Monthly Archive: November 2020

வேட்டி மறைப்பிற்கு இருபுறம் நின்றபடி திருமணம்

நாதஸ்வரமும் தவிலும் இசைக்கத் தொடங்கிய உடனேயே ஒரு இடமானது நல்நிகழ்வுக்குத் தயாராகிவிடுகிறது.  லாஷ்கர காந்தார தேசத்திலிருந்து படையெடுத்து வந்து டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களுக்கு நாதஸ்வர இசை புதியதாகவும் இடைஞ்சலாகவும் இருந்ததென்றும் மாலிக்காபூர் மட்டும் அதில் மயங்கிக் கிடந்தான் என்றும் சாகித்ய விருது பெற்ற தனது ‘சஞ்சாரம்’ புனைவில் எழுதியிருப்பார் எஸ்ரா.நாதஸ்வரமும் தவிலும் மிக எளிமையான… (READ MORE)

Uncategorized

பாஜக தேர்தல் கணக்கு

சென்னை வந்த போது முதல்வர் வரவேற்க, திரும்பிப் போகும் போது துணை முதல்வர் வழியனுப்ப என்று நிகழ்ந்த அமித்ஷாவின் தமிழக வருகை இரண்டு சங்கதிகளை வெளிப்படையாக செய்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அதிமுக தங்கள் வசதிக்கு பாஜகவை நடத்த முடியாது. ‘திமுக எதிரி பாஜக’ என்று நிலையை தொடங்கி வைத்தாயிற்று எதிர்காலக் கணக்கை குறிவைத்து…. (READ MORE)

Politics

செப்பரம்பாக்கம் திறந்தால் நல்லது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்… வணக்கம். ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது. 2015ல்…ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது. இன்று 2020ல்…தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

மலர்ச்சி வகுப்பில் நேரடியாய் அமர்ந்து அமிழ்வது ஓரனுபவம்!

சோகம், வலி, ஏமாற்றம் என்றுஅழுகையில் பல்வேறு வகைகள் உண்டு.  தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்து உணர்ந்து வருவது ஒரு வகை அழுகை.  தனக்கு எதுவும் நடக்காத போதிலும், நல் ஆழமான உணர்ச்சியின் மிகுதியாக பொசுக்கென வெளிப்படும் நேரிய அழுகை பிறிதொரு வகை. இவ்விரு வகையும் உணரப்பட்டது சென்ற சனிக்கிழமை ‘வளர்ச்சிப்பாதை’யில். உறவுகள் பற்றிய வளர்ச்சிப்பாதை சிலரை… (READ MORE)

Uncategorized

wp-1606070319625.jpg

‘சூரரைப் போற்று’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து.

‘ஒரு கர்நாடக பிராமணரை மதுரையின் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெரியாரிய மனிதராக காட்டியிருப்பது நியாயமா?’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்?’ போன்ற கேள்விகளை எழுப்புகிறவர்கள் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட வரிகளையும் சில காட்சிகளின் போது இடப்பக்க மூலையில் போடப்படும் வரிகளையும் சரியாக கவனிக்கவில்லை என்பது புரிகிறது. மேற்கண்ட கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் படத்தைப் பார்த்தாலும், உங்களை… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , ,

அடிக்கடி தேர்தல் வரட்டுமேயென்கிறது அடிமனது

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதிச் செலவை அரசே ஏற்கும், சுழல் முறையில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர். இப்படியொன்று நடப்பதற்கு காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை முன் வைத்தே ஆக வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்ததன்… (READ MORE)

Uncategorized

காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு…

காவல்துறையில் பணி புரிவோருக்கு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. (சேலத்திலோ எங்கோ ஒரு காவல் ஆணையர் இதை முன்பு முயன்று பார்த்ததாக நினைவு) காவல்துறையினரின் மனவழுத்தத்தைக் குறித்து எழுதி மனு தாக்கல் செய்த அந்த மனிதருக்கு நன்றி.அதை விசாரித்து… (READ MORE)

பொரி கடலை

wp-1605512815279.jpg

‘வைரமுத்து சிறுகதைகள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இருநூறு பக்க நாவல் எழுதுவது எளிது, அதை வெட்டிச் சுருக்கி சிறுகதையாக்குவது பெருங்காரியம் எனும் பொருள்பட சுஜாதா சொல்லியிருந்தார் எப்போதோ.  ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே.  ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில பக்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர… (READ MORE)

Books Review

, , , ,

சென்னை நிலத்தடி நீர் உயர்வு…

அக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது. கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

பளபள முகம்

‘க்வாலியர்…!’ பாவாடை மாமாவைப் பற்றிப் பேசுவதானால் ராமலிங்கம் சித்தப்பா சொல்லும் முக்கிய வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். தெரிந்த மனிதர்களையும் அறிந்து கொள்ள சிலர் உதவுகிறார்கள். இளம் பிராயத்தில் நான் விரும்பி நெருங்கி இருந்தது ராஜவேல் சித்தப்பாவோடும் ராமலிங்கம் சித்தப்பாவோடும்தான். ராமலிங்கம் சித்தப்பாவுக்கு பாவாடை மாமா என்றால் பெருமை, மதிப்பு. ராமலிங்கம் சித்தப்பாவால் பாவாடை மாமா மீது… (READ MORE)

Uncategorized

முழுமலர்ச்சி Batch 49

இரண்டு தொலைபேசிக் கவுன்சிலிங்கள், பிசினஸ் பக்கம் கட்டுரை எழுதியது, ஒரு வழிகாட்டல் உதவி என்பதைத் தாண்டி வேறு சில கூடுதல் நிகழ்வுகளாலும் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்தது. இறைவனின் அருளால், முழுமலர்ச்சி திரள் 49 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது என்பது நல்ல நிகழ்வு. இரண்டாவது வகுப்பான இன்றே மனம் விட்டு வாய் விட்டழுது பகிர்வு… (READ MORE)

Uncategorized

மு பச்சைமுத்து அறக்கட்டளை 10வது அன்னதானம்

🌸🌸 🌸 இன்று ( ஐப்பசி மாதம் ) மிருகசீரிடம். வடபழனி சிவன் கோயில் தெருவிலும், இன்னும் சில இடங்களிலும்தந்தையின் பெயரால் செய்யப்படும் 10வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது சில மணி நேரங்களுக்கு மழையை நிறுத்தி உணவு பெறுவோருக்கும் நாம் வழங்குவதற்கும் ஏதுவாக வசதி செய்து தந்தான் இறைவன். இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க! :மு…. (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

வண்டலூர் ஏரி உயிர் பெறுகிறது

102 ஏக்கர் பரப்பளவுள்ள 100 ஏக்கர் விவசாயத்திற்கு பாசனம் தந்த வண்டலூர் ஏரி, பொது மக்கள் குப்பைகளை கொட்டி வந்ததாலும் வண்டலூர் ஊராட்சி குப்பையைக் கொட்டி எரித்ததாலும்(!!!) தனியார் ஆலைக்கழிவுகள் கொட்டப்பட்டதாலும் துர்ந்து 60 ஏக்கர் விவசாயப் பானத்திற்கு மட்டும் அளவிற்குச் சுருங்கிப் போனது. இந்தியன் சுற்றுச்சூழல் அறக்கட்டளை என்ற தனியார் நற்சங்கம் இறங்கி வேலை… (READ MORE)

Uncategorized

திறந்திருக்க வேண்டாம் திரையரங்குகளை

மெரீனா கடற்கரை, தி நகர் ரெங்கநாதன் தெரு என பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பள்ளிகள் 16ஆம் தேதியிலிருந்து  திறக்கலாம், புறநகர் ரயில்கள் ஓடலாம் என்பனவும் தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்தும் இல்லாமல் புறநகர் ரயில்களும் இல்லாமல் தவித்த சிறு குறு வியாபாரிகளுக்கு இது நற்செய்தி. பள்ளிகளைப் பொறுத்த… (READ MORE)

Uncategorized

இலங்கை மஞ்சள் மூட்டைகள்

மீன் பிடி நாட்டுப் படகில் நேற்றும், இலங்கைக்குக் கடத்த முயன்ற 2,000 கிலோ மஞ்சளை (73 மூட்டைகள்) பறிமுதல் செய்திருக்கிறார்கள் ராமேசுவரத்தில் என்று செய்திகள் வந்துள்ளன. இது வரையில் 8,000 கிலோ பிடிக்கப்பட்டுள்ளனவாம். சமீபமாக அடிக்கடி ‘இலங்கைக்கு மஞ்சள் மூட்டை கடத்தல்’ வகை செய்திகள் வருகின்றனவே! 😯

Uncategorized