Spirituality

பிரார்த்தனை என்பது…

பிரார்த்தனை செய்வதே உங்கள் வேலை. தருவதா இல்லையா என்பது இறைவனின் வேலை. அதையே தருவான் அல்லது அதைவிட சிறப்பானதை பெரிதானதை இறைவன் தருவான். பிரார்த்தனை என்பது இறைவனோடு கொள்ளும் தொடர்பு. பிரார்த்தனை செய்யுங்கள், உங்களுக்காக, உற்றாருக்காக, உடன் இருப்போருக்காக, உலகத்தாருக்காக! உங்களுக்கு பிரார்த்தனை கை கூடட்டும் என்று பிரார்த்திக்கிறேன். – பரமன் பச்சைமுத்து

Spirituality

, , ,

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

கண்ணுக்குத் தெரியா பிணைப்பொன்று

தினசரி செய்யப்படும் மூச்சுப் பயிற்சியும் தவமும் தொடக்கத்தில் நேரடி மாயமந்திரங்கள் எதுவும் புரியாது. ‘சூ… மந்திரக்காளி!’ என்று கையை உயர்த்தினால், எதிரிலிருக்கும் செடியெல்லாம் ஒன்றும் வீழாது. ‘அப்புறம் எதுக்கு பரமன் இதையெல்லாம் செய்யனும்?’ பயிற்சிகள் தொடர தொடர, உள்ளே எதுவோ ஊறும். மனநிலை மாறும், அது வாழ்வை பார்க்கும் விதத்தையே மாற்றியே போடும். பயிற்சிகள் தொடரத்… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

திருவருட்பா

நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) என் பட்டியலில் இருந்த தொடாமல் விட்ட திருவருட்பா நூலை புரட்ட எண்ணி எடுத்தேன் இன்று (அழைப்பு இப்போதுதான் வருகிறது). முதல் பக்கம் அவரது கையெழுத்து, ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயரை சேர்த்து எழுதியிருப்பதை கண்டது என வியப்புடன் நகர்த்தி, முதல் பக்கம் முதல் செய்தி ‘இந்திரிய ஒழுக்கம்’ படித்தேன். ஆடிப் போனேன்…. (READ MORE)

Spirituality, பொரி கடலை

வாழ்க்கை என்பது தேடலா

செந்தில் நாதன்: ‘விடைதேடுவதா வாழ்க்கை, வாழ்க்கை என்பது வாழுவதில்லையா?’ பரமன்: தேடலே வாழ்வாக அமையலாம் சிலருக்கு. தேடிக் கண்டடைதல் கடைசியில் நிகழலாம் சிலருக்கு. தொடக்கத்திலேயே கூட நிகழலாம் இன்னும் சிலருக்கு. கண்டடைய வேண்டியது கைக்கு வந்துவிட்டதே தெரியாமல் கால் கடுக்க ஓடிக்கொண்டேயிருப்பதும் வாழ்க்கையாகி விடுகிறது சிலருக்கு. கண்டடைய ஒன்றுமேயில்லை. ‘தேடித் துழாவ ஒரு துரும்பும் இல்லை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

உருத்திரனும் சிவனும் ஒன்றல்ல, திருவருட்பா வரிகள்

இறைவனை ‘ஏகன்’ என்று சொல்லும் நான் ‘அநேகன்’ என்பதையும் மறுப்பதில்லை.  ஆல் அமர் செல்வர் தட்சினா மூர்த்தியையும் குருவையும் ஒன்றென ஏற்கனவே குழப்பியது போதாதென்று, சிவனும் ருத்திரனும் வேறு வேறு என்பது புரியாமல் இருவரையும் ஒன்றெனவும் குழப்பிக் கொள்கின்றனர் பலர் என மணக்குடித் தம்பிகள் சிலரிடம் சில முறை பகிர்ந்திருக்கிறேன்.  மறுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல்… (READ MORE)

Religion, Spirituality

உன்னத வரம்

இயல்பான சாதாரண நிலையில் இருப்பவனை 20-25 நிமிடங்களில் முற்றிலும் வேறான ஓர் ஆழ்நிலைக்குக் கொண்டு சென்று கிடத்தி அமிழ்த்தி, அதுவும் எழும் முன்பு கிடத்தல் நிலையிலிருந்து கைகளை உயர்த்துகையில் சக்தியை வெள்ளமாக பாய்ச்சி உயர் அனுபவம் தரும் மலர்ச்சி மகா முத்ரா நமக்குக் கிடைத்த ஓர் உன்னத வரம். உடலை மனத்தை அமைதியில் ஆழ்த்தி எடுத்து… (READ MORE)

Spirituality

wp-15927307897578560722994003409731.jpg

யோகா – தினம் 2020

தினம் யோகா உடல் எடை கொண்டு தசை வலிமை செய்தல், தடகளம், ஓட்டம் என சில வித உடற்பயிற்சிகளை கலந்தும் மாற்றி மாற்றியும் செய்யும் எனக்கு மூச்சுப் பயிற்சியோடு இயைந்த யோக ஆசனங்கள் செய்யும் போது ஏற்படும் நிலை எதையும் தாண்டியது. அந்த ஆழ்ந்த சீரான மூச்சும், நெஞ்சுக் குழியை சுற்றிலும் ஏற்படும் உன்னத உணர்வும்,… (READ MORE)

Self Help, Spirituality

இறை நம்பிக்கையென்பது…

இறை நம்பிக்கை என்பதுஇதைக் கொடு அதைக் கொடு என்பதல்ல, கொடுத்ததை முதலில் ஏற்றுக் கொள்வது. இறைவன் மிகப் பெரியவன்! – பரமன் பச்சைமுத்து #Faith #Gratefulness #QuarantineTime #Malarchi #StayPositive #BeInTouchWithPositivity

Spirituality

என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)

Manakkudi Manithargal, Spirituality, பொரி கடலை

, , , , , , , , ,

அத்திவரதர் – பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும்

அத்திவரதரைப் போய் பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்ட என் மனைவியையும் வயதான அத்தையையும் லட்சோபலட்சம் பேர் கூடும் பெருங்கூட்டத்தில் எப்படித் தனியே அனுப்புவது என்று தயங்கையில், ஒரு வாய்ப்பு வந்து கதவைத் தட்டி நின்றது. காஞ்சிபுரத்தில் மலர்ச்சி வகுப்பெடுக்க போகும் நாட்களில் அங்கு தங்கிய நாட்களில் என் விருப்பத் தேர்வு தேவராஜ சுவாமி என்றழைக்கப்படும் வரதராஜப்பெருமாள் கோவிலின்… (READ MORE)

Spirituality

, ,

20190621_1619473270350158394201439.jpg

தினம் யோகா என்பவனின்  யோகா தினம்!

தினம் யோகா என்பவனின் யோகா தினம்! என் தந்தை தினசரி் யோக ஆசனப்பயிற்சிகள் செய்வதைப் பார்த்தே நான் வளர்ந்தேன். வளர வளர யோகம் என்பது வெறும் ஆசனப்பயிற்சிகள் அல்ல வாழ்வியல் முறை என்று உணர்ந்து பழகிய போது வயது நின்று போவதை சக்தி பெருகுவதை உணர்ந்தேன். ‘யோகத்தைக் கொடுத்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நண்பர்களிடமும்… (READ MORE)

Spirituality

, , , , , , ,

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி…

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி உச்சந்தலையில் கவிழ்த்து விடப்படுகிறது, நெற்றிக்கும் உச்சிக்கும் நடுவே சில துளிகள் உள்ளிறங்கி விடுகின்றன போலும், தவத்தில் அமர்ந்த கணங்களில். #தவம் #Meditation பரமன் பச்சைமுத்து 30.04.2018 Www.ParamanIn.com

Spirituality

, ,

சரணடையும் பொழுதில்…

அதிகாலையிலெழுந்து அவனை சரணடைவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. பாசுரங்கள், பதிகங்கள், பாமாலைகளென்ற எந்த சத்தங்களுமின்றி, எதுவுமிலா இவன் எல்லாமுமான அவனை நோக்கி வெறுமனே இருத்தலிலிருந்து குவிப்பது ஓர் உணர்வின் உன்னதம். அங்கே கிடைக்கும் பிணைப்பு அவனருள்! ஆழ்வோம்! #தவம் #தியானம் #சரணடைதல் – பரமன் பச்சைமுத்து திருவண்ணாமலை 31.03.2018 www.ParamanIn.com

Spirituality

, , , , , , , ,

நானற்றுக் கிடந்த பொழுதுகளில்…

நானற்றுக் கிடந்த அந்த பொழுதுகளில் நான் எங்கே போயிருந்தேன், எப்படித் திரும்ப வந்தேன்! பரமன் பச்சைமுத்து 01.11.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

கண்ணுக்குள்ளே கருந்திரை

வெளியே இலகுவாக மூடப் பட்ட இமைகளுக்கு உள்ளே கருந்திரை போர்த்தப்படும் கண்கள் இறுகும் அந்தக் கணம் தொடங்குகிறது உள்முகப்பயணம்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 24.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , ,

கில் த புத்தா…

‘ஈஃப் யூ மீட் அ புத்தா, கில் த புத்தா’ என்று சொன்னவன் எப்பேர்ப்பட்ட ஆசானாக இருந்திருக்கக் கூடும்! #தவம் #தியானம் பரமன் பச்சைமுத்து 20.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , ,

கின்னத்தை கவிழ்த்து மெழுகி…

மெல்ல மெல்ல உணர்வுகள் ஒடுங்கி ஒரு நிலைப்படும் புள்ளிக்கு முன்னே, உயிராற்றல் நிறைந்திருந்த ஒரு கின்னத்தை மேலே கவிழ்த்து உடலில் ஊற்றி மெழுகுவதைப் போன்ற அந்த இணைப்பைத் தாண்டி இனி எந்த உருவம் இருக்கிறது வணங்குவதற்கு! பரமன் பச்சைமுத்து 17.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடலே நானல்ல…

உடலே நானல்ல. இது நான் இப்போது நிறைந்திருக்கும் ஒரு கருவி; அதி உன்னதமான, எனது இப்போதைய, தலையாய கருவி. பரமன் பச்சைமுத்து 16.10.2017 www.ParamanIn.com

Spirituality

, , , ,

தியானம் போதையல்ல…

தியானம் போதையல்ல, ‘தியானத்தில் அமர்கிறேன் நான்’ என்றுக் காட்ட முயற்சிப்பது போதை. விபூதியும், குறிப்பிட்ட நிறத்தை அணிவதும், சின்னங்கள் தரிப்பதுவும் கூட போதையை ஊற்றி வளர்ப்பவைதானே. ஆன்ம பயிற்சி செய்கிறேன் நான் என்று எவர்க்கு காட்டவேண்டும், எதற்கு காட்ட வேண்டும்! பரமன் பச்சைமுத்து 15.10.2017

Spirituality

, , , , ,

சும்மா இருக்க…

‘சும்மா இரு’ என்று சும்மா சொல்லவில்லை அவர்கள். ஏதும் செய்யா சும்மா இருக்கும் நிலை வர நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. #தவம் #தியானம் #Trance பரமன் பச்சைமுத்து 13.10.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , ,

உள்ளே உயிர் ஊற…

உள்ளே உயிர் ஊற வைக்கின்றன தொடர்ந்து செய்யும் மூச்சுப் பயிற்சியும் ஒரு சில நிமிடத் தவநிலையும். பரமன் பச்சைமுத்து 04.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , , ,

உடல் நிலை, உடல் கடந்த நிலை

உயிராற்றல் பாய உடலை வைத்திருப்பது வேறு, உள்ளே கரைந்து கிடப்பது என்பது வேறு. முதலானது இரண்டாவதிற்குக் கூட்டிப்போக உதவலாம், ஆனால் அதுவே இதில்லை. வாய்க்கும் போதே விளங்குகிறது சில ஆழமான உண்மைகள். பரமன் பச்சைமுத்து 03.10.2017

Spirituality

, , , , , , ,

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர்…

தூக்கமல்ல தூக்கத்தைப் போன்றதோர் ஆழ் நிலை. ஓய்வென்றால் அது ஓய்வு. தியானமென்றால் அது தியானம். கண் விழித்ததும் உடல் கொண்டிருக்கும் இறுக்கம் இல்லா தளர்வு உன்னதம். பரமன் பச்சைமுத்து 15.09.2017

Spirituality

, , , , , , ,

நல்லழுகை…

வெறுமனே கிடந்த நிலையிலிருந்து மீண்டெழும் முன் உயர்த்திய கைகளின் வழியே பாய்ந்து கைகளை இறுக்கி முகத்தை தலையை நிறைக்கும் அந்த பிணைப்பு சில சமயம் கதறியழ வைத்துவிடுகிறது. அழுகை… நல்லழுகை! பரமன் பச்சைமுத்து 14.09.2017

Spirituality

, , , , ,

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’…

மூச்சியக்கம் நடைபெறுகிறதா, நின்று விட்டதா!’ என்று மெல்லியதாய் இயங்கும் மனமும் அடங்கிப் போகும் அந்த நிலை அலாதியானது. எவ்வளவு முயற்சி செய்தாலும் விளக்க முடியா அந்நிலையை அனுபவித்தால் உணரலாம். பரமன் பச்சைமுத்து 13.09.2017 Www.ParamanIn.com

Spirituality

, , , , , ,

உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…

யோக ஆசனங்கள் உடல் நிலை பயிற்சிகள். உடல் நிலைப் பயிற்சிகள் உள்ளத்து நிலைப் பயிற்சிகளுக்கு இழுத்துப் போகலாம். மூச்சுப் பயிற்சி உடல் கடந்து உள்ளத்து ஒருநிலைப்பாட்டு நிலைக்கு இழுத்துப் போகலாம். இந்த உடல் நிலை, உள்ளத்து நிலைகளை கடந்தால் வருவது உன்னத நிலை. வெவ்வேறு இயக்கங்களிலிருந்து வெறுமனே இருக்கும் நிலை, உன்னத நிலை. வாய்ப்பது அவனருள்!… (READ MORE)

Spirituality

, , , , , , , ,

சொல்ல என்ன இருக்கிறது

உடலில் சில நூறு சிறு ஊசிகள் இறங்கி மறைந்து அமிழ்ந்து கிடந்த அனுபவத்திலிருந்து வெளிவரும் போது தோன்றுவது ‘சொல்ல என்ன இருக்கிறது!’ #தவம் #தியானம் 02.09.2017

Self Help, Spirituality

, , ,

தினமெழுந்தமர்ந்தால்…

அதிகாலை தினமெழுந்து கண்மூடியிருக்கும் தவம் பயிலப் பயில, குறிப்பிட்ட நேரம் வருகையில் தானாகவே தயாராகும் உடலையும் உள்ளத்தையும் உணர்ந்தல் இனிது. 30.08.2017

Self Help, Spirituality

, , , ,

Marathinayam - Copy.jpg

மரத் தியானம்…

தியானத்திலிருந்து மெதுவே மீண்டு வெளி வருகையில் பால்கனிக்கு பக்கத்தில் நிற்கும் கருவேப்பிலை மரம் கூட தியானத்தில் உறைந்து நிற்பதாய் தோன்றுகிறது. மேற்பக்க கிளையின் இலைகள் காற்றில் ஆடினாலும் வேப்ப மரம் உள்ளே பெரும் அமைதி கொண்டு நின்று தியானிப்பதாகவே தோன்றுகிறது.  தூரத்து மொட்டைமாடியில் காயவைத்த துணிகளை எடுக்கும் யாரோ ஒரு அக்கா மட்டும் ஏன் இத்தனை… (READ MORE)

Self Help, Spirituality

, ,

மாடு துன்பப் படக்கூடாது, மனிதன் துன்பப்படலாமா?: பரமன் பச்சைமுத்து

மாட்டிறைச்சி உண்டார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, மற்ற சிலர் கூடி அடித்துத் தாக்கியுள்ளனர். இடம், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை. தாக்கப் பட்டவர் ரஷீத் என்னும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர். தாக்கியவர்கள், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். … மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை, அவ்வளவு பேர் முன்னிலையில் கூடி அடிப்பது மிருகச் செயல். மாட்டை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , ,

Thiruppugazh - Copy

ஆழ்ந்த வரிகள் – திருப்புகழ்

  ‘அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!’ – திருப்புகழ் வரிகளின் ஆழமான அர்த்தம் ஆடிப்போகச் செய்கிறது!

Religion, Spirituality

, ,

Nataraja - Copy

திருவாதிரை திருநாள் இன்று!

அடைமழை பெய்தபோதும் ஆடற்பெருமான் அவனாகவே சென்று அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத் திருவாதிரை திருநாள் இன்று! ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி ஆடி வருவதை காணக் கண் ஆயிரம் வேண்டும். அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,… அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும். அமைதி வரட்டும்! : பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality

, , , ,

Xmas1 - Copy

வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…

மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே…   வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்!   தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே…   எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே…   முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

, , , , , ,

Soorasamharam

இன்று சூரசம்ஹாரம்

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் தனது வெஹிக்கிள் டெலிவரி எடுத்த தினம் இன்று. எத்தனையோ யுகங்களுக்கு முன்பு, ‘மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச,’ என்று திருப்புகழில் வருவதுபோல் செந்தூர் கடற்கரையில் நின்று அவன் வடிவேலெறிந்த தினம். இன்று செந்தூரின் கடற்கரை சூரசம்ஹார விழாவால் அல்லோலகல்லோலப் படும். நீல சமுத்திரமும், மனித சமுத்திரமும் சங்கமிக்கும். நாள் முழுக்க… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,

Eid Mubrak

Eid Mubarak!!!

    எல்லாம் வல்லவனே,என்னைப் படைத்தவனே…எல்லாவற்றுக்கும் மேலானவனே, எல்லை இல்லாதானே…அகிலத்தையும், பெருங்கடலையும் படைத்தஅருட்பெருங்கடலே… வெறும் இந்திரியத் துளியிலிருந்து கரு, உரு, உயிர், வாழ்வு தந்தனையே… ஏதோ ஒன்றாகப் படைக்காமல் எல்லாம் கிடைக்கப் பொருந்திய மனிதனாகப் படைத்தாயே! நன்றி! உணவை, பானத்தை, இச்சையை துறந்து இறையெண்ணம் வளர்த்து தூய்மை கொள்ளும் ஈகைப் பெருநாளில் வணங்கித் தொழுகிறேன் இறைவா! நல்வழிப்படுத்து,… (READ MORE)

Religion, Spirituality, கவிதை

,