Author Archive: paramanp

wp-16855162427415291964789283028218.jpg

விமான சேவை பணிப்பெண்ணுக்கு ஒரு பயமென்பது நமக்கு சங்கடம்

ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று.  அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில். ‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’ போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து… (READ MORE)

பொரி கடலை

, , , ,

யாத்திசை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

7 ஆம் நூற்றாண்டில் சேரர்களும், சோழர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு முதியவனான அரிகேசரி பாண்டியனை எதிர்த்தபோது, பாண்டிய அரசணையில் ஏறி எதிரிகளை துவம்சம் செய்து, சேரனை யவன தேசத்துக்கு நாடு கடத்தி, சோழனின் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தே ஆட்சி செய்தான் பெரும் வீரனான மகன் ரணதீர பாண்டியன். இந்த சேர சோழ பாண்டிய பெருங்குடிகளின்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

மெத்த வூடு – சாரதா அம்மா

இன்று காலை சாரதா அம்மாவை பார்க்க போயிருந்தேன். அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க எதேச்சையாக அக்கா உமாவும் கூட வர, உமா – சிவா – சாரதா அம்மா என்ற கோர்வையால் பல பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன. …. ‘மெத்த வூடு’ என்றால் என்ன தோன்றும் உங்களுக்கு? மணக்குடியில் இருந்தவர்களுக்கு காய்ச்சார் மேட்டின் பாலதண்டாயுதம்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

அப்பா – அம்மா – பிறந்த நாள்

என் அம்மா பிறந்த போது அதை குறிப்பெடுத்து வைக்க எவரும் இல்லையோ, குறிப்பெடுத்தவர் பிறகு இல்லையோ தெரியவில்லை. என் அம்மாவின் பிறந்த நாள் எவருக்கும் தெரியாது.  ‘ஆடி மாசம் பொறந்தான் சிவா! பத்துமாசம் சின்னவன் சரவணன்!’ என்பதே பொதுவான பிறந்த கணக்கு வழக்கு முறை கொண்ட அக்காலமதில், பிறந்த நாள் ஆங்கிலத்தேதி பற்றியே சிந்தனைகளே இல்லை…. (READ MORE)

அம்மா, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 39வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (வைகாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை22.05.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

போர்த்திக் கொள்ள தூக்கம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இம்மனிதனுக்கு…

இருமங்கிலும் ரயில்களின் பேரிறைச்சல், நடைமேடையில் ஓயாமல் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் பயணிகளின் பெருஞ்சந்தடி, மிக அருகில் ஊர்ந்து கொண்டே இருக்கும் பேட்டரி வாகனங்களின் ஒலிப்பான்கள் என எல்லா சத்தங்களுக்குமிடையே, மனப்பேய்களின் இறைச்சல்களுக்கு நடுவே அமைதி கொண்ட புத்தனைப் போல துயில்கிறான் இம்மனிதன் சென்ட்ரல் ரயில்நிலைய 10 ஆம் நடைமேடையின் நடுவே, ஒரு கொசுவலையைக்  கட்டிக்கொண்டு…. (READ MORE)

பொரி கடலை

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

wp-1684430993390.jpg

வளர்ச்சிப் பாதை – தொடர்ந்த வளர்ச்சி…

நம்மை நேரியத்தில் வைத்திருக்கும் ஓரிடத்தில், நமக்கு உற்சாகமும் தெளிவும் தரும் ஓரிடத்தில் நம்மை இணைத்துக்கொள்வது நமக்கு பெரும் வளர்ச்சியைத் தந்து நம்மை தொடர்ந்து வழி நடத்தும். மலர்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதமாக தொடர்ந்து வரும் ‘வளர்ச்சிப் பாதை’ அதை செய்துகொண்டே இருக்கிறது. கடந்த வாரம் திருவண்ணாமலையில், இந்த வாரம் புதுச்சேரியில் நிகழ்ந்த ‘வளர்ச்சிப் பாதை’கள் வந்திருந்த மலரவர்களுக்கு நிறைய… (READ MORE)

MALARCHI

, , , ,

wp-16835722145804110226050559937873.jpg

சிங்கபுர நாடு – காடவர் கோன் கோட்டை

ராஜராஜனை சிறைபிடித்து கைதியாக வைத்த இடம் எது? ‘என்னாதூ!! ராஜராஜனை தோக்கடிச்சி, சிறைப்படுத்தி கைதியா வச்சிருந்தாங்களா!? எப்பேர்பட்ட வீரன் அவர்!’ என்று கேள்வி எழுகிறதா?  கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன். ‘பாதுஷாபாத்’ தெரியுமா? சரி ‘சிங்கபுர நாடு’ எங்கிருக்கிறது தெரியுமா?  ராணி மங்கம்மா முகலாயர்களோடு சேர்ந்து மராத்திய சிவாஜியின் படைகளை எதிர்த்தது எந்த இடத்திற்காக என்று தெரியுமா?… (READ MORE)

Paraman Touring

, , , , , , , , , , , ,

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : பரமன் பச்சைமுத்து

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : கேள்வி: பழைய சோறு பற்றி உங்களுடைய பதிவு ஒன்றில் பார்த்தேன். நானும் உண்ணலாமா? பதில்: நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கு பாக்டீரியாக்களின் உதவி தேவை. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படும் இவை நம் வயிற்றில் இருந்து கொண்டு தங்கள் பணியை செவ்வனே செய்து நமக்கு உதவுகின்றன…. (READ MORE)

பொரி கடலை

,

என் பள்ளி நாட்களில் ரசித்த அந்தத் திரைப்படத்தை…

என் பள்ளி நாட்களில் பரமகுரு போன்ற தோழர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட,  பிறகு இரண்டாம் கட்ட வெளியீடாக சிறு நகரங்களில் திரையிடப்பட்ட போது கீரப்பாளையம் விஆர்கே டூரிங் டாக்கீஸில் பாலசரவணனின் பரிந்துரையில் அவனோடு மணக்குடியிலிருந்து சைக்கிளில் போய் நான் பார்த்த படம் – ‘ஊர்க்காவலன்’ ‘அந்த வானத்துல இருக்கற சூரியன் எழறதுக்கு முன்னாடி எழுந்து, ஆ… ஜில்..சக்…… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

wp-1682706185115.jpg

பொன்னியின் செல்வன் 2′ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

சுந்தர சோழரே பழுவேட்டரையர்களின் சிறையில் இருக்கிறார் என்று பேச்சுகள் நிகழும் வேளையில் சுந்தர சோழரால் ஈழத்திலிருக்கும் இளவல் அருண்மொழியை சிறை செய்து வர கட்டளை பிறப்பிக்கப்பட்டு, அப்படி வந்த கலம் புயலில் அடிபட்டு உடைந்து  அருண்மொழி கடலில் மூழ்கினார் என்பதோடு முடிந்த ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ன் தொடர்ச்சியாக விரிகிறது இப்போது வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

புலோத்துங்கன் கால செப்பேடுகள் சீர்காழியில் கிடைத்தவை

கேள்வி: சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் கிடைத்துள்ள சிலைகள், தேவார செப்பேடுகளைப் பற்றி? பரமன்: பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆய்வு செய்யப்பட வேண்டியவை. பல புதிய செய்திகள் கிடைக்கலாம். இந்த செப்பேடுகள் பற்றி நாம் சொல்வது இருக்கட்டும். நாம் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் சொல்லியிருக்கும் இரண்டு தகவல்களைக் கவனியுங்கள். “சிதம்பரம் கோயிலில் குலோத்துங்கச் சோழனிடமும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 38வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (சித்திரை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை24.04.2023( நாகர்கோவிலிலிருந்து)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

தெற்கில் வாழும் குமரியடி பாப்பா

நான்காம் வகுப்புப் படிக்கும் போது, நண்பர்களுக்கு பொருள்களை பரிசாகத் தரலாமென்ற பிரஞ்ஞை கூட எனக்கு இல்லாத அவ்வயதில், பலராம ஐயர் வீட்டு நட்ராஜ் ‘சிவா! எங்கப்பா வாங்கிட்டு வந்தாங்க. இந்தா இது உனக்குதான்!’ என்று கண்ணாடியும் மரச்சட்டமும் போடப்பட்ட, ஒரு கையளவு உயர அகலம் கொண்ட அம்மன் படமொன்றைத் தந்தான். மணக்குடியிலிருந்து சபரிமலைக்குப் போகிறவர்களின் குருசாமியாக… (READ MORE)

Paraman Touring

, , , , , , ,

wp-1681652196139.jpg

‘காக்கை செய்யும் சேட்டை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தெலுங்கானாவில் நகரமும் இல்லாத கிராமும் இல்லாத கலவையான, காலகாலமான நம்பிக்கைகளில் ஊறிப் போய் இருக்கும் ஊரொன்றில் வாழும், வாய் துடுக்கும் குதூகலமும் நிறைந்த முதியவரான நிலக்கிழார் கொமரய்யா திடீரென இறந்து போய் விட, அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குகள் எரியூட்டுதல் எல்லாம் முடித்த குடும்பத்தினர் அதன் தொடர்ச்சியான சடங்காக ‘பிண்டம் வைக்கும்’ உணவை காக்கை உண்ண மறுக்கிறது…. (READ MORE)

Manakkudi Talkies

, ,

எதிர்பார்க்கிறேன்

நேற்று ஐபிஎல் டிக்கெட் பற்றி அதிமுக அமைச்சர் கேட்டதற்கு தந்த பதிலால் மட்டுமல்ல, ‘மாவட்டம் தோறும் விளையாட்டு திடல்’ என்ற அறிவிப்பால் மட்டுமல்ல, பதவி ஏற்றதும் ஒரிசா – பீகார் – வங்காளம் – டெல்லி என்று போய் முன்மாதிரிகளை பார்வையிட்ட போதே, மோடியை சந்தித்து கோரிக்கை வைத்த போதே தெரிந்து விட்டது உதயநிதி தன்… (READ MORE)

Politics

,

wp-1681210878363.jpg

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?  சிறுவயதில் இந்தப் பெயரை என் அப்பா வைத்திருந்த வாரியார் எழுதிய ‘சிவனருட்செல்வர்’ நூலில் படித்த போதே பிடித்தது. ‘பொன் முகலி!’ ‘பொன்முகலி!’ என்று சொல்லிக்கொள்வேன். பலமுறை இந்த நதியை நீங்கள் கடந்து போயிருக்கக் கூடும். ( அதற்கு முன் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. கேளுங்களேன்) …. கிமு 3102… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , ,

wp-1679809970130.jpg

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

சூரியன் ஓர் அதிசயம்! 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-1679136635004.jpg

‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தமிழ் தெரியாத, தமிழ்நாட்டு உணவே பிடிக்காத, பேருந்து பயணத்தில் கூட தமிழ்ப்பாடலை கேட்க சகித்துக்கொள்ள முடியாத, மது, புகை போன்ற பழக்கங்களை வெறுக்கும் கேரள நாட்டு ஜேம்ஸ் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக மனைவி மகன், உற்றார், உறவினர், ஊர்க்காரர்களோடு வாகனம் ஒன்றை அமர்த்திக்கொண்டு கேரளாவிலிருந்து தமிழகத்தின் வேளாங்கண்ணிக்கு  வருகிறார்.   சாலைப் பயணத்தில் நண்பகல் நேரத்தில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

wp-1678883705545.jpg

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…

‘ஹாலாஸ்ய மகாமித்யம்’ என்றொரு வடமொழி நூல் இருக்கிறதாம். நீங்களாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வியாசர் எழுதிய ‘ஸகந்த புராணம்’ பற்றி ? (நீங்களும் என்னை மாதிரிதானோ!ம்ம்!)சரி, ஏ பி நாகராஜன் இயக்கி நடிகர்திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? ‘பரமன், இது எல்லாத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்கிறீர்களா?  இது அனைத்தையும் சம்பந்தப்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

உலகின் முதல் சிவாலயம்

அம்மா – ஆலய தரிசனம் : 4 பாண்டியர்களின் போற்றுதலிலும், ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அரவணைப்பிலும் இருந்த ஆலயமும், உலகின் முதல் சிவன் ஆலயம் என்றும், திருவாசகம் இயற்றிய பின்னர் திருவண்ணாமலை, திருவிடைமருதூர் வழியே சிதம்பரத்தில் போய் கலப்பதற்கு முன்பு முதன் முதலில் மாணிக்கவாசகர் வந்திருந்த ஆலயம் என்றும் திருவாசகத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டது எனப்படும்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

wp-16787896261027067601127805240161.jpg

போற்றி என் வாழ்முதலாகிய பொருளே…

கொற்கை பாண்டியர்கள் எல்லாம் முடிந்து காலம் உருண்டு மதுரை பாண்டியர்கள் செழித்திருந்த 9 ஆம் நூற்றாண்டு. பாண்டிய நாட்டை சிறப்புறச் செய்யவும் பாதுகாப்பு கருதியும் ஒரு முக்கிய முடிவு எடுத்து அமைச்சரை அழைத்தார்.…. (கொஞ்சம் இருங்க. 9 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்திலேருந்து அப்படியே பிரிட்டிஷ் இந்தியா காலத்துக்கு போய், ஒண்ண சொல்ல… (READ MORE)

Uncategorized

, , , , , , , , ,

wp-1678433210475.jpg

ஒரு ஜீவன்தான், உன் பாடல்தான்…

கணவனை புலியடித்துக் கொன்று விட, காடும் காட்டு வாழ்க்கையும் கசந்து போன காட்டுநாயக்கன் பழங்குடி இன பெல்லி, அதே முதுமலை புலிகள் காப்பக மலை காப்புக்காட்டுப் பகுதியில் இருக்கும் பொம்மனோடு இணையத் தொடங்குகையில் அவர்களது வாழ்வுக்குள், மின்சார வேலியில் அடிபட்டு பெற்றோர்கள் இறந்து போய், என்ன ஏது என்று புரியாத சோகத்திலிருக்கும் சிறு ரகு வருகிறான். … (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

சுந்தரர் நின்ற மகிழம் மரத்தடியில்…

எப்போதும் மார்பில் தொங்கும்படி லிங்கம் கட்டிக் கொண்டு தினமும் அதற்கு பூசனைகள் வழிபாடு செய்பவர் என் அம்மா. ‘அம்மா, சுந்தரமூர்த்தி நாயன்மார் சங்கிலி நாச்சியாரைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சிவன் முன் சத்தியம் பண்ணது எந்த மரத்தடியில?’ ‘மகிழம்… மகிழம் மரத்தடியில!’ ‘அங்கதான் போறோம் இப்போ! திருவொற்றியூர் போறோம்!’ …. வள்ளலார், ராமலிங்கமாக தன் அண்ணன் வீட்டில்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ… : மலர்ச்சி ஃபவுண்டேஷன் + பிஎன்ஐ கோரல், புதுச்சேரி

‘கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை!’ என்று எழுதிய ஒளவை, இன்றிருந்தால், ‘கொடிது கொடிது புற்று கொடிது, அதனினும் கொடிது குழந்தைகளுக்கு புற்று!’ என்று எழிதியிருப்பார். என்ன எது என்று தங்களைப் பற்றியே தனக்கு வந்துள்ள நோய் பற்றியோ விவரம் அறிய முடியா குழந்தைகளுக்கு புற்று வந்துள்ளதை காண்பது கொடுமை. பெங்களூருவிலிருந்து,… (READ MORE)

MALARCHI Foundation

, , , , , , , , , ,

தகதக தகதகவென ஆடவா…

‘தகதக தகதகவென ஆடவாசிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’ என் தந்தை மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இது. சிவாஜி கணேசனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மேடை நாடகம் போல, என் தந்தைக்கு ‘காரைக்கால் அம்மையார்’.  1970களின் இறுதியிலேயே ஒரு வில்லுப்பாட்டு இசைக் குழுவைத் தொடங்கி சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான என் தந்தை. கீழமணக்குடி… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 36வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (மாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை28.02.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

வைக்கோல் உருளை

‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்தெல் என்று யானை கட்டிப் போரடித்த…’ என்று சங்கப்பாடல் குறித்தது போய், ‘ஆட்கள் வைத்துப் போரடித்தால் அல்லோலகல்லோலப்படுவோமென எந்திரம் வைத்து நெல்லறுக்கும் காலமிது!’ என்றாகிப் போனது இன்று. மணக்குடி போன்ற ஊர்களில் இரு வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன நெல் அறுவடைக்கு. வளர்ந்த கதிர்களை அப்படியே அறுத்து உள்ளிழுத்து சுழற்றியடித்து  நெல்மணிகளை… (READ MORE)

பொரி கடலை

முன் உழைப்பு

‘ஜக்கியை பதற வைத்து விட்டார் சமஸ்!’ ‘சமஸின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்துள்ளார் ஜக்கி!’ என்றெல்லாம் இரு வகையாக செய்யப்படும் விவாதங்களுக்கு வெளியே நின்று ஒன்றைப் பார்க்கிறேன். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரைப் பற்றி மேய்ந்து ஆராய்ந்து விவரம் சேகரித்துக் கொண்டு போவது மொத்த நேர்காணலையும் சத்தானதாக மாற்றிவிடும். கேள்விகளும் ஆழமாகும், கடைவதால் வரும்… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16770425222136412632115368106978.jpg

துபாய் டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி)

துபாய் – டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி) வாகனங்கள் நிறைந்த துபாயின் சாலையோரங்கள், சங்கர் படத்தின் பாடல் காட்சிகளில் வருவது போல வண்ண வண்ண மலர்களும் மலர்க் கொத்துகளும் நிறைந்து மிக அழகாக காணப்படும்.  உற்றுக் கவனித்தால், ‘வேரில்லாமல் எப்படி இவை!’ என்று அதிர்வீர்கள்.  வேறொரு இடத்தில் தோட்டத்தில் பூச்செடிகளை வளர்த்து, மலர்க்கொத்துகளை மட்டும் வெட்டிக்… (READ MORE)

Paraman Touring, Uncategorized, அரேபிய அனுபவங்கள்

, , , , , , ,

அரேபிய அனுபவங்கள்

‘டீ ஒரு ரூவா, பெட்ரோல் ரெண்டு ரூவா, ஆனா தண்ணி ரெண்டரை ரூவாயா!!’ துபாயில் இறங்கியதும் இப்படி அதிர்வீர்களென்றால், துபாய் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவே வேண்டும்! ….. ஏழு நாடுகள், ஏழுக்கும் ஏழு மன்னர்கள், ஏழு ஆட்சிகள். ஆனால் ஏழு நாடுகளுக்குள்ளும் ‘ஒரே ரத்தம்’ சொந்தம். எழுநாட்டுக் குடிகளுக்கு தங்கு தடையில்லை. அபுதாபி, துபாய்,… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள்

குடியேற்றம் நுழைவு

நுழைவு அனுமதி பெற குடியேற்றம் எனப்படும் இமிக்ரேஷன் துறையில் நுழையும் போது பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு நாடுகளைப் பொறுத்து. கமல்ஹாசன் போன்ற நடிகரையே நான்கு மணி நேரம் கனடாவில் உட்கார வைத்தது உண்டு. அமெரிக்காவின் கதவு வரை போய்விட்டு அனுமதி கிடைக்காமல் ‘நோ’ என்று முத்திரை குத்தப்பட்டு விமானத்தில் திருப்பியனுப்பப் பட்டவர்களும் உண்டு. மருத்துவத்திற்காக… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள், பொரி கடலை

மாறிவிட்டது மயிலாடுதுறை. ஆனால்…

மயூர நாதர் கோவில், மகாதானத் தெரு, மணிக் கூண்டு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய் தொட்டு விட்டு திரும்பவும் இக்கரைக்கே ஒரே மூச்சில் வந்துவிடலாம் என்னுமளவிற்கான 100 அடி சாலையை விட சிறிய காவிரி ஆறு, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 400 நாட்கள் ஓடிய அந்த திரையரங்கம், வாழ்வில் முதன் முதலில் ‘ஸ்டோன்வாஷ் பேண்ட்’ வாங்கப் போன… (READ MORE)

AVCCP

, ,

போய் வாருங்கள் பாடகியே

‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்தரிக்கா…’என் தந்தை போகிற போக்கில் பாட அவர் வழியாகவே அந்தப் பாடலை முதன் முறை கேட்டதாக என் நினைவு. ரேடியோவும் இசைத்தட்டுகளுமே இருந்த டேப் ரெக்கார்டர் இன்னும் வந்திராத அந்த மணக்குடி காலங்களில், இந்தக் குரல் கேட்டே வளர்ந்தோம். மஞ்சள் நீராட்டு, திருமணம் என நற்காரியங்களில் பந்தலிட்டு,… (READ MORE)

பொரி கடலை

,

அட்சதை…

திருமணத்தில் மணமக்கள் மீது தூவி வாழ்த்த தரப்படும் அட்சதை தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய சிறுவன் ஒருவனைப் பார்த்தேன் நேற்று காலையில் நிகழ்ந்தவொரு திருமணத்தில். கையில் தந்ததும் அப்படியே அதை வாயிலிட்டுத் தின்று நம்மை சிரிக்க வைத்துவிட்டான் அவன். சிரிப்போடு, ‘இவனது வயதில் நாம் என்ன செய்தோம் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு?’ என்று… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 35வது அன்னதானம்

 இன்று மிருகசீரிடம் (தை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தேறியது. இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை01.02.2023

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

wp-1674269527392.jpg

பூம்புகார் சிந்துசமவெளிக்கும் முந்தைய உலகின் முதன் 15,000 ஆண்டுகள் பழமையான நகரம்! : ஆய்வறிக்கை

2,500 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்களால் நிறுவபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்ததாக சொல்லப்படும் பூம்புகார் பற்றிய அகழ்வாராய்ச்சி ஆய்வு திட்ட குழுவின் புதிய தகவல் விழிகளை விரிய வைத்து வாயைப் பிளக்க வைக்கிறது. பூம்புகார் நகரத்தின் வயது 15,000 ஆண்டுகள்!!!! 15,000 ஆண்டுகள் பழமையான நகரம், 70 – 80 கப்பல்களை நிறுத்துமளவிற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

வெள்ளாடு vs கருப்பு ஆடு

ஓர் ஆடு நான்கு கால்களில் இருக்கும் இயல்பான நிலையிலிருந்து மாறி பின்னங்கால்களை தரையில் ஊன்றி இருத்தி ஒரு குதிரையைப் போல மெலெழும்பி முன்னங்கால்களை காற்றில் நிறுத்தினால்… இரண்டு காரணங்கள். ஒன்று – மகிழ்ச்சியாகவும் அதீத சக்தியோடும் இருக்கிறது. இரண்டு – வேறோர் ஆட்டை சண்டைக்கு அழைக்கிறது. (புதிர்: படத்தில் இருக்கும் அந்த ஆடுகள் என்ன வகை… (READ MORE)

Uncategorized

மு பச்சைமுத்து குருபூசை

🌸 இன்று மிருகசீரிடம் (மார்கழி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும், (சிதம்பரம்) புவனகிரி வள்ளலார் தரும சபையிலும், மு பச்சைமுத்து அவர்களின் குருபூசை நிகழ்வுகள், திருமுறை முற்றோதல், சிவனடியார்களை போற்றி உணவளித்தல் ஆகியவை… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

wp-1672893421062.jpg

அப்பா…

அப்பா… தவறு சரி பார்க்காமல்தன் பிள்ளைகளுக்காகஎதையும் செய்யும் சீவன் இதயத்திலிருந்து எழும்பும் அன்பைகழுத்துப் பகுதியில் கண்டிக்கும் வார்த்தையாக மாற்றியனுப்பும் கால எந்திரம் தனக்கிணை ஒருவரும் தரணியிலேயேயில்லையென்று தலைகனத்து இறுமாந்திருந்தாலும்தன் பிள்ளைகளிடம் தன்னையே பாரக்கும் முரண் பெற்றோர் வைத்த தன் பெயரை காலாகாலத்துக்கும் நிற்கும் படிபிள்ளைகளின் நெற்றியில் எழுதிப் போகும் தலை (தலைப்பெழுத்து) எழுத்தாளன் வானகம் புகுந்த… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

wp-1672289809192.jpg

அட காக்கையே!

சோறு வைத்தால் மறுத்து ஓடும் நொறுக்குத்தீனி வைத்தால் ஓடி வரும் சிறு பிள்ளையைப் போலவே செய்கிறது தினமும் காலையில் பால்கனியில் பிஸ்கட் துண்டுகள் கொத்தியுண்ண வரும் காக்கை. வைக்கும் சில பிஸ்கட் துண்டுகளை தின்றுவிட்டு அடுத்த நாள் மட்டுமே வரும் இப்பறவை, பிஸ்கட் தீர்ந்துவிட்டதே வெறும் (கையோடு!) அலகோடு அனுப்பக்கூடாதேயென்று சில துண்டுகள் மந்தைவெளி ‘சுஸ்வாத்’… (READ MORE)

Self Help, பொரி கடலை

,

Experience PALLAVAS with PARAMAN PACHAIMUTHU

‘முழுநாள் பரமனோடு!’ என்ற உற்சாகத்தில் அவர்களும், ‘களப்பிரர்களின் முடிவிலிருந்து அபராஜிதன் வரையில் இல்லையென்றாலும், இது போன்ற வரலாற்றுப் பதிவு இடங்களை எப்படிப் பார்க்க வேண்டுமென்றாவது அனுபவம் மூலமாக கொடுத்து விட வேண்டும்!’ என்ற அடிப்படை எண்ணத்தில் நானும் என மலர்ச்சி வாலண்ட்டியர்கள் நாங்கள் முப்பது பேர் மாமல்லபுரம் இன்பச் சுற்றுலா போனோம். இருட்டு விலகாத அதிகாலையில்… (READ MORE)

Paraman's Program

ஆர் எம் ராஜேந்திரன் மணிவிழா

பூசம் நட்சத்திரம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுபகிருது ஆண்டு பிறந்தார் இராம. இராஜேந்திரன்.  எதற்கு இது என்பதை சொல்லும் முன் ஒரு சங்கதியைப் பார்த்துவிட வேண்டியிருக்கிறது. அறுபது நாழிகைகள் கொண்டது ஒரு நாள்,  அறுபது ஆண்டுகள் கொண்டது ஒரு சுழற்சி என்பது இங்கு காலகாலமாக நம் நாட்காட்டிகளும் பஞ்சாங்கங்களும் கொள்ளும் கணக்கீடு…. (READ MORE)

பொரி கடலை

சபாஷ் சென்னை மாநகராட்சி!

அண்ணா நகரின் வீதிகளில் காண்கிறேன். சென்னையில் பிற பகுதிகளில் வாழும் நண்பர்கள் மூலமும் அறிகிறேன். மாண்டஸ் புயலில் இரவு நிறைய மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் விழுந்து விட்டன. ஆனால், முக்கிய வீதிகளில் அதிகாலையே பணிகளைத் தொடங்கி மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை கூடுமானவரை இயல்புக்குக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது சென்னைப் பெருநகர மாநகராட்சி! 👏👏👏… (READ MORE)

Politics

, , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை 34வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (கார்த்திகை மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் கனமழையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை09.12.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

முதலை இருக்கு, பாத்து…

‘முதலை இருக்கு, முந்தா நாள் குளிச்சிட்டு இருந்த பசங்களை இழுத்துட்டு போயிருச்சு. பாத்து பரமன்! எறங்க வேண்டாம்!’ என்று எச்சரித்தார் உள்ளூர்வாசியும் கிராமநிர்வாக அலுவலருமான அன்பு நண்பர். ….. சோழதேசத்தின் தானாதிகாரி பெரிய பழுவேட்டரையர் பழுவூரிலிருந்து படகில் பயணிக்கும் போது கரைபுரண்ட வெள்ளத்தின் நீர்ச்சுழலில் சிக்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டார் என்று கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’… (READ MORE)

பொரி கடலை

wp-1669082489126.jpg

போய் வாருங்கள் அவ்வையாரே!

‘பொதுவெளியில் மக்கள் பணி, மொழிப் பணி செய்பவர் எப்படி இருக்க வேண்டும்?’ என்று நானே கேட்டுக் கொண்ட என் கேள்விக்கு நாமே கொடுத்துக் கொண்ட உதாரணம் ‘ஐயா அவ்வை நடராசன்’ .  கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா என எதிரெதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதும் மொழித்துறை, உலகத் தமிழ் மாநாடு என பெரும் செயலாற்றும் உச்சிப்… (READ MORE)

பொரி கடலை

,

ஒற்றுமை உள்ளே வேண்டும்

நெல்லை ரூபி மனோகரன் கோஷ்டிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கும் நடந்த சண்டை தாக்குதல் நிலைக்குப் போய்விட்டது. கே எஸ் அழகிரியை மாற்ற வேண்டும் என்று எதிர்த்து ஈவிகேஎஸ் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி கார்கேவிடம் முறையிட தில்லிக்கு சென்றிருக்கிறது. எதிலும் சேரமாட்டேன் என தனியாக நிற்கிறது சிதம்பரம் கோஷ்டி. ராகுல் காந்தி ‘ஒற்றுமை நடைபயணம்’ செய்வதற்குப் பதிலாக… (READ MORE)

Politics

wp-1668487305219.jpg

வாட்ஸ்ஆப் வொண்டர்ஸ்!

நாளெல்லாம் கடும் வேலஅந்தி சாயவும் அசந்து தூங்கிட்டேன் காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் நல்லவர் ஒருத்தரு ஆரம்பிச்சாருநடுராத்திரியில க்ரூப் ஒண்ணு அவராவே முடிவெடுத்துஅல்லாரையும் சேத்தாரு ஆரோடயோ சண்டையாம்அவராவே போய்ட்டாரு வெளிய காலை கண்முழிச்சிகாய்ஞ்சு போய் நிக்கறேன் என்ன க்ரூப்புஎதுக்கு இந்த க்ரூப்பு எதுவும் தெரியலஎவர்ட்ட கேப்பேன்! ‘ஐயா!  யாருய்யா  நீங்கல்லாம்?’ – பரமன் பச்சைமுத்துமணக்குடி15.11.2022 #Paraman… (READ MORE)

ஆ...!, கவிதை

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 33வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (ஐப்பசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை11.11.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

குஞ்சய்யர்

அதற்கு முன்னால் அது மணக்குடியில் நடந்திருக்கிறதாவென தெரியவில்லை.  குஞ்சய்யரும் பலராம ஐயரும்தான் ‘ஏ சிவா! வாடா!’ என்று என்னை அதற்கு அழைத்துவிட்டு முன்னே நடந்து போனார்கள். அந்தி சாய்ந்ததும் வீடு திரும்புவார்கள், பெண் குழந்தைகள் அலங்கரித்துக் கொள்வார்கள், மணக்க மணக்க சமையல் செய்வார்கள், விளக்கு வைத்ததும் உண்பார்கள், ஊரே சீக்கிரம் உறங்கி விடும் என்பது என்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , ,

நாளை தேவைப்படுமென்று அளவுக்கு மிகுதியை இன்று பூமியில் ஊற்றி முதலீடுசெய்கிறதா மேகம்? நேற்று மேகவங்கியில் முதலீடு செய்ததில் இன்று அறுவடை மொண்டு குளிக்கிறதா பூமி? அடித்து இடித்துப் பெய்கிறது மழை! – பரமன் பச்சைமுத்து03.11.2022 #Rain #ChennaiRain #Paraman #ParamanPachaimuthu #ParamanOnRain #rainyday #rainyseason

ஆ...!, கவிதை

,

‘SALES Plus’ MALARCHI 1 Day Sales Workshop – Super Results!!!

திருநெல்வேலியிலிருந்து, பொள்ளாச்சியிலிருந்து, செங்கல்பட்டிலிருந்து, காஞ்சியிலிருந்து, புதுச்சேரியிலிருந்து, ஓசூரிலிருந்து, ஈரோட்டிலிருந்து, சென்னை பகுதிகளிலிருந்து என பல ஊர்களிலிருந்தும் தேடலோடு வந்து முதல் நாள் முன்னிரவு தொடங்கி நிற்காமல் அடித்துப் பெய்து மழையிலும் நிற்காமல் வந்து அரங்கு நிரம்ப கலந்து கொண்டவர்கள், மலர்ச்சி ‘SALES Plus’ முழுநாள் கருத்தரங்கிலிருந்து அள்ளிக் கொண்டு போனார்கள். ’20 வருஷமா சேல்ஸ்ல இருக்கேன்…. (READ MORE)

MALARCHI, Paraman's Program

டைலர் கட அல்லது தீபாவளி…

இரவும் பகலுமென எல்லா நேரமும் இயங்கும் ‘டைலர் கடை’.  ஆயத்த ஆடைகளை வாங்கி அணிவதென்பது அவ்வளவு பழக்கத்திலில்லா அந்நாட்களில் துணியெடுத்து தையல் கடைக்கே வந்தனர் மக்கள். கந்தசாமி டைலர்மொத்த மணக்குடிக்கும் மட்டுமல்ல பக்கத்து ஊர்களான குறியாமங்கலம், ஆயிபுரம் என சுற்றுப் பகுதிகளின் எல்லா வீடுகளுக்கும் எல்லோருக்குமான ஒரே தையல்காரர். கந்தசாமி டைலர் என்பது அவர் பெயரென்றாலும்,… (READ MORE)

Manakkudi Manithargal

, , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 32வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை15.10.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பம்பரம் விட்டிருக்கிறீர்களா?

பம்பரம் விளையாடியிருக்கிறீர்களா? ஆர்வி உதயகுமார் படத்தில் சுகண்யாவின் தொப்புளில் விட்டதைப் போலல்ல, தரையில் ஓங்கிக் குத்தி. சிறியவர், பெரியவர் பேதமும் இல்லை, இத்தனை பேர்தான் என்ற கட்டுப்பாடும் இல்லை. எவரும் ஆடலாம். எத்தனை பேரும் இணையலாம். ஒரு பம்பரம், சில மீட்டர் கயிறு (சாட்டை என்று பெயர் அதற்கு), சில சதுர அடி கட்டாந்தரை அவ்வளவே… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே…

பெண்கள் உடைமாற்றும் அறைக்கு வெளியே சுற்றியிருக்கும் பெண்களெல்லாம் என்னையே பார்க்க ஒரேயொரு ஆணாகவெட்கமின்றி நிற்கிறேன் .. .. .. … மகள்கள் ஆடை அணிந்து பார்க்கிறார்கள் உள்ளே!  #Shopping – பரமன் பச்சைமுத்து02.10.2022

ஆ...!

என்னவெல்லாஞ் செய்யும் இத் திருப்பாவை வரிகள்…

🌸 இன்று புரட்டாசி சனி – சைவ நெறியில் பழகிய எங்கள் வீட்டில் பெருமாளுக்குத் தளிகை. மகள்களும் ஊரிலிருந்து வந்துள்ளதால் இந்த சனி அன்று என்று முடிவு. நெற்றியில் நீறு சைவ பதிகங்களே சொல்லி பழகிய நமக்கு பெருமாளை போற்றிடத் தெரியவில்லை. ‘ஆதி மூலமே!’ என்றழைத்தற்கே வந்தவனாச்சே என்று கட்டு கட்டினாலும், ‘அரங்கா… பார்த்தசாரதி… பெருமாளே!’… (READ MORE)

பொரி கடலை

‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ – திரை விமர்சனம.்: பரமன் பச்சைமுத்து:

எழுபதாண்டுகளுக்கு முன்பு கல்கி எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய கதையை நாற்பதாண்டுகளாக முயற்சித்து கடைசியில் திரைக்கதை செய்து இயக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம். ‘ப்யூட்டி அண்ட் த பீஸ்ட்’ ‘ஸ்பைடர் மேன்’ ‘அலாவுதீன்’ போல நாவல்களை அப்படியே திரை மொழிக்கு மாற்றும் முயற்சி போல கல்கியின் மூல கதையையும் வசனங்களையும் தொன்னூறு சதவீதம்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

அமெரிக்கர்களைப் போல இங்குள்ளவர்களுக்கும் வருகிறதே அல்சைமர் நோய்?

கேள்வி: அமெரிக்கர்களைப் போல இப்போது இங்குள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறதே அல்சைமர் எனும் மறதி நோய். நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை விட்டதால்தானே இந்த நோய் வந்துள்ளது? பரமன்: ஒரு மருத்துவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியை நமக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். அமெரிக்கர்களுக்கு மட்டுமே வந்த அல்சைமர் நோய் உணவு சீர்கேடால் இந்தியர்களுக்கும் வருகிறது என போகிற போக்கில்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

சூப்பர் ஸ்பீடில் பாஸ்போர்ட் வருகிறது

👏👏என்ன நடக்கிறது இந்தியாவில்! பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தோம். ‘வெள்ளிக்கிழமை காலை 11.15க்கு நேர்முகம், 11க்கே சான்றுகளோடு வரவும்!’ என மின்னஞ்சல் வந்தது. வெள்ளிக்கிழமை 10.45க்கு பாஸ்போர்ட் அலுவலகம் போனேன். சான்றிதழ் படிமங்கள் கேட்டார்கள். நகலெடுத்துக் கொண்டார்கள். என்னைப் படமெடுத்துக்கொண்டார்கள்.ஞாயிறு காலை போலீஸ் வந்தார் தகவல் சரி பார்த்து உறுதிசெய்ய.செவ்வாய் காலை பாஸ்போர்ட்டோடு என் வீட்டு வாசலில்… (READ MORE)

பொரி கடலை

, ,

செந்தாமரை

‘கருமாரப்பட்டி எப்ப வந்த நீ கடைசியா?’ (மீனாட்சி) ‘தர்மலிங்கம் அப்பா இருந்தாரு அப்போ. பக்கத்துல நாய்க்கர் வீட்டில் உட்கார்ந்து கூட பேசினோம். இல்ல, அதுக்கப்புறம் ஒரு தடவ வந்தேன்!’ (பரமன்) ‘ரொம்ப நாளு ஆச்சு!’ ‘ மங்கலட்சுமின்னு ஒருத்தவங்க இருந்தாங்களே! அவங்க எங்க?’ (பரமன்) ‘குன்றத்தூர்ல இருந்துச்சி. செத்துப் போச்சி!’ (செந்தாமரை) ‘செத்துட்டாங்களா? எங்களுக்கெல்லாம் தெரியவே… (READ MORE)

அம்மா

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

31வது அன்னதானம்: மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸 இன்று மிருகசீரிடம் (புரட்டாசி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! 🌸 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை18.09.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1663333498208.jpg

‘கார்கி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தானுண்டு தன் ஆசிரியப் பணி உண்டு என்று வாழும் இன்னும் சில நாட்களில் திருமண நிச்சயம் செய்து கொண்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தைத்தொடங்கப்போகும் ஓர் எளிய குடும்பத்து மகளொருவள் பணிக்கு சென்ற தந்தையைக் காணோமெனத் தேடிப் போகையில் கிடைக்கும் செய்திகள் கேட்டு பதறி, குஞ்சைக் காக்க வல்லூரையே எதிர்க்கத் துணியும் கோழியாய் தவித்து எழுகிறாள்.  உலகமே… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , ,

புதுப்பித்தல் வரிசையில்

இருபத்தியிரண்டாண்டுகளுக்கு முன்பு 1999ல் வந்த போது பதற்றம் கொஞ்சமும் உள்ளே ‘நடக்கனும் நடக்கனும்!’ என்ற வேண்டல் நிறையவும் இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2012ல் வந்த போது பதற்றம் இல்லை, ‘நடந்திடனும் நடந்திடனும், ஒழுங்கா தலை வாரிக்கனும் அதுதான் பிரிண்ட் ஆகி வரும்!’ என்ற கூடுதல் கவனம் இருந்தது. இன்று பதற்றமில்லை, தலையைக் கூட வாரவில்லை, ‘நடக்கும்!’… (READ MORE)

பொரி கடலை

மாணவர்களுக்கு காலையுணவு : நல்ல திட்டம்

தமிழக முதல்வர் நேற்று தொடங்கி வைத்திருக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலையுணவு திட்டம் மிக மிக சிறப்பான திட்டம். புதுவை மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போதே, இது தமிழகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தோம். புதுவை திட்டத்தை விட மேம்படுத்தப்பட்ட திட்டமாக இது உள்ளது. சிறப்பாக நனைமுறைப்படுத்தப் படட்டும். மாணவர்கள் பயன் பெறட்டும்!… (READ MORE)

Politics

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

நெல் தெளிக்கிறோம் நேரடியாய்…

காவிரி – கொள்ளிடம் – வீராணம் திறப்பு நீர் வந்து பாயும் வரை காத்திருந்தால் பருவம் போய்விடுமென்பதால், மணக்குடியில் எங்கள் வடக்குவெளி வயலில் நேரடி நெல் விதைத் தெளிப்பு தொடங்கி விட்டோம் இன்று.  அழைத்துச் சொல்லி படத்தைப் பகிர்ந்தார் ஊரிலிருந்து சித்தப்பா. படத்தில் விதை தெளிக்கும் பூராயர் அண்ணனின் காலில் கட்டு போடப்பட்டு இருப்பதைப் பார்த்து… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தனக்கான ஒரு வேலை என்று வரும் போது பொறுப்பு வத்துவிடுகிறது

பள்ளியில் பயின்ற காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் இரவு சீக்கிரம் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்ட என் மகள்கள், முதுகலை படித்த போது கொரோனா தீ நுண்மி பொதுமுடக்கக் காலங்களில் இயல்பு மாறி நள்ளிரவு வரை கண்விழிப்பு காலையில் நேரங்கழித்து எழல் என இரண்டு மூன்று மாதங்கள் இருந்தார்கள். காலை உடற்பயிற்சியை விடவில்லையென்றாலும் இரவில் உறங்குவது தள்ளிப்போனது.இரண்டொரு… (READ MORE)

பொரி கடலை

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா?

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா? இதைப் பறித்து வாணலியில் இட்டு புரட்டி மாலைச் சிற்றுண்டியாக உண்ட பாட்டிகள் சிலரை மணக்குடியில் பார்த்திருக்கிறேன் அந்தக் காலங்களில். சிறுவயதில் பள்ளி இடைவேளைகளில் முத்து, முரளி, சரவணன், நட்ராஜோடு பள்ளிக்குப் பின்புறம் கிளைகளில் பூத்திருக்கும் இவற்றை பறித்து வாயிலிட்டு மென்று துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த அலாதி கலவையை சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன். உயர்… (READ MORE)

பொரி கடலை

அறுவை சிகிச்சையென்றாலும் அசராமல் மீண்டு அண்ணாநகர் பூங்காவில் அதிகாலை நடைப்பயிற்சி செய்து அசத்துகிறார் இந்த (என்) அம்மா! – பரமன் பச்சைமுத்து 30.08.2022

Uncategorized

வந்தவாசி தம்பதிகள் சொல்லும் சங்கதி…

கிராமத்தையொட்டிய தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும் 76 வயது கோதையானுக்கும் அவரது மனைவி 72 வயது ராணியம்மாளுக்கும் எவர் சொல்லிக் கொடுத்தார்கள்!! 40 ஆண்டுகளாக வெறும் மழை நீரை மட்டுமே பிடித்து காய்ச்சி பருகி, சமைத்து வருகின்றனர். ‘எவ்வளவு நாளானாலும் புழுவோ பூச்சியோ பிடிக்காது மழை நீரில். 40 ஆண்டுகளாக மழைநீர்தான் எங்களுக்கு…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

மு பச்சைமுத்து அறக்கட்டளை: 30ஆவது அன்னதானம்

 இன்று மிருகசீரிடம் (ஆவணி மாதம் ) மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்நிகழ்த்தப் பெற்றது. இறைவனுக்கு நன்றி! வாழ்க!  பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை21.08.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1660918674005.jpg

‘ராக்கெட்ரி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை மதிப்பிற்குரிய விக்ரம் சாராபாய் ஆரம்பித்து நிர்வகித்து வந்த தொடக்கக் காலத்தில் அவரது நேரடி செல்லப் பிள்ளைகளாக வளர்ந்த சில விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன், நிறைய சாகசங்கள், மேற்படிப்பு, ஆராய்ச்சி, மேல்நாட்டு விஞ்ஞானியிடம் நேரடி கற்றல் என பலதையும் செய்து திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து ராக்கெட்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , ,

சிறு கன்றாக நாம் நட்டவை

சிறு கன்றாக நாம் நட்டுப் பராமரித்தவை இன்று அண்ணார்ந்தே பாத்தாலும் உச்சி் தெரியா உயரத்திற்கு வளர்ந்துவிட்டால்… நம் உள்ளம் கொள்ளும் நிலை என்ன!?  மலையளவு மகிழ்ச்சிதானே! ஷெனாய் நகரில் நம் தெருவில் தடித்த தண்டுகளோடும் பரந்த கிளைகளோடும் வளர்ந்து பறவைகளுக்கும் பல்லுயிர்க்கும் உதவி செய்து நிற்கின்றன நமது அரசு, ஆல், வேம்பு, நாவல் மரங்கள். ம..கி…ழ்…ச்…சி…!… (READ MORE)

பொரி கடலை

கண்ணுக்குத் தெரியா பிணைப்பொன்று

தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது. ‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’ பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும். பயிற்சிகள் தொடரத்… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

வரிசையாய் அரசமரம் – NH 79

தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்44ல் பயணித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் தொடங்கி சில கிலோ மீட்டர்களுக்கு வரிசையாக ஒரே வகை மரங்கள் இருந்தால், ‘அட..!’ என்று ஒரு வியப்பு வரும்தானே! எந்த இடம் இது? சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதில் ஆத்தூருக்கு இறங்குவதற்கு முன்பு. ‘வருசலா கண்ணுக்கு எட்டன தூரம் வரைக்கும் அரசமரங்க, ஒரே மாதிரி! வண்டிய… (READ MORE)

பொரி கடலை

, ,

காவிரி தென்பெண்ணை பாலாறு

பாரதி அதை எழுதும் போது ஒருவேளை கோவை – சேலம் – விழுப்புரம் – சென்னை வழித்தடத்தை மனதில் வரித்துதான் எழுதியிருப்பாரோ, ‘காவிரி தென்பெண்ணை பாலாறு’ என்று வரிசைப்படுத்தியிருக்கிறாரே! – பரமன் பச்சைமுத்துவிழுப்புரம் புறவழிச்சாலை15.08.2022

Uncategorized

வகுப்பென்பது…

வகுப்பென்பது மாணவரும் ஆசிரியரும் தங்களைத் தந்து நிற்கும் ஒரு வகைத் தவம்.         கண்கள், செவிகளைக் கொண்டு ‘வை ஃபை’யைப் போல உருவாக்கப்படும் கம்பியில்லா தொடர்பில் உட்கருத்தும், உணர்வுகளும், உயிராற்றலும் கடத்தப்படும்      சாலை. வகுப்பு என் உயிர் ஊறும் இடங்களில் ஒன்று. சிறந்த ஆசிரியர்கள்  மாணவர்களை உருவாக்குவதைப் போலவே, சிறந்த மாணவர்களால்  ஆசிரியரின் அகம் மேம்படுகிறது என்ற… (READ MORE)

பொரி கடலை

ஒடிஸா – சிறு தானிய மிஷன் – சபாஷ்!

நீர்வளமில்லா மலைப் பிரதேசத்தில் விவசாயம் செய்ய, பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரம் பெருக்க, மலைவாழ் மக்களை தங்கள் பாரம்பரிய உணவை நோக்கித் திருப்ப, சுற்றுச் சூழல் காக்க என சில முடிவுகளோடு ஒடிஸா அரசு முன்னெடுத்த 5 ஆண்டு பரிசோதனையான  ‘ஒடிஸா சிறுதானிய மிஷன்’ 142 ஊராட்சி ஒன்றியங்களில் 1.5 லட்சம் விவசாயிகளால் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பில்… (READ MORE)

Politics

பொன்னியின் செல்வன் : வரலாற்றை மாற்றுகிறார்களா?

மலர்ச்சி வணக்கம் பொன்னுஸ்வாதி! ‘கல்கியின் கதையும் மணிரத்னத்தின் திரைக்கதையும் மக்களுக்கு தவறான வரலாற்றை தந்துவிடுமே!’ என்ற உங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது வரலாற்றில் உள்ளவரின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கற்பனைகள் புனைந்து கதை செய்வது காலகாலமாக வழக்கத்தில் உள்ளது. நம் புராணங்களிலேயே அத்தனை ‘வெர்ஷன்கள்’ இருப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1660048969063.jpg

பொன்னியின் செல்வன் – உண்மைக் கதையா?

கேள்வி: எனக்குத் தெரிந்தே பதினைந்து ஆண்டுகளாக ‘பொன்னியின் செல்வன்’ பற்றி மேடைகளில், எழுத்துகளில் சொல்லி வருபவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன் டூர்’ போனவர் நீங்கள்.  ராஜராஜனின் கதையை ‘வளர்ச்சி’யில் சித்திரக் கதையாகவும் வெளியிட்டீர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு. உங்கள் உந்துதலால் பொன்னியின் செல்வன் நூலை படித்த பலரில் நானும் ஒருத்தி. பொன்னியின் செல்வன்… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

, , , , , , , , , , ,

அம்மா உண்கிறார் முதல் மிடறு

👏👏👏👏 ‘போங்கடா நீங்க! இனிமே நானே என் கையால சுயமா சாப்டுக்கறேன்!’ ( சாந்திதேவியாருக்கும் சிவாப்பையனுக்கும் உணவு புகட்டும் பாக்கியம் இனி இல்லை!) இரு வாரங்களுக்குப் பிறகு வாய் – தொண்டை வழி உணவு சாப்பிடுகிறார் அம்மா. ✔️ 👏👏👏👏 (கேன்டீனில் மிக்சியில் அடித்து வாங்கிய தயிர்சாதம் மதிய உணவாக ) …. ‘தம்பீ’!’ ‘சொல்லும்மா’… (READ MORE)

அம்மா

ஈரோடை

‘ஓர் ஆடு’ ‘ஒரு புலி’ என்று மட்டுமே பள்ளிக் காலத்திலிருந்து பயன்பாடு கொண்டிருந்தவன், மலேசியாவின் ‘பெந்தாங்’ போனபோதுதான் அங்கிருக்கும் பயன்பாடு கண்டு தலையில் தட்டிக்கொண்டு ‘ஈராயிரம்’ என்று என் சொல் பயன்பாட்டை மாற்றிக் கொண்டேன். அடுத்த ஆண்டு மலர்ச்சி நிகழ்ச்சியின் அனுமதி சீட்டில் ‘ஈராயிரத்து பதினெட்டு’ என்றே அச்சேற்றினோம். மலர்ச்சி பயிலரங்கம் ஒன்றிற்காக இன்று ஈரோட்டுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

திருவருட்பா

நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) என் பட்டியலில் இருந்த தொடாமல் விட்ட திருவருட்பா நூலை புரட்ட எண்ணி எடுத்தேன் இன்று (அழைப்பு இப்போதுதான் வருகிறது). முதல் பக்கம் அவரது கையெழுத்து, ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயரை சேர்த்து எழுதியிருப்பதை கண்டது என வியப்புடன் நகர்த்தி, முதல் பக்கம் முதல் செய்தி ‘இந்திரிய ஒழுக்கம்’ படித்தேன். ஆடிப் போனேன்…. (READ MORE)

Spirituality, பொரி கடலை

யாரிடம் கேட்பேன் இதை?

குளித்து விட்டு, நகங்களை வெட்டலாமென பால்கனியைத் திறந்து கம்பித் தடுப்புக்கு அருகில் நின்று கை விரல் நகங்களை வெட்டத் தொடங்கினேன் இன்று காலை. எங்கிருந்தோ வந்து அருகிலமர்ந்தது ஒரு காக்கை. தின்னும் பண்டம் எதுவும் வைத்திருக்கிறேன் என்று நினைத்தது போல. ஆனாலும் இவ்வளவு நெருக்கமாக வராதே காக்கை.  உணவே வைத்தாலும் ஓரக் கண்ணால் பார்த்து பார்த்து… (READ MORE)

பொரி கடலை

, ,

தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம். எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்…. (READ MORE)

Politics, பொரி கடலை

, , , ,

வருந்துகிறோம்

அம்மாவுக்கு மருத்துவப் பரிசோதனை, அதிகாலையே புறப்படல்,அடுத்தடுத்த பரிசோதனைகள் என முழுநாளும் கழிந்ததில் நேற்று மிருகசீரிடம் என்பதை கவனிக்கத் தவறியுள்ளேன். மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மூலமாக மிருகசீரிடம் அன்று செய்யப்படும் மதிய உணவு வழங்கல் நிகழ்விற்கான ஏற்பாடுகளை தவறவிட்டுவிட்டேன். பெரிதும் வருந்துகிறேன். 🌸🙏 பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை26.07.2022

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1658727979233.jpg

நமக்கு நடை பயில்வித்தவளை…

நமக்கு நடை பயில்வித்தவளைநாம் நடத்திக் கூட்டிப் போவது ஓரனுபவம் இதையும் எதையும் நடத்தி வைப்பதே அவனென உணர்கையில் கிடைப்பது பேரனுபவம் இடரினும் தளரினும் உறுநோய் தொடரினும் உடன் நிற்பதுசிவம் – பரமன் பச்சைமுத்துகுளோபல் மருத்துவமனை,பெரும்பாக்கம்25.07.2022 ( Here for a check up ) #Amma #AmirthamPachaimuthu#MuPachaimuthuArakkattalai #Paraman #GlobalHospital

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நகர்ப்புற வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருக்கிறதாம் அம்மாநில அரசு. இதை குறிப்பிட்டுப் பேசியிரிக்கிறார் பாமக ராமதாஸ். அதன் பிறகே இப்படியொரு திட்டம் இருக்கிறதென்று கவனிக்கிறேன்.  நல்ல திட்டமாச்சே! கொண்டு வரலாமே! – பரமன் பச்சைமுத்துபெரும்பாக்கம்25.07.2022

Uncategorized

குட்டி பையன் டு மாம்பலர் ஐயர் கேட்டரிங்

1991ல் கல்லூரி முடித்திருந்த சமயத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில்தேவ், அசாருதீன் கொண்ட இந்திய அணி – டேவிட்பூன் போன்றோர் கொண்ட ஆஸ்த்திரேலிய அணி, லாராவின் மே.இந்திய தீவு அணி ஆகியவை ஆடிய மேட்ச்களை மெத்த ஐயர் வீட்டின் மகாதேவ ஐயரின் கருப்பு வெள்ளை டிவியில் பார்த்திருந்தேன் மணக்குடியில். (ஐயர்கள் வீட்டுக்குள்ளும் போனேன் நான்!) அப்போது எங்கள்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

அவரவர்க்கான வால்

ஆட்டுக்கும் வாலை அளந்து கொடுத்தான் ஆண்டவன் அவரவர்க்கான வால் அவரவர் விழாமல் தகவு நிலை கொளவே அடுத்தவர் மூஞ்சியில் மூக்கினுள் விட அல்லவே தன்னிலை தடுமாறாமல் தடுக்கத் தந்த வாலை அடுத்தவர் நிலை மாற்றி தள்ள நீட்டினால் அறுத்தெறிவான் ஆண்டவனென்னும் ஆகச் சிறந்த அறுவை நிபுணன் அடுத்தவன் வாலில் நெருப்பு வைத்ததால் அழிந்தது தென்னிலங்கை அவரவர்… (READ MORE)

ஆ...!, கவிதை

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிசிசி கல்லூரி நண்பன்

‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படித்து விட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலமது. அதில் வரும் பாத்திரங்கள் வாழ்ந்த, நிகழ்வுகள் நடந்த இடங்களுக்குப் போய் வருவோம் என முகுந்தன், ராமு பெருமாளோடு 2004ல் என் அப்போதைய மாருதி 800ல் கோடியக்கரை சென்று குழகர் கோவிலையும் அதையொட்டிய காட்டையும் பார்த்து வந்தியத்தேவனையும் பூங்குழலியையும் நினைவு கூர்ந்து களித்து விட்டு… (READ MORE)

AVCCP

,

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் நெற்றியில் நாமம் – வழக்கு

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரலாறை மறைக்கிறார்கள் என்று சொல்லி மணிரத்னம், விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சுபாஷ் கரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார் ஒருவர் என்ற தலைப்புச் செய்தியை பார்த்ததும் அதியசமாக இருந்தது. ‘இன்னும் படமே வரலியே! அதுக்குள்ள வரலாற்றை மாற்றினார்கள் என எப்படி சொல்ல முடியும்!?’ என்ற கேள்வியோடு செய்தியை தொடர்ந்து கவனித்தால், சமீபத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, பொரி கடலை

, , , , ,

காமராஜர் பிறந்த நாள்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்ற பெயரில், மணக்குடி கிராமத்தின் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் / ஆங்கில அகராதி / உணவு பாத்திரம் என எதையாவது தந்து மகிழ்ந்து கொண்டாடுவது என் தந்தையின் வழக்கம். அவர் தொடங்கியதை தொடரும் முயற்சியாக, மணக்குடி பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள், சிதம்பரம் பலகாரம்.காம்… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்…. எனது பெயரை மாற்றிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அதற்கான அரசு அலுவலகத்திற்குப் போனேன் இன்று காலை. நீண்ட காலமாக ‘பேரை மாத்தனும், இதோ இப்போ செய்யலாம், இப்போ செய்யலாம்!’ என்றே எண்ணிக்கொண்டிருந்ததை… (READ MORE)

பொரி கடலை

, , ,