Monthly Archive: June 2020

பேய்கள் தோர்னமெண்ட்

பாத்ரூமிற்குள் நுழையும் போதெல்லாம் பித்தளை தாயக்கட்டைகள் உருளும் சத்தம் கேட்கிறது. முன்பெல்லாம் பிற்பகலில் மட்டுமே கேட்டது இப்போது பின்னிரவிலும் கேட்கிறது. … ‘ஊரடங்கு காலம், வயது முதிர்வு வெளியே போகவேக் கூடாது என்று வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் எச்சரித்துள்ளதால்,  வீட்டிலேயே அடைந்து கிடங்கும் நேர் கீழ்த்தளத்துப் பெருசுகள் தாயக்கட்டைகளை எடுத்து விட்டது ஏப்ரலிலிருந்து. பழகப் பழக எல்லா… (READ MORE)

Uncategorized

என் அடுக்ககத்தி்ற்கு வந்த கொரோனா போய்விடும்

என் அடுக்ககக் குடியிருப்பின் கீழ்த்தளத்திலிருப்பவருக்கு (நான் இருப்பது இரண்டாவது தளத்தில்) கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிலுள்ளோருக்கு செய்த சோதனை முடிவில் அவர்கள் அனைவருக்கும் வந்து விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. என் அடுக்கக் கட்டிடமே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி சொல்லுகிறது. தமிழகத்தில் குணமாவோரின் எண்ணிக்கை கணிசமான அளவிலேயே உள்ளது…. (READ MORE)

Uncategorized

கொரோனா காலத்தில் நடந்த எளிமையான திருமணம்

🌸 நாதஸ்வரத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ இசைக்க கூடவே தவிலும் கலக்க,‘அடேயப்பா! ரொம்ப நாள் கழிச்சி ஒரு கல்யாணத்துக்கு வர்றோம்!’ என்ற எண்ணம் வந்தது. 40 பேருக்கு அரசு அனுமதியளிக்கிறது என்ற போதிலும், அதில் பாதியளவே கூடியிருந்தனர் வீட்டிலேயே நடைபெறும் திருமணத்திற்கு. மலர்ச்சி மாணவர் ஜெகதீசனின் மகள் திருமணம், அவரும் மலர்ச்சி மாணவி. ஊரடங்கு நேரமென்பதால்… (READ MORE)

Uncategorized

”தாராவியில் நடந்தது தரமான சம்பவம்!”

‘இத்தனையோண்டு சதுரடிக்குள் இவ்ளோ பேர்!’ என்றளவு மக்கள் நெருக்கம் மிகுந்த தனிநபர் இடைவெளியே சாத்தியமில்லை என்ற நிலை கொண்ட ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில் கொரோணா தீ நுண்மி தீயின் நாவுகளைப் போல நாலாபுறமும் பற்றிப் பரவும் கொழுந்து விட்டு வளரவே செய்யும் என்கிறார்கள் ஊடகவியலாளர்களும் மருத்துவர்களும். வடசென்னையே இப்படியென்றால் அதைப்போல… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-15927307897578560722994003409731.jpg

யோகா – தினம் 2020

தினம் யோகா உடல் எடை கொண்டு தசை வலிமை செய்தல், தடகளம், ஓட்டம் என சில வித உடற்பயிற்சிகளை கலந்தும் மாற்றி மாற்றியும் செய்யும் எனக்கு மூச்சுப் பயிற்சியோடு இயைந்த யோக ஆசனங்கள் செய்யும் போது ஏற்படும் நிலை எதையும் தாண்டியது. அந்த ஆழ்ந்த சீரான மூச்சும், நெஞ்சுக் குழியை சுற்றிலும் ஏற்படும் உன்னத உணர்வும்,… (READ MORE)

Self Help, Spirituality

ஐந்தாவது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் நிறைவேற்றப்பட்டது முழு ஊரடங்கு என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர், வடபழனி சிவன் கோயில் அருகில் தங்கியிருப்போர் எனதேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

அரும்புகள், மொட்டுகள் – மலர்ச்சி வகுப்புகள் முடித்த இளம்பிள்ளைகளுக்கான வகுப்பு

Malarchi Follow up class for Adolescents ! அரும்புகள், மொட்டுகள் – மலர்ச்சி வகுப்புகள் முடித்த இளம்பிள்ளைகளுக்கான வகுப்பு சிறு பிள்ளைகள் பெரிய  உள்ளத்தையும் கூரிய அறிவையும் கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி! – பரமன் பச்சைமுத்து07.06.2020 #MalarchipPaathai#Malarchi#MalarchiKids#BeWithPositivity#ParamanSession Facebook.com/ParamanPage

Uncategorized

கொரோனா செப்டம்பர் வரை நீளும்

சென்னையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை என்றிருக்கும் நிலையில், நோய்த்தொற்று குறையாது அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பைச் சொல்லியிருக்கிறது எம்ஜியார் பல்கலைக்கழகம்.  ஜூலை 15ல்  1,50,254 பேர்கள் சென்னையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள், இறப்பு எண்ணிக்கை 1,654ஆக இருக்கும், செப்டம்பரில் தொற்று உச்சத்தைத் தொடும், அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்கிறது அவர்களது கணிப்பு.

Uncategorized

பறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்

பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கிய அங்கம் பறவைகளும் பறவைகள் வாழும் இடங்களும். பறவை கூடும் இடங்களை பறவைகளுக்காகவென்று ஒதுக்கி வைப்பதே பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் மனித குலத்திற்கும் நாம் செய்யும் பேருதவி. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நிலத்தை தொழிற்சாலைக்கு ஒதுக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவை மதிப்பிற்குரிய முதல்வரும் அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பறவை சூழ் உலகு பாதுகாக்கப்… (READ MORE)

பொரி கடலை

,