ந்து நிற்கும் ஓசூரின் சிப்காட்டையொட்டிய ஒரு பிசினஸ் ஹோட்டலில் காலை உணவை உண்ணப் போனவன், அதன் மெனுவைப் பார்த்து அசந்து நின்றேன். ஆங்கிலத்தில் ‘அக்காரவடிசல்’ என்றெழுதியிருந்ததைப் பார்த்து பொங்கி வந்த ‘ஆண்டாள்’ நினைவுகளையும் தாண்டி… (READ MORE)

Uncategorized

பேட்ட 1

‘பேட்ட’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

‘அண்ணாமலை’ படத்தின் மாஸ் டைட்டில் கார்டையே எந்த மாற்றமும் இல்லாமல் அனிருத் தந்திருப்பதிலும், ‘இன்ஸ்பிரேஷன், டெடிகேஷன் டு ஒன் அண்ட் ஒன்லி ரஜினி’ என்று போட்டுவிட்டு கார்த்திக் சுப்பு ராஜ்  தொடங்குவதிலுமே புரிந்துவிடுகிறது… இது ரஜினி ரசிகன் ரஜினி ரசிகர்களுக்காக செய்திருக்கும் ரஜினி படம்!  ‘ரஜினி படத்துல நடிக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டவங்கல்லாம் ஏறுங்க!’ என்று … (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

20190109_2124342130056772036433717.jpg

மாலையில் வெள்ளை காலையில் சிவப்பு

மாலையில் வெள்ளை வெளேரென்றும் அடுத்த நாள் காலையில் ரத்தச் சிவப்பிலும் மாறும் இந்த மலரைத் தெரியுமா உங்களுக்கு? நான் சிறுவனாக இருந்த போது எங்கிருந்தோ இந்தக் கொடியைக் கொண்டு வந்து நட்டார் அப்பா. மணக்குடிக்கே இந்தக் கொடியை அறிமுகப்படுத்தியவர் அப்பாதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். கொடுக்காப்புலியும், இந்தக் கொடியும் நான் பீற்றிக் கொள்ளும்… (READ MORE)

Uncategorized

,

அரவிந்தர் வாழ்ந்த வீடு

ந ம் வாழ்வில் நடந்தேறும் சில சங்கதிகளை எப்படி நடந்தன என்று விளக்க முடிவதில்லை, ‘எப்படி நடந்தது!’ என்று வியக்க மட்டுமே முடிகிறது. புதுச்சேரியின் ஒவ்வொரு வீதியும் முக்கிய கட்டிடங்களும் பல கதைகளை பொதித்து வைத்துக் கொண்டு காலத்தின் சாட்சியாக நிற்கின்றன. ஒரு வித்தியாசமான கலவையைத் தன்னுள் கொண்ட நகரம் புதுச்சேரி. பாரம்பரியப் பழைய கடந்த… (READ MORE)

Uncategorized

சாம்பார்

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எதேச்சையாக புதுச்சேரி சர்குருவில் சாப்பிட வந்த இடத்தில் சந்தித்த நண்பன் கேட்கிறான், ‘பரமன்! இது என்ன கலாட்டா? சாதத்துக்கு மட்டும்தானே சாம்பாரத் தொடுவே நீ! லட்ச ரூவாய்க் கொடுத்தாலும் டிஃபனுக்கு சாம்பாரத் தொடக் கூட மாட்டியே, சட்னி வைச்சே சாப்புடுவ! இப்ப பொங்கலுக்குப் போயி எக்ஸ்ட்ரா கப் சாம்பார் வாங்கி விளாவி… (READ MORE)

Uncategorized

ஒதுங்குமிடத்தில் கூட கட்டமைப்பில் அசத்தல்

நட்சத்திர ஓட்டல்களின் சேவையைத் தாண்டி அங்கே இருக்கும் கட்டமைப்பும் காட்சிப் படுத்தலின் அழகுணர்ச்சியும் அவ்விடங்களின் அதீத சுத்தமும் என்னை எப்போதும் கவர்பவை. சந்திப்புகளுக்கு அரை மணி நேரம் முன்பே போய் விடும் வழக்கம் கொண்டவனாகையால் அனைத்தையும் பார்த்து ரசிக்க முடிகிறது. இன்று நண்பரொருவரைச் சந்திக்க தாஜ் கோரமண்டல் சென்ற போதும் அதே அனுபவம். குடியிருக்கலாம் போன்ற… (READ MORE)

Uncategorized

kanaa 1

கனா : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து :

வாழ்வின் பேரிழப்பு ஒன்றின் போது கூட கிரிக்கெட் ஆர்வத்தைக் துறக்க முடியா ஈர்ப்பு கொண்ட, காவிரி வள குளித்தலை பகுதியின் பெரும் விவசாயி முருகேசனின் கிரிக்கெட் பேரார்வம் அவரது மகள் கௌசல்யாவிற்கு கடத்தப்பட்டு, இந்திய நாட்டிற்காக விளையாடி வெற்றி வாங்கித் தரவேண்டும் என்ற ‘கனா’வாக மாறினால்? தேசத்தின் ஒரு மூளையில் இருக்கும் குளித்தலையிலிருந்து எதுவும் தெரியா… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

seethakathi_151607775300

‘சீதக்காதி’: திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து

இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும், மற்றவர்கள் எவரும் தொடக் கூட அஞ்சும் ஒரு கதையை எடுத்துக் கொண்டு முயற்சித்துப் பார்க்கும் அந்த துணிச்சலுக்காகவே ஒரு பூங்கொத்துத் தரலாம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும். ஐம்பது நிமிடத்திற்குக் குறைவாக வந்தாலும், நிறைவாக நிதானமாக கேட்டதை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி ‘எந்தப் படத்தில் எந்த ரோலில்… (READ MORE)

Manakkudi Talkies

, ,

என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது…

என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது. பொறிஞன், தொழில் நுட்பம் தெரிந்தவன் என்றாலும் வெட்கம் பிடுங்கித்தின்னும் நடுத்தர வர்க்கத்துப் பையனாகவே இருந்து அடியிலேயே உழன்று கொண்டிருந்த எனக்கு வாழ்வின் முக்கியக் கதவுகள் திறந்தது பெங்களூருவில்தான். சென்னை ‘ஆஃபீஸ் டைகர்’ (இன்றைய ‘ஆர் ஆர் டொனாலி’) ப்ராஜெக்ட்டில்… (READ MORE)

Uncategorized

மார்கழி மாலை

சென்னை நகரில், காற்றோட்டமான அமைப்பு கொண்ட வீடுகளில் பகல் நேரங்களில் மின்விசிறிகள் ஓடவில்லை. வயதானோர் இருக்கும் வீடுகளில் மாலை நான்கரை மணிக்கு சன்னல்கள் அடைக்கப்படுகின்றன, வேகமாய் வீசும் காற்றில் குளிரெடுக்கிறது அவர்களுக்கு என்பதால். அதிகாலையில் மெதுவாய் எழுந்து பின்பு தடதடவென்று புறப்பட்டு எட்டரைக்கு மேல் வீட்டுக்கு வெளியே வரும்படியான வாழ்வு முறையைக் கொண்ட நகரத்து மக்கள்,… (READ MORE)

Uncategorized

aquaman-movie-poster

திரை விமர்சனம் : ‘அக்வா மேன்’ : பரமன் பச்சைமுத்து

    நாட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தின் காப்பாளரின் கண்களில், கரையில் அடிபட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு பெண் அகப்படுகிறாள். அன்பும், அரவணைப்பும், மருந்தும் புகட்டப்பட்டு  சுயநினைவு பெற்று அவள் எழுந்து உட்கார்ந்ததும் அவள் வேறு ஓர் உலகத்தை சேர்ந்தவள் என்றும், கடலின் அடியில் இருக்கும் அட்லாண்டிஸ் தேசத்தின் ராணி ‘அட்லாண்டா’ அவள் என்றும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

இறைவா நன்றி!

கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் இருக்கும் மலர்ச்சி மாணவர் ஒருவரோடு திருவான்மியூர் ஹாட்சிப்சில் காபி அருந்தி விட்டு எதிர்ப்புறம் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மிகப்பெரிய’ கடையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். ‘பரமன் சார்… எப்படி இருக்கீங்க! இது நாலாவது ப்ராஞ்ச். உங்க க்ளாஸ் அட்டெண்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் பெரிய டேர்னிங் பாயிண்ட் எனக்கு. அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது!’ என்று… (READ MORE)

Uncategorized

சிட்னி ஷெல்டனின் காட்சிகளை தமிழ்ப்படுத்தி கண் முன்னே நிறுத்தியவர் ரீ.கி. ரங்கராஜன்.

ஆங்கில நாவல் உலகில் அடித்து ஆடியவர் சிட்னி ஷெல்டன். அக்காலங்களில் அதிகம் விற்றது அவரது நாவல்கள்தான் என்று சொல்வோர் உண்டு. ஆங்கிலமறியாமல் இருந்த அந்த இளம்பிராயத்தில் சிட்னி ஷெல்டனின் நாவல்களை என்னுள் போட்டு, அந்தக் கதாபாத்திரங்களோடு என்னை உலவ விட்டவர் ரா.கி. ரங்கராஜன். ‘குமுதம்’ வார இதழில் வரும் ‘ட்ரேஸி விட்னி’க்காக வாரம் முழுக்கக் காத்திருந்து… (READ MORE)

Uncategorized

பாரதி விருது – தினமணி அசத்தல்

பாரதியின் பெயரால் ஒரு விருது வேண்டும், பாரதியைப் பற்றி ஆய்வு செய்வோர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அவ்விருதையும், ஒரு லட்சம் ரூபாயும் அளித்து வெகுமதி செய்ய வேண்டும் என்று கவியரசு கண்ணதாசன் கண்ட பாரதி கனவு இத்தனையாண்டுகள் கழித்து இன்று மெய்ப்பட்டிருக்கிறது. ‘மேல் நாடுகளில் ஷெல்லிக்கு ஒரு கூட்டமென்றால், ஷேக்ஸ்பியருக்கு ஒரு கூட்டமென்றால் மக்கள் கூட்டம் வருகிறது…. (READ MORE)

Uncategorized

‘நெல்’ ஜெயராமனுக்கு மலர் அஞ்சலி

‘அரிசிதான் உங்களது உடல் பருமன், சர்க்கரை என எல்லா நோய்களுக்குமான காரணம்!’ என்றொரு பிரச்சாரம் ஒரு பக்கமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் ‘இந்தா கருப்பு கவுனி, இதோ மாப்பிள்ளைச் சம்பா, இதோ குழியடிச்சான், இத சாப்டுட்டு அப்புறம் சொல்லு!’ என்று பாரம்பரிய ரக நெல்களை மீட்டுத்தந்து இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தவர் ‘நெல்’ ஜெயராமன். 174… (READ MORE)

Uncategorized

எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது என்றொரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் அசல் ‘பட்சிராஜன்’ஆகிய சலீம் அலியை அந்நாட்களில் தனது எழுத்துக்களின் மூலம் எனக்கு அறிமுகம் செய்தவர் எஸ்ரா. என்னுள்ளே பல சன்னல்களை திறந்து விட்ட எழுத்தாளர்களில் எஸ்ராவும் ஒருவர். ‘நூலைப் படித்துவிட்டு ஒரு வாசகன் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதே எழுத்தாளனுக்குப் பெரிய அங்கீகாரம்!’… (READ MORE)

Uncategorized

Gaja Cyclone

காவிரிப் படுகையின் மக்களுக்குத் தேவை இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, நிவாரணம் தாண்டிய நாளைக்கான வழி!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் கிராமம் இரண்டு லட்சம் மரங்களை இழந்து நிற்க, அதே ஊரின் விவசாயி சீனு மட்டும் ஒரு பாதிப்புமின்றி நூற்றுக்கணக்கான தென்னைகளோடு நிற்கிறார். ஊரின் எல்லா வீடுகளையும் கலைத்துப் போட்ட ‘கஜா’ இவரது வீட்டை மட்டும் விட்டுவிட்டது எப்படி? குறைந்த சேதாரங்களோடு நிற்கிறார் விவசாயி சீனு. ‘கஜா புயல் கடலூருக்கும்… (READ MORE)

Media Published

, , , , , , , , , ,

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து பறவைகளை நேசித்து பறவைகளுக்காகவே வாழும் சூழலியல் ஆர்வலர், பல்கிப் பெருகிவிட்ட செல்லிடப் பேசிகளின் அளவுக்கதிகமான அலைவரிசை வீச்சினால் அழியும் பறவைகளைக் காக்க வேண்டி அரசு, நீதிமன்றம், மக்கள் என்று எல்லா மட்டங்களிலும் போராடுகிறார். எவரும் செவிமடுக்கவே மறுப்பதோடல்லாமல் அவரை ஏளனம் செய்ய, ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

சிந்து சமவெளியைப் படித்த அறிஞருக்கு மலர்ச்சி வணக்கம்!

உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்று என்று ஒத்துக்கொள்ளப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில், திராவிட முத்திரைகள் உள்ளன என்று படித்துக்காட்டி உலகத்தை ஒத்துக் கொள்ளச் செய்து அதிர்வுகளை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன். ‘கஜினி முகம்மதுவை பதினேழு முறை ஓட ஓட விரட்டிய சோழனின் கல்லறை எங்கேடா?’ வகையில் கட்செவியஞ்சலில் வரும் புருடா பகிர்வுகளைப் போல அல்லாமல்… (READ MORE)

Uncategorized

சுமந்து செல்லும் சங்கதிகளால் கழுதைக்கும் மரியாதை வருகிறது

கோவையில் இறங்கிய விமானம் விட்டு இறங்கி பெட்டியை பெற்றுக் கொள்ளும் வரிசையில் நிற்கிறேன். யாரோ நம்மையே உற்றுக் கவனிப்பது போலொரு பிரஞ்ஞை வந்து அப்பக்கம் பார்க்கிறேன். சிரித்து கை நீட்டுகிறார் ஒருவர். ‘பரமன் சார்… நான் @#*#@*#”, பொள்ளாச்சி நேச்சுரல்ஸ்!’ ‘ஓ மகாலிங்கம் பார்க் கார்னர் ஹெச்டிஎஃப்ஸி பக்கத்துல!’ ‘ஆமாங்க!’ …. கோவையில் தோசார்ட் திறப்பு… (READ MORE)

Uncategorized

வேள்பாரி

காக்கா விரிச்சி, குலநாகினி, ஆட்கொல்லி விதை, கொடிகுலத்து வள்ளி, வேளிர் குலத்து மகள், குறிஞ்சி நிலத் தலைவன், காடறியும் ஆசான், கார்த்திகை நட்சத்திரங்கள், தேவவாக்கு விலங்கு, கொற்றவை கூத்து, துடும்பு, நட்பின் கபிலர், நாகரக்கரடு, விரலிமேடு, பகழியம்பு, சுருளம்பு, மூவிலைவேல், செங்கனச்சோழன், குலசேகரப்பாண்டியன், உதியஞ்சேரல், காடர்கள், திரையர்கள், கூவல்குடியினர், தந்தமுத்துக்காரர்கள், தட்டியங்காட்டுப் போர் என ஈராண்டுகளாக… (READ MORE)

Uncategorized

நினைவூட்டும் வசதிகள்

தொலைபேசி வழியே மட்டுமே தொடர்பு என்றிருந்த அந்தக்காலங்களில் முக்கிய நபர்களின் எண்களை மனனம் செய்து பதிய வைத்திருந்த தலைமுறையின் கடைசி எச்சங்களில் நானுமொருவன். அதே வழக்கத்தில் செல்லிடப்பேசி எண்ணையும் உள்ளே பதிய வைக்கும் பழக்கம் வந்தது. செந்தில்நாதன் என்றால் 9841025530 என்று பதினெட்டாண்டுகளுக்கு முன்பு பதிய வைத்தது இன்றும் உள்ளே நிற்கிறது. நவீன முறையில் சேமிக்கும்… (READ MORE)

Uncategorized

துடும்பு

பறம்பு நிலத்தில் கொற்றவைக் கூத்தின் போது பாரியின் மக்கள் பல்வேறு கருவிகளோடு துடும்பையும் இசைத்து காட்டையதிரச் செய்வார்கள் என்று சு.வெங்கடேசனின் வரிகளின் வழியே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இன்று க்ராண்ட்ஸ்கொயர் மாலில் மலர்ச்சி மாணவர் உதய்ஷங்கரின் நிறுவனக்கிளை திறக்கப் போன போது அதை தொட்டனுபவிக்க முடிந்தது. ஊர்ப்புறங்களில் ஊராட்சி அலுவலக அறிவிப்புகளை வெளிப்படுத்தும் முன் அடிக்கப்படும்… (READ MORE)

Uncategorized

‘நான் யார்?’

‘நான் யார்?’ ‘எப்படி அறிவது?’ என்ற கேள்விகளை வைத்துக் கொண்டு அலைபவர்களுக்கு… எதற்கு அறிய வேண்டும் இப்போது? நீ நீதான்! பிறிதொரு ஆழம் உனக்கு வேண்டியிருந்தால் வேண்டிய தருணத்தில் அதுவாக வெளிப்படட்டுமே, உன் இருத்தலை அனுபவி இப்போது. – பரமன் பச்சைமுத்து சென்னை 10.11.2018 Www.ParamanIn.com

Uncategorized

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

இரவு உணவிற்குப்பின் மீதி கால் வயிற்றை நட்சத்திரங்கள் கொண்டு நிரப்பலாமேயென்று வானம் பார்க்க வாசலுக்கு வெளியே வந்தேன். அடுக்ககத்தின் பார்க்கிங் பகுதியில் காரில் முதுகை சாய்த்துகொண்டு நட்சத்திரம் தேடியபோது, விழுந்த விளக்கொளியில் முதலில் தெரிந்தது மரக்கிளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் இருந்த இருட்டைவிட கருப்பான சில காக்கைகள். இரவைப் பகலாக்கும் தொழில்நுட்பங்கள், ஒளியை உமிழும் விளக்குகள்,… (READ MORE)

Uncategorized

சர்கார் – திரை விமர்சனம்

விஜய் அழகாக கச்சிதமாக இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். கேட்டதை அழகாகக் கொடுத்துள்ளார். ‘டெங்கு கொசு ஒழிப்பு – பொதுப்பணித்துறை’ என்பதில் தொடங்கி படம் நெடுக ஏ ஆர் முருகதாஸ் ஏமாற்றி விட்டார். வீ டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சர்கார்’ – சறுக்கல்.

Uncategorized

20181105_112134-2396744489192963227.jpg

சோளக்கொல்லை…

அண்ணாசாலையை இன்னும் ‘மவுண்ட் ரோடு’ என்றும், சென்னையை இன்னும் ‘மெட்ராஸ்’ என்றும், ரஜினியை ‘சிவாஜி’ என்றும், தனுஷை ‘வெங்கட் பிரபு’ என்றும், சூர்யாவை ‘சரவணன்’ என்றும் இன்னும் யாரேனும் விளிக்கக்கூடும்தானே. அப்படித்தான் ‘சோளக்கொல்லை’ என்பது எங்களுக்கு. முத்து முதலியாரின் கொல்லை அது என்பதெல்லாம் பிற்பாடு வெகு ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வந்தது. அரைக் கால்சட்டை அணிந்து… (READ MORE)

Uncategorized

ஊரே அடங்கிவிட்டது

மொத்த மணக்குடியும் உறங்கிவிட்டது. இரவுப் பூச்சிகளும் தவளைகளும் இடைவிடாது சாதகம் செய்கின்றன. புகையாய் இறங்கும் பனியின் கனம் மலர் விட்டிருக்கும் என் மருதாணிச் செடியை தலை கவிழ வைத்திருக்கிறது. இரவு கவிழ்ந்த வீதியைப் பார்த்துக்கொண்டு நான் மட்டும் விழித்தபடி. 09.40pm பரமன் பச்சைமுத்து மணக்குடி

Uncategorized

வளர்ச்சிதானே!

‘இதை நீ படிக்க வேண்டும்!’ என்று நாம் பரிந்துரைத்ததைப் படித்த மகள்கள், ‘இதை நீ படிக்க வேண்டும்!’ என்று பரிந்துரைக்கிறார்கள். வளர்ச்சி இருபுறமும்! – பரமன் பச்சைமுத்து, சென்னை 19.10.2018 Www.ParamanIn.com

Uncategorized

pariyerum-perumal-tamil-mal-20180913111705-14476447102633552130547.jpg

‘பரியேறும் பெருமாள்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

என்ன படிக்க வேண்டும் ஏன் படிக்க வேண்டும் என்று தெரியாத, ஒரு விழாவிற்குப் போவதற்குக் கூட அடுத்தவரிடம் போய்தான் நல்ல சட்டை கடனாக வாங்கி உடுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள, ஒதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒரு சமூகத்திலிருந்து ஒரு பிள்ளை படித்துத் தலையெடுக்க நிமிர்ந்தால்… அவனை எழவே விடாமல் குலைத்துக் கலைத்துப் போட விரும்பும்… (READ MORE)

Manakkudi Talkies

,

பரமன் பச்சைமுத்துவின் வரிகளை பதிவு செய்த’நாம் தமிழர்’ சீமான் அவர்கள்

பரமன் பச்சைமுத்துவின் மலர்ச்சி வாழ்வியல் விதிகளை, ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமான் பயன்படுத்தினால்…!: கட்செவியஞ்சலில் வந்தது ஒரு காணொளி மலர்ச்சி மாணவர் ஸ்ரீநிவாசகா முத்துவிடமிருந்து. சீமானின் குரல் பதிவில் வருபவற்றை கண்டு கேட்டு அதிர்ந்து போகிறேன். அட… எல்லாமே என் வரிகள்! மலர்ச்சி மாணவர்களுக்காக நான் எழுதியவற்றில் தேர்ழ்தெடுக்கப்பட்டவை சில. என் வளர்ச்சி விதைகள்’… (READ MORE)

Uncategorized

96_153856405820.jpg

’96’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆழ் கடல் உயிரிகள், பனிமலைகள், பறவைகள் என அதிகம் பேச்சற்று இயற்கையில் கரைந்து வேறு கண் கொண்டு பார்க்கும், மற்றவர்களால் சிறுபிள்ளைத் தனம் கொண்டவனாகப் பார்க்கப்படும் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன், இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்து தனது வகுப்புத் தோழர்களை சந்திக்கும் போது தனது அகத்தைத் திறந்து கொஞ்சம் வெளிப்படுத்தி, அதன் ஆழத்தால்… சிரிக்க, நெகிழ,… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , ,

தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச வள்ளலாருக்கு…

  ‘கடவுள் ஒருவரே, சிறு தெய்வ வழிபாடு கூடாது, சாத்திரங்களும், புராணங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை, மூடப்பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும், எளியோர்க்குப் பசி தவிர்த்தலாகிய இரக்கமும் உருக்கமுமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்று கூறி தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச… (READ MORE)

Religion

‘இடக்கை’ – எஸ் ராமகிருஷ்ணன்

மன்னர்களின் நினைவுகள் மட்டுமே திரும்பத் திரும்ப காலங்களைக் கடந்தும் கடத்தப்பட்டாலும், வரலாறு என்பது சாமான்யகளாலும் ஆனதுதானே. பாரத கண்டத்தின் பெரும் பாதுஷா இறக்கும் தருணங்களிலிருந்து ஆஜம்கான், பகதூர்ஷா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஹேஸ்டிங், பென்டிங் வரும் வரையில் சாமானயர்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை புனைவு செய்து கண் முன்னே விரிக்கிறது இந்நாவல்.ராணிகள், ஆசை நாயகிகள், சேவகர்கள், பணியாளர்கள்… (READ MORE)

Uncategorized

புற்றுத் தேன் உண்டிருக்கிறீர்களா?

‘தேசனே தேனாரமுதே சிவபுரனே!’ பக்தியில் திளைத்து இதை மாணிக்கவாசகர் பாடும்போது, புற்றுத் தேனின் சுவையின் நினைவில் பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது இன்று எனக்கு. ‘உன் பேரைச் சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே’ என்ற கார்த்திக் ராஜாவின் இசையில் வந்த ‘டும் டும் டும்’ படப் பாடல் வரியைப் போல, புற்றுத் தேன் என்று எழுதும் போதே… (READ MORE)

Uncategorized

நம்மால் இல்லை, நம் வழியே

எழுத்து என்பது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வெளி வருவது.  ஒரு அலைவரிசையில் ஒத்திசைவு பெற்று இருக்கும் போது, அதுவாக உருவெடுத்துக் கொண்டு எழுதுபவனின் உள்ளக்கிடக்கையில் காலங்காலமாகப் படிந்து கிடங்கும் படிமங்களை ஒட்டிக் கொண்டு வெளிவருகிறது. பல நேரம் அதுவாக வரும், சில நேரங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அது வருவதில்லை.  நாளை காலைக்குள் இத்தனைப்… (READ MORE)

Uncategorized

Chekka-Chivantha-Vaanam-Movie-Posters

‘செக்கச் சிவந்த வானம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆளு, அம்பு, சேனை குவித்து ஊரையே ஆளும் தாதா பெரியவர் சேனாதிபதியின் மெத்துமெத்தென்ற பெரிய இருக்கையில் உட்கார்ந்து கொள்ள ஒவ்வொருக்கும் உள்ளூர ஆசை. வல்லிய பெரியவரைச் சாய்த்து விட தாக்குதல் நடக்கிறது. பெரியவரைக் கொல்ல முயன்றது யார்? உள்ளூரின் போட்டி தாதா சின்னப்பதாசா, இல்லை வெளியூரில் இருக்கும் பிள்ளைகளா, பெரியவரைக் கொன்றால் யாருக்கு ஆதாயம் என்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Boys2

கடைசியில் ஒரு வகையில் எல்லாமே நினைவுகள்தானே…

மதுரை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு மலர்ச்சி உரையாற்ற பாண்டியன் எக்ஸ்ப்ரெஸில் டிக்கட் போட்ட  போது திருநெல்வேலியில் இறங்கி குறுக்குத்துறை சென்று தாமிரபரணியில் குளிப்போம் என்றேன். குமரன், கார்த்திகேயன், ராமசாமி, நான் என நால்வரும் திருநெல்வேலியில் இறங்கி ‘நாடார் மெட்டல்ஸ்’ என்ற ஒரே பெயரில் பல கடைகள் இருக்கும் அந்தத் தெருவில் இருந்த ‘போத்தீஸ்’ஸின் உள் நுழைந்து… (READ MORE)

பொரி கடலை

images-202454794691736318737..jpg

‘இமைக்கா நொடிகள்’ : திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘ஒரு சிங்கம் பார்த்துப் பார்த்து திட்டம் போட்டு வேட்டையாடுச்சாம். எங்கிருந்தோ திடீர்னு வந்த கழுதைப்புலி மான் கறிய தின்னுட்டுப் போயிடுச்சாம். அந்த சிங்கத்துக்கு எப்படி இருக்கும்? கோவத்துல, அவமானத்துல பழி வாங்க அது துடிச்சதாம்!’ என்று கதாபாத்திரத்தின் குரல் வழியாகவே மொத்தத்தையும் சொல்லிவிட்டு அதை ஒரு நல்ல த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர். நல்லவராகத் தெரிபவர் உண்மையில்… (READ MORE)

Manakkudi Talkies

செம்பியன் மாதேவியின் மண்ணை…

திருவையாறு அருகேயிருந்த செம்பியன்குடி குறுநில மன்னன் மழவராயனின் மகள் செம்பியன் மாதேவி, சிவன் மீதுள்ள பக்தியால் சிவாலயங்களுக்குச் செலவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தஞ்சை மன்னன் கந்தராதித்யர் பார்த்து காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாராம். அவர்களுக்குப் பிறந்தவன் மதுராந்தகன் (உத்தம சோழன்) என்பதும், கந்தராதித்யர் இளம் வயதிலேயே இறந்து போக… (READ MORE)

Uncategorized