Monthly Archive: July 2020

சிரிக்கிறார்கள் முன்னோர்களும்

தான் வெற்றி பெற்ற போது ‘உழைப்பு’ என்றும்அடுத்தவர் வெற்றி பெறும் போது ‘முன்னோர்கள் ஆசி!’ என்றும்காரண சாத்திரம் சொல்கிறார் உறவுக்காரரொருவர் சிரிக்கிறேன்,அவரது முன்னோர்களும் சிரிக்கிறார்கள்என்னுடன் சேர்ந்து! பரமன் பச்சைமுத்து30.07.2020 Facebook.com/ParamanPage

கவிதை

ஆடி சித்திரை…

வறுமை நிலையின் காரணமாக அந்த மனிதன் புவனகிரியில் ஒரு தையல்கடை பாயிடம் பொத்தான் கட்டுவது காஜா எடுப்பது போன்றவற்றை பகுதி நேர வேலையாகச் செய்து கொண்டிருந்தார்.  ஓர் ஆடி மாதத்தில், கர்ப்பிணியான அவரது மனைவியை மாட்டு வண்டியில் வைத்து மணக்குடியிலிருந்து புவனகிரி வரை கூட்டி வந்துவிட்டார். புவனகிரி பாலத்தில் நின்று சிதம்பரம் போக ‘கூட்டமில்லாத பேருந்துக்காக’  … (READ MORE)

Uncategorized

‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்!’

கொரோனா தீ நுண்மி தடுப்பூசிக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது. ‘கோவாக்சின்’ ஊசியும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியும் மக்கள் மீது சோதனை என்ற கட்டத்தில் இருக்க, மருத்துவ உலகம் நமக்கு ஏற்கனவே பழக்கமான ஒரு தடுப்பூசியை சொல்லி கட்டை விரலை உயர்த்துகிறது.  தட்டம்மை, அம்மைக்கட்டு, ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மைக்காக இதுவரை குழந்தைகளுக்குப் போடப்பட்ட… (READ MORE)

Uncategorized

பள்ளிச்சிறார்களுக்குக் காலையுணவுத் திட்டம்…

கர்நாடகாவின் கிராமப்புறத்து பள்ளிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பள்ளிச் சிறார்களுக்கு காலையுணவு தரும் திட்டத்தை ‘அக்சய பாத்ரா’ என்ற பெயர் கொண்டு செயல்படுத்தியது கிருஷ்ண பக்தி இயக்கமான ‘இஸ்க்கான்’, கிராமப்புற சிறார்களுக்கு ஊட்டச் சத்து கிடைத்தது. பலரால் பாராட்டப்பட்ட திட்டமது.(சில பள்ளிகளில் காலை உணவும் மதிய உணவும், பல பள்ளிகளில் மதிய உணவு மட்டும் ) புதுவையில்… (READ MORE)

Uncategorized

20.07.2020

பழைய படங்களைப் பார்ப்பது பல சமயங்களில் பரவசம் தரும்.

    பழைய படங்களைப் பார்ப்பது பல சமயங்களில் பரவசம் தரும். மணக்குடியின் வடக்குவெளி வயலின் பேரு வரப்பின் பாட்டையோன்றில் என் மகள்களோடும் சிவப்பிரியன் என்னும் குட்டியோடும் அமர்ந்திருந்த ஒரு மாலையில் எடுத்த படம். எடுத்தது மோகநேச்வரன் எனும் குரு என்று நினைவு. 20.07.2010 என்று நினைவூட்டி சொல்கிறது ஃபேஸ்புக். படத்திலிருக்கும் பிள்ளைகள் மூவரும் வளர்ந்து… (READ MORE)

Photos

குளித்து முடித்து நிற்கிறது மரம்

குளித்து முடித்து சொட்ட சொட்ட நிற்கிறது மரம் குளிப்பாட்டிய மழையன்னைவேறு எங்கோ சென்றுவிட காற்றண்ணனோசூரிய அப்பனோ துவட்டிவிட வரட்டுமெனகாத்திருக்கிறது மரம் – பரமன் பச்சைமுத்துசென்னை19.07.2020

கவிதை

,

6வது அன்னதானம்

🌸 இன்று ( ஆடி மாதம் ) மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் 6வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது ஊரடங்கின் சில விதிகள் இன்னும் இருக்கிறது என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர், வடபழனி… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-15950560253703056595047267885322.jpg

‘மூல விதைகள்’ வெளியீடு

‘மூல விதைகள்’ நூலின் இணையப் பயன்பாட்டு நூல் பிரதியை, மு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக கீழமணக்குடியில் இன்று 18.07.2020 காலை திரு. முத்தையா முருகேசன் அவர்கள் வெளியிட்டார்கள். வாழ்க! வளர்க! – பரமன் பச்சைமுத்து சென்னை 18.07.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

‘மூல விதைகள்’ வெளியீடு

🌸🌸 🌸 🌸 ஒவ்வொரு முதியவன் இறக்கும் போதும், அவனோடே ஓர் உறவு வட்டமும், குலக் கதைகளும் குடும்பம் உயர்ந்த கதைகளும் மறைந்து போகின்றன. இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாவிட்டால் அவை அப்படியே புதையுண்டு போகின்றன. உங்கள் தந்தையைப் பற்றி எவ்வளவு தெரியும்? ‘அவரப் பத்தி எனக்குத்தான் தெரியும், இத்தனை வருஷம் ஒண்ணாவே வாழ்ந்துருக்கேன், நான்… (READ MORE)

Uncategorized, மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1594258658641659303361867114202.jpg

போன நிமிடம் வரை பறவையாயிருந்தது…

போன நிமிடம் வரை பறவையாகபலகனியின் தரையிலிப்போது சிறகாக எந்தப் பறவை அஞ்சல் செய்ததோஎன் வீட்டு முகவரியில் ‘வூகான் இறைஞ்சிச் சந்தையில் புறாவிடமிருந்து பரவியது புதிய வைரஸ்’  ஒரு வைரல் செய்தி வரலாம் நாளைபுறாக்கள் புறக்கணிக்கப்படலாம் அவ்வேளை அதற்குள் சிறகைக் கையிலெடு சிறுவர்களைப் போலச் சிறகை சிலாகிசிவப்பிந்தியனைப் போல சிறகை அணி வாழ்வோம் வா! – பரமன்… (READ MORE)

கவிதை

, , ,

wp-15939352892783999563993329093403.jpg

மிளகாய்ச்செடி கதை

வடக்குப் பக்க பலகனியில்வந்துவிழும் கொஞ்சூண்டு சூரியஒளியில்வைத்தேன் ஒரு தொட்டி மிளகாய்ச்செடி கிடைக்கும் கொஞ்ச  வெய்யிலைதுணி காய இந்நேரம்செடி காய இந்நேரம் என்று மனைவியோடு பேசிப் பகுத்தேன் வீட்டிலிருக்கும் வேளையெல்லாம் வெயிலுக்கு நகர்த்தி நகர்த்திவியர்த்து மகிழ்ந்தேன் வெள்ளை வெளேரென்று விரிந்து வந்தன பதினைந்து பூக்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிரித்தன என்னுடலின் அங்கங்கள் பூக்கும் பிறகு காய்க்கும் என்றுகனியாகும்… (READ MORE)

கவிதை

, , , , , , , ,