தேனிது அமிழ்தினிது…
தேனிது அமிழ்தினிது என்பர் தம்மகள் கை சமையல் சுவையாதவர்! -பரமன் பச்சைமுத்து ஹைதராபாத் 18.09.2026
தேனிது அமிழ்தினிது என்பர் தம்மகள் கை சமையல் சுவையாதவர்! -பரமன் பச்சைமுத்து ஹைதராபாத் 18.09.2026
இந்தத் தலைமுறைக்கு கால்பந்து என்றாலே நீதான்! சொந்த நாட்டை நேசிக்காத பிற நாட்டவனும் அர்ஜெண்ட்டினாவை நேசித்தான் நீ இருந்ததால்! அதிக தங்க காலணி கொண்ட தங்க கால் கொண்டவன் நீ! கோல் போடுவதே குறி என்ற கால்பந்து ஆட்டத்தில் கோல் போடுவதை விட உன்னை தள்ளிவிடுவதே கோல் என்று மாற்றிய அதிசயம் நீ! எங்கள் படையப்பாவின்… (READ MORE)
‘மாம்பிகு’ இப்படியொரு வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா? முன்பு எடப்பாடியார் இதை நிறைய பயன்படுத்தினார். இப்போது சட்டசபையில் கட்சி வித்தியாசமில்லாமல் பலரும் பயன்படுத்துகின்றனர். ‘மாண்புமிகு’ என்கிற வார்த்தையைத் தான் பேசிப் பேசி இப்படி ‘மாம்பிகு’ என்றாக்கி விட்டார்கள். அந்தக் காலங்களில் ‘சோழ நாடு’ என்பது ‘சோணாடு’ என்று மக்கள் வழக்கில் இருந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். தேங்காயை… (READ MORE)
3 காயல் என்றால் தெரியுமா உங்களுக்கு? கல்கி இந்த ஏரியைப் பார்த்திருந்தால், ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை வேறு மாதிரி எழுதியிருப்பார். ….. *3* வானிலிருந்து மழையாக இறங்கும் நீர் மலைகளிலிருந்து ஓடி வரும் போது பாறைகளை உடைத்துப் பெயர்த்து உருட்டி இழைத்து இழைத்து துகள்களாக்கி மணலை உருவாக்கி, அவற்றை தன் படுகை முழுக்க நிரப்பி அப்படியே… (READ MORE)
2 ‘கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?` …. ராமன் பிறந்ததாக சொல்லப்படும் இடம் கோசலை நாட்டின் அயோத்தி இருப்பது உத்திரபிரதேசத்தில். சீதையை ராவணன் கவர்ந்த தண்டகாரண்யம் இருந்த பகுதியாக சொல்லப்படும் நாசிக் இருப்பது மகாராஷ்டிரத்தில். புஷ்பக விமானத்தில் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை எதிர்த்து… (READ MORE)
ஜோ எனப்பட்ட ஜெகன்நாதன், 52லேயே அவசரமாகப் புறப்பட்டுப் போய் விட்டான் நண்பர்களிடம் கடன் வாங்காதவன் நன்னயம் மட்டுமே செய்தவன் உறவுக்காக பொருளை விட்டவன் உள்ளொன்று வைக்காதவன் தாய் தந்தை போற்றியவன் தாரத்தை தாங்கு தாங்கென்று தாங்கியவன் சர்க்கரையை விட இனிமையானவன் சர்க்கரை தின்ன உடலை தந்தவன் பிள்ளைகளை தவிக்க விட்டு புறப்பட்டுவிட்டான் வைகுந்தத்திற்கு தேடித் தேடி… (READ MORE)
‘ஐயோ!’ ‘ஆ…!’ உயிருக்கு போராடிக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது அது நடுரோட்டில். ‘ஜமீல்… வண்டியை நிறுத்துங்க, நிறுத்துங்க!’ நடுரோட்டில் ஏதோவொரு பறவை தன் முதுகை கொதிக்கும் சாலையின் மீது கிடத்திக் கொண்டு, இறக்கைகள் பக்கவாட்டில் விரிந்து கிடக்க கால்கள் வானம் பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. ‘செத்துருச்சி’ ‘இருங்க பார்ப்போம்! இப்பதான் அடிபட்டுருக்கு போல!’ இறங்கி ஓடுகிறோம்…. (READ MORE)
பொங்கல் வாங்குவதற்குக் கூட பெருமாள் கோவிலுக்கு போனதில்லை மணக்குடியில். சைவ நெறியை தீவிரமாகப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனென்பதால் பெருமாள் வழிபாடோ வைணவம் பற்றியோ பெரிதாக ஏதும் தெரியாது. நான்காவது வீட்டில் இருந்த என் வயது ஒத்த ஆளவந்தார் தன் நெற்றியில் இட்டு வரும் திருமண் அந்த வயதின் வியப்பு. அவன் வீட்டில் அனைவருமே, நெற்றியைக்… (READ MORE)
‘சேடல்’ தெரியுமா உங்களுக்கு? மதுரையை காவல் செய்த நாலு பூதங்களில் ஒன்று சேடலை சூடியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டிருக்கிறார். பூவில் பொதுவாகவே அதன் ஏடும் சூலகமும்தான் அழகென்றால், ‘பொதுவா அப்பெடில்லாம் முடிவு பண்ணாதே, என் காம்பைப் பாரு!’ என்பது போல பளீரென்று அடிக்கிறது பவழமல்லி. தேக்கு மர இலைகளையும் பூவையும் அதன் பச்சை கலவைகளையும் கவனித்து… (READ MORE)
நிகழ்வை ஏற்றுக் கொள்ளத் தொடங்குவதில் தொடங்குகிறது மன அமைதி. நம் வாழ்வில் நடந்தேறும் எல்லாவற்றிற்கும் காரணம் தெரிவதில்லை நமக்கு. சிலவற்றை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். சில இப்போது புரியாது, எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம். சில, எப்போதும் நமக்கு புரிவதே இல்லை. நிதர்சனம் இப்படியிருக்க, விரும்பத்தகாத நிகழ்வுகளை ‘ஏன்?’ ‘எனக்கு ஏன்?’ என்ற கேள்விகளோடு எதிர்கொள்வதால் உள்ளம்… (READ MORE)
பொருள்களாக தெரியும் சில, வெறும் பொருள்களாகத் தெரிவதில்லை சிலருக்கு. யார் பயன்படுத்தியவை, யார் காண்கிறார்கள் என்பன பொருளை மாற்றிப் போட்டுவிடுகின்றன. காண்கிறவனின் கண்ணுக்கும் கருத்துக்கும் இடையில் சேரும் ஓர் அடர்த்தியான உணர்வு, பொருளை, பொருளின் பொருளை மாற்றிப் போட்டுவிடுகிறது. ஒரு சடப் பொருளின் மீது உணர்வு கூட்டப்படும் போது பொருளின் பொருளே மாறிவிடுகிறது. அண்ணல் காந்தியடிகளின்… (READ MORE)
மாதத்தில் நான்கைந்து நாட்களாவது நெடுஞ்சாலைப் பயணம் செய்பவன் நான். நெடும் குறும் என்ற பல பயணங்களால் ஆனது என் வாழ்க்கைப் பயணம். பணியின் தேவை காரணமாக பல ஆண்டுகளாய் பயணித்துப் பயணித்து, பயணம் தொடங்கினாலே இதெல்லாம் செய்ய வேண்டியவை என்ற ஒரு பட்டியலே எங்களுக்குள் உருவாகி, தானியங்கி போல நிறைவேறுதல் நடைபெறத் தொடங்கி விட்டது எங்களுக்கு…. (READ MORE)
ராஜேந்திர சோழன் பற்றிய நமது பயணக்கட்டுரை தொடர் பதிவுகளில் ஒன்றான ‘சோழகங்கம்’ பற்றிய பதிவை படித்துவிட்டு, ‘அன்பிலிலிருந்து கொள்ளிடம் நீரை கொண்டு சென்றதற்கு ஆதாரம் இருந்தால் பதிவிடுங்கள்’ என்று ஆர்வத்துடன் கேட்டிருந்தார் Ponparappi Krishnamurthi பொன்பரப்பி கிருஷ்ணமூர்த்தி என்பவர். இதுதான் விஷயமென்பது மண்டையில் பதிந்து போய் இருக்கிறது, ஆதாரம் என்று கேட்கும் போது சரியான உறுதியான… (READ MORE)
ராஜேந்திர சோழன் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளியே தேர்வு செய்யப்பட்ட புதிய இடத்திற்கு தன் தலைநகரை மாற்றி, அதன் அருகிலேயே சிவனுக்கு ஒரு கற்றளி எழுப்பிய போதே, சில காத தூரத்தில் புதிய தலைநகருக்கு வெளியே தனது மூதாதைகள் உருவாக்கிய ஏரி போலவே ஒரு பெரிய ஏரியை உருவாக்கினான். புதிய நகரம், கற்றளி, சந்தைகள் செய்தவன் நிலம்… (READ MORE)
சிவனுக்கு ஒரு கற்றளி, அது தன் தந்தையெழுப்பியது போலவே ஆனால் அதைவிட கொஞ்சம் உயரம் குறைவாய் எழுப்பப் பட வேண்டும் என்று ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் கங்கை கொண்ட சோழபுரத்தில். தலைநகரம், கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என ஒட்டு மொத்தத்தையும் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளிப்புரத்தில் நகர்த்தி, புதிய தலைநகரை நிர்மானித்து அதற்கருகில்… (READ MORE)
ராஜேந்திர சோழனும் அவன் வழித் தோன்றல்கள் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், அருள் மொழி நங்கையார், அம்மங்கா தேவி ஆகியோரும் வாழ்ந்த அரண்மனைக்குப் போய் நின்றால் எப்படி இருக்கும்! மும்முடிச் சோழன் மாளிகை, சோழ கேரளன் மாளிகை, கங்கை கொண்டான் மாளிகை என அவர்கள் வாழ்ந்த 3 மாளிகைகள் பற்றி திருவாலங்காட்டு செப்பேடுகள் சொல்வதைக் கொண்டு நம்… (READ MORE)
பிற்காலச் சோழர்கள் – தக்கோலம் போர் – கொள்ளிடம் ஆற்றின் பெருவெள்ளம் – பழையாறை – முதலாம் பராந்தகன் – கற்றளி – திருச்சிற்றம்பலம் -அநபாயன் – சீவக சிந்தாமணி – பன்னிரெண்டாம் திருமுறை – தில்லை வனம் – புலியூர் – சித்ரகூடம் – முடி சூட்டும் இடம் – திருமுறைகள் ஏடு எடுத்தல்… (READ MORE)
அப்பா… எத்தனை எத்தனை கொடுத்தீர்கள் எங்களுக்கு! உங்களிடம் பெற்றதை வைத்தே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் தந்ததில் பாதியையாவது பிள்ளைகளுக்குத் தந்துவிட்டால் நல்ல தகப்பனாவேன் நான் வந்த வேலை முடிந்து வாழ்ந்து முடிந்து நிறைவாகப் போய்விட்டீர்கள் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஆறாண்டுகள் ஆன பின்னும் இன்னும் ஈரமாகவே… – பரமன் பச்சைமுத்து… (READ MORE)
‘கீழ உடாதீங்கோ!’ ‘அது கையிலேருந்து விழுந்துடுது கொஞ்சம்!’ ‘அத விடாம சாப்பிடனும். புண்ணியத்தை கீழ சிந்த வுடலாமா?’ …. ‘காஞ்சியில் இருக்கிறோம்!வரதராஜரின் சன்னதிக்கு போய் சற்று அமர்வோமே!’ என்ற எண்ணத்தோடு போனேன். ஞாயிறு என்பதால் பெருங்கூட்டம், நீண்ண்ண்ட வரிசை வரதரைக் காண. ‘சரி, வெளியிலிருந்து வணங்குவோம், சற்று அமர்வோமே அவரது கோவில் வளகத்தில்!’ என்றெண்ணியபடி, கொடி… (READ MORE)
‘பல்லவபுரி’யாக இந்த ஊர் இருந்த காலத்தில் பரமேஸ்வர பல்லவன், இரண்டாம் நந்தி வர்மன், பிறகு வந்த காகாதியர்கள், பிறகு வந்த பிற்கால சோழர்கள், பிறகு வந்த விஜயநகரத்து கிருஷ்ண தேவராயன் என காஞ்சிபுரத்தை ஆண்ட அத்தனை பேரும் இந்த குளத்தை சீர் செய்து பராமரித்துத்தான் இருந்திருக்கிறார்கள். ஊர் நடுவில் ஒரு குளம் என்பது சமய சம்பிரதாயம்… (READ MORE)
இறைவனைச் சரணடைதல் என்பது இறைவனுக்கானதல்ல, நமக்கானது. இறைவனைச் சரணடைதல் ‘அதான் ஒரு தடவ பண்ணிட்டோம்ல!’ என்பதான நிகழ்த்து அல்ல, ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியது. பெயரும் புகழும் செல்வமும் வரும் போது ‘நம்மால்தான் இவை’ என்று செருக்கும் இறுமாப்பும் நுழைந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணமும் செய்ய வேண்டியது. சில விஷயங்கள் எனக்குக்… (READ MORE)
பயணங்கள் மனிதனை வளர்க்கின்றன. பயணங்களே மனித குலத்தை வளர்த்தெடுத்துள்ளன. நியாண்டர்தாலிலிருந்து பரிமாணம் பெற்ற நேற்றைய மனிதன் பயணித்து பயணித்து நதிகளை கண்டறிந்ததால் நாகரீகங்கள் தோன்றின, சாகுபடி அறிவு வந்தது, மனித இனம் பல படிகள் உந்தித் தாவி வளர்ந்தது. பயணம் தரும் அனுபவங்கள் மனிதனை விரிவடைய வைக்கின்றன. மரங்கள், மண், மலைகள், நதிகள், சமவெளிகள், வயல்கள்,… (READ MORE)
. ‘ஓர் உயிரினத்தை வழி நடத்தும் உள்ளுணர்வை அதற்கு எது தருகிறது?’ என்ற கேள்வி பெரும் வியப்பை தந்து கொண்டேயிருக்கிறது. மனித குலம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டேயிருக்கும் இந்த கேள்வி அறிவியல் புலத்திலும் ஆன்மீக புலத்திலும் வெளிச்சக் கீற்றுகளை காலங்காலமாக பாய்ச்சிக் கொண்டேயிருக்கிறது, வளர்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது. இந்தியாவின் மணிப்பூர் காடுகளிலிருந்து புறப்பட்ட அமூர் வகை… (READ MORE)
கேள்வி: ஒரு சிறுகதை என்றால் முடிவு எப்படியிருக்க வேண்டும்? பரமன்: சிறுகதையென்றால் இப்படித் தொடங்க வேண்டும், வாசிப்பவரை உள்ளே இழுக்க வேண்டும், இப்படி முடிய வேண்டும் என்பதெல்லாம் பொதுவாகக் கொள்ளப்படும் வரையரைகள் என்றாலும் இதில் எதிலும் உடன்படாமல் எழுதி சிறந்தவர்கள் பலர் உண்டு. எழுதுகிறவர் கொள்ளும் முறையை மனப்பாங்கைப் பொறுத்து கதையின் வடிவம் மாறிவிடுகிறது. ஒரு… (READ MORE)
புதுக்கவிதை, போக்கிரி ராஜா, ரங்கா, சகலகலா வல்லவன், வாழ்வே மாயம் என்று ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவை ஒளிர வைத்துக் கொண்டிருந்த காலத்தில் கால் சட்டையணிந்த சிறுவனான நான் என்னை விட உயரமான ராலே சைக்கிளை ராஜவேலு சித்தப்பாவும் கருணாகரன் மாமாவும் பின்புறம் பிடித்துக் கொள்ள குரங்குப் பெடல் ஓட்டிப் பழகினேன். நிறைய விழுதல், எழுதல்,… (READ MORE)
தாய்க்காக மாறாதவனும் மனைவிக்காக மாறாதவனும் மகள்களுக்காக மாறிவிடுகிறான்! மகள் என்ற உணர்வே மகத்துவம்! – பரமன் பச்சைமுத்து #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanPachaimuthu #மலர்ச்சி #ParamanTouring #Deepavali #Daughters
விஷ்ணுவை வணங்கும் தெலுங்கு வைணவர்களும், கன்னட வைணவர்களும் கூட தமிழில் இருக்கும் சில வரிகளைத்தான் தினமும் படிக்கிறார்கள் (அனைத்து மொழி பேசும் வைணவர்களும் கூட!) என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆன்ற தமிழ் மறை, ஐந்தாம் வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது எது? …. 10ஆம் நூற்றாண்டில், சோழ நாட்டின் ஒரு சதுர்வேதிமங்கலமாக… (READ MORE)
சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை இதே இடத்தில் தூக்கிச் சுமந்து மகிழ்ந்திருக்கிறார். என் மகள்களை தூக்கிக் கொண்டு இதே இடத்தில் மகிழ்ந்து திரிந்திருக்கிறேன். மூத்த தலைமுறை, இளம் தலைமுறை, இப்போது பிறந்து தவழும் வரும் தலைமுறை என வேர்கள், கிளைகள், விழுதுகள் மொத்தமாக ஆண்டுக்கொரு முறை போகும் குலதெய்வ வழிபாடு கூடலை ரசிக்கிறேன். ‘இந்த… (READ MORE)
தொடக்கத்தில் நீறும் சோறும் வேண்டி மணிக் காக்கைகளும் அணிலும் வந்தன. இப்போதெல்லாம் இந்தியக் காக்கைகள் எனப்படும் மணிக் காக்கைகளோடு அண்டங்காக்கைகளும், புறாக்களும் வருகின்றன. அப்படியானால்… நான் காகம் வளர்ப்பவனா? – பரமன் பச்சைமுத்து சென்னை 24.11.2025 #Birds #Environment #WaterForBirds #AsianCrow #Puducherry #Bharathiyar #AbdulKalam #Singapore #Rajini #2.0 #Manakkudi #Kizhmanakkudi #Karaikudi #Peacock… (READ MORE)
ஜிம் கேரி நடித்த ‘மாஸ்க்’ படத்தில், சிறப்பு வாய்ந்த அதீத சக்தி வாய்ந்த அந்த மாஸ்க்கை எவர் அணிந்து கொள்கிறாரோ அவருக்கு சகலவிதமான சக்திகளும் வரும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் வரும் மாஸ்க் போல, மனித வாழ்விலும் சில தனித்துவ இருக்கைகள் உண்டு. சில இருக்கைகளில் அமரும் போது, அதில் அமர்கிறவர்களுக்கு ஒரு சக்தி… (READ MORE)
எத்தனை மருத்துவர்கள் வந்தனர் எந்தன் வாழ்வினில்… எண்ணிக்கை தெரியவில்லையே! காலில் நகம் பெயர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்ற போது, காய்ச்சல் நிற்காமல் காய்ந்து சருகாகும் உடலோடு சென்று நின்றபோது, காலில் ஆணி குத்தி துருவோடும் துடிக்க வைக்கும் வலியோடும் போன போது, கடைவாய்ப்பல்லுக்கு மேலே புதுப்பல் முளைத்து காது வரை வலித்த போது, கண்கள்… (READ MORE)
குன்றுதோறாடல் – போயிருக்கிறீர்களா,கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உருவ வழிபாடு கூடாது, மதச் சின்னங்கள் கூடாது, சோதியையே வணங்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன வள்ளலார் இளம்வயதில் தியானத்தில் இருந்த போது காட்சி தந்ததாக சொல்லப்படுவது எந்த கடவுளர் தெரியுமா? முருகனுக்கு திருமணம் எங்கே நடந்தது? ஒன்றுமில்லாத குட்டியூண்டு தெருமுனை முருகன் கோவில்களிலெல்லாம் சூரசம்ஹாரம் நடத்தும் போது, ஒரு பெரிய… (READ MORE)
‘என்னாதூ பரமன், மனுஷன் கட்டி உருவாக்கின மலையா இது? இது ஒரு மலைன்னு நெனச்சிட்டு இருக்கேன் இத்தனை வருஷமா? எவ்வளோ தடவ இங்க இந்த கோவிலுக்கு வந்துருக்கேன், தெரியலையே!’ மலைகளே இல்லாத சோழ தஞ்சைப்பகுதில் ஒரேயொரு மலைக்குன்று மட்டும் எப்படி வந்தது? திருவேரகம் போயிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எவனாயிருந்தாலும் சிவனாயிருந்தாலும் ஆசிரியனுக்கு பணிவு முறைமை தரவேண்டும் என்று… (READ MORE)
‘என்னது, பழநி அறுபடை வீடு பட்டியல்லயே இல்லையா? என்ன சொல்றீங்க பரமன்?’ … முல்லைக்குத் தேர் கொடுத்த பரம்பின் பாரி போல, மயிலுக்கு போர்வை தந்தவன் பொதினியின் வையாவி கோப்பெரும் பேகன். நாம் பாடங்களிலும் சங்க இலக்கியங்களும் படித்த கடையேழு வள்ளல்களில் ஒருவனான இந்த பேகனின் குடி ஆவியர்குடி. இவர்களது பெயராலேயே இந்த பகுதியின் (ஊர்)… (READ MORE)
மதுரையிலிருந்து பயணித்த ஔவையார் பயணக்களைப்பிலும் பசியிலும் வாடி மரங்களடர்ந்த ஒரு சோலையை நாட, அங்கே… நிற்க. ஔவையார் என்பவர் ஒருவரல்ல, ஆத்திச்சூடி பாடியது 12 ஆம் நூற்றாண்டின் ஔவை, விநாயகர் அகவல் பாடியது 14 ஆம் நூற்றாண்டின் ஔவை, அதியமானிடம் நெல்லிக் கனி பெற்றது பண்டைத் தமிழ் ஔவை என வேறு வேறு காலகட்டங்களில் தமிழ்… (READ MORE)
ஐயிரண்டு திங்கள் கருவில் சுமந்தவரை ஆயுள் முழுக்க தன் நெஞ்சில் சுமக்கிறவரை கைகளில் ஏந்தி சுமக்கும் அனுபவம் பெற்றேன் இன்றே நிமிடங்களுக்கு அனுபவம் கூட்டி அடர்த்தியாக்கினேன் நிகழ்ந்ததை கடந்தும் பதிந்து மகிழ்கிறேன் இன்னொரு சென்மமிருந்தால் நீ எனக்கு குழந்தையாய் இல்லை இன்றே இப்போதே சுமக்கிறேன் இக்கணமே வாழ்கிறேன் வெட்கமில்லை, கூச்சமில்லை ஆர்வமும் அன்பும் மட்டுமே! இறைவா… (READ MORE)
‘தம்பி, மணக்குடியிலேருந்து எல்லாரும் வந்தாங்க. ரெண்டரை வயசு வால் பையனையும் ஏழரை வயசு பொண்ணையும் கூட்டிட்டு கணவன், மாமியாரோடு ஒரு மனுஷியும் வந்தா. முருகனை கும்புடலாம்னு வந்தா.’ ‘சரி!’ ‘இதோ இந்த இடத்தில, இந்த இடத்திலதான் அவளை மட்டும் இங்கயே நிறுத்திட்டு, குழந்தைகளை தூக்கிட்டு கோயிலுக்குப் போய்ட்டாங்க கணவனும் மாமியாரும் மத்தவங்களோட.’ ‘ஏன்? ஏன் அந்த… (READ MORE)
அலைவாய் போயிருக்கிறீர்களா? சரி, சீரலைவாய் தெரியுமா? தொல்காப்பியமே மிகவும் பழமையானது. அந்தப் பழந்தமிழ் தொல்காப்பியமே ஒரு கோவிலைக் குறிப்பிட்டால், அது எவ்வளவு பழமையாக இருக்கும்? கடற்கரையிலிருந்து வெறும் 65மீ ஒரு கோவில், அது கூட பரவாயில்லை தரை மட்டத்திலிருந்து 10 அடி கீழேயும் கடல் மட்டத்திலிருந்து 15 அடி கீழேயும் கருவறை மூலவர் குகை, ஆனால்… (READ MORE)
தங்களது இறுதியாத்திரைக்கு தாங்களாகவே புறப்பட்டுப் போனார்கள் ஐஏ-171ல் அவசர வழியின் அந்த இருக்கையில் இருந்தவன் ஐந்து நொடிகள் தூங்கியிருந்தால் மரணித்திருப்பான் மற்ற இருக்கைகளின் 241 பயணிகளும் விழித்திருந்தும் மரணித்துப் போயினர். உணர்வதற்குள் உடல்களை விட்டுவிட்டு உயிரை தின்றுவிட்டது தீ. கரிக்கட்டைகளாக மனிதர்கள் ஆன பின்பு கருப்புப் பெட்டியால் பயன் என்ன இனி! பறந்து செல்ல லண்டனுக்கு… (READ MORE)
பயணங்களே ஒரு மனிதனை வளர்த்தெடுக்கின்றன. நூல்களைப் போலவே பயணங்களும் ஒரு மனிதனை ஒரே நேரத்தில் அகத்திற்கும் புறத்திற்கும் தயார் செய்கின்றன. நல்ல பயணங்களை கொண்டவன் பேறு பெற்றவன், நீண்ட நெடிய பயணங்களை கொண்டவன் நற்பேறு பெற்றவன். கிணற்றுத் தவளையாய் கிடக்கும் மனிதனை வெளியிலெடுத்து உலகத்திற்கு விரிவாக்கி உயிர்ப்பூட்டி விடுவது பயணங்களே. பயணத்தின் ஊடே மனிதன் எதிர்கொள்ளும்… (READ MORE)
‘யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை’ என்கிறது திருமூலரின் திருமந்திரம். மலர், கனி, காய், அன்னம், நீர் என எதுவும் இல்லாத ஒரு நிலையில் ஒரேயொரு பச்சை இலையைப் பறித்துப் போட்டு இறைவரைத் தொழலாம்(கவனிக்க, ‘இறைவர்’ என்கிறார், ‘இறைவன்’ அல்ல!) என்கிறார் திருமூலர். இன்று ஏதுமில்லாத போது பச்சிலை இல்லை ஒரேயொரு சூடம் போதும், ஒரு சிறு… (READ MORE)
பல சமயங்களில் காஃபி ஒரு தேவையல்ல, மற்ற பிற காரியங்களை நிறைவேற்ற கொள்ளப்படும் காரணம், ‘காஃபி ஒரு காரணம்!’ தொடர் நெடுஞ்சாலைப் பயணத்தின் இறுக்கம் களைந்து தளர்வு பெற, தூக்கக் கலக்கம் உதிர்க்க, உட்கார்ந்தே வந்ததால் ஒரே நிலையில் அழுத்தம் பெற்ற L1,L2,L3களும் ‘ஸ்பைன் எரெக்ட்’ தசைகளும் நீட்சியும் தளர்வும் பெற, டீக்கடையில் இருக்கும் ஒரு… (READ MORE)
சென்னையில் ரயிலில் ஏறி உட்கார்ந்து ஒரு காஃபி குடித்து விட்டு கழிப்பறை போய் விட்டு வெளியே வந்தால் பெங்களூரூ வந்து விட வேண்டும் என்பது என் பல காலத்தைய வியப்பான கற்பனை. ஜப்பானில் பணி புரிந்த காலத்தில் ‘ட்துஜிகாவோக்கோவோ’ மெட்ரோ நிலையத்தில் என் இளம் வயது கற்பனைகளில் ‘டோக்கியோவிலிருந்து இந்த புல்லட் ட்ரெயினை அப்படி கடத்தி… (READ MORE)
அந்தக் காலத்துப் பேய்ப் படங்களில் வானத்து வெள்ளை நிலா பேய் வரும் போது மட்டும் ரத்த சிவப்பு நிலாவாகத் தெரியுமே (குளியறை குழாயில் தண்ணீருக்குப் பதில் ரத்தம் வரும்) அப்படியொரு ரத்தச் சிவப்பு நிலாவை பார்த்திருக்கிறீர்களா? சூரியனிலிருந்து 150 கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சந்திரன் (இந்தத் தூரத்தை தரையில் கணக்கிட்டால் காஷ்மீருக்கும் கன்னியாகுமரிக்கும்… (READ MORE)
பல ஆண்டுகள் ஆயிருந்ததாலும், வேறு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டியிருந்ததாலும், ‘உங்களுடைய அடையாள படிவங்களை எடுத்துக் கொண்டு நீங்களே நேரில் வரவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டதாலும் இதுவரே போயிராத அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்திற்குப் போயிருந்தேன். (‘தெரிந்தவர்கள் எவரும் இல்லை! ம்… அந்த கவுண்டர்ல கேப்போம்!’) ‘மேடம்… எனக்கு பேங்க் அக்கவுண்ட் சேஞ்ச் பண்ணனும்’… (READ MORE)
*5* ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விருப்பங்கள் உண்டுதானே! காடும் மலையும் மலையேற்றமும் ஈர்த்த அளவிற்கு துடுப்பு படகில் செல்வது ஈர்க்கவில்லை எங்களை. குழந்தைகள் கொண்டாடுவார்கள். பத்தனம்திட்டா மலைப்பகுதியிலிருந்து ‘ட்ரெக்கிங்’ முடித்து கவியாறு கேரள அரசு சுற்றுலா மையம் வந்ததும் துடுப்புப் படகில் அழைத்துப் போனார்கள். படகில் பயணித்ததை விட படகில் பயணித்த போது சூழலில் இருந்த… (READ MORE)
*4* யானைகளைப் புரிந்து கொள்ளாமல் காட்டைப் புரிந்து கொள்ள முடியாது. யானைகளைப் புரிந்து கொள்கிறவன் காட்டைப் புரிந்து கொள்கிறான். காட்டைப் புரிந்து கொள்கிறவன் யானைகளை புரிந்து கொள்கிறான். யானைகளால் மனிதர்களும் மனிதர்களால் யானைகளும் இறந்து போன சம்பவங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டென்றாலும் யானைகளோடு மனிதர்களின் தொடர்பு ஆதிகாலம் தொட்டே இருந்து கொண்டுதான் இருக்கிறது. யானை உருவத்தில்… (READ MORE)
*3* காடென்பது வெறும் காடல்ல. கடலைப் போல அது ஒரு தனி உலகம். இந்த உலகம் சீராக இயங்குவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் உலகம். காடென்பது வெறும் மரமல்ல, ஓர் உயிரியல் கூட்டமைப்பு. புல், பூண்டு, மரம், செடி, கொடி, புழு, பூச்சி, பறவை, விலங்கு, ஒட்டுண்ணி, பாக்டீரியம், நுண்மி என பல்லுயிரும் சேர்ந்து இயங்கும் ஒரு… (READ MORE)
ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் மடகாஸ்கர் பகுதியோடு இருந்து, புவித் தட்டுகளின் நகர்வால் பிய்த்துக்கொண்டு ஆசிய இந்தியாவில் இப்போது இருக்கும் இடத்தில் ஒட்டிக் கொண்டதாக சொல்லப்படும், மராட்டிய குஜராத் எல்லையில் தொடங்கி கோவா, கர்நாடகம், கேரளம் என விரிந்து தமிழக கன்னியாகுமரியில் முடியும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ஒரு பகுதியில் பெய்யும் பெருமழை நீர் முழுக்க… (READ MORE)
மலைகள் அழகு, காடுகள் அழகு என்றால் மலையும் காடும் புணர்ந்த குறிஞ்சி முல்லை இடம் எப்படி இருக்கும் அழகோ அழகுதானே! கூடவே வற்றாத ஒரு பெரிய காட்டாறும் சேர்ந்து விட்டால் எப்படியிருக்கும் கற்பனை செய்யுங்கள். காலங்காலமாக மன்னன், பளியன், ஊராளி இன பழங்குடி மக்கள் மகிழ்ந்து குலாவி வாழ்ந்த இந்தப் பகுதி பல்வகை விலங்குகள் செறிந்திருந்த… (READ MORE)
‘பூவ எடுத்து ஒரு மாலைத் தொடுத்து வச்சேனே… என் சின்ன ராசா!’ என்ன ஒரு பாடல் இது! தவணை முறை என்பது போல ‘பூவ’வுக்கும் ‘எடுத்து ஒரு மாலைக்கும்’ நடுவில் நிறுத்தி இடைவெளி விட்டு பிறகு தொடங்கும் பாடல். |பூவ| |எடுத்து ஒரு மாலை| |தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா| அதுவும் அதே வரிகள்… (READ MORE)
பில்டிங் டாக்டர் ஆதன் யோகி போன்றோர் தொடர்ந்து என்னிடம் கேட்கும் கேள்வி, ‘மாஸ்டர்! இப்பல்லாம் சினிமா ரிவ்யூ எழுதறது இல்லையே? அதைப் படிக்கவே நாங்கள்லாம் காத்துட்டு இருப்போம் மாஸ்டர்!’ அவர்களிடம் சொல்லாத பதிலும் உண்மையும் இதுதான். திரைப்படங்களை முழுமையாக விட்டுவிடவில்லை என்றாலும் எனக்கு திரைப்பட வேட்கை குறைந்து விட்டது, படங்கள் பார்ப்பதும் குறைந்து விட்டது. அங்கொன்றும்… (READ MORE)
மலைகளழகு, ஒவ்வொரு மலையும் ஒவ்வோரழகு. குத்துப்பாறையாக, செதில் செதில் கற்களாக, உயர்ந்த மண் மேடுகளாக, கடும்பாறைகளாக, புக முடியா புதரடர்ந்தவகையாக, மரங்கள் வளர்ந்த மலைகளாக, காடுகளை தாங்கி நிற்கும் மலைகளாக என மலைகளின் தோற்றங்களில் தன்மைகளில் வேறுபாடுகள், அத்தனையும் அழகு. (வேளிர் குல வேள்பாரியின் மலைக்கு ஏன் பச்சைமலை என பெயர் வந்ததோ! தாவரங்கள் அடர்ந்த… (READ MORE)
தமிழகத்தில் முதல் மாதிரி திட்டமாக அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேறியுள்ளது. தமிழக முதல்வருக்கு நன்றிகள்! ‘அந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் அதனால் நாம் தொட வேண்டாம்!’ என்று விடாமல் ‘மக்களுக்கும், மண்ணுக்கும் இந்தத் திட்டம் தேவை, இதை தொடர்ந்து நிறைவேற்றுவோம்!’ என்று மக்கள் பயனை கருதி செய்ததனால் தமிழக அரசுக்கு… பூங்கொத்து! முன்னெடுத்த மாரப்ப கவுண்டர்,… (READ MORE)
காசி விஸ்வநாதர் கோவிலின் நட்ட நடுவில் ‘சிவமயம்’ என்று தமிழில் உள்ளதாமே? காசியில் இறப்பதற்காகவே விடுதிகள் உள்ளதாமே? ….. பிறப்பு, இறப்பு தளைகளை அறுத்து முக்தி அடைய வேண்டுமானால் காசியில் இறக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பாரதம் முழுவதிலிருந்தும் இறப்பதற்காக வாரணாசி வருகிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். விடுதலை வேண்டி காசியில் இறக்க விரும்பி வரும் மனிதர்களுக்கு… (READ MORE)
கங்கையை கண்டு தீர அனுபவிப்பது என் தீராக் கனவாக இருந்தது. இறைவனின் தலையில் விழுந்து ஓடி வருகிறது, எல்லா இடங்களிலும் கிழக்கு நோக்கி ஓடி வருவது வாரணாசியில் மட்டும் வடக்கு நோக்கி ஓடுகிறது, மாமல்லபுரத்து பகீரதன் தவம் சிற்பம் சொல்லும் கதை, கங்கையின் நீர் பற்றி சொல்லும் ஹாட்ஸ்டார் நேஷனல் ஜியோக்ராஃபிக் டாக்குமெண்டரி என சிறு… (READ MORE)
அது ஒரு பெரும் காடு. செழிப்பான கங்கை சமவெளியில் வாரணாசியையொட்டி அமைந்திருந்த, மான்கள் அடர்ந்த காடு. தன்னை அறிந்தவர் ஞானமடைந்தவர் அந்தப் பகுதிக்கு வந்ததும் காடு மாறியது, மான்கள் ஆழ் அதிர்வை உள்வாங்கி பேரமைதியில் திளைத்தன. மொத்த காடும் மாறுவதை ஐவரும் உணரும் வேளையில், அவர் அங்கு வந்தார். வந்தவரைக் கண்டதும்…. (இதை தொடர்வதற்கு முன்… (READ MORE)
பல்லிகள் உண்டு, ஆனால் அந்த ஊரில் அவை கத்தாது! (‘ம்யூட்’ செய்யப்பட்டுவிட்டன போல பல நூற்றாண்டுகளாக) ஒரே நேரத்தில் சராசரியாக 250 பிணங்கள் கிடக்கும் அந்த நதியின் கரையில், ஆனால் அந்த ஊரில் மட்டும் பிணங்கள் நாறாது! அத்தனை பிணங்கள் தரையில் கரையில் கிடக்கும், ஆனால் அவ்வூரில் கருடன் பறக்காது! காக்கைகள் அந்த ஊரில் கத்துவதேயில்லை!… (READ MORE)
பிரித்தானியர்கள் பாரதத்திலிருந்து வெளியேறிய போது இங்கிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு போயினர் அவர்களது பல நாடுகளுக்கு. தோட்டத் தொழிலாளர்களாகவும் பிற வேலைகளுக்கும் போன தமிழர்கள் அங்கேயே குடியேறி விட அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழகத் தொடர்பு இல்லாமல் தமிழ் பேசிக்கொண்டும் தமிழ் பேசத் தெரியாமலும் அங்கேயே புலம்பெயர்ந்த அயலகத்தமிழர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் இன்றைய தலைமுறைகளை தமிழகத்துக்குக்… (READ MORE)
காவிரி, கொள்ளிடம், வீராணத்தால் வாழ்வு பெறும் மக்களின் ஒரு முறைமை கொண்டாட்டமாக இருக்கும். பூமுடித்த பெண்கள் வெல்லம் இடப்பட்ட ஊற வைத்த அரிசி, வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி சகிதமாக தாம்பாளத்திலோ முடைந்து மெழுகப்பட்ட முறத்திலோ மங்கலப் பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக ஆற்றுக்கும் வாய்க்காலுக்கும் ஆற்றின் வழியே நீர் பெற்று வாழ வைக்கும்… (READ MORE)
நள்ளிரவு உறக்கத்திலேயே நிலச்சரிவில் புதையுண்டு போன கேரள வயநாடு சகோதர கசோதரிகளின் மறுமைக்காக பிரார்த்தனைகள் செய்யும் வேளையில் அடித்துக் கொண்டு அத்தனை வேகமாக ஓடும் காட்டாற்றின் வெள்ளத்திலும் குறைந்த நேரத்தில் 190 அடி நீளத்தில் அப்படியொரு கனரக பாலத்தைக் கட்டி முடித்து மீட்புப் பணிகளை அடுத்த நிலைக்கு உயர்த்திவிட்ட இராணுவ வீரர்களை எழுந்து நின்று சல்யூட்… (READ MORE)
அரேபிய எகிப்துக் குதிரைகள் நாவாய்களில் கடற்பயணம் செய்து கோடியக்கரையில் இறக்கப்பட்டன என்று படித்த மாணிக்க வாசகர் வரலாறும், திருவெற்றியூர் பக்கத்தில் நிறுத்தப் பட்டிருந்த மரக்கலங்களில் நல்ல குதிரைகளை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவிஜயம்(இந்தோனேசியா), கடாரம் (மலேசியா), சுமித்திரா தீவு, முனீர் பழந்தீவுகளுக்கு கடலில் பயணித்து வெற்றி கொண்டான் ஜெயங்கொண்டத்தை தலைநகராகக் கொண்டிருந்த சோழ வேங்கை ராஜேந்திர சோழன்… (READ MORE)
‘மணி பேச்சு’ ஆனந்த் சீனிவாசன் போலவே வந்தான் *முத்து*. ரோபோ போல கழுத்தோடு உடம்பையும் திருப்பும் *அமிர்தலிங்கம்.* (மெயில் ஐடி தெரியுமா? அமிர்தலிங்கம் எம்பிஏ @ ஜிமெயிலாம்!) ‘ஒரு வேளை இவன் இந்த மீட்டிங்குக்கும் வாக்கிங்லயே வந்துருப்பானோ!’ என நம்மை பதற வைக்கும் *ராஜவேல்*. இன்றும் கேள்விகள் உண்டு ஆனால் நிறைய தீர்மானத்தோடு பேசும் *சந்திரமௌலி.*… (READ MORE)
கள்ளக்குறிச்சி பற்றி வேறு ஒன்று கவனத்தில் வந்தது. கல்வராயன் மலையினடிவாரத்தில் அமைந்தது என்பதால் அதன் அசல் பெயர் ‘கல்லக்’குறிச்சி, தவறாக மருவி ‘கள்ளக்’குறிச்சி என்றாகிவிட்டது என்கிறார் கி. வைத்தியநாதன். 1962ல் புலவர் வரதராசனாரால் தொடங்கப்பட்டு இன்று வரை தமிழ்ப்பணியில் சிறப்பாக இயங்கும் ‘கல்லைத் தமிழ்ச்சங்கம்’ அமைப்பை உதாரணமாக காட்டுகிறார். ‘காவிரிப்பூம்பட்டினம்’ போல பழைய சரியான பெயர்கள்… (READ MORE)
ப்ளுமேரியா பூவை தலையில் சூடிய ஒரு பெண்ணை புதுச்சேரியில் உணவருந்தப் போன இடத்தில் பார்த்தேன். நெடு்நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன், பூவையை அல்ல, பூவை சூடிய பூவை! எதிரில் அமர்ந்து சாப்பிடும் பரியை படமெடுப்பது போல பாவனை காட்டிவிட்டு தூரத்தில் குடும்பத்தோடு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை குவியம் செய்து(திருட்டுத்தனமாய்!) படமெடுத்துக் கொண்டேன். இலங்கையிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும்… (READ MORE)
‘குடகு மலைக் காற்றில்…’ – நிறைவுக் கட்டுரை: தொழிற்சாலைகளே இல்லாத கண்ணுக்கு எட்டாத தூரம் வரையிலும் காடும், மலையும், காஃபி தோட்டமும் இஞ்சித் தோட்டமும் என பரந்து சுத்தமான காற்றுள்ள பகுதி கூர்க். ஏற்காட்டில் நெருக்கடி, இ பாஸ் வாங்கினால்தான் போக முடியும், ஊட்டி, கொடைக்கானல் முழுக்க பெருங்கூட்டம் என நினைப்பவர்களுக்கான இடம் கூர்க். குடும்பத்தோட… (READ MORE)
கடலைப் போல மலைகளும் எப்போதுமே எனை ஈர்ப்பவை. மண் திட்டுகள், கற்குவியல் குன்றுகள் (செஞ்சி – மலையனூர் பகுதிகளில்), பெரும் பாறைகள், புல் முளையா பாறை ( கர்நாடக சாவன் துர்கா), கல்லும் களிமண்ணும் கொண்ட மலைகள், வெறும் புதரும் முள் செடிகளும் கொண்ட மலைகள், மேகங்களை கிழித்து உயர்ந்து நிற்கும் மரங்களடரந்த காடுகளை கொண்ட… (READ MORE)
‘சோழ நாடு சோறுடைத்து’ என்றெல்லாம் போற்றப்பட்ட சோழ நாட்டின் வளமைக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு உங்களிடம் நிச்சயம் பதில் இருக்கும். அதனால்தான் சோழர்கள் நன்றியோடு வணங்கி துதித்தனர். …… கூர்க்கின் விராஜ்பேட்டிலிருந்து அந்த இடத்திற்குப் போய் சேர ஒன்றரை மணி நேரம் ஆகும். துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் உலகம் முழுவதிலிருந்தும் முக்கியமாய் கர்நாடக… (READ MORE)
‘ஐ! கருப்பு வெள்ளை சிட்டுக்குருவி!’ ‘பரமன், ப்ளாக் அண்ட் வொயிட்ல சிட்டு பார்த்தில்லை நான்! தேங்க்ஸ் ஃபார் த பிக்சர்!’ நமது முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தார்கள் விஜயனும், அக்ஷயாவும். இந்தக் கருப்பு வெள்ளைக்குருவிக்கு ஆங்கிலத்தில் ‘மேக்பை ராபின்’ என்று பெயர். தமிழில் இதை பெருமளவில் ‘வண்ணாத்திக் குருவி’ என்றழைப்பர். பெயரைக் கவனியுங்கள் –… (READ MORE)
சுத்த குறிஞ்சி நிலமான குடகு மலைப் பகுதி ‘கொடவா நாடு’ ‘கொடகு நாடு’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. நெல், கமுகு, வாழை என பயிரிட்டு வந்தவர்கள் பிரித்தானியர்களின் ஆளுகையில் அறிமுகப்படுத்தப் பட்ட காஃபியையும் பயிரிட்டு செழித்துள்ளனர். தமிழ், கன்னடம், துளு கலந்த மொழியான ‘கொடவா’ மொழி இவர்கள் பேசும் மொழி. நமக்கு நன்கு பழக்கப்பட்ட மிகவும்… (READ MORE)
பெரும் போர் வீரர்களாகவும் கடும் விவசாய உழைப்பாளிகளாகவும் இருந்த மண்ணின் மைந்தர்களான கொடவர்கள் குடியின் பகுதி ஒரு தனி மாநிலமாக இருந்து, பிறகு மைசூர் சமஸ்தானத்தில் இணைக்கப்பட்டு பிறகு கர்நாடகத்தின் முக்கிய பகுதியாக மிளிர்கிறது கூர்க் என்றும் கொடகு என்றும் அழைக்கப்படும் மலைப்பகுதி. மைசூரிலிருந்து புலிகள் சரணாலயம், யானைகள் காப்பகம் கொண்ட, மேகங்களை அசால்ட்டாக கிழித்து… (READ MORE)
கர்நாடக உணவென்றாலே உடுப்பி உணவுதான் என்று தாங்களாகவே கருதிக்கொள்பவர்கள் உண்டு. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த காலங்களிலும் நிலம் – மொழி – மக்கள் அடிப்படையில் கர்நாடகத்தின் உணவு முறை தனித்துவமாக வேறாகவே இருந்திருக்கிறது. கர்நாடக உணவை மைசூரு / பெங்களூரு உணவு, உடுப்பி / கொடகு உணவு, கராவல்லி (கராவளி) / கோஸ்டல் உணவு என… (READ MORE)
11 கிமீ நீளமும் 4 கிமீ அகலமும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பை மனதில் காட்சிப் படுத்திப் பாருங்களேன். எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட கடல் போல பரந்து விரிந்துதானே! அதனால்தான் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் தொடக்கத்தில் அந்த ஏரியை ‘கடல் போல விரிந்த’ என்றே குறிப்பிட்டு, அதன் மதகுகளின் எண்ணிக்கையை, அதன் நீள அகலத்தை… (READ MORE)
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும். நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்-அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. நான்காம் வகுப்பு படித்த காலத்திலோ ஐந்தாம் வகுப்பு பள்ளி காலத்திலோ என் மண்டைக்குள் நுழைந்த பாயிரம் இது. இரா. அன்பழகன் வழியே என்னுள் நுழைந்தது இது. மணக்குடியில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமிக்கு பெரிய பந்தலிட்டு… (READ MORE)
அப்பாவுக்கு என்னை அன்பழகன் சார் நடத்தும் சிறப்பு ஆங்கில இலக்கண வகுப்புக்கு அனுப்ப வேண்டும். பாட்டிக்கு நான் பசு மாடுகளை அறுவடை முடிந்த உளுந்து பயிர் பிடுங்கப்பட்ட வயல்களுக்கு மேய்ச்சலுக்கு கூட்டிப் போகவேண்டும். இவை இரண்டுக்குமிடையே பனங்காய் வெட்டியதும், கிட்டி புள், கோலி குண்டு ஆடியதும் நடந்தன என் பள்ளி கோடை விடுமுறை நாட்களில். வற்றிக்… (READ MORE)
பஞ்சு அருணாச்சலம் தன் வாழ்நாள் முழுக்க சொல்லியும் எழுதியும் வந்த ‘ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதைதான் முதல் ஹீரோ’ என்ற கருத்து மறுபடியும் மறுபடியும் நீரூபனமாகிக் கொண்டேயிருக்கிறது ஆண்டாண்டுகளாக. இப்போது ‘மஞ்சுமல் பாய்ஸ்’ மூலமாகவும். வேலை நேரத்தில் வேலை, மீதி நேரத்தில் குடி, கயிறு இழுக்கும் போட்டி என பொழுது போக்கும் எதையும் அசிரத்தையாக செய்யும் கேரளத்தின்… (READ MORE)
பிசி, எக்ஸ்டி, ஏடி என கணிப்பொறிகள் பயன்பாட்டில் இருந்த எண்பதுகளின் இறுதியிலான என் கல்லூரிக் காலங்களில் ஃப்ளாப்பி டிஸ்க்கள் கோலோச்சின. 360கேபி(கிலோ பைட்ஸ்) அளவு சேமிக்கும் கொள்ளளவு கொண்ட டிடிகே அல்லது ஆம்க்கிட் தயாரிப்பு ஃப்ளாப்பி டிஸ்க்களை நாங்கள் பயன்படுத்தினோம். பேசிக், ஃபோர்ட்ரான் போன்ற நிரல் மொழிகளை இயக்க அன்று அது போதுமானதாக இருந்தது. உள்ளடக்கத்தை… (READ MORE)
பிரார்த்தனை செய்வதே உங்கள் வேலை. தருவதா இல்லையா என்பது இறைவனின் வேலை. அதையே தருவான் அல்லது அதைவிட சிறப்பானதை பெரிதானதை இறைவன் தருவான். பிரார்த்தனை என்பது இறைவனோடு கொள்ளும் தொடர்பு. பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்காக, உற்றாருக்காக, உடன் இருப்போருக்காக, உலகத்தாருக்காக! உங்களுக்கு பிரார்த்தனை கை கூடட்டும் என்று பிரார்த்திக்கிறேன். – பரமன் பச்சைமுத்து
இறந்தவரின் ஆன்மா வேறு தற்காலிக உடல் தரப்பட்டு எம பட்டினத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 12 நிமிடங்களில் திரும்பவும் சடலம் இருக்கும் இறப்பு வீட்டிலேயே கொண்டு வந்து விடப்படுவதாக சைவ சமயக் குறிப்புகள் சொல்வதை எண்ணிய படியே குயப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவில் அக்கா வீட்டு வாசலில், நேற்றிரவு உடலை விட்டு அமரராகிப் போன ராமலிங்கம் பிள்ளையை… (READ MORE)
ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது. எவர் பற்றியும் பிரஞ்ஞையில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த மனிதர் நம்மை ஈர்த்தார், மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலை வந்தடைந்ததும் தேநீருக்காக இறங்கிய போது. ‘டீ குடிக்கறீங்களா?’ ‘இப்பத்தான் குடிச்சேங்க! வேண்டாம்!’ ‘சாப்பாடு இப்ப தருவாங்க… (READ MORE)
கேள்வி: சினிமாவின் உச்ச நிலையிலில் இருக்கும் போது நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலுக்குள் நுழைகிறாரே விஜய்? பதில்: அமிதாப் பச்சன், எம்ஜியார் இதை செய்தார்கள். இப்போது விஜய் வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்துவது சிறந்த செயல் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. கட்சி தொடங்கிய பின்பு எம்ஜிஆர் நடித்த ‘உலகம்… (READ MORE)
‘ஃபெரேரோ ரோச்சர்’ சாக்லேட் பிடிக்குமா உங்களுக்கு? … மதிப்பிற்குரிய சுகி சிவம் அவர்கள் ஒரு நாள் நம்மை அழைத்து, தான் நடத்தும் இணைய தள பயிலரங்கு ஒன்றில் நாம் உரையாற்ற வேண்டுமென்று கேட்டு நம்மை வியப்பிலாழ்த்தினார். பல பேச்சாளர்கள் பங்கேற்ற அந்தப் பயிலரங்கில் ‘உறவுகள்’ பற்றியதாக நிகழ்ந்தது நம் மலர்ச்சி உரை. மிக மரியாதையாக நடத்தினார்,… (READ MORE)
‘மோடி புதுப்பொலிவுடன், டிடி தமிழை தொடங்கினார்’ – என்ற பொருள் வருகிறது இதில். ‘புதுப்பொலிவு பெற்ற டிடி தமிழை தொடங்கினார் மோடி’ அல்லது ‘புதிப்பொலிடன் கூடிய டிடி தமிழை தொடங்கினார் மோடி’ என்றிருப்பதுதானே சரி! #HinduTamil #Tamil #Paraman #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #நல்லதமிழ்
எந்த பாடலைத் தந்தாலும் அதில் தன்னையே குழைத்து ஊற்றி சின்னதாய் சிரித்து, கொஞ்சி, அழுது, கர்ஜித்து விளாசி விடுவார் எஸ்பிபி என்பதைத் தாண்டி ரஹ்மானின் இசையும் அசரடிக்கிறது ‘அழகான ராட்சசியே’வில். அதனால்தான் ஹரிஹரன் குரலில் வரும் ‘குறுக்கு சிறுத்தவளே…’ என்னை இன்னமும் சொக்கிப் போக வைக்கிறது. அதுவும் ‘கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே’ எனும் முதல் சரணத்திற்கு… (READ MORE)
விண்வெளியில் ஆதித்யா 1 தனது லெக்ராஜியன் பாயிண்ட் எனப்படும் எல் -1 புள்ளியை இன்று அடையப் போகிறது என்று மகிழும் இதே நேரத்தில் வானிலும் கடலிலும் மூன்று நிகழ்வுகள் இந்தியர்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூடுதல் மகிழ்ச்சி கொள்கிறோம். கருந்துளை எனப்படும் கருங்குழியிலிருந்து வெளிப்படும் கதிர்கள், எரிபொருள் தீர்ந்து வெடித்து சிதறும் விண்மீன்களிலிருந்து உருவாகும் கண்ணுக்குத்… (READ MORE)
‘எத்தனை எழுதினாலும் எழுத இன்னமும் இருக்கிறது!’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு எவ்வளவு எழுதினாலும், எத்தனை நூல்கள் எழுதியிருந்தாலும்கூட தன் எழுத்தை அச்சில் பார்க்கும் போது பேருவுகையும் பெருமகிழ்ச்சியும் பொங்குமாம். ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே அப்படியென்றால், ‘நான் ஓர் எழுத்தாளன்தானா?!’ என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, என் எழுத்து அச்சாகி நூலாக வந்தால்… (READ MORE)
சினிமா கொட்டகைகளோ தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத அன்றைய மணக்குடியில் படம் பார்க்க வேண்டுமென்றால் 7கிமீயில் இருக்கும் புவனகிரிக்கோ, 12 கிமீயில் இருக்கும் சிதம்பரத்திற்கோதான் போக வேண்டும். பேருந்து வசதியே இல்லாத அக்காலங்களில் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு அதில் வைக்கோலை பரப்பி அமர்ந்து கொண்டு எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப் போனாலும் அது ‘திரிசூலம்’ ‘கௌரவம்’ வகை சிவாஜி… (READ MORE)
பழக்கமில்லா தெரியாத உணவகங்களில், எது வயிற்றைக் கெடுக்காதோ அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவதும், தெரிந்த பழகிய உணவகத்தில் புதியதை முயற்சி செய்வதும் என் வெளியூர்ப் பயணங்களில் கடைபிடிக்கப்படும் செய்முறை. ‘சரி! காலை டிஃபனுக்கு இந்த ஒரு வேளைக்கு அரிசி இல்லாத உணவு கிடைக்குதா பாப்போம்!’ என்று இறங்குவது ஓர் உதாரணம். பலமுறை உணவுண்ட சிங்க பெருமாள்… (READ MORE)
‘மாலிக் காபூருக்கும் மாணிக்கவாசகருக்கும் என்ன சம்மந்தம்?’ ‘பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனுக்கும், சோழ தேச எல்லைக்குட்பட்ட புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம்?’ ……. சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார். ‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’ ‘திருப்பெருந்துறை!’ ‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய… (READ MORE)
முன் குறிப்பு : உடல் நலத்தை பெரிதும் கவனித்துக்கொள்ளும் நண்பரொருவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது சில மாதங்களுக்கு முன்பு. வருத்தியெடுத்த அந்த துன்பம் அதோடு போகவில்லை, டைஃபாய்டு அவர் குடலில் செய்துவிட்டுப் போன கோளாறுகளால் இன்னும் தொடர்கிறது துன்பம். குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் நோய்த்தொற்றுக்கே காரணம் என்பது பிறகே கண்டுபிடித்தார்கள். உள் நுழையும் மொத்த வாட்டருக்கும்… (READ MORE)
அண்ணா நகர் ஸ்டார்பக்ஸ் வாசலில் காரில் ஏறப் போனவன், கீழே சாக்கடை பொங்கி வழிவதால் வண்டியை நகர்த்தச் சொல்லி சாலையில் இறங்கி நின்றேன். ‘ஹலோ சார்!’ குரல் கேட்டு திரும்பினால் இன்ப அதிர்ச்சி. அப்பல்லோ, ட்ரிப்பிள் எம் என உயர் ரக பெருமருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும், எழும்பூர் சந்தோஷ் செஸ்ட் ஹாஸ்பிட்டலின் தலைமை… (READ MORE)
ஆழ் தியானம் ஒரு சாதகருக்குள் கொண்டு வந்து ஊற்றும் சக்தியை எந்த புரத பல்நுண்சத்து பானங்களாலும் தர முடியாது. தியானம் ஒருவரின் உடலையும் உடலைத்தாண்டிய சங்கதிகளையும் உயிர்ப்படைய செய்து விடுகிறது. – பரமன் பச்சைமுத்து 28.11.2023
இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிநாடு ப்ராஜெக்டுகள் முடித்து திரும்பிய ராமு பெருமாள், முகுந்தன், நான் ஆகிய மூவரும், ‘பொன்னியின் செல்வன்’ படித்து விட்டு பெங்களூரிலிருந்து காரை எடுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன் ட்ரிப்’ கிளம்பினோம். கோடியக்கரை குழகர் கோவிலையும், மந்தாகினி ஏறிய கலங்கரை விளக்கத்தையும் சோழ இளவரசர்கள் பயணித்த கடலையும் கண்டு வியந்தோம். ஒரு படகில் ஏறி… (READ MORE)
நெல்வயல்கள், வாய்க்கால், வீடுகள், ஓர் அரசுப்பள்ளி என்றிருந்த மணக்குடியில் என்றுமே திரையரங்குகள் இருந்ததில்லை. ஆறு கில மீ் தூரத்தில் கிழக்கு நோக்கி பாயும் வெள்ளாறு. வெள்ளாற்றின் அந்தக் கரையில் இருக்கும் கீரப்பாளையத்தில் ‘வீஆர்கே டாக்கீஸ்’, வெள்ளாற்றின் இக்கரையில் இருக்கும் புவனகிரியில் ‘ரங்கராஜா திரையரங்கம்’ ஆகிய இரண்டுதான் சுற்று வட்டார ஊர்களுக்கே திரையரங்குகள். எம்ஜியார் அரசு விவி… (READ MORE)
சில செய்திகளை செய்திகளாகக் கடக்க முடிவதில்லை. செய்தி படித்து முடித்த பிறகும் செய்து விடுகிறது எதையோ. இதுவரை இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை! வாகனத்தில் அடிபட்டு சாலையிலேயே இறந்து போனார் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான சக்திவேல் என்பவர். வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டார் கணவர், இழப்பீடாவது வாங்கித் தாருங்கள் என்று அழுதபடி விருத்தாசலம் காவல்… (READ MORE)
சைவத்தின் பாற்கொண்ட பெரும் பற்றால் வைணவத்தை இகழ்ந்ததாகவும் தில்லை சித்ரகூடத்தில் வணங்கப்படும் கோவிந்தராசர் சிலையை பிச்சாவரம் பக்கத்தில் கடலில் போட்டதாகவும் குலோத்துங்க சோழனுக்கு வடிவம் தந்திருப்பார் கமல்ஹாசன் தனது ‘தசாவதாரம்’ திரைப்படத்தில். குலோத்துங்கரின் காலத்தில்தான் வீரபாண்டியன் மறைந்து வாழ்ந்ததாகவும் அவருடைய மனைவி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பிரமாதமான புனைவு செய்திருப்பார் அரு. ராமநாதன் தன் ‘வீரபாண்டியன் மனைவி’… (READ MORE)
முன் குறிப்பு: மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை பொருள்கள், துப்பாக்கி, ரத்தம் என லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் வழக்கமான விஷயங்கள் இங்கும் படம் முழுக்க வருகின்றன. இது பற்றி நாம் இங்கு பேசவில்லை. இவற்றைத் தாண்டி படத்தை பற்றிய விமர்சனம் செய்கிறோம். …. குளு குளு இமாச்சல பிரதேசத்தில் மனங்கவர் மனைவியோடும் குளுகுளு குழந்தைகளோடும்… (READ MORE)
எதில் எழுதப் பிடிக்கும் என்று எவரேனும் என்னைக் கேட்டால் ‘அஞ்சல் அட்டை’ என்பது என் பதிலாக இருக்கும். ‘ஷீஃபர்’ பிராண்ட் ‘இங்க் பால் பென்’ அதுவும் கருப்பு மையில் 1.0 அல்லது 0.8 அளவில் எழுதும் பேனா, அது இல்லையென்றால் குறைந்த பட்சம் ‘யூனிபால்’ தயாரிப்பின் யுஎம்153எஸ், யுபி157 அல்லது அதற்கும் மேலுள்ள 1.0 பேனாக்கள்… (READ MORE)
வேலூர் ஆர்யாஸ் காஃபி பற்றி நாம் பதிவிட்டதைப் பார்த்துவிட்டு அவரவர் ஊர் உணவகங்கள் தொடங்கி திருவரங்கம் ‘முரளி காஃபி’ வரை அன்புப் பரிந்துரைகள் அனுப்பித் தள்ளிவிட்டனர் அன்பர்கள். ‘ஆமாம்! கரெக்டா சொன்னீங்க!’ ‘இப்பல்லாம் அந்த அளவுக்கு இல்ல!’ ‘விலை அதிகம்!’ ‘நான் கால்டாக்சி டிரைவர், 5 முறையும் அங்கதான் சாப்ட்டேன்!’ என தனித் தகவல்கள் இன்னும்… (READ MORE)
மாயவரம் காளியாகுடி காஃபி, பெங்களூர் எம்டிஆர் காஃபி, பெங்களூரு அடிகாஸ், ஒரு காலத்தைய சரவண பவன் காஃபி போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சுவையான காஃபி வேலூர் ஆர்யாஸ் காஃபி. இன்றும் அதே சுவை மாறாமல் கிடைக்கிறது. உள்ளே உட்கார்ந்து அவர்கள் கொண்டு வரும் காஃபியை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியே காஃபி போடுமிடத்திலேயே சுடச்சுட… (READ MORE)