Monthly Archive: December 2020

மக்கள், பல்லுயிர் சூழல் முக்கியமல்லவா!

மத்திய அமைச்சர் தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு ஒன்றாக இணைந்து அவர்களது உணவை கரண்டியால் கிளறியும் உண்டும் மகிழ்கிறார். இரண்டு சட்டங்களை மாற்ற ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதென்றும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை சில நாட்களில் தொடரும் என்றும் இன்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ‘விவசாயிகள்… விவசாயிகள்!’ என்று உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் அமைதியாயிருப்பர்…. (READ MORE)

Politics

wp-1609194706920.jpg

சிவ வழிபாட்டு மாலை

பதிப்புரை சிவ ஆகமங்களின்படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த என் தந்தை மு. பச்சைமுத்து அவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் திருமுறைகள் ஓதினார், ஓதச் செய்தார், ஓதப்பட வேண்டுமென்று விரும்பினார். கோவில் குடமுழுக்கு, வேள்வி, வீட்டில் பூசை, இறப்பு என எல்லா நிகழ்வுகளுக்கும் சரியான  திருமுறை, பஞ்ச புராணப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தித் தருவார்.அவர் ஆசைப்பட்டு செய்த… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

20201228_072125.jpg

17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…

பெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார். அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

வைகுந்த ஏகாதசி அடையாறில்

பலவிதமான மக்கள் ஓரிடத்தில் குவிந்து இருப்பதை வெறுமனே கவனிக்கப் பிடிக்கும் எனக்கு. எல்லோரும் குளித்து உடை திருத்தி ஒரே ஒழுங்கோடு மனது குவித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உற்சாகம் வராதா என்ன! அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் இன்று காலை அந்த சிறப்பு உற்சாகம் எனக்கு. வைகுந்த ஏகாதசி, பரம்பத வாசல் திறப்பு என… (READ MORE)

Uncategorized

ராம்ஜீயை நினைத்துக் கொள்வேன்…

‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம்! வாங்க!’ ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.  லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம்.  டிசம்பர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து… (READ MORE)

Margazhi

, , , , , , , , ,

wp-1608481927926.jpg

தூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா?

குட்டிப் பையனாக இருக்கும் போது வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் முன்பு வெறுந்தரையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா? கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா!’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள்?  ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா!’… (READ MORE)

Margazhi

, , , , , ,

தில்லை நடராசரின் தேர் திருவீதியுலா வரட்டும்

ஒரு புறம் மார்கழித் திருவாதிரை தில்லை நடராசர் உற்சவத்திற்கு கோவில் தயாராகிறது. அதற்கு முந்தைய நாள் நடராஜர் தேரை இயக்குவதற்கு கொரோனாவைக் காரணம் சொல்லி அனுமதி மறுக்கப் படுகிறது.  வடம் பிடித்து இழுப்பதில் தொற்று வந்துவிடும் எனக்கூறி என்எல்சி பொறியாளர்களை வைத்து தேரை இயந்திரங்கள் மூலம் இழுக்க வைக்க முடியுமா என்று மதிப்பீடு செய்வதாக தகவல்… (READ MORE)

பொரி கடலை

, ,

images-18.jpeg

கார்த்தி சுற்றிருக்கிறீர்களா!

‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது!’ ‘ஒரு நாளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’ எனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர். உறுதியாகவும் நீள்  வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து,  உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச்… (READ MORE)

Margazhi, Uncategorized

, ,

சில கணங்கள் கிடைக்கப்பெற்றாலும்…

‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.  என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.  பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, , , ,

பசுஞ்சாண பூசணிப்பூ

நம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?  அதுவும் நீங்கள்  அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால்! அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, ,

சில மனிதர்கள்…

‘இந்நேரம் பாடத் தொடங்கியிருப்பார்…!’ அதிகாலை நீராடி வேட்டியுடுத்தும் போதே அப்பா நினைவுதான். மார்கழி என்றால், ஊரை எழுப்பும் மணக்குடியின் சேவலையே அப்பாவின் பதிகம்தான் எழுப்பும். ஐந்து மணிக்கு முன்னேயே ஆர்மோனியத்தின் இசையும் அப்பாவின்  ‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…’ பாடலும் மணக்குடியின் வெளியில் நிறையும். ஐந்தரை மணி பேருந்துக்கு நிற்பவர்கள்,… (READ MORE)

Margazhi, பொரி கடலை

சில கதவுகள் திறக்கின்றன

பரமன் ரெண்டு நிமிஷம் பேசனும். உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்!’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி. ‘சொல்லுங்க! ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க!’ ‘எங்க ஜோன்ல துப்புறவு பணியாளர் வேலைகள் காலி இருந்துச்சி. அதுக்கு,  மேல பேசி ட்ரான்ஸ்ஜென்டர… (READ MORE)

பொரி கடலை

, ,

திருவண்ணாமலை வளர்ச்சிப்பாதை

கொரோனா தீ நுண்மிக் காலம் என்பதே தெரியாத அளவிற்கு எப்போதும் போல அரங்கை நிறைத்து வந்தமர்ந்திருந்தனர் மலரவர்கள் திருவண்ணாமலை வளர்ச்சிப் பாதைக்கு. கூடுதலாக அனைவரும் சுவாசக்கவசம் அணிந்திருந்தனர்.  ஆண்டாள் சிங்காரவேலர் அரங்கின் நீள் வடிவ அமைப்பு தனி்நபர் இடைவெளிக்கு மிக உகந்ததாக அமைந்திருந்தது. சென்னை வளர்ச்சிப்பாதையில் பதிவு செய்து இடம் பிடிக்க முடியாமல் நேராக திருவண்ணாமலை… (READ MORE)

Paraman's Program

உறவினர் நிகழ்வு

உறவினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதில் உள்ள நல்ல விஷயம் நம் ஆட்களை ஒன்றாக சந்திக்க முடியும். உறவினர் நிகழ்வு ஒன்றில் சற்று முன்பு எடுத்தது் ##Somasippadi ##Gangashree 13.12.2020

Uncategorized

கேள்வி ஒன்று

உள்நாட்டில் பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது யார்? எதனடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறது?எண்ணெய் / எரிபொருள் விற்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பே அதை தீர்மானிக்கின்றன என்பதைத் தாண்டி இவற்றில் எனக்கு ஆழ் அறிவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை குறையும் போது உள்நாட்டில் விலை குறையும், அது கூடும் போது உள்நாட்டில் விலை கூடும் என்கிறார்கள். … (READ MORE)

Politics

சபாநாயக சந்திப்பு

சென்ற ஆண்டு ‘டிசம்பர் 28 – 91 பேட்ச் – சவேரா மீட்’டிற்குப் பிறகு ஓராண்டு கழித்து சபாநாயகத்தை சந்தித்தேன் இன்று. திருவண்ணாமலை வருவதற்கு முன்பே சபாவோடு சில நிமிட சந்திப்பு என்பது முடிவு செய்யப்பட்டது. ‘ரத்தபூமி’ வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருப்பதால் தினமும் தொடர்பிலிருப்பதால், ஓராண்டு கழித்தே சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லை. மன்னம்பந்தல் கல்லூரி… (READ MORE)

AVCCP

பஞ்ச புராண திரட்டு

சிவ ஆகமம் படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த, செல்லுமிடமெல்லாம் திருமுறைகளை பாடிய, தன்னால் முடிந்தவரை அடுத்தவருக்குக் கடத்திய என் தந்தையின் முதலாம் ஆண்டு நாள் (குருபூசை என்போம்) வருகிறது சில தினங்களில். சிவபூசனை செய்வோர், இறைவனை வழிபட விரும்புவோர் பஞ்ச புராணங்களை திருமுறை பதிகங்களை பாடி வழி பட விரும்பினால், அவர்களுக்கு உதவ சில… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

ஓதுவாரோடு வீதியில் நடந்தது

இரண்டாண்ணுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வில் என்னை அதிரச் செய்த காஞ்சிபுரத்து நிகழ்வு, இன்று திரும்பவும் அதிர வைக்கிறது. மலர்ச்சி மாணவர் கீர்த்திநாதனின் கந்தன் எஸ்டேட்டின் புதிய லே அவுட் திறப்புவிழா மரம் நடுதலுக்கு போனபோது,நீரணிந்த சிவநெறி ஓதுவார்கள் இருவர் திருமுறைகளை ஓதிய படியே நம் இருபக்கமும் நடந்து வரும் படி செய்திருந்தார். ‘ஐய்யோ, இது ஓவர்…. (READ MORE)

பொரி கடலை

ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு

நிவர் புயல் வீசப்போகிறதென்றதும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிகள் என அரசு நல்ல முன்னேற்பாடுகளோடு நின்றது. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் மழைக்கோட்டு அணிந்து கொண்டு மழைநீரில் இறங்கி நீர் சூழ்ந்த பகுதிகளுக்கே சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் போனார். ஸ்டாலின் அவர்கள் இறங்கி செய்வது எப்போதும் அரசிற்கு அழுத்தம் தரும், அது… (READ MORE)

Politics

ரஜினி வருகிறாராமே!

‘ரஜினி காந்த் ஒரு நல்ல நடிகர். அவர் பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும்’ ‘இங்கல்லாம் வரக்கூடாது. வந்தா செஞ்சி வுட்ருவோம்! ஹஹ்ஹாஹ்ஹா!’ என கிண்டலும் கேலியும், அவரை ஒரு டம்மி பீஸ் என்றெல்லாம் மீம்ஸ் தட்டி எகத்தாளமாக சிரித்தவர்கள் என்ன செய்வார்கள் இப்போது என்பதை இனி பார்க்கலாம். ‘நீ வரக்கூடாது. அவரு வரக்கூடாது. தமிழன் இல்ல. மராட்டி,… (READ MORE)

Politics

, ,