அம்மா – ஆலய தரிசனம்

குன்றுதோறாடல் போயிருக்கிறீர்களா?

குன்றுதோறாடல் – போயிருக்கிறீர்களா,கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உருவ வழிபாடு கூடாது, மதச் சின்னங்கள் கூடாது, சோதியையே வணங்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன வள்ளலார் இளம்வயதில் தியானத்தில் இருந்த போது காட்சி தந்ததாக சொல்லப்படுவது எந்த கடவுளர் தெரியுமா? முருகனுக்கு திருமணம் எங்கே நடந்தது? ஒன்றுமில்லாத குட்டியூண்டு தெருமுனை முருகன் கோவில்களிலெல்லாம் சூரசம்ஹாரம் நடத்தும் போது, ஒரு பெரிய… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , ,

திருவேரகம் : மனுஷன் கட்டி உருவாக்கின மலையா இது!?

‘என்னாதூ பரமன், மனுஷன் கட்டி உருவாக்கின மலையா இது? இது ஒரு மலைன்னு நெனச்சிட்டு இருக்கேன் இத்தனை வருஷமா? எவ்வளோ தடவ இங்க இந்த கோவிலுக்கு வந்துருக்கேன், தெரியலையே!’ மலைகளே இல்லாத சோழ தஞ்சைப்பகுதில் ஒரேயொரு மலைக்குன்று மட்டும் எப்படி வந்தது? திருவேரகம் போயிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எவனாயிருந்தாலும் சிவனாயிருந்தாலும் ஆசிரியனுக்கு பணிவு முறைமை தரவேண்டும் என்று… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , , ,

மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் குடி…

‘என்னது, பழநி அறுபடை வீடு பட்டியல்லயே இல்லையா? என்ன சொல்றீங்க பரமன்?’ … முல்லைக்குத் தேர் கொடுத்த பரம்பின் பாரி போல, மயிலுக்கு போர்வை தந்தவன் பொதினியின் வையாவி கோப்பெரும் பேகன். நாம் பாடங்களிலும் சங்க இலக்கியங்களும் படித்த கடையேழு வள்ளல்களில் ஒருவனான இந்த பேகனின் குடி ஆவியர்குடி. இவர்களது பெயராலேயே இந்த பகுதியின் (ஊர்)… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , , ,

சோலைமலை இளவரசன்…

மதுரையிலிருந்து பயணித்த ஔவையார் பயணக்களைப்பிலும் பசியிலும் வாடி மரங்களடர்ந்த ஒரு சோலையை நாட, அங்கே… நிற்க. ஔவையார் என்பவர் ஒருவரல்ல, ஆத்திச்சூடி பாடியது 12 ஆம் நூற்றாண்டின் ஔவை, விநாயகர் அகவல் பாடியது 14 ஆம் நூற்றாண்டின் ஔவை, அதியமானிடம் நெல்லிக் கனி பெற்றது பண்டைத் தமிழ் ஔவை என வேறு வேறு காலகட்டங்களில் தமிழ்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , ,

கைகளில் ஏந்தி சுமக்கும்…

ஐயிரண்டு திங்கள் கருவில் சுமந்தவரை ஆயுள் முழுக்க தன் நெஞ்சில் சுமக்கிறவரை கைகளில் ஏந்தி சுமக்கும் அனுபவம் பெற்றேன் இன்றே நிமிடங்களுக்கு அனுபவம் கூட்டி அடர்த்தியாக்கினேன் நிகழ்ந்ததை கடந்தும் பதிந்து மகிழ்கிறேன் இன்னொரு சென்மமிருந்தால் நீ எனக்கு குழந்தையாய் இல்லை இன்றே இப்போதே சுமக்கிறேன் இக்கணமே வாழ்கிறேன் வெட்கமில்லை, கூச்சமில்லை ஆர்வமும் அன்பும் மட்டுமே! இறைவா… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், ஆ...!, கவிதை

50 வருஷத்துக்குப் பிறகு…

‘தம்பி, மணக்குடியிலேருந்து எல்லாரும் வந்தாங்க. ரெண்டரை வயசு வால் பையனையும் ஏழரை வயசு பொண்ணையும் கூட்டிட்டு கணவன், மாமியாரோடு ஒரு மனுஷியும் வந்தா. முருகனை கும்புடலாம்னு வந்தா.’ ‘சரி!’ ‘இதோ இந்த இடத்தில, இந்த இடத்திலதான் அவளை மட்டும் இங்கயே நிறுத்திட்டு, குழந்தைகளை தூக்கிட்டு கோயிலுக்குப் போய்ட்டாங்க கணவனும் மாமியாரும் மத்தவங்களோட.’ ‘ஏன்? ஏன் அந்த… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , ,

அலைவாய் போயிருக்கிறீர்களா?

அலைவாய் போயிருக்கிறீர்களா? சரி, சீரலைவாய் தெரியுமா? தொல்காப்பியமே மிகவும் பழமையானது. அந்தப் பழந்தமிழ் தொல்காப்பியமே ஒரு கோவிலைக் குறிப்பிட்டால், அது எவ்வளவு பழமையாக இருக்கும்? கடற்கரையிலிருந்து வெறும் 65மீ ஒரு கோவில், அது கூட பரவாயில்லை தரை மட்டத்திலிருந்து 10 அடி கீழேயும் கடல் மட்டத்திலிருந்து 15 அடி கீழேயும் கருவறை மூலவர் குகை, ஆனால்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

திருவாசக மூல ஓலைச்சுவடி

‘மாலிக் காபூருக்கும் மாணிக்கவாசகருக்கும் என்ன சம்மந்தம்?’ ‘பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனுக்கும், சோழ தேச எல்லைக்குட்பட்ட புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம்?’ ……. சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார். ‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’ ‘திருப்பெருந்துறை!’ ‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , ,

wp-1681210878363.jpg

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?  சிறுவயதில் இந்தப் பெயரை என் அப்பா வைத்திருந்த வாரியார் எழுதிய ‘சிவனருட்செல்வர்’ நூலில் படித்த போதே பிடித்தது. ‘பொன் முகலி!’ ‘பொன்முகலி!’ என்று சொல்லிக்கொள்வேன். பலமுறை இந்த நதியை நீங்கள் கடந்து போயிருக்கக் கூடும். ( அதற்கு முன் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. கேளுங்களேன்) …. கிமு 3102… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , ,

wp-1678883705545.jpg

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…

‘ஹாலாஸ்ய மகாமித்யம்’ என்றொரு வடமொழி நூல் இருக்கிறதாம். நீங்களாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வியாசர் எழுதிய ‘ஸகந்த புராணம்’ பற்றி ? (நீங்களும் என்னை மாதிரிதானோ!ம்ம்!)சரி, ஏ பி நாகராஜன் இயக்கி நடிகர்திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? ‘பரமன், இது எல்லாத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்கிறீர்களா?  இது அனைத்தையும் சம்பந்தப்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

உலகின் முதல் சிவாலயம்

அம்மா – ஆலய தரிசனம் : 4 பாண்டியர்களின் போற்றுதலிலும், ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அரவணைப்பிலும் இருந்த ஆலயமும், உலகின் முதல் சிவன் ஆலயம் என்றும், திருவாசகம் இயற்றிய பின்னர் திருவண்ணாமலை, திருவிடைமருதூர் வழியே சிதம்பரத்தில் போய் கலப்பதற்கு முன்பு முதன் முதலில் மாணிக்கவாசகர் வந்திருந்த ஆலயம் என்றும் திருவாசகத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டது எனப்படும்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

சுந்தரர் நின்ற மகிழம் மரத்தடியில்…

எப்போதும் மார்பில் தொங்கும்படி லிங்கம் கட்டிக் கொண்டு தினமும் அதற்கு பூசனைகள் வழிபாடு செய்பவர் என் அம்மா. ‘அம்மா, சுந்தரமூர்த்தி நாயன்மார் சங்கிலி நாச்சியாரைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சிவன் முன் சத்தியம் பண்ணது எந்த மரத்தடியில?’ ‘மகிழம்… மகிழம் மரத்தடியில!’ ‘அங்கதான் போறோம் இப்போ! திருவொற்றியூர் போறோம்!’ …. வள்ளலார், ராமலிங்கமாக தன் அண்ணன் வீட்டில்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

தகதக தகதகவென ஆடவா…

‘தகதக தகதகவென ஆடவாசிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’ என் தந்தை மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இது. சிவாஜி கணேசனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மேடை நாடகம் போல, என் தந்தைக்கு ‘காரைக்கால் அம்மையார்’.  1970களின் இறுதியிலேயே ஒரு வில்லுப்பாட்டு இசைக் குழுவைத் தொடங்கி சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான என் தந்தை. கீழமணக்குடி… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , ,