ஆளுநர் அனுமதி அளித்ததின் பேரில் சட்டச் சிக்கல்கள் நீங்கி, ஒரே மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் என்ற ஒரு மாதிரியை உருவாக்குகிறது ஆந்திரம்.
நிர்வாக வசதிக்காக திருச்சியை இரண்டாம் நலைநகராக மாற்ற எம்ஜிஆர் அரசு முனைந்தது நினைவுக்கு வருகிறது.
ஆந்திரத்தின் 3 தலைதகரம் திட்டத்தால் மாநிலம் முழுவதும் சமமான முன்னுரிமை, வேலைவாய்ப்புகள் பெறலாம். மனைகள் விலை மூன்றிடங்களிலும் எகிறும்.
வாக்கு வங்கியை குறிவைத்து எதையாவது செய்ய நினைக்கும் கட்சியினர் கவனித்துக் கொண்டிருப்பதால், மற்ற மாநிலங்களிலும் பல தலைநகரங்கள் என்ற இந்த முறை நகலெடுக்கப்படலாம்.
நல்ல முன் மாதிரியா, கேடு விளைவிக்கக் கூடியதா… போகப்போகவே தெரியும்.
- பரமன் பச்சைமுத்து
01.08.2020