Yearly Archive: 2019

wp-15776884945251779575029260195958.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – நிறைவுப் பகுதி

*AVCC Polytechnic 91 Batch Alumni Meet’* (முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி ) *நிறைவுப் பகுதி:* கொஞ்சம் எடை கூடியதைத் தவிர உருவத்தில் வேறு மாற்றம் இல்லாத மீன்சுருட்டி *அமிர்தலிங்கம்*, அளவாக அழகாக பகிர்ந்தார். பெரும் கட்டுமான நிறுவனமான ‘மார்க்’கில் உயர்மட்ட நிர்வாகியாக இருக்கும் அமிர்தலிங்கம் பொறியியல் படிக்கும் மகள், ப்ளஸ் டூ படிக்கும் மகன்… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884948816429448680821513489.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 3

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ (முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி ) குறிப்பு – 3: டிஎஸ்ஏ தொடங்கி நகரில் பல பேருக்கு கடன் தந்து அதிலிருந்து மாறி கட்டுமான நிறுவனம் நடத்தும் தன் கதையை சந்திரமௌலி நறுக்கென்று கூறியது சிறப்பு. கல்லூரி வகுப்புகளில் எப்பவும் எழுந்து கேள்வி கேட்கும் மௌலி கண்ணில் வந்து… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884944681882161469791835393.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 2

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ குறிப்பு – 2: பத்தாம் வகுப்பே படித்த பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்த பல – பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சில ஆண்கள் என்றளவிலேயே பக்குவம் கொண்ட சிறு பிள்ளைகளாக இருந்த நாங்கள், ‘இருபத்தியெட்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சந்திக்கிறோம்!’ என்ற நிலையில் இந்த எண்ணமே… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884944169090575625827339882.jpg

ஏவிசிசிபி அலுமினி் மீட் – பகுதி 1

‘AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ ஏதோ ஓர் இடத்தில் புள்ளி வைத்து இதைத் தொடங்கி வைத்த ஜி கே வனிதாவிற்கும், முரளிப்பிரகாஷுக்கும் எங்களது நன்றிகள்! திருவாரூரிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும், சென்னையிலிருந்தும் என பல மைல்கள் பயணித்து வந்த தோழிகளுக்கும், அவர்களை கொண்டு வந்து விட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் நன்றிகள். நாளை அதிகாலை பெங்களூருக்குவுக்கு… (READ MORE)

AVCCP, Uncategorized

, , , ,

முதியவரும் பதின்மரும்

‘ஃபேனைப் போட்டுகிட்டு தலையை சீவாங்கதிங்கன்னு சொன்னா கேக்கறதில்ல. வீடு முழுக்க முடி. சொன்னா அதுக்கு ஒரு வியாக்யானம் பேசுவாளுங்க. எல்லாம் பெரிய மேதாவிங்க!’ 😀 பதின்ம வயதுப் பெண்களும் முதிய பெண்மணியும் வீட்டிலிருந்தால், வீடு நிறைந்து விடுகிறது. நிறைய புன்னகைக்க சிரித்து மகிழ முடிகிறது. வாழ்க்கை உன்னதமானது 😀 – பரமன் பச்சைமுத்து சென்னை 17.12…. (READ MORE)

Uncategorized

எனது பதினோறாவது நூல்

கொண்டாடும் தருணமிது எனக்கு! நான் ஓர் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளுமளவிற்கு இன்னும் வரவில்லை, ஆனால் அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன், இறையருளால். இந்தப் பயணத்தில் ஒரு மைல் கல் இது என எண்ணுகிறேன். இன்று, என் பதினோராவது நூலை முழுதாக முடித்து அவர்களது வடிவில் அச்சேற்ற பதிப்பகத்தாரிடம் தந்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை பெரு மகிழ்ச்சியூட்டும்… (READ MORE)

Uncategorized

இன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது,

கடைசி வரிசையில் இருந்த அருண் சுப்பு ரங்கன், பாலகிருஷ்ணன், ஹரிஹரன், தேவநாதன் எல்லாம் வெகு தூரத்தில் இருப்பது போல ‘அரங்கு நிறைந்த’ வளர்ச்சிப் பாதை இன்று மாலை, புதுச்சேரியில். சிதம்பரத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் மலரவர்கள் கூடியிருந்தனர். வள்ளி விலாஸ் ரமேஷ், சதீஷ் (விநாயக முருகன் பேக்கரி), வெங்கட லட்சுமி, சூர்யா என்டர்ப்ரைஸ்ஸ் ரமேஷ், நித்யரமா… (READ MORE)

Uncategorized

தானாய் நடைபெறும் சுவாசம்

உடலை உற்றுக் கவனிப்பதில் ஒன்று புரிகிறது. நம்மால் உணரமுடியா அதிசயங்கள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தேறுகின்றன. நாசியின் வழியே உள் நுழைந்து உடலியக்கத்திற்கு உறுதுணையாய் நிற்கும் காற்று ஓர் அதிசயம். அதைக் கொண்டு உடல் செயல்படும் விதம் ஓர் அதிசயம். மூச்சுப் பயிற்சியில் காற்றை இழுத்தல் – நிரப்பி நிறுத்தல் – வெளியேற்றுதல் தாண்டி – வெற்றிடத்தை… (READ MORE)

Uncategorized

சென்னை சிறந்த நிலையில்

மழை, மழைக்குப் பின்பான மஞ்சள் வெய்யில், ஏரி குளங்களில் நீர், பச்சைப் பசேலென்று கிளர்ந்து நிற்கும் மரங்கள், மகிழ்ச்சியாய் வட்டமிடும் பறவைகள், கட்டுக்குள் வளி மாசு, மின் விசிறி கூடத் தேவையில்லா தட்பவெப்பம் என சிறந்த கார்த்திகை சென்னையில்! வாழ்க! 09.12.2019

Uncategorized

இந்தூரில் தொடங்கிய அதிசயம் இந்தியாவெங்கும் நிகழட்டும்!

அதிசயங்கள் பல நேரங்களில் சாமானியர்களால் நிகழ்த்தப் படுகின்றன. ஒரு மாவட்ட ஆட்சியரும் அவரது அத்தனை ஊழியர்களும், நகரின் மாநகராட்சி ஆனையரும் அவரது அனைத்துப் பணியாளர்களும் வாரத்தில் ஒரு நாள் தங்களது வாகனங்களைப் பயன்படுத்தாமல் அரசுப் பேருந்தில் மட்டுமே பயணிப்போம் என்று முடிவெடுத்து செயல்படுத்தினால் எப்படியிருக்கும்! மக்களும் இணைவார்கள்தானே! மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் வாரத்தில் வெள்ளிக்கிழமைதோரும்… (READ MORE)

Uncategorized

, ,

அந்தக் கையை தொட்டுப் பாக்கணும், இப்படிக் கொடுங்களேன்

நாம் அசந்து போய் நிமர்ந்து பார்க்கும் ஆளுமைகளை சட்டென்று அருகில் நிறுத்தி வியப்பிலாழ்த்தி விடுகிறது வாழ்க்கை. சுஜாதா, வண்ணதாசன், நாஞ்சில் நாடன், வாலி, வைரமுத்து, எஸ் ராமகிருஷ்ணன், சிட்னி ஷெல்டன் (ரா கி ரங்கராஜன் வழியே) என பலரை எனக்கு முதல் அறிமுகம் செய்து வைத்ததற்காக குமுதத்திற்கும் விகடனுக்கும் நான் பெரும் நன்றிக் கடன்பட்டவன். அப்படி… (READ MORE)

Uncategorized

சென்னை மழை மனிதர்கள்

சென்னையில் பெய்யும் கனமழையால் அரும்பாக்கத்தின் பாஞ்சாலி அம்மன் கோவில் பின்புறமுள்ள தாழ்வான பகுதியில் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியேறவே முடியாத மக்களை மனதில் கொண்டு இன்று அதிகாலையில் வீடுவீடாகச் சென்று பால் பாக்கெட், சேமியா / ரவை பாக்கெட்டுகள் / காய்கறி அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெயர் தெரியாத அந்தத் தன்னார்வத் தொண்டர்களுக்கு… மலர்ச்சி வணக்கம்…. (READ MORE)

Uncategorized

சிங்கத்தின் கோட்டையில்..

கடல் மட்டத்திலிருந்து 4320 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வந்து ஏறுவதற்குக் காரணம், முக்கிய நிகழ்வுகள் திருப்புமுனைகள் நடந்த வரலாற்றுச் சின்னமிது என்பதால் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மலையேற்றத்தைப் போலல்லாமல் எவ்வளவு ஏறினாலும் உடல் நடுங்கினாலும் மூச்சிறைத்தாலும் வியர்க்கவே வியர்க்காத வெப்ப நிலை, இந்த உயர்ந்த மலையைச் சுற்றி எல்லா… (READ MORE)

Uncategorized

யோகாவைத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்

‘யோகப் பயிற்சியை தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நான் அடிக்கடி சொல்வதற்குக் காரணம் அது மதமோ கடவுளோ தந்தது எனும் பொருள் கொண்டு அல்ல, அது கொடுக்கும் உணர்வையும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கண்டு அசந்து சொல்வது அது. நாள் தவறாது தினம் யோகப்பயிற்சி செய்யும் தந்தையைப் பார்த்தே வளர்ந்தவனாகையால், அதன் பால் கொண்ட ஈர்ப்பு… (READ MORE)

Uncategorized

images.jpeg

ஷாருக்கான் நேர்காணல் நன்று

‘நான் டெல்லிப் பையன். என் அம்மாவிற்கு மூன்று பெண்கள் அப்புறம் நான். இவர்களுக்கு யாருமில்லையேயென்று என்னை அம்மா தத்துக்கொடுத்து விட்டார்கள். நான் பெங்களூருக்கு அனுப்பப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவிற்கு ஏக்கம் வர நான் திரும்பவும் அழைக்கப்பட்டேன்’ ‘வரிசையாப் படங்கள் எல்லாம் ஊத்திகிச்சி. அதான் ரொம்ப நாளாவே படமே பண்ணாம சும்மா இருக்காரு!’ என்று உலகம்… (READ MORE)

பொரி கடலை

, ,

சன்னல்கொத்தி

இரண்டு நாட்களுக்கு முன்பு என் பால்கனிக்கு வெளியே மாமரக்கிளையை கொத்திய மரங்கொத்தி, இன்று காலை என் அடுக்கக் குடியிருப்பின் மூன்றாம் தளத்து வீடொன்றின் சன்னலைக் கொத்தியது. ‘அப்பா… அப்பா, அங்க பாரு!’ என்று என் மகள் அன்று காட்டிய போது மாட்டாத அந்த மஞ்சள் அழகி, இன்று காலை ஓட்டப்பயிற்சி முடித்துவிட்டு வந்து பாதாம் மரத்தடியில்… (READ MORE)

Uncategorized

பாலாறு

தமிழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கிலோ மீட்டர் அளவு அகலம் கொண்ட ஓர் ஆற்றைக் கடக்கிறோமென்றால், அதிக பட்ச வாய்ப்பு அது பாலாறாக இருக்கலாம். சென்னைக்கும் – இடைக்கழிநாடு, காத்தான்கடை மரக்காணம் பகுதிக்கும் இடையே எப்போதும் மணல்வெளியாகவே காட்சி தரும் பாலாற்றில் இன்று நீர் இருப்பதைக் கண்டு இறங்கி விட்டேன். ஆந்திரத்திலிருந்து வந்து ஓடும்… (READ MORE)

Uncategorized

போட்றா டிக்கெட்ட…

இவ்வளவு ஆண்டுகள் எல்லாம் பார்த்த பிறகும் செய்த பிறகும், சாலையோரத்தில் பஸ் நிறுத்தத்தின் அருகில் பதற்றத்தோடு நிற்கும் ஆட்களோடு வரிசையில் நின்று நகர்ந்து நகர்ந்து இண்டர்வ்யூக்குப் போனால் எப்படியிருக்கும்? ….. அமெரிக்க விசாவிற்காக, சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகில் கிட்டத்தட்ட சஃபையர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தையும் தாண்டிய நீண்ட வரிசையில் வெய்யில் பனி மழை பாராமல்… (READ MORE)

Uncategorized

images-58562385580449821885..jpg

‘பிகில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தந்தையின் கனவை தன் வழியே நிறைவேற்ற முடியாமல் சூழலால் தவற விட்ட தனயன் அதே கனவை போராடி தனது மக்களின் வழியே நிறைவேற்றினால், போடுறா ‘பிகில்’! தோல்வி நிலையில் அடி மட்டத்தில் கிடக்கும் ஒரு விளையாட்டு அணியை வழி நடத்த ஒருவர் வருகிறார், நல்லது செய்ய வரும் அவருக்கு கீழே அணியிலும் எதிர்ப்பு மேலே கமிட்டியிலும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

67393670338997342621667302.jpg

‘வீடுகளெல்லாம் வீடுகளல்ல…’ அல்லது ‘வீடெனப்படுவது யாதெனின்…’ – ‘கும்பளாங்கி நைட்ஸ்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘அயலூர் சினிமா’: திறந்த வானத்தின் அடியில் பரந்த ஏரி அதன் மூலையில் தரை வழிப்பாதையே இல்லாத சுற்றிலும் நீர்சூழ் வீடு. அந்த வீட்டிலிருந்து வெளியே பால் வாங்கப் போக வேண்டுமென்றாலும் பள்ளிக்குப் போக வேண்டுமென்றாலும் அல்லது அந்த வீட்டிற்கு எவர் போவதென்றாலும் படகில் பயணித்தே போக வேண்டும். பால் பொழியும் நிலவும், பகல் மஞ்சள் வெய்யிலும்,… (READ MORE)

Manakkudi Talkies

, ,

மகளிர் கால்பந்து படம்

மகளிர் ஹாக்கியை மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதையில் பயிற்சியாளராக ஷாருக்கான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சக்தே’. அதே கதையை மகளிர் ஹாக்கிக்குப் பதில் மகளிர் கால்பந்தாக மாற்றி, பயிற்சியாளராக வருபவருக்கு சில ஆக்‌ஷன் மசாலா சங்கதிகள் சேர்த்து அரைத்து, கூடவே சில கிளை கதையொன்றையையும் பின்னி வைத்தால்… அது ‘பிகில்’ ஆக… (READ MORE)

Uncategorized

தண்ணீர் தேங்கி நின்றால்

தண்ணீர் தேங்கி நிற்கிறதென்றும் சூழலை ஒழுங்காக வைத்திருக்கவில்லையென்பதாலும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறது ஒரு பள்ளிக்கு. ‘தண்ணீர் தேங்கியுள்ளது’ என்று சென்ற ஆண்டு இப்படி டெங்கு அபராதங்கள் விதித்த சில நாட்களில் மழை வந்து ஊரே தண்ணீர்க்காடாகி கிடந்தது, ‘உங்களுக்கு யாரு இப்ப அபராதம் போடறது?’ என்று மக்கள் நினைக்கும் படியானது. அபராதம்… (READ MORE)

Uncategorized

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்

நான் ஓர் ஆசிரியன், வாழ்வியல் பயிற்சியாளன். வளர்ச்சியைக் கண்டுபிடித்து நல்லதைக் கண்டுபிடித்து அடுத்தவர்க்கு விருது வழங்கி மகிழ்வித்து மகிழ்பவன். விருது வழங்கப்படும் எத்தனையோ விழாக்களில் விருதாளர்களையும் அங்கம் வகிப்போரையும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை நோக்கி நகர வைக்க உரை நிகழ்த்துபவன். கலந்து கொள்ளும் இடங்களில் உரையாற்றி முடிந்ததும் அவர்கள் பெயரும் எனது பெயரும் பொறித்த ‘ஷீல்டு’ நினைவுப்… (READ MORE)

Uncategorized

இழந்ததை நினைத்து அல்ல, கிடைத்ததை நினைத்து…

08.20க்கு என் விமானம், 07.20க்கு நான் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். எனக்கு முந்தைய பேச்ணாளர்களால் நிகழ்ச்சி தாமதமாகி நான் என் மலர்ச்சி உரையை முடிப்பதும் குறித்த நேரம் தாண்டிப் போனது. நிகழ்ச்சி முடித்து என்னைக் காரிலேற்ற லீ மெரீடியனிலேயே 07.05 ஆகிவிட்டதால் அடித்துப் பிடித்து ஓட்டி வந்தார் டிரைவர். ஓடி வந்து போர்டிங் பாஸ்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே ஆரூடம் சொல்பவருக்கு, உலக நிதர்சனம் சொல்ல வேண்டியிருந்தது

‘இருவது நிமிஷத்துல நாலு பேருட்ட நாலு வாட்டி சொல்லிட்டேன். அதுக்கப்புறந்தான் தண்ணி தர்றீங்க. வந்து உக்காந்த உடனே தண்ணி வைக்கனும். அதுதான் சர்வீஸு. சாப்பாடு நல்லாருக்கு. காப்பி அருமை. ஆனா, தண்ணி தர மாட்றீங்க. முதல்ல ஒரு க்ளாஸ் தண்ணி தரனும்! முதல்ல தண்டி தம்ளர்ல…’ ஒரு வரியில் வெளிப்படுத்த வேண்டிய இந்த சங்கதியை ஒன்பதே… (READ MORE)

Uncategorized

தமிழ் தமிழகப் பற்று!

சீன அதிபர் ஜீ ஜின் பிங்கின் இந்திய வருகையை சென்னையையொட்டிய மாமல்லபுரத்தில் நடத்துவதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க முயல்கிறார் பிரதமர் மோடி. வழக்கமாக தில்லியில் நடைபெறும் இத்தகைய சந்திப்புகள் தெற்கே தமிழகத்தில் நிகழ்த்தப்படுவதற்கு இரு காரணங்கள். ஒன்று – சீன அதிபர் தில்லியில் இறங்கியதும் அவர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் தலாய்… (READ MORE)

Uncategorized

எப்போதும் vs எப்போதாவது

திருவண்ணாமலைக்கு பயணித்த வழியில் தேநீருக்கு இறங்கிய திண்டிவனம் நெடுஞ்சாலைத் தேநீர் கடையில் எவரோ ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஏ… ஒரு மாசம்… ஒரு மாசம் ஃபுல்லா எதுவும் தொட மாட்டோம் பாத்துக்க. பொரட்டாசி மாதம்! முழு சுத்தமா இருப்பமே நாங்க!’ ‘நாங்க கூடத்தான், சபரிமலைக்கு மாலை போடும் போது!’ …. ‘எப்பவுமே எல்லா மாசமுமே… (READ MORE)

Uncategorized

images-24355356548042766525..jpg

‘அசுரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

கொண்ட குடும்பத்திற்காகத் தன்னைத் தந்து அடங்கி ஒடுங்கி வாழும் நெல்லைச் சீமை மனிதனொருவனின் வாழ்வில் ஏற்படும் சில சம்பவங்களால் குடும்பமே குலைந்து போக, உணர்ச்சிப் கொந்தளிப்புகளுக்கிடையே கைப்பிடித்து ஓடி ஓடி குடும்பத்தைக் காத்து நிற்கும் அவனது கதையை ரத்தமும் சதையுமாக ஒரு நேர்த்தியான கதை சொல்லி அருமையாக சொன்னால் – ‘அசுரன்’ கொடுத்த விதத்தில் பொறி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

அளவில்லாமல் அடாவடி செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்! : பரமன் பச்சைமுத்து 

திருச்சியில் உள்ள ஒரு நகைக் கடையொன்றில் இரவில் கன்னம் வைத்து கொள்ளை நடந்துள்ளது என்ற ஒரு செய்தி படங்களோடு முதலில் கட்செவியஞ்சலிலும் ஊடகங்களிலும் அடுத்த நாள் செய்தித் தாள்களிலும் வந்தன. முகமூடியணிந்த கொள்ளையர்களின் கண்காணிப்புக் கேமரா படங்கள், துளையிட்ட சுவரின் படம் என எல்லாமே வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டன. அடுத்த நாள் கடையின் உரிமையாளர் சென்னையிலிருந்து… (READ MORE)

Uncategorized

தினம் காமராஜர்

எப்போதும் காமராஜரைப் பற்றியே பேசுபவனுக்கும் எண்ணுபவனுக்கும் காமராஜர் தினம் இல்லை,… ‘தினம் காமராஜர்!’ பெருந்தலைவருக்கு மலர்ச்சி வணக்கம்! – பரமன் பச்சைமுத்து 02.10.2019

Uncategorized

வாஞ்சி மணியாச்சி

நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ரயில்நிலையத்தில்தான் புரட்சி செய்தான் வாஞ்சி.திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்கு முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த பிரித்தானிய கலெக்டர் ஆஷ்ஷை, இதே மணியாச்சி ரயில் நிலைய மேடையில் உலாத்தியபடியே கவனித்து துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றான் புரட்சியாளன் வாஞ்சி.வெகுகாலத்திற்குப் பிறகு மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் மாற்றம் செய்ய… (READ MORE)

Uncategorized

இனி, துரைசிங்கத்தின் வசனங்கள் வராது; தூத்துக்குடி என்றால் சொல்வதற்கு நினைப்பதற்கு நிறைய நல்ல சங்கதிகள் இருக்கிறது எனக்கு.

தூத்துக்குடியில் இறங்கிக் கால் வைக்கும் போது… உலகின் மிகச் சிறந்த உப்பு உற்பத்தியாகும் இடம், வ.உ.சியின் சுதேசிக் கப்பல், கிரேக்க தாலமி குறிப்புகள், எரித்ரேயன் பெரிப்லஸ், ஆதிச்ச நல்லூர், மார்க்கோ போலோ குறிப்பிட்டிருந்த முத்துக் குளித்தல், ஆதிகுடி மக்களான வலையர் குல மக்கள், டச்சுக்காரர்கள், கிழக்கிந்திய கம்பெனி, பரதவர்கள் வணங்கும் பனிமயமாதா, அனுமனை சீதையைத் தேட… (READ MORE)

Uncategorized

நடிகர் விஜய்யின் அப்பா, ஆளுஞர் தமிழிசை அவர்களோடு பயணித்தத் தருணங்கள்

நேற்று இரவு மலர்ச்சி பட்டமளிப்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி ஒரு குறிப்பை சொல்லிவிட்டு, அதிகாலை தூத்துக்குடி விமானத்தில் ஏறி அமர்ந்தால், எனக்கு முன்னிருக்கையில் மேதகு ஆளுநர் – தெலுங்கானா திருமதி தமிழிசை சௌந்த்தரராஜன் அவர்கள். உள்ளே நுழைந்த உடனேயே குட்மானிங் மேடம், யு ஆர் இன்ஸ்பயரிங்!’ என்று நான் சொன்னதை புன்னகைத்து தலையசைத்து ஏற்றுக்… (READ MORE)

Uncategorized

நன்றாக இருக்கிறது திரும்பிப் பார்க்க

‘திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. ‘மகளிர் தின விழா’வில் பேச வந்திருந்தார் பரமன் பச்சைமுத்து அவர்கள். உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் பரமனிடமே ‘பரமன், எப்ப நான் உன்னை சேல்ஸ்ல ஜெயிக்க முடியும்?’னு கேட்டாராம். ‘நீ முடிவு பண்ற அன்னைக்கு!’ என்று பரமன் பதில் சொன்னாராம். இது நிகழ்ச்சியில்… (READ MORE)

Uncategorized

பொதினா புளித் துவையல்

உணவில் உயிர்ச்சத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது அரைத்த துவையல்களை சட்னிகளை வழித்துச் சுவைப்பவன் நான். அப்படியொரு துவையலோடு வந்திருந்த என் வீட்டு மதிய உணவை இன்று பிரித்த போது உடனிருந்த சில அன்பர்களோடு பகிர நேர்ந்தது. ‘ஐயோ… சூப்பரா இருக்கே! இது என்ன துவையல் பரமன்?’ என்பது அனைவரின் பொதுக் கேள்வியாக இருந்தது. அவர்களுக்குப்… (READ MORE)

Uncategorized

images4896631818316080130.jpeg

‘ஒத்த செருப்பு ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு கொலைத் தொடர்பாக ஒருவனைப் பிடித்து வந்து ஒரு காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கையில் அந்த ஒருவன் வெளிப்படுத்தும் சங்கதிகளால் உருவாகும் ஒரு கலவையான அனுபவத்தை ஒரு முழுப்படமாக வடித்து ஒரே ஓர் ஆள் மட்டுமே நடித்து ஒரு மிரட்டலோடு அதைத் தந்தால் – ‘ஒத்த செருப்பு’ இரண்டு மணி நேரத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , ,

சிங்க முக யாளி

காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்கி விட்டு் ‘பாவை மன்றம்’ முன்னே நின்று மாதவியை கலியன் ஆசிரியர் விளக்கிய போது, அரைக் கால்சட்டை அணிந்த மூன்றாம் வகுப்புப் பையனாகிய நான் அந்தச் சிலைகள் உயிர் பெற்று நிற்பதைப் போல் அதிசயித்தேன். கோவலனையும் சேரன் செங்குவட்டுவனையும் இளங்கோவடிகளையும் தொட்டு, ‘டாய் பரமன் தொடக்கூடாது!’ என்று இரண்டாம் வகுப்பு எண்ணாவரம் வாத்தியார் சொன்ன… (READ MORE)

Uncategorized

அன்பென்பது பிரஞ்ஞை கடந்தது

கோவை விமான நிலையத்தில் ஒரு வசதி, விமானத்திலிருந்து இறங்கி தனிப் பேருந்தில் பயணித்து விமான நிலையத்திற்கு வர வேண்டாம். விமானம் விட்டு இறங்கி நடந்தே விமான நிலையம் வந்து பேக்கேஜ் கலெக்‌ஷன் பெல்ட்டிற்கு வந்து விடலாம். இன்று கோவையில் விமானத்திலிருந்து இறங்கும் போதே கண்ணை ஈர்த்தது ஒரு நிகழ்வு. இதே விமானத்தில்தான் வந்திருக்க வேண்டும் அவர்கள்…. (READ MORE)

Uncategorized

மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது!

புளிக்கு ஜிஎஸ்டி இல்லை, பெருநிறுவன வரிகள் குறைப்பு, பங்குச்சந்தை குறியீடு உயர்வு என்று ஊடகங்கள் கொண்டாடும் வேளையில் கொண்டாட முக்கிய மற்றொன்றும் இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால், சென்ற மாதம் மைதானமாகக் காட்சியளித்த புழல் மற்றும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது! மழையே நன்றி!… (READ MORE)

Uncategorized

தினமணிக்கு மலர்ச்சி வணக்கம்

கடலூரை சொந்த ஊராகக் கொண்ட அவர் தினமணியில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தொடரை எழுதினார், பின்னாளில் நூலாக வந்து அவருக்கும் சாகித்ய அகாதெமி விருதினை தமிழுக்கும் வாங்கித் தந்தது. அந்த புதிய எழுத்தாளர் பின்னாளில் ஜெயகாந்தன் என்ற ஆளுமையாக அறியப்பட்டார். லால்குடிக்காரரான ராமாமிர்தம் தினமணியில் ‘சிந்தா நதி’ என்ற தொடர் எழுதினார். பின்னாளில்… (READ MORE)

Uncategorized

,

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’ புதிய கிளையை திறந்து வைப்பதற்காகப் சாலையில் பயணித்து குண்ட்டூர் சென்று இறங்கியதும் எனை நோக்கி வைக்கப்பட்ட, நான் எதிர் கொண்ட முதல் கேள்வி. கடவுளுக்கு ‘தேவுடு!’ என்கிற வார்த்தையை மட்டும்தான் நான் அறிவேன். அதுவும் என்டிஆரை மக்கள் அப்படி விளிப்பார்கள் என்பதாலும், ரஜினி படத்துப்… (READ MORE)

Uncategorized

ரேய் துஸ்லிகா பச்சிடிரா’

‘ரேய் துஸ்லிகா பச்சிடிரா’ ‘க்கோர்சிக்கிடிக்காய் பச்சடி தீஸ்கோண்டி’ ‘மஜ்லிகா புளுஸு’ இந்தச் சத்தங்கள் நிறைந்த அந்த உணவகத்தினுள் நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். திருப்பதி போகும் போதெல்லாம் மினர்வா கிராண்டில் அல்லது மயூராவில், பெங்களூருவில் நாகார்ஜுனாவில், வேறு வழியில்லாத போது சென்னையில் அமராவதியில் என்ற அளவிலேயே ஆந்திர சாப்பாட்டைப் பற்றிய அனுபவங்கள் கொண்ட நம்மை ‘ஆத்தன்டிக் அக்மார்க்… (READ MORE)

Uncategorized

வெப்ப பூமி வளமான கதை – முதலிப்பட்டி, விளாத்திகுளம் வேம்பு சக்தி இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முதன்மையாகக் கொண்ட ஒரு சிற்றூர் முதலிப்பட்டி. வானம் பார்த்த பூமியான முதலிப்பட்டியில் 15 ஏக்கர் அளவுள்ள கண்மாய் இருந்தும், 8 ஏக்கர் துர்ந்து மேடாகி கருவேல மரங்களால் நிறைந்தும், மீதியுள்ள 7 ஏக்கர் சேறு சகதியுமாகவும் ஆகிப் பயன்பாட்டிற்கு அருகதையற்றுப்… (READ MORE)

Uncategorized

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு?

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு? புதுச்சேரியில் மலரவர் கோவிந்தராஜுலு மகன் திருமணத்திற்குப் போன இடத்தில், ‘பரமன், யு ஷுட் ட்ரை திஸ் ப்ளீஸ்!’ என்று பரிந்துரைத்தார்கள். வெற்றிலையில் விளக்கேற்றி நதியில் விடுவது போல் வெற்றிலையை விரித்து பீடா சங்கதிகள் இட்டு ‘பட்’டென்று பற்ற வைத்து நெருப்போடு நம் திறந்த வாய்க்குள் தள்ளுகிறார்கள். ( நம் சிவவேலன்… (READ MORE)

Uncategorized

தமிழ் செழிப்பாக வாழ்கிறது அயலகத் தமிழ்களின் இல்லங்களில்

ஓர் இனத்தின் அழிவில் மட்டுமல்ல, உறவின் முறைகளை விளிக்கும் வழக்குச் சொற்கள் வேற்றுமொழிச் சொற்களால் மாற்றப்படும் போதும் தேயத் தொடங்குகிறது ஒரு மொழி. உறவின் முறைகளை தங்கள் மொழிச்சொற்களிலேயே விளிக்கும் போது விழுதுகள் விடுகின்றது மொழி. ஓர் இனத்தின் மக்கள், உறவுகள் அவ்வப்போது அல்லது விழாக்களில் கூடும் பொழுதுகளில் தங்களுக்கான முறைகளைத் தொடரும் போது பெருமளவில்… (READ MORE)

Uncategorized

கொழும்பில் ஒரு சிறு பெண்

‘திருச்சிற்றம்பலம்’ என்று தொடங்கி ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்…’ என்ற பதிகத்துடன் ஒரு பள்ளியின் நிகழ்ச்சி தொடங்கினால் எப்படியிருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு! கொழும்புவில் உள்ள முக்கிய மகளிர் கல்லூரியான ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்விலும் சரி, சில தினங்களுக்கு முன்பு நாவலப்பிட்டியவில் கதிரேசன் மத்திய கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியிலும்… (READ MORE)

Uncategorized

ரஜினி கட்சி தொடங்கினால்…

ஜனவரி 2020க்குப் பிறகு ரஜினி கட்சி தொடங்கினால் என்ன செய்வார்கள் இவர்கள்! தொடங்கிவிடுவார் போலத் தோன்றுகிறது. – பரமன் பச்சைமுத்து நாவலப்பிட்டிய, கண்டி, இலங்கை 06.09.2019

Uncategorized

இயற்கையே… கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரறிவே!

‘ ம்க்கூம்… உலகம் முழுக்கக் காடு காடுன்னு கத்தும். ஆனா, அதக் காப்பாத்த என் நாட்டோட நிலப்பரப்ப பொருளாதாரத்த இழக்க வேண்டிருக்கு! எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியும். நீங்க ஷட் அப் பண்ணுங்க!’ – இது ‘ஐயோ காட்டையழிக்கிறார்கள்… காட்டையழிக்கிறார்கள்! நிறுத்துங்கள்!’, என்று சில மாதங்கள் முன்பு கதறிய உலகத்தினரின் முகத்தை நோக்கி பிரேசிலின் புதிய… (READ MORE)

Uncategorized

சென்னை மழைநீர் சேமிப்பு

சாலையோரங்களில் உறை கிணறு, பயன்படுத்தாமல் விடப்பட்ட நூற்றுக் கணக்கான பாழுங்கிணறுகளை கண்டறிந்து சீர் செய்து மழை நீர் சேமிப்பு என செயலில் இறங்கியுருக்கும் சென்னை நகராட்சியை எழுந்து நின்று பாராட்டுகிறோம். இந்தத் தொடக்கம் பல்கிப் பெருகி எங்கும் பரவட்டும், வாங்கும் வான் மழையை தாங்கும் நிலத்தினுள் அனுப்புவோம். நிலத்தடி நீர் உயரட்டும் உயிர்கள் செழிக்கட்டும்! வாழ்க!… (READ MORE)

Uncategorized

வழுக்கி விழும் வஸ்தாதுகள்

பெங்களூரு வேலூர் நெடுஞ்சாலையில் பயணித்து வந்து தான் ஓட்டி வந்த கண்டெயினர் லாரியை ஆம்பூரின் அருகில் உணவகத்தின் வெளியே நிறுத்தி விட்டு சாப்பிடப் போனாராம் ஓட்டுநர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தால் கண்டெயினர் லாரியைக் காணோமாம். பதறிய ஓட்டுநர் தனது உரிமையாளரை உடனே அழைத்து தகவல் தர, சிதறாத உரிமையாளர் ஜிபிஎஸ்ஸை வைத்து லாரி எங்கே… (READ MORE)

Uncategorized

யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகளை செய்வதற்கு முன்பு இருந்த உடல் உள்ளத்து நிலையும் அவற்றை செய்த பின்பு இருக்கும் உடல் உள்ளத்தின் நிலையும் வேறாக மாறிவிடுகின்றன. யோகப்பயிற்சியை கண்டு பிடித்துத் தந்தவன் உண்மையில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்! வியந்து போகிறேன்! – பரமன் பச்சைமுத்து 23.08.2019

Uncategorized

, , ,

சிவராஜ் தெரியுமா?

கடலூர் ஓ.டி எனப்படும் பழைய நகரத்திலுள்ள பள்ளியொன்றில் மாணவர்களுக்கு மலர்ச்சி உரையாற்றுவதற்காகப் போகிறேன். பள்ளியின் நிறுவனர், தாளாளர், உள்ளூரின் முக்கியப் பிரமுகர்களோடு அமர்ந்திருக்கிறேன். சிறப்பு விருந்தினர் என்று கூறி சிறப்பு செய்கிறார்கள். பக்கத்திலிருக்கும் பள்ளியின் முக்கிய நிர்வாகியிடம் சபை நாகரீகத்திற்காகப் பேசுகிறேன். பதிலுக்கு அவர் என்னிடம் வினவுகிறார். ‘உங்க வீடியோவெல்லாம் பாத்தோம். ரொம்ப மோட்டிவேட்டிங்கா இருந்தது…. (READ MORE)

Uncategorized

ஒரு பெருநாளில் தொடங்கப்பெற்றது…

‘அப்பா… உனக்கு ஹாலிடே இல்லையா, எங்களுக்குல்லாம் இன்னிக்கு ஹாலிடே!’ இவை, விடுமுறை என்பதைக் குதூகலாகமாக கொண்டாடும் ஒரு மகள் தனது தந்தையிடம் வெளிப்படுத்திய வாக்கியங்களாகத் தெரியலாம் உங்களுக்கு. இவை, எனக்கு என் வாழ்வின் புதிய உலகத்திற்கான பெருங்கதவைத் திறந்துவிட்ட திறவுகோல். பெங்களூரு பிடிஎம் லே அவுட்டில் இரண்டாம் தளத்திலிருந்த வீட்டின் கூடத்தில் பாய் விரித்து யோகப்… (READ MORE)

Uncategorized

Nerkonda-Paarvai-Tamil-Ringtones-For-Cell-Phone

‘நேர் கொண்ட பார்வை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இலக்குகளை நோக்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் மாநகரின் மாதுக்கள் மூன்று பேரின் வாழ்வில் நடைபெறும் ஒரு சம்பவத்தால், வாழ்வின் போக்கே மாறிவிட, திக்கற்றுத் திணறி நிற்கும் அவர்களுக்கு உதவிட பழைய பஞ்சாங்கமாகிப் போன ஒருவர் வந்தால், அதிகார பலமும் பண பலமும் கொண்ட பெரும் புள்ளிகளிடமிருந்து புள்ளிமான்களை சட்டத்திற்குட்பட்டு காப்பாற்ற முடியுமா, என்னவாகிறார்கள் அவர்கள்? என்பனவற்றை கதையாக்கி… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான். குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின்… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized

, , , , ,

ராமசாணிக்குப்பம் பள்ளிக்கு பாராட்டுகள்

அரசுப் பள்ளி மாணவர்களால் ஒரு சிறு காடு உருவாக்கப்பட்டு பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டது என்றால் பாராட்டுவீர்கள்தானே! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி வியப்பிலாழ்த்துகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு நில்லாமல் பானைகளையும், மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் போத்தல்களையும் நீள்குழல்களையும் வைத்துக் கொண்டு சொட்டுநீர் பாசன முறையில் செடிகள் வளர்க்கத் தொடங்கி… (READ MORE)

Uncategorized

, , ,

அத்திவரதர் – பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும்

அத்திவரதரைப் போய் பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்ட என் மனைவியையும் வயதான அத்தையையும் லட்சோபலட்சம் பேர் கூடும் பெருங்கூட்டத்தில் எப்படித் தனியே அனுப்புவது என்று தயங்கையில், ஒரு வாய்ப்பு வந்து கதவைத் தட்டி நின்றது. காஞ்சிபுரத்தில் மலர்ச்சி வகுப்பெடுக்க போகும் நாட்களில் அங்கு தங்கிய நாட்களில் என் விருப்பத் தேர்வு தேவராஜ சுவாமி என்றழைக்கப்படும் வரதராஜப்பெருமாள் கோவிலின்… (READ MORE)

Spirituality

, ,

spidermanfarfromhomeposter8421605940772536348.jpg

‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்குப் பள்ளித் தோழர்கள் ஆசிரியர்களோடும், பாரீஸின் உயர்ந்த ஈஃபில் டவரில் வைத்து எம்ஜேவிடம் தனது காதலை எப்படியாவது சொல்லி விடலாம் என்ற வகை காதல் கனவுகளோடும் நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் பீட்டர் பார்க்கரின் இன்பச் சுற்றுலா, அவெஞ்சர்ஸை வைத்து பிரபஞ்சம் காக்கும் பெரியண்ணன் நிக் ஃப்யூரியின் அழைப்பாலும், அதிகார அழிப்பு வெறி கொண்ட வில்லன்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

,

20190709_1010267680153292561573311.jpg

டை

டை என்னைப் பொறுத்த வரை எவருக்கும் அழகு சேர்க்கும் ஓர் உடை. என்ன உடுத்தினாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று எண்ணும் வேளைகளில் ‘அட!’ என்னுமளவிற்கு அழகுக் கூட்டி அசத்தி விடுவது டை என்பது என் தனிப்பட்டக் கருத்து. ‘மைக்ரோலாண்ட்’டில் ஐடி இஞ்சினியராக இருந்த பெங்களூரு – சென்னைக் காலங்களில் வெள்ளைச்சட்டையும் டையும் எங்கள் ட்ரெஸ்… (READ MORE)

Uncategorized

houseowner8235457821587935743.jpg

‘ஹவுஸ் ஓனர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சென்னை அசோக்நகரில் ஒரு வீடு, தன் மொத்த சம்பாதித்யத்தையும் அதில் போட்ட முன்னாள் ராணுவ அதிகாரியும் இந்நாள் அல்ஜைமர் நோயாளியுமான ‘ஹவுஸ் ஓனர்’, அவரைத் தாங்கு தாங்கென்று குழந்தையெப் போலத் தாங்கும் அவரது மனைவி, இவர்களோடு சென்னையின் பெருமழை… இவற்றை வைத்து உணர்வுப் பூர்வமாக ஒரு படம் தந்து பிரமிக்க வைத்துள்ளார் இயக்குநர். ‘என்னம்மா இப்படிப்… (READ MORE)

Manakkudi Talkies

, ,

சாலை வழியே சிங்கப்பூருக்கு…

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சாலைவழிப் பயணமாக வந்தேன் இன்று. லட்சக்கணக்கான தென்னைகளும் செம்பனைகளும் இருமங்கிலும் கொண்ட சிறப்பான நெடுஞ்சாலை சாலையில் 320 கிமீ தூரம் பயணித்து எல்லையைக் கடந்தேன். இரண்டு் நாடுகளுக்குமிடையே இரண்டுக்கும் சொந்தமில்லாத ‘நோ்மேன்ஸ் ஐலண்ட்’டும், அதில் காரிலமர்ந்தபடியே கடவுச்சீட்டு பரிசோதனை குடியமர்வு ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றைச் செய்ததும் புதுவனுபவங்கள். இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கு… (READ MORE)

Uncategorized

பூவில் வண்டு தேன் பருகுவதை பார்த்திருக்கிறீர்களா?

பூவில் வண்டு தேன் பருகுவதை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா? வெறும் மணத்தைக் கொண்டே ஈர்க்கப்பட்டு மலரையடைந்து, ஒரு ஹெலிகாப்டரின் விசிறியின் வேகத்திற்கு அடிக்கும் இறக்கையை சட்டென குறைத்து அலுங்காமல் குலுங்காமல் மலரின் மெல்லிய இதழ்களில் ‘லேண்ட்’ ஆகி சூல் பகுதியில் இறங்கி, அதற்கென உறிஞ்சு கொடுக்குக் குழலை செலுத்தித் தேன் பருகும் லாவகத்தைக் கவனித்திருக்கிறீர்களா! ஒரு மலரை… (READ MORE)

Uncategorized

செலாமத் பெட்டாங் மலேசியா!

‘மதிப்புக்குரிய தாய்மார்களே, மாண்புமிகு ஆண்களே… வானவெளியில் காற்று மண்டலத்தில் கொந்தளிப்பு இருக்கிறது. உங்கள் இருக்கையில் அமருங்கள்’ என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வரும் அறிவிப்பிலும், இறங்கிய உடன், ‘டிஃபன் சாப்பிட்டீங்களா?’ என்பதற்குப் பதிலாக, ‘விமானத்தில் பசியாறக் குடுத்தாங்களா?’ ‘நீங்க பசியாறிட்டீங்களா?’ என்று மலேசியத் தமிழர்கள் கேட்பதிலுமே புரிகிறது, மலேசியாவில் தமிழ் அதிகம் கலப்பில்லாமல் வாழ்கிறதென்று. ஒன்றாம்… (READ MORE)

Uncategorized

பத்துமலை முருகன் கோவில்

நாகரீகம் வளராத இயற்கையோடு மனிதர்கள் இயைந்து வாழ்ந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டாற்றின் கரையில் இருந்த ஒரு பெரு மலையின் பெருங்குகையில் தோமுவான் என்றழைக்கப்பட்ட பழங்குடியினர் வாழ்ந்தனர். காலப்போக்கில் அம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளைப் பயிரிட்ட சீனர்கள், அம்மலையின் பெருங்குகைகளில் பெரும்படிமமாகக் கிடந்த வௌவால் கழிவுகளை (தமிழகத்தில் ‘புழுக்கைகள்’ என்றும், மேசியத் தமிழர்களால் ‘சாணம்’… (READ MORE)

Uncategorized

20190621_1619473270350158394201439.jpg

தினம் யோகா என்பவனின்  யோகா தினம்!

தினம் யோகா என்பவனின் யோகா தினம்! என் தந்தை தினசரி் யோக ஆசனப்பயிற்சிகள் செய்வதைப் பார்த்தே நான் வளர்ந்தேன். வளர வளர யோகம் என்பது வெறும் ஆசனப்பயிற்சிகள் அல்ல வாழ்வியல் முறை என்று உணர்ந்து பழகிய போது வயது நின்று போவதை சக்தி பெருகுவதை உணர்ந்தேன். ‘யோகத்தைக் கொடுத்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நண்பர்களிடமும்… (READ MORE)

Spirituality

, , , , , , ,

மலேசிய ஏஸ்ட்ரோ விண்மீன் HD தொலைக்காட்சியில் பரமன் பச்சைமுத்து

‘ரிகர்சல் செய்ய வேண்டியிருக்கும்!’ என்று சொல்லி குழுவாக வந்தமர்ந்து தொடங்கியவர்கள், அவர்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கியதும், ‘இவருக்கு ரிகர்சல் வேண்டாம். நேரலை போயிடலாம்!’ என்றார்கள். மலேசியாவின் பெரும் ஊடகமான ஏஸ்ட்ரோவின் விண்மீன் HD தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றிருந்தோம் இன்று காலை. முதலில் பதிவு, அப்புறம் வெட்டி நகாசு செய்தல் என எதுவும் செய்ய… (READ MORE)

Uncategorized

வணக்கம் சென்னை

எத்தனை பேர் பிழைக்க வந்து குடியமர்ந்தாலும் அத்தனை பேரையும் தன்னகத்தே கொண்டு ஏந்தி நிற்கும்… சென்னையில் நுழைகிறேன்! வணக்கம் சென்னை! – பரமன் பச்சைமுத்து சென்னை 16.06.2019

Uncategorized

இயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்!

‘நேத்து பொன்னியம்மன், மாரியம்மன், பனையாத்தாள் வீதியுலா. மணக்குடியில சித்திரை திருவிழாயில்லையா! அதான் கொஞ்சம் கண்ணு முழிச்சிட்டோம்!’ என்று சொல்லிடப்பேசி வழியே அப்பா சொல்லிக் கொண்டே போகையில், அவரைக் குறுக்கிட்டுக் கேட்க முயற்சிக்கும் போதே அவரே சொன்னார், ‘எப்பயும் போல மழையை எதிர்பார்த்தோம். மழை வந்தது. வாசல் தெளிச்சது போல தூத்தலோட போயிடுச்சி!’ அவருக்கும், எனக்கும், இங்கு… (READ MORE)

Uncategorized

28 ஆண்டுகள் கழிந்து…

எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து வாய் பிளக்க வைப்பதை வாடிக்கையாக செய்வதில் வல்லமை பெற்றது வாழ்க்கை. மயிலாடுதுறை அப்படி ஓர் அனுபவத்தைத் தந்து விட்டது.எல்லா ஊரையும் போலல்ல மயிலாடுதுறை எனக்கு. எம்ஜியாரால்மயிலாடுதுறை என்று மறுபெயராக்கம் செய்யப்பட்ட மாயவரத்தில்தான் நான் படித்தேன். ஏவிசி கல்லூரி வளாகமே என் கல்வி வளாகம்.’சின்ன சங்கதி… பெரிய வளர்ச்சி!’ என்ற மலர்ச்சி… (READ MORE)

Uncategorized

நீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி

‘வளர்ச்சி பத்திரிக்கைங்களா? நான்எத்திராஜ், வேளச்சேரியிலிருந்து. ஜூன் மாத இதழில் ‘நீர் முடிச்சு’ பற்றி எழுதியிருந்தீர்கள். தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டி வேர் எல்லாவற்றிலும் எவ்வளவு போட்டு முடி போட வேண்டும்? பரமன்: தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டிவேர், மிளகு, ஜீரகம் ஒவ்வொன்றும் 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் சேர்ந்தாலே கையளவு வரும். இவர் கை ஒரு… (READ MORE)

Uncategorized

, , ,

images-255619014787562127170..jpg

உலகிலேயே மிகச்சிறந்த இடம்…

பூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

, , , , ,

சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:

சிக்கிம் – நிறைவுக் கட்டுரை: சிக்கிம் பயணிப்போர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை: நாதுலா பாஸ் எனப்படும் சிக்கிம் சீன எல்லையில் பயணிப்பதற்கு முன்பே கடவுச்சீட்டு வாங்க வேண்டும். சிக்கிம் புறப்படும் முன்னரே அதற்கான சரியான ஏற்பாடுகளைச் செய்யவும். ஒரு நாளைக்கு 100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், இங்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வருவது… (READ MORE)

Uncategorized

சிக்கிம் டைரி – 2

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம் மாநிலத்திற்கு மேல் இருப்பவரெல்லாம் வட இந்தியர்களே. கிழக்கின் சிக்கிமிஸ் கூட வடக்கர்களே நமக்கு. ஒரு வகையில் நமது இருப்பைப் பொறுத்து அது உண்மைதானென்றாலும், பொது வழக்கில் இருப்பது வேறு.உண்மையான வடக்கர்களை இன்று காலை உணவகத்தில் பார்த்தேன். இட்லி, தோசை, உப்புமாவிற்குப் பறக்கிறார்கள். ‘சாம்பர்… சாம்பர்..’ என்று சாம்பாருக்கு உற்சாகமடைகிறார்கள். (உற்சாகம்… (READ MORE)

Uncategorized

சிக்கிம் டைரி

மரணத்திற்குப் பின் என்ன என்பதைப் பற்றி அதிகம் கை காட்டாமல் இப்போது இரு இக்கணமே வாழு என்று அறிவுறுத்திப் போன புத்தனின் மார்க்கம் நூற்றாண்டுகளைக் கடந்து வரும் போது பல சங்கதிகளையும் தன்னுள் சேர்த்து கொண்டே வந்துள்ளது. ‘ஊழி வந்து உறுத்த’ என்று இளங்கோவடிகள் சொன்ன ஊழை நம்புகிறார்கள் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும் சிக்கிமிய… (READ MORE)

Uncategorized

இமயமலையின் அடிவாரத்து சாங்கு ஏரியில்…

பரந்து விரிந்த உயர்ந்த இமயமலையின் அடியில் ஓர் எறும்பு ஊர்வது எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது இமயமலை ரேஞ்சில் வளைந்து வளைந்து ஊர்ந்து டொயாட்டோ இன்னோவாவில் நாம் பயணிப்பது. 15,000 பனியாறுகளைக் கொண்டிருக்கிறது, எப்போதும் உறைந்திருக்கும் உலகின் உயர்ந்த சிகரத்தைக் கொண்டிருக்கிறது, பூமியினடியில் ஆசிய தட்டுகளுக்குள் ஐரோப்பிய தட்டுகள் உள்நுழைகின்றன, இதனால் இம்மலை ஆண்டுக்கு ஐந்து மீட்டர் உயருகிறது,… (READ MORE)

Uncategorized

‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தேசத்தின் முக்கியப் பொறுப்பிலும், கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் முக்கியத் தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் போது இறந்து போகிறார். மருத்துவமனை வாசலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கொந்தளிக்கும் தொண்டர்கள் கூட்டம். ஆட்சியையும் கட்சியையும் எடுத்துக் கொள்ளப் போவது யார்? பழம் தின்றுக் கொட்டைப் போட்ட பழுத்த அரசியல்வாதிகள் கூட்டமாய் விவாதிக்கும் வேளையில்,… (READ MORE)

Uncategorized

சேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்

சேத்தன் பகத்தின் புதிய நூலான ‘இண்டியா பாஸிட்டிவ்’ வெளியீட்டு விழா தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்ட விருந்தினர்களின் மத்தியில் சென்னை லீலாபேலஸில் இன்று நடந்தேறியது. நேச்சுரல்ஸ் சிகேகுமரவேலின் அழைப்பின் பேரில் கலந்து கொள்ள நேரிட்டது. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே நடக்கும் நிகழ்ச்சி என்பது தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது. சிகேகுமரவேல் மிக அழகாக பேசினார். இன்றைய அரசியல் நிலையை… (READ MORE)

Uncategorized

செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்

இன்றைய ஸ்பெஷல் – *செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்* ( மாஸ்டர் செஃப் – பரமன் பச்சைமுத்து 😜 ) (வள்ளியம்மை & வள்ளி வீட்டிலிருந்து ‘பரமன், தோட்டத்தில பறிச்ச ஃபரெஷ் மாங்கா, கட் பண்ணி மிளகாய்தூள் போட்டிருக்கேன்’ என்ற குறிப்போடு நேற்று வந்த சங்கதியை வைத்து இன்று புது சாண்ட்விச் பண்ணிட்டோம்ல! நமக்கு… (READ MORE)

Uncategorized

அவேங்கேர்ஸ்

அவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

” // எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் வாழும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘ஒரு எலி அசைந்ததால் ஓர் எறும்பு எழுகிறது, எறும்பின் எழலால் மறு எழுச்சி பெறுகிறது உலகம்’ // “ ………….. பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட சக்தி கற்களை போராடிக் கைப்பற்றி தனது கை விரல்களுக்கு மேல் பதித்துக் கொண்ட… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

தி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்

நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் சுட்டெரிக்கும் நெருப்புக் குழாய்க்குள் நுழைந்து வெளியே வரும்படியான சோதனை ஒன்றை நடத்தி மனிதர்களையும் சிறப்பு சக்தி பெற்றவர்களையும்(வேதாளம்!) பிரித்துப் பார்ப்பதாக ஒரு காட்சி வரும். வேங்கிக்கால் – தண்டராம்பட்டு – சோமாசிப்பாடி – திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அப்படியொரு சக்தி பெற்ற வேதாளங்களைப் போலவே தெரிகிறார்கள். கொளுத்தும்… (READ MORE)

Uncategorized

கடவுளின் கதை : நேஷனல் ஜியாக்ரஃபிக்

‘திடீரென எழுந்த ஒரு பெரிய சுனாமி அலையால் எங்கள் கப்பல் தாக்கப்பட்டு நான் தூக்கியெறியப்பட்டேன். கடலின் அடியாழத்திற்குள் விழுந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தேன். வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ ஓர் ஒளி வருகிறது. ஒளியை நோக்கிப் போகையில்தான் நான் தனியே செயலற்றுக் கிடக்கும் என் உடலைப் பார்க்கிறேன், இறந்து விட்டேனென்று அறிகிறேன். அந்த ஒளி, ‘உனக்கு… (READ MORE)

Uncategorized

‘இண்டிகோ விமானம் ஏறி கோவை வந்த திருவண்ணாமலைத் தண்ணீர்’: பரமன் பச்சைமுத்து

மார்வாடி மொழி பேசும் ராஜஸ்தானிய இன பெரும் புள்ளி ஒருவரது இல்லத் திருமணத்தின் விருந்திற்கு விமரிசையாக வேண்டும் என்று திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆட்களை பெருந்தொகை கொடுத்து வரச் செய்தார்களாம். சென்னையில் வந்து இருட்டுக்கடை அல்வா செய்து தர ஆள், அம்பு, சேனை, சாமான், செட்டு என்று நெல்லையிலிருந்து எல்லாமும் கொண்டு வந்த அவர்கள்… (READ MORE)

Uncategorized

பூமியில் இருந்தாலும், வானத்தில் பறந்தாலும் விடாது இது என்னை!

குறிப்பு: மலர்ச்சி மாணவர்கள் / என்னிடம் வாழ்வியல் பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே இது நன்றாகப் புரியும். 🌸🌸 சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். இருக்கையில் இருந்த என்னிடம் வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்… ‘மிஸ்டர் பரமன்’ ‘ஸார்… யு ஹேவ் பீன் புக்டு வித் ஸ்பெஷல் சர்வீஸஸ். அண்டு ஹியர் ஈஸ்… (READ MORE)

Uncategorized

காடை

‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து

‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்?’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)

Manakkudi Manithargal, ஆ...!, பொரி கடலை

, , , , ,

20190418_0843233679278638902612156.jpg

ஒரேயொரு வாக்கைப் பதிவு செய்ய ஒரு நாள் ஒதுக்கி ஊருக்குப் போய் வருவது

வாக்குப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக மணக்குடி வந்தேன். வாக்கு பதிவு மையம் பொதுவான மற்ற இடங்களைப் போல மணக்குடியிலும் பள்ளிக்கூடம்தான். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வாக்குச் சாவடியின் வாயிலில் பெரும் வளைவும், வாழைமரங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணிகள் மிக அமைதியாக நடந்தேறும் வாக்குச்சாவடியாம் இது. விருது பெற்ற வாக்குச்சாவடி… (READ MORE)

Uncategorized

p_ho000066265157473412004423994.jpg

 ‘சூப்பர் டீலக்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

திருமணத்திற்கு முன்பு உயிராய்க் காதலித்த பழைய காதலன், கணவன் இல்லாத போது வீட்டிற்கு வரவே, அவனோடு உறவு கொள்கையில் அவன் இறந்து விடுகிறான்; வீட்டை விட்டு ஓடிப் போன மனிதன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறானே என்று மனைவியும் மகனும் தவித்துக் காத்திருக்க, அவன் அப்பாவாக வராமல் அம்மாவாக வருகிறான்; பதின்ம வயது விடலைகள்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

கீத்து காஞ்சிடும்

‘புது இயர்ஃபோன் சரியாயிருக்கான்னு சோதிக்கனும்ப்பா!’ என்று மறுமுனையிலிருந்து பேசும் மகன் பரமனிடம், ‘தென்னங்கீத்து வெட்டி காயப் போட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதை பின்னனும். இல்லன்னா வடிவம் மாறிடும், பின்ன முடியாது. அப்புறம் கூப்டட்டுமா!?’ என்று சொல்லும் தந்தை பச்சைமுத்து. மணக்குடி வீட்டின் பின்புறம். படமெடுத்து உதவியவர் – பரிக்‌ஷித். 🌸

Uncategorized

Captain Marvel1

‘கேப்டன் மார்வல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வான வெளியில் நடக்கும் ஒரு பெருஞ்சண்டையில் கரணம் கொஞ்சம் தப்பி வழியில் இருக்கும் சி-54 என்ற கிரகத்தில் ‘தொப்’ என விழுகிறாள் வீராங்கனை வேர்ஸ். (சி-54 என்பது மனிதர்கள் வாழும் பூமி!). ஹாலா கிரகத்தின் க்ரீ இனப்பெண்ணான அவளை அவளது பரம எதிரிகளான ஸ்க்ரல்ஸ் இனத்தாரும், உள்ளூர் காவலர்களும் துரத்துகின்றனர். ‘என்னாது வேற கிரகமா, யாருகிட்ட… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

சோப்பு நுரை

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்துள்ள, வீராணத்தை விடப் பெரிதான ஏரியொன்றின் மேற்பரப்பில் எவரோ சோப்பு நுரையைப் போட்டு வைத்தது போல் இருக்கிறது விமானத்திலிருந்து வான வெளியைக் காண்பதற்கு. கீழே எல்லாமும் எறும்பைப் போல் தெரியும் இந்த உயரத்தில் இருக்கையில், உயரப் பறக்கும் ராஜாளிப் பறவையின் ஆற்றலின் மீது பெரும் மரியாதை வருகிறது. உயரப் பறக்கும்… (READ MORE)

Uncategorized

peranbu_15265294990

‘பேரன்பு’ : திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

பெற்ற தாயால், உற்றாரால் உலகத்தாரால் வெறுக்கப்படும் குறைபாடுகள் உள்ள யாரோடும் ஒத்துப்போக முடியா மகளை வைத்துக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு தந்தையின் கதை படம் முழுக்க வாயைக் கோணிக்கொண்டு கைகளை திருகிக்கொண்டு நடிப்பது எளிதல்ல, பின்னிப் பெடலெடுத்திருக்கிறாள் ‘பாப்பா’வாக வரும் அந்தப் பெண். ‘மம்மூட்டிய எதுக்கு போட்டீங்க?’ என்று இயக்குநர் ராமை கேட்டவர்கள், படத்தைப்… (READ MORE)

Manakkudi Talkies

, , ,

‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்!’

….. Post from MALARCHI App….. ….. ‘சார் வண்டி பத்து நிமிஷம் நிக்கும் டீ காப்பி டிபன் சாப்டறவங்க சாப்படலாம்’ வகை அறிவிப்புகளும், ‘முருக்கேய், மொளவடேய்! இஞ்சிமரபா!” வகை கூவிக்கூவி நடைபெறும் விற்பனைகளும் இல்லா விமான சேவை என்பதால் மட்டுமல்ல, கொஞ்சம் மண்டை உள்ள பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் அதிக மதிப்பெண்… (READ MORE)

Uncategorized

images-9.jpeg

‘மேதகு மனைவி’ : த வைஃப் : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அதிகாலை அரைத்தூக்கத்தில் இருக்கும் மூத்த தம்பதிகளை தொலைபேசி மணியின் சிணுங்கல் எழுப்புகிறது. படுத்தவாறே தூக்கக் கலக்கத்தில் ரிசீவரை எடுத்து ‘ஹலோ!’ என்று சொன்ன மனிதன், அரை வினாடியில் அதிர்ந்து எழும்பி உட்காருகிறான். ‘திரு ஜோசப் கேஸில்மேன், நான் நோபல் பரிசுக் கமிட்டியிலிருந்து பேசுகிறேன். உங்களது எழுத்திற்காக, இந்த ஆண்டின் நோபல் பரிசுக்கு நீங்கள் தேர்வாயிருக்கிறீர்கள்.’ என்கிறார்… (READ MORE)

Manakkudi Talkies

, ,

சென்னைப் பனி

விடிந்து எட்டு மணியாகியும் விலகாமல் சூழ்ந்து நிற்கிறது ஐஐடியையும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையும் இணைத்து நிற்கும் பனி!

Uncategorized

20190206_0633175241252973266149949.jpg

ஓரிடத்தில் விதைத்தது ஓராறு இடங்களில் முளைக்கிறது

வளர்ந்து வரும் மகளிடம் வளர்க்கலாம் ஒரு பண்பையென்று வளர்த்தேன் ஓராசை கொஞ்சி மகளையழைத்து கொஞ்சம் மண் கொஞ்சம் விதைகள் ஈந்தேன் சிறு தொட்டியில் மண்ணையிட்டு சிறு மகளின் கைகளினால் சிறு விதைகளை ஊன்றினேன் வெண்டை வெடித்து முளைத்தது வீடு மகிழ்ந்து திளைத்தது இன்முகம் வந்தது – படம் இன்ஸ்டாக்ராமில் பறந்தது தோழிகளுக்கெல்லாம் ஆசையாம் தோட்டமொன்று மாடியில்… (READ MORE)

Uncategorized

, ,

மாறி நிற்கிறது தமிழ்நாடு மனம் மகிழ்கிறது நிறைவோடு

சாலையோர இளநீர்க்கடை சனங்கள் நிறை காஃபி ஷாப்புக் கடை வணிக வளாக ஃபுட் கோர்ட் வகைவகை பழச்சாறு அவுட்லெட் வந்தன எங்கும் காகிதக் குழல்கள் (பேப்பர் ஸ்ட்ரா)! மரக்கன்று வளர்க்கும் மாணவனே கூடுதல் மதிப்பெண்கள் இனியுண்டே – மகிழ்வூட்டுகிறார் மாண்புமிகு அமைச்சர் பொறித்த கிழங்கு விற்ற பன்னாட்டு நிறுவனம் அவித்த கிழங்கு விற்கிறது இந்நாட்டு மக்களுக்கின்று… (READ MORE)

Uncategorized

யோகப் பயிற்சிகளை உலகிற்குப் போதிக்கும் யாவரும் – வாழ்க!

தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கேயுரிய உள்ளத்து நல்லுணர்ச்சி, அடுத்தவருக்கு விளக்கவே முடியாத ஓர் அலாதியானது.தசைகளை உறுதியாக்கும் எடை தூக்கும் பயிற்சி, இதயத்தை நுரையீரலை சீர் செய்யும் ஓட்டப் பயிற்சி, நடைப்பயிற்சி, கருவிகள் எதுவுமின்றி தரையில் செய்யக்கூடிய சிறு சிறு தடகளப் பயிற்சிகள் என சில வகைப் பயிற்சிகளை எனக்கானத் தொகுதிகளாகப் பிரித்து மாற்றி மாற்றி பயிற்சி செய்பவன்… (READ MORE)

Uncategorized

எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது.

எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது. பின்னிரவு வரை புதுச்சேரியில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டு, இரவு பயணித்து நள்ளிரவில் வீடுவந்து, அதிகாலையே புறப்பட்டு தாம்பரத்தைத் தாண்டி பூந்தண்டலத்திற்கு பயணித்து கல்லூரி வளாகத்தில் போய் நிற்கும் போது… அறுநூற்றைம்பது ஏழை மாணவர்களின் வாழ்வில் மாற்றம்… (READ MORE)

Uncategorized