Monthly Archive: September 2020

சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை.

எல்லாக் காலங்களிலும் சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை. மணக்குடிக்கு வந்த உடனேயே, பாப்பாக்குளத்தில் தண்ணீர் இருக்கிறதா என பார்க்க வந்தேன். தூர் வாரப்பட்டதில் தாமரைக் கொடிகள் இன்றி,  வீராணத்திலிருந்து வந்த புது நீரால் நிறைந்திருக்கிறது குளம்.‘இந்த வெய்யில்ல ஏம்ப்பா, போற!’ என்ற மீன்கொத்தியார் வீட்டக்காவின் குரலைத் தாண்டி படித்துறைக்குப் போனால், இரண்டு தூண்டிகளோடு மூன்று வாண்டுகள்… (READ MORE)

பொரி கடலை

wp-16011008007623596063854740053067.jpg

‘புள்ள வூடு’ அல்லது ‘நடேசம் பிள்ளை’

மணக்குடி ஒரு சிறு விவசாய கிராமம். அஞ்சலகம் கூட அடுத்த ஊரான குறியாமங்கலத்தில்தான் என்றால் மருத்துவமனையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! மணக்குடி, குறியாமங்கலம், ஆயிபுரம் என்ற மூன்று கிராமங்களுக்கும் நடேசம் பிள்ளை என்றழைக்கப்படும் ஆர்ஐஎம்பி முடித்த ஹோமியோபதி கற்ற நடராஜன் பிள்ளை மருத்துவம் பார்த்தார். கிழக்குப் பார்த்த நத்தகோகாபால் பிள்ளையின் வீட்டு் வடவண்டைச் சுவற்றை வலது… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

உன்னத வரம்

இயல்பான சாதாரண நிலையில் இருப்பவனை 20-25 நிமிடங்களில் முற்றிலும் வேறான ஓர் ஆழ்நிலைக்குக் கொண்டு சென்று கிடத்தி அமிழ்த்தி, அதுவும் எழும் முன்பு கிடத்தல் நிலையிலிருந்து கைகளை உயர்த்துகையில் சக்தியை வெள்ளமாக பாய்ச்சி உயர் அனுபவம் தரும் மலர்ச்சி மகா முத்ரா நமக்குக் கிடைத்த ஓர் உன்னத வரம். உடலை மனத்தை அமைதியில் ஆழ்த்தி எடுத்து… (READ MORE)

Spirituality

அவர்கள் வாழ்கிறார்கள்…

அமாவாசை,  விளக்கேற்றி இலை போட்டு அன்னம் படைக்க வைத்திருக்கிறாள் மனைவி. குளித்து வேட்டியணிந்து குனிகிறேன். ‘சிவா… இடுப்புல ஒரு துண்ட எடுத்துக் கட்டு!’ தலைக்குள் கேட்கிறது அப்பாவின் குரல். நான் வாழும் வரை என் அப்பாவும் வாழ்கிறார் என்னுடனே என் நினைவுகளில். – பரமன் பச்சைமுத்து17.09.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

திருவள்ளுவரின் தந்தை யார்?

புத்தகங்கள் அறிவு விருத்திக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான ஆவணமும் கூட. இணையதளங்களும் விக்கிபீடியாவும் இல்லாக் அக்காலத்தே பெரும் பதிவுப் பொருளாகவும் இருந்துள்ளன. திருவள்ளுவர், கடல் கொண்டு போன குமரிக்கண்டத்தில் பிறந்தார், மயிலாப்பூரில் வாழ்ந்தவர் என்ற தகவல்கள் நாம் கேட்டவையே. திருவள்ளுவரின் தந்தையின் பெயர் ‘பேராழி மாமுனிவன்’ என்கிறது 1874ல் யாழ்ப்பாணம் அச்சக தமிழ்மொழி அகராதி. வள்ளுவர் சமணரே… (READ MORE)

பொரி கடலை

, ,

பாரதியார் இல்லத்திலெடுத்த படங் கள்

பாரதியார் இல்லத்தில் படமெடுக்க முடியாது, கூடாது. அனுமதியில்லை.ஏதோவோர் அனுகூலத்தால் எனக்கு அப்பேறு கிட்டியது அன்று. இது 360 டிகிரி படம். உங்களை விரல்களை வைத்துத் தள்ளி சுழற்றி பாரதியின் முழு வீட்டையும் காணலாம். மலர்ச்சி மாணவர் ஒளிஓவியர் கோபிநாத் எடுத்தவை இப்படங்கள். https://momento360.com/e/u/2677affbe645458189c69230180c028c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/63c601e8c581406b85b17635f4928453?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/ec4debfe72bd44898e5c5dce07f4865c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/6cd4a202a6624c278fbc5d01235f4a0c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/feed8f2a4ec34a5c9bec971ab9fd9042?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/bdb5a3bc436e470faa4f166a87cdb547?utm_campaign=embed&utm_source=other&heading=178.68696603836378&pitch=-9.499744746633604&field-of-view=75 https://momento360.com/e/u/1489eadd5d234f16a72a00d1fc762954?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 கைவைத்து சுழற்றி முழுப்படத்தையும்… (READ MORE)

Uncategorized

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 8வது அன்னதானம்

இன்று ( ஆவணி மாதம் ) மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் 8வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க! :மு. பச்சைமுத்து அறக்கட்டளை பரமன் பச்சைமுத்து10.09.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

சாயாவனம் – சா கந்தசாமி : காலச்சுவடு பதிப்பகம்

பிழைப்புக்காக பிறந்த ஊரை விட்டு இலங்கையின் மலையகத்துத் தேயிலை தோட்டத்துக்கு சிறுபிள்ளையோடு ஓடி வந்த தாய் அம்மை வார்த்து குளிர்ந்து (இறந்து) போய் விட, அன்னையின் சவத்தையே பார்த்தபடி நிற்கும் சிறுவன் சிதம்பரத்தை கருப்பு உபதேசியார் சர்ச்சுக்கு அழைத்துப் போகிறார். அவனன்னை கோதிவிட்ட நீண்ட சிகை சிரைக்கப்பட்டு வெள்ளைப் பாதிரியாரிடம் ஞானஸ்தானம் பெற்று டேவிட் சிதம்பரமாக… (READ MORE)

Books Review

, , , ,

திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள்

தமிழகத்தில் போதிய இடவசதி உள்ள 147 பூங்காக்களில் திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க அனுமதி என்று ஒரு செய்தி வந்துள்ளது.  வேறு வேறு காலகட்டங்களில் நான் பயன்படுத்திய கோவை பந்தயச் சாலை திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடமும், பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பூங்காவும், சென்னை 28ன் மாநகராட்சி மைதான ‘டிப் பார்’ரும், சிங்கப்பூர் ஹோகாங்க்… (READ MORE)

பொரி கடலை

,

சரி செய்யப் பட வேண்டும் இதை

என் நண்பர்கள் எனை காங்கிரஸ் – இடது – ஆதரவாளன், பாஜக – வலது எதிர்ப்பாளன் என்று கருத பெரும் இடம் இருக்கிறது. இரண்டுமில்லை வெறுமனே கவனிப்பவன், தேர்தலன்று வாக்களிப்பவன் என்பது புரியாமல் என் பெயரின் மீது வண்ணமடிப்பது சில நண்பர்களுக்கு பிடித்த வேலை. இருந்த போதிலும் பகிர வேண்டியிருக்கிறது. ஒரே நாடு ஒரே வரி… (READ MORE)

Politics

22 தேசிய மொழிகள், செய்யலாமே!

காஷ்மீரில் ஏற்கனவே அலுவல் மொழியாக இருந்த உருது, ஆங்கிலத்தோடு, மக்ளிடம் பேசப்பட்டு வந்த டோக்ரி, காஷ்மீரி, இந்தி ஆகிய மூன்றையும் சேர்த்து ஐந்து மொழிகளையும் அலுவல் மொழியாக்கியிருக்கிறார்கள்.  ‘என்னாது, இவ்ளோ நாளா காஷ்மீர்ல காஷ்மீரி மொழியே அலுவல் மொழியாக இல்லையா!’ என்ற அதிர்ச்சியைக் கடந்து வரும் எண்ணம் – ஐந்து அலுவல் மொழியா! அப்படியானால், இந்தியாவின்… (READ MORE)

Uncategorized

உயர்நீதி மன்றத்தின் நல்ல கேள்வி

‘சித்த மருத்துவ மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும், ஏன் நியமிக்கவில்லை? அந்தப் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவம் படித்தவரை மத்திய அரசு நியமித்துள்ளது ஏன்? சித்த மருத்துவத் துறையில் இணை ஆலோசகர் என்ற ஒரு பதவியை ஏன் மத்திய அரசு இல்லாமல் செய்தது? ‘ என்ற உயர்நீதி மன்றத்தின் கேள்விகள்… (READ MORE)

Uncategorized