வித்தியாமில்லா நாள் வீணே
அதிகாலை துயில் நீங்குகையில் போர்வை உதறி எழுந்த அதே படுக்கைதான், இரவு படுப்பதற்கும். எழுந்து போனவனுக்கும் திரும்ப வருபவனுக்கும் வித்தியாசமில்லா நாள் வீணே. இரண்டுக்குமிடைப்பட்ட நாளின் பொழுதுகளில் எவ்வளவு பயணித்திருக்கிறேன், எவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறேன், எத்தனை மனிதர்களைத் தொட்டிருக்கிறேன் என்பன உரைக்கின்றன எப்படி இந்த நாளை வாழ்ந்திருக்கிறேன் என்று. பரமன் பச்சைமுத்து 04.05.2018 சென்னை Facebook.com/ParamanPage