பொரி கடலை

wp-16855162427415291964789283028218.jpg

விமான சேவை பணிப்பெண்ணுக்கு ஒரு பயமென்பது நமக்கு சங்கடம்

ஏர் இந்தியா பணிப்பெண்ணுக்கு பய உணர்வு வந்து விட்டது நம்மால் இன்று.  அந்த வகையில் ஒரு சின்ன சங்கடம்தான் நம் மனதில். ‘சார்… பேட்டரி, பவர் பேங்க், எலக்ட்ரானிக் ஐட்டம் எதுவும் இருக்கா இதில்?’ போர்டிங் பாஸ் தரும் இடத்தில் என் பெட்டியை உள்ளே எடுத்துக்கொள்ளும் முன் ஏர்-இந்தியா ஊழியர் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் சார்ந்து… (READ MORE)

பொரி கடலை

, , , ,

அப்பா – அம்மா – பிறந்த நாள்

என் அம்மா பிறந்த போது அதை குறிப்பெடுத்து வைக்க எவரும் இல்லையோ, குறிப்பெடுத்தவர் பிறகு இல்லையோ தெரியவில்லை. என் அம்மாவின் பிறந்த நாள் எவருக்கும் தெரியாது.  ‘ஆடி மாசம் பொறந்தான் சிவா! பத்துமாசம் சின்னவன் சரவணன்!’ என்பதே பொதுவான பிறந்த கணக்கு வழக்கு முறை கொண்ட அக்காலமதில், பிறந்த நாள் ஆங்கிலத்தேதி பற்றியே சிந்தனைகளே இல்லை…. (READ MORE)

அம்மா, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

போர்த்திக் கொள்ள தூக்கம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இம்மனிதனுக்கு…

இருமங்கிலும் ரயில்களின் பேரிறைச்சல், நடைமேடையில் ஓயாமல் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் பயணிகளின் பெருஞ்சந்தடி, மிக அருகில் ஊர்ந்து கொண்டே இருக்கும் பேட்டரி வாகனங்களின் ஒலிப்பான்கள் என எல்லா சத்தங்களுக்குமிடையே, மனப்பேய்களின் இறைச்சல்களுக்கு நடுவே அமைதி கொண்ட புத்தனைப் போல துயில்கிறான் இம்மனிதன் சென்ட்ரல் ரயில்நிலைய 10 ஆம் நடைமேடையின் நடுவே, ஒரு கொசுவலையைக்  கட்டிக்கொண்டு…. (READ MORE)

பொரி கடலை

wp-1684470137111.jpg

80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும்

சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம்.  ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி! நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , , , , , , , , , , , , , , , , ,

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : பரமன் பச்சைமுத்து

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : கேள்வி: பழைய சோறு பற்றி உங்களுடைய பதிவு ஒன்றில் பார்த்தேன். நானும் உண்ணலாமா? பதில்: நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கு பாக்டீரியாக்களின் உதவி தேவை. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படும் இவை நம் வயிற்றில் இருந்து கொண்டு தங்கள் பணியை செவ்வனே செய்து நமக்கு உதவுகின்றன…. (READ MORE)

பொரி கடலை

,

என் பள்ளி நாட்களில் ரசித்த அந்தத் திரைப்படத்தை…

என் பள்ளி நாட்களில் பரமகுரு போன்ற தோழர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட,  பிறகு இரண்டாம் கட்ட வெளியீடாக சிறு நகரங்களில் திரையிடப்பட்ட போது கீரப்பாளையம் விஆர்கே டூரிங் டாக்கீஸில் பாலசரவணனின் பரிந்துரையில் அவனோடு மணக்குடியிலிருந்து சைக்கிளில் போய் நான் பார்த்த படம் – ‘ஊர்க்காவலன்’ ‘அந்த வானத்துல இருக்கற சூரியன் எழறதுக்கு முன்னாடி எழுந்து, ஆ… ஜில்..சக்…… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

புலோத்துங்கன் கால செப்பேடுகள் சீர்காழியில் கிடைத்தவை

கேள்வி: சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் கிடைத்துள்ள சிலைகள், தேவார செப்பேடுகளைப் பற்றி? பரமன்: பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆய்வு செய்யப்பட வேண்டியவை. பல புதிய செய்திகள் கிடைக்கலாம். இந்த செப்பேடுகள் பற்றி நாம் சொல்வது இருக்கட்டும். நாம் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் சொல்லியிருக்கும் இரண்டு தகவல்களைக் கவனியுங்கள். “சிதம்பரம் கோயிலில் குலோத்துங்கச் சோழனிடமும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

wp-1679809970130.jpg

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

சூரியன் ஓர் அதிசயம்! 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

வைக்கோல் உருளை

‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்தெல் என்று யானை கட்டிப் போரடித்த…’ என்று சங்கப்பாடல் குறித்தது போய், ‘ஆட்கள் வைத்துப் போரடித்தால் அல்லோலகல்லோலப்படுவோமென எந்திரம் வைத்து நெல்லறுக்கும் காலமிது!’ என்றாகிப் போனது இன்று. மணக்குடி போன்ற ஊர்களில் இரு வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன நெல் அறுவடைக்கு. வளர்ந்த கதிர்களை அப்படியே அறுத்து உள்ளிழுத்து சுழற்றியடித்து  நெல்மணிகளை… (READ MORE)

பொரி கடலை

முன் உழைப்பு

‘ஜக்கியை பதற வைத்து விட்டார் சமஸ்!’ ‘சமஸின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் தந்துள்ளார் ஜக்கி!’ என்றெல்லாம் இரு வகையாக செய்யப்படும் விவாதங்களுக்கு வெளியே நின்று ஒன்றைப் பார்க்கிறேன். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரைப் பற்றி மேய்ந்து ஆராய்ந்து விவரம் சேகரித்துக் கொண்டு போவது மொத்த நேர்காணலையும் சத்தானதாக மாற்றிவிடும். கேள்விகளும் ஆழமாகும், கடைவதால் வரும்… (READ MORE)

பொரி கடலை

, ,

குடியேற்றம் நுழைவு

நுழைவு அனுமதி பெற குடியேற்றம் எனப்படும் இமிக்ரேஷன் துறையில் நுழையும் போது பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு நாடுகளைப் பொறுத்து. கமல்ஹாசன் போன்ற நடிகரையே நான்கு மணி நேரம் கனடாவில் உட்கார வைத்தது உண்டு. அமெரிக்காவின் கதவு வரை போய்விட்டு அனுமதி கிடைக்காமல் ‘நோ’ என்று முத்திரை குத்தப்பட்டு விமானத்தில் திருப்பியனுப்பப் பட்டவர்களும் உண்டு. மருத்துவத்திற்காக… (READ MORE)

Paraman Touring, அரேபிய அனுபவங்கள், பொரி கடலை

போய் வாருங்கள் பாடகியே

‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்தரிக்கா…’என் தந்தை போகிற போக்கில் பாட அவர் வழியாகவே அந்தப் பாடலை முதன் முறை கேட்டதாக என் நினைவு. ரேடியோவும் இசைத்தட்டுகளுமே இருந்த டேப் ரெக்கார்டர் இன்னும் வந்திராத அந்த மணக்குடி காலங்களில், இந்தக் குரல் கேட்டே வளர்ந்தோம். மஞ்சள் நீராட்டு, திருமணம் என நற்காரியங்களில் பந்தலிட்டு,… (READ MORE)

பொரி கடலை

,

அட்சதை…

திருமணத்தில் மணமக்கள் மீது தூவி வாழ்த்த தரப்படும் அட்சதை தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய சிறுவன் ஒருவனைப் பார்த்தேன் நேற்று காலையில் நிகழ்ந்தவொரு திருமணத்தில். கையில் தந்ததும் அப்படியே அதை வாயிலிட்டுத் தின்று நம்மை சிரிக்க வைத்துவிட்டான் அவன். சிரிப்போடு, ‘இவனது வயதில் நாம் என்ன செய்தோம் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு?’ என்று… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

wp-1674269527392.jpg

பூம்புகார் சிந்துசமவெளிக்கும் முந்தைய உலகின் முதன் 15,000 ஆண்டுகள் பழமையான நகரம்! : ஆய்வறிக்கை

2,500 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்களால் நிறுவபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்ததாக சொல்லப்படும் பூம்புகார் பற்றிய அகழ்வாராய்ச்சி ஆய்வு திட்ட குழுவின் புதிய தகவல் விழிகளை விரிய வைத்து வாயைப் பிளக்க வைக்கிறது. பூம்புகார் நகரத்தின் வயது 15,000 ஆண்டுகள்!!!! 15,000 ஆண்டுகள் பழமையான நகரம், 70 – 80 கப்பல்களை நிறுத்துமளவிற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

wp-1672893421062.jpg

அப்பா…

அப்பா… தவறு சரி பார்க்காமல்தன் பிள்ளைகளுக்காகஎதையும் செய்யும் சீவன் இதயத்திலிருந்து எழும்பும் அன்பைகழுத்துப் பகுதியில் கண்டிக்கும் வார்த்தையாக மாற்றியனுப்பும் கால எந்திரம் தனக்கிணை ஒருவரும் தரணியிலேயேயில்லையென்று தலைகனத்து இறுமாந்திருந்தாலும்தன் பிள்ளைகளிடம் தன்னையே பாரக்கும் முரண் பெற்றோர் வைத்த தன் பெயரை காலாகாலத்துக்கும் நிற்கும் படிபிள்ளைகளின் நெற்றியில் எழுதிப் போகும் தலை (தலைப்பெழுத்து) எழுத்தாளன் வானகம் புகுந்த… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

wp-1672289809192.jpg

அட காக்கையே!

சோறு வைத்தால் மறுத்து ஓடும் நொறுக்குத்தீனி வைத்தால் ஓடி வரும் சிறு பிள்ளையைப் போலவே செய்கிறது தினமும் காலையில் பால்கனியில் பிஸ்கட் துண்டுகள் கொத்தியுண்ண வரும் காக்கை. வைக்கும் சில பிஸ்கட் துண்டுகளை தின்றுவிட்டு அடுத்த நாள் மட்டுமே வரும் இப்பறவை, பிஸ்கட் தீர்ந்துவிட்டதே வெறும் (கையோடு!) அலகோடு அனுப்பக்கூடாதேயென்று சில துண்டுகள் மந்தைவெளி ‘சுஸ்வாத்’… (READ MORE)

Self Help, பொரி கடலை

,

ஆர் எம் ராஜேந்திரன் மணிவிழா

பூசம் நட்சத்திரம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுபகிருது ஆண்டு பிறந்தார் இராம. இராஜேந்திரன்.  எதற்கு இது என்பதை சொல்லும் முன் ஒரு சங்கதியைப் பார்த்துவிட வேண்டியிருக்கிறது. அறுபது நாழிகைகள் கொண்டது ஒரு நாள்,  அறுபது ஆண்டுகள் கொண்டது ஒரு சுழற்சி என்பது இங்கு காலகாலமாக நம் நாட்காட்டிகளும் பஞ்சாங்கங்களும் கொள்ளும் கணக்கீடு…. (READ MORE)

பொரி கடலை

முதலை இருக்கு, பாத்து…

‘முதலை இருக்கு, முந்தா நாள் குளிச்சிட்டு இருந்த பசங்களை இழுத்துட்டு போயிருச்சு. பாத்து பரமன்! எறங்க வேண்டாம்!’ என்று எச்சரித்தார் உள்ளூர்வாசியும் கிராமநிர்வாக அலுவலருமான அன்பு நண்பர். ….. சோழதேசத்தின் தானாதிகாரி பெரிய பழுவேட்டரையர் பழுவூரிலிருந்து படகில் பயணிக்கும் போது கரைபுரண்ட வெள்ளத்தின் நீர்ச்சுழலில் சிக்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டார் என்று கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’… (READ MORE)

பொரி கடலை

wp-1669082489126.jpg

போய் வாருங்கள் அவ்வையாரே!

‘பொதுவெளியில் மக்கள் பணி, மொழிப் பணி செய்பவர் எப்படி இருக்க வேண்டும்?’ என்று நானே கேட்டுக் கொண்ட என் கேள்விக்கு நாமே கொடுத்துக் கொண்ட உதாரணம் ‘ஐயா அவ்வை நடராசன்’ .  கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா என எதிரெதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதும் மொழித்துறை, உலகத் தமிழ் மாநாடு என பெரும் செயலாற்றும் உச்சிப்… (READ MORE)

பொரி கடலை

,

பம்பரம் விட்டிருக்கிறீர்களா?

பம்பரம் விளையாடியிருக்கிறீர்களா? ஆர்வி உதயகுமார் படத்தில் சுகண்யாவின் தொப்புளில் விட்டதைப் போலல்ல, தரையில் ஓங்கிக் குத்தி. சிறியவர், பெரியவர் பேதமும் இல்லை, இத்தனை பேர்தான் என்ற கட்டுப்பாடும் இல்லை. எவரும் ஆடலாம். எத்தனை பேரும் இணையலாம். ஒரு பம்பரம், சில மீட்டர் கயிறு (சாட்டை என்று பெயர் அதற்கு), சில சதுர அடி கட்டாந்தரை அவ்வளவே… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

என்னவெல்லாஞ் செய்யும் இத் திருப்பாவை வரிகள்…

🌸 இன்று புரட்டாசி சனி – சைவ நெறியில் பழகிய எங்கள் வீட்டில் பெருமாளுக்குத் தளிகை. மகள்களும் ஊரிலிருந்து வந்துள்ளதால் இந்த சனி அன்று என்று முடிவு. நெற்றியில் நீறு சைவ பதிகங்களே சொல்லி பழகிய நமக்கு பெருமாளை போற்றிடத் தெரியவில்லை. ‘ஆதி மூலமே!’ என்றழைத்தற்கே வந்தவனாச்சே என்று கட்டு கட்டினாலும், ‘அரங்கா… பார்த்தசாரதி… பெருமாளே!’… (READ MORE)

பொரி கடலை

சூப்பர் ஸ்பீடில் பாஸ்போர்ட் வருகிறது

👏👏என்ன நடக்கிறது இந்தியாவில்! பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தோம். ‘வெள்ளிக்கிழமை காலை 11.15க்கு நேர்முகம், 11க்கே சான்றுகளோடு வரவும்!’ என மின்னஞ்சல் வந்தது. வெள்ளிக்கிழமை 10.45க்கு பாஸ்போர்ட் அலுவலகம் போனேன். சான்றிதழ் படிமங்கள் கேட்டார்கள். நகலெடுத்துக் கொண்டார்கள். என்னைப் படமெடுத்துக்கொண்டார்கள்.ஞாயிறு காலை போலீஸ் வந்தார் தகவல் சரி பார்த்து உறுதிசெய்ய.செவ்வாய் காலை பாஸ்போர்ட்டோடு என் வீட்டு வாசலில்… (READ MORE)

பொரி கடலை

, ,

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்தயோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , , , , , ,

புதுப்பித்தல் வரிசையில்

இருபத்தியிரண்டாண்டுகளுக்கு முன்பு 1999ல் வந்த போது பதற்றம் கொஞ்சமும் உள்ளே ‘நடக்கனும் நடக்கனும்!’ என்ற வேண்டல் நிறையவும் இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2012ல் வந்த போது பதற்றம் இல்லை, ‘நடந்திடனும் நடந்திடனும், ஒழுங்கா தலை வாரிக்கனும் அதுதான் பிரிண்ட் ஆகி வரும்!’ என்ற கூடுதல் கவனம் இருந்தது. இன்று பதற்றமில்லை, தலையைக் கூட வாரவில்லை, ‘நடக்கும்!’… (READ MORE)

பொரி கடலை

பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? … ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

நெல் தெளிக்கிறோம் நேரடியாய்…

காவிரி – கொள்ளிடம் – வீராணம் திறப்பு நீர் வந்து பாயும் வரை காத்திருந்தால் பருவம் போய்விடுமென்பதால், மணக்குடியில் எங்கள் வடக்குவெளி வயலில் நேரடி நெல் விதைத் தெளிப்பு தொடங்கி விட்டோம் இன்று.  அழைத்துச் சொல்லி படத்தைப் பகிர்ந்தார் ஊரிலிருந்து சித்தப்பா. படத்தில் விதை தெளிக்கும் பூராயர் அண்ணனின் காலில் கட்டு போடப்பட்டு இருப்பதைப் பார்த்து… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தனக்கான ஒரு வேலை என்று வரும் போது பொறுப்பு வத்துவிடுகிறது

பள்ளியில் பயின்ற காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் இரவு சீக்கிரம் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்ட என் மகள்கள், முதுகலை படித்த போது கொரோனா தீ நுண்மி பொதுமுடக்கக் காலங்களில் இயல்பு மாறி நள்ளிரவு வரை கண்விழிப்பு காலையில் நேரங்கழித்து எழல் என இரண்டு மூன்று மாதங்கள் இருந்தார்கள். காலை உடற்பயிற்சியை விடவில்லையென்றாலும் இரவில் உறங்குவது தள்ளிப்போனது.இரண்டொரு… (READ MORE)

பொரி கடலை

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா?

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா? இதைப் பறித்து வாணலியில் இட்டு புரட்டி மாலைச் சிற்றுண்டியாக உண்ட பாட்டிகள் சிலரை மணக்குடியில் பார்த்திருக்கிறேன் அந்தக் காலங்களில். சிறுவயதில் பள்ளி இடைவேளைகளில் முத்து, முரளி, சரவணன், நட்ராஜோடு பள்ளிக்குப் பின்புறம் கிளைகளில் பூத்திருக்கும் இவற்றை பறித்து வாயிலிட்டு மென்று துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த அலாதி கலவையை சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன். உயர்… (READ MORE)

பொரி கடலை

வந்தவாசி தம்பதிகள் சொல்லும் சங்கதி…

கிராமத்தையொட்டிய தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும் 76 வயது கோதையானுக்கும் அவரது மனைவி 72 வயது ராணியம்மாளுக்கும் எவர் சொல்லிக் கொடுத்தார்கள்!! 40 ஆண்டுகளாக வெறும் மழை நீரை மட்டுமே பிடித்து காய்ச்சி பருகி, சமைத்து வருகின்றனர். ‘எவ்வளவு நாளானாலும் புழுவோ பூச்சியோ பிடிக்காது மழை நீரில். 40 ஆண்டுகளாக மழைநீர்தான் எங்களுக்கு…. (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

சிறு கன்றாக நாம் நட்டவை

சிறு கன்றாக நாம் நட்டுப் பராமரித்தவை இன்று அண்ணார்ந்தே பாத்தாலும் உச்சி் தெரியா உயரத்திற்கு வளர்ந்துவிட்டால்… நம் உள்ளம் கொள்ளும் நிலை என்ன!?  மலையளவு மகிழ்ச்சிதானே! ஷெனாய் நகரில் நம் தெருவில் தடித்த தண்டுகளோடும் பரந்த கிளைகளோடும் வளர்ந்து பறவைகளுக்கும் பல்லுயிர்க்கும் உதவி செய்து நிற்கின்றன நமது அரசு, ஆல், வேம்பு, நாவல் மரங்கள். ம..கி…ழ்…ச்…சி…!… (READ MORE)

பொரி கடலை

வரிசையாய் அரசமரம் – NH 79

தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்44ல் பயணித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் தொடங்கி சில கிலோ மீட்டர்களுக்கு வரிசையாக ஒரே வகை மரங்கள் இருந்தால், ‘அட..!’ என்று ஒரு வியப்பு வரும்தானே! எந்த இடம் இது? சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதில் ஆத்தூருக்கு இறங்குவதற்கு முன்பு. ‘வருசலா கண்ணுக்கு எட்டன தூரம் வரைக்கும் அரசமரங்க, ஒரே மாதிரி! வண்டிய… (READ MORE)

பொரி கடலை

, ,

வகுப்பென்பது…

வகுப்பென்பது மாணவரும் ஆசிரியரும் தங்களைத் தந்து நிற்கும் ஒரு வகைத் தவம்.         கண்கள், செவிகளைக் கொண்டு ‘வை ஃபை’யைப் போல உருவாக்கப்படும் கம்பியில்லா தொடர்பில் உட்கருத்தும், உணர்வுகளும், உயிராற்றலும் கடத்தப்படும்      சாலை. வகுப்பு என் உயிர் ஊறும் இடங்களில் ஒன்று. சிறந்த ஆசிரியர்கள்  மாணவர்களை உருவாக்குவதைப் போலவே, சிறந்த மாணவர்களால்  ஆசிரியரின் அகம் மேம்படுகிறது என்ற… (READ MORE)

பொரி கடலை

பொன்னியின் செல்வன் : வரலாற்றை மாற்றுகிறார்களா?

மலர்ச்சி வணக்கம் பொன்னுஸ்வாதி! ‘கல்கியின் கதையும் மணிரத்னத்தின் திரைக்கதையும் மக்களுக்கு தவறான வரலாற்றை தந்துவிடுமே!’ என்ற உங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது வரலாற்றில் உள்ளவரின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கற்பனைகள் புனைந்து கதை செய்வது காலகாலமாக வழக்கத்தில் உள்ளது. நம் புராணங்களிலேயே அத்தனை ‘வெர்ஷன்கள்’ இருப்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1660048969063.jpg

பொன்னியின் செல்வன் – உண்மைக் கதையா?

கேள்வி: எனக்குத் தெரிந்தே பதினைந்து ஆண்டுகளாக ‘பொன்னியின் செல்வன்’ பற்றி மேடைகளில், எழுத்துகளில் சொல்லி வருபவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன் டூர்’ போனவர் நீங்கள்.  ராஜராஜனின் கதையை ‘வளர்ச்சி’யில் சித்திரக் கதையாகவும் வெளியிட்டீர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு. உங்கள் உந்துதலால் பொன்னியின் செல்வன் நூலை படித்த பலரில் நானும் ஒருத்தி. பொன்னியின் செல்வன்… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

, , , , , , , , , , ,

ஈரோடை

‘ஓர் ஆடு’ ‘ஒரு புலி’ என்று மட்டுமே பள்ளிக் காலத்திலிருந்து பயன்பாடு கொண்டிருந்தவன், மலேசியாவின் ‘பெந்தாங்’ போனபோதுதான் அங்கிருக்கும் பயன்பாடு கண்டு தலையில் தட்டிக்கொண்டு ‘ஈராயிரம்’ என்று என் சொல் பயன்பாட்டை மாற்றிக் கொண்டேன். அடுத்த ஆண்டு மலர்ச்சி நிகழ்ச்சியின் அனுமதி சீட்டில் ‘ஈராயிரத்து பதினெட்டு’ என்றே அச்சேற்றினோம். மலர்ச்சி பயிலரங்கம் ஒன்றிற்காக இன்று ஈரோட்டுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

திருவருட்பா

நீண்ட காலமாக (பல ஆண்டுகளாக) என் பட்டியலில் இருந்த தொடாமல் விட்ட திருவருட்பா நூலை புரட்ட எண்ணி எடுத்தேன் இன்று (அழைப்பு இப்போதுதான் வருகிறது). முதல் பக்கம் அவரது கையெழுத்து, ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயரை சேர்த்து எழுதியிருப்பதை கண்டது என வியப்புடன் நகர்த்தி, முதல் பக்கம் முதல் செய்தி ‘இந்திரிய ஒழுக்கம்’ படித்தேன். ஆடிப் போனேன்…. (READ MORE)

Spirituality, பொரி கடலை

யாரிடம் கேட்பேன் இதை?

குளித்து விட்டு, நகங்களை வெட்டலாமென பால்கனியைத் திறந்து கம்பித் தடுப்புக்கு அருகில் நின்று கை விரல் நகங்களை வெட்டத் தொடங்கினேன் இன்று காலை. எங்கிருந்தோ வந்து அருகிலமர்ந்தது ஒரு காக்கை. தின்னும் பண்டம் எதுவும் வைத்திருக்கிறேன் என்று நினைத்தது போல. ஆனாலும் இவ்வளவு நெருக்கமாக வராதே காக்கை.  உணவே வைத்தாலும் ஓரக் கண்ணால் பார்த்து பார்த்து… (READ MORE)

பொரி கடலை

, ,

தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம். எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்…. (READ MORE)

Politics, பொரி கடலை

, , , ,

wp-1658727979233.jpg

நமக்கு நடை பயில்வித்தவளை…

நமக்கு நடை பயில்வித்தவளைநாம் நடத்திக் கூட்டிப் போவது ஓரனுபவம் இதையும் எதையும் நடத்தி வைப்பதே அவனென உணர்கையில் கிடைப்பது பேரனுபவம் இடரினும் தளரினும் உறுநோய் தொடரினும் உடன் நிற்பதுசிவம் – பரமன் பச்சைமுத்துகுளோபல் மருத்துவமனை,பெரும்பாக்கம்25.07.2022 ( Here for a check up ) #Amma #AmirthamPachaimuthu#MuPachaimuthuArakkattalai #Paraman #GlobalHospital

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

குட்டி பையன் டு மாம்பலர் ஐயர் கேட்டரிங்

1991ல் கல்லூரி முடித்திருந்த சமயத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கபில்தேவ், அசாருதீன் கொண்ட இந்திய அணி – டேவிட்பூன் போன்றோர் கொண்ட ஆஸ்த்திரேலிய அணி, லாராவின் மே.இந்திய தீவு அணி ஆகியவை ஆடிய மேட்ச்களை மெத்த ஐயர் வீட்டின் மகாதேவ ஐயரின் கருப்பு வெள்ளை டிவியில் பார்த்திருந்தேன் மணக்குடியில். (ஐயர்கள் வீட்டுக்குள்ளும் போனேன் நான்!) அப்போது எங்கள்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் நெற்றியில் நாமம் – வழக்கு

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரலாறை மறைக்கிறார்கள் என்று சொல்லி மணிரத்னம், விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சுபாஷ் கரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார் ஒருவர் என்ற தலைப்புச் செய்தியை பார்த்ததும் அதியசமாக இருந்தது. ‘இன்னும் படமே வரலியே! அதுக்குள்ள வரலாற்றை மாற்றினார்கள் என எப்படி சொல்ல முடியும்!?’ என்ற கேள்வியோடு செய்தியை தொடர்ந்து கவனித்தால், சமீபத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, பொரி கடலை

, , , , ,

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்…. எனது பெயரை மாற்றிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அதற்கான அரசு அலுவலகத்திற்குப் போனேன் இன்று காலை. நீண்ட காலமாக ‘பேரை மாத்தனும், இதோ இப்போ செய்யலாம், இப்போ செய்யலாம்!’ என்றே எண்ணிக்கொண்டிருந்ததை… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆளை ஈர்க்கும் ஆல் : இரும்பை

மரங்கள் எப்போதுமே எனை ஈர்க்கின்றன. சில மரங்களைக் கண்டதும் தொடத் தோன்றும், சிலதை வெறுமனே பார்க்கத் தோன்றும், இந்த மரத்தையும் அதனடியில் இருந்த கல்லிருக்கையையும் பார்த்ததும் அதில் அமரலாமெனத் தோன்றியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலுப்பை மரங்களாலான காடுகளாக இருந்து ‘இலுப்பை’ என்று வழங்கப்பட்டு, மருவி இன்று ‘இரும்பை’ என்றாயிருக்கிறது. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே…

‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே, என் கழுத்துக்கு மூணு முடிச்சுப் போடச் சொன்னாரே!’ சில பாடல்கள் மிகச் சாதாரணமானவையாக எளிமையானவையாக இருக்கும், ஆனால் முதல்முறை கேட்கும் போதே ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு பாடல் இது. ரஹ்மானின் ‘என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்’, இளையராஜாவின் ‘காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

ட்ராஃபிக் சிக்னலில் வழிகிறது இசை: பெருநகர போக்குவரத்து காவல்துறை அசத்தல்

ஒரு காலை அண்ணாநகர் ரவுண்டானாவில் ஒளிரும் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வரட்டுமென சிந்தாமணி நோக்கி வலதில் திரும்பக் காத்திருக்கிறேன்.  ஏதேதோ சிந்தனைகள் ஓட இருந்தவனை ‘டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்க் டோடம் டோடங்…’ என்று எங்கிருந்தோ வந்த மெல்லிய வீணை இசை உலுக்கியது. உள்ளம் பாடலை கண நேரத்தில் கண்டறிந்து கூடவே பாடவும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

வந்தது சாகித்ய விருது!

குமுதம் இதழால் எனக்கு அறிமுகப்படுத்தவர் மாலன்.  யதேச்சையாக படிக்கத் தொடங்கி அவரின் கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது எனக்கு ஒரு காலத்தில். தொலைக்காட்சி ஷோ நடத்திய மாலனை விட பத்திரிக்கையாளர் மாலன் சிறந்தவர் என்பேன். மறைந்த பத்திரிக்கையாளர் சுப்ரமணிய ராஜூ, சமகால நிகழ்வுகள் என எதைப் பற்றியும் மாலனால் வேறு பரிணாமத்தில் எழுதமுடியும்.  ‘ஜன்னலுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

காக்கைகளுக்கும் சுயமரியாதை உண்டு போல

காலை பால்கனி கதவை திறந்து செடிகளை கவனித்துவிட்டு, இரண்டு பிஸ்கட்களை துண்டாக்கி விளிம்பு சிமெண்ட் கட்டையில் வைத்து விட்டு உட்கார்ந்து செய்தித்தாள்களை வாசிப்பது என்ற என் வழக்கத்தில் பிஸ்கட் துண்டுகள் வைப்பதை மறந்து விட்டேன் இன்று. கைக்கெட்டும் தூரத்து எலுமிச்சை மரத்தில் வந்தமர்ந்த காக்கை, பிஸ்கெட் இல்லாத சிமெண்ட் கட்டையைப் பார்த்து விட்டு ‘கா…’ என்றது…. (READ MORE)

பொரி கடலை

மனித மலம் அள்ள ரோபோ – ஹோமோசெப் – சென்னை ஐஐடி

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை ஒழித்தார் எங்கள் தலைவர்!’ என்று ஆளாளுக்கு சரடு விட்டுக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் மனித கழிவுகளை அகற்ற உண்மையாகவே ‘ஹோமோசெப்’ என்றொரு ரோபோவை வடிவமைத்து தயாரித்து செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள் சென்னை ஐஐடி மாணவர்கள். பெங்களூருவும், புனேவும், டெல்லியும் இதைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனவாம். தமிழகம் அதிக அளவில் பநன்படுத்திக் கொள்ளட்டும்… (READ MORE)

பொரி கடலை

பாய் வீட்டுக் கல்யாணம்

‘பாய் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்துட்டு, சைவ சாப்பாட்டு பந்திக்கு போறீங்களே பரமன்! ‘ என்று என்னை பாவமாக பார்த்து சைவ உணவு உண்ணும் இடத்திற்கு வழி சொன்னார் அந்த தெரிந்த நண்பர். கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின் ஸ்கூலின் ஒரு கோடியில் போடப்பட்ட பந்தலில் நுழைந்து பந்தியில் அமர்ந்தால், என் எதிர்ப்பந்தியில் தலையில் குல்லாய் அணிந்த இளம்… (READ MORE)

பொரி கடலை

, , ,

அதே சிறு பயிற்சி, ஆனால்…

அதே சிறு பயிற்சி, ஒவ்வொரு நாளும் என சில பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது, அவை ஈட்டித்தரும் பலன்களும் அதன் ஆழமும் அதிகமாயுள்ளன. குதிகால்களை உயர்த்தி, மொத்த உடலையும் முன்னங்கால்களில் நிறுத்தி கைகளை உயர்த்தி விரல்களைக் கோர்த்து வானை நோக்கித் தள்ளிய படி சில மூச்சுகளுக்கு நிற்கும் தாடாசனமும்,பாதங்கள் அரையடி இடைவெளியில் எனும் நின்ற வாக்கிலிருந்து… (READ MORE)

பொரி கடலை

wp-1653388447065.jpg

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை

ஆர்பி சௌத்ரி வீட்டுக்கு எதிர் வீட்டில் தி.நகரின் சவுத் வெஸ்ட் போக் ரோட்டில் நாங்கள் பேச்சுலர்களாகத் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். மைக்ரோசாஃப்ட் பெரிதாக வளராத அந்த நேரத்தில்  ஹார்டுவேர் சர்வீஸ் அண்ட் நாவல் நெட்வொர்க்கிங் என்று சில்வர் வண்ண டிவிஎஸ் சாம்ப்பில் திரிந்து கொண்டிருந்த நான் (பெட்ரோல் லிட்டர் 18.50/- என்பது நினைவு), ஆர்பி… (READ MORE)

பொரி கடலை

, , ,

இரைச்சலுக்கிடையே அமைதி

‘இதுதான் வாழ்க்கை!’ என்று ஏற்றுக் கொள்ளும் போது, இன்னல்களுக்குக் காரணமான உளைச்சல்கள் உதிர்ந்து விடுகின்றன, ‘இனி செய்ய வேண்டியது என்ன!’ என்பது பற்றி தெளிவும் வழிகளும் தோன்றி விடுகின்றன.  ‘என்னைச் சுற்றி எல்லாமும் சரியாக இருந்தால்தான் என்னால் இயங்கமுடியும், எதையும் செய்ய முடியும்!’ என்பவர்களுக்கு எல்லா நேரங்களிலும் அப்படியான தருணங்களை வாழ்க்கை தந்துவிடுகிறதா என்பது கேள்விக்குறிதான்…. (READ MORE)

பொரி கடலை

wp-1650609481779.jpg

‘யாருக்கு வேண்டும் பன்னீர் டிக்கா சாண்ட்விச்!’

‘எக்ஸ்க்யூஸ் மீ… யூ ஆர் பிகேவிங் ஃபன்னி!’ கருநீல இறுக்கமான உடையணிந்து, சாயாலி என பெயர் பொறித்த பட்டையை மார்பில் அணிந்திருந்த,  கண்ணிமையில் சிவப்பு வண்ணம் பூசியிருந்த விமான பணிப்பெண் சற்று அதிகமான சத்தத்திலேயே கூவினாள்.  தூங்கத் தொடங்கிய நான் அதிர்ந்து கலைந்து எழுந்தேன். கவிஞர் வைரமுத்து கழுத்து இறங்க தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நேராய்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மணிமேகலை, காவிரிப்பட்டினம், மணிமாறன்

காவிரிப் பட்டினம், தொடிதோட் செம்பியன் மன்னன், பொதிகை அகத்திய முனி, இந்திர விழா, புகார் நகரத்து நாளங்காடி பூதம், சதுக்கப் பூதம், சித்திராபதி, மகள் மாதவி, தோழி வயந்த மாலை, சுதமதி, சோழ இளவரசன் உதயகுமாரன், யாழ் மீட்டும் எட்டிக்குமரன், அழகிற் சிறந்த மணிமேகலை, அறவணடிகள், வாரணாசி அந்தணர்கள், பசுவின் மகன், பசிப்பிணி தீர்க்கும் அட்சய… (READ MORE)

பொரி கடலை

wp-16493315866315944067076977724616.jpg

செக்யூரிட்டி செக்கின்

மணக்குடி போகும் போதெல்லாம் இது நடக்கும். வீட்டின் வெளிச்சுவரையொட்டிய படியே செல்லும் ஒன்றரையடி  நீள் சிமெண்ட் மேடையில் செருப்பை அழகாக கழற்றி வைத்து விட்டு உள்ளே போவோம். மாலை வெளியில் வந்தால் செருப்பு இருக்காது. வாசல் தெளித்து இருபது புள்ளி அரிசி மாவு கோலம் போடும் அம்மா, அப்படியே நீண்ட சிமெண்ட் மேடையிலும் நீர் விட்டடித்து… (READ MORE)

Manakkudi Manithargal, Uncategorized, பொரி கடலை

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

wp-16492538636646380278259803578736.jpg

காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு. திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு… (READ MORE)

பொரி கடலை

,

wp-1648197244922.jpg

உயரம் என்பது எதை வைத்து?

உயரம் என்பது எதை வைத்து? மனித உடலின் அளவை வைத்தா, உள்ளிருக்கும் உள்ளத்தின் அளவை வைத்தா,  மனிதன் ஆற்றும் அளவை வைத்தா? உடல் உயரம் கொண்டவர்கள் உயர்ந்தவர்களாக ஆகாமல் போகலாம், உயர்ந்த உன்னத மனிதர்கள் உடலளவில் உயரமாக இல்லாமலும் போகலாம்.  ஓடும் உசேன் போல்ட்டின் ஓட்ட வேகத்திற்கும் உடல் உயரத்திற்கும் சம்மந்தம் இருக்கலாம். கர்மவீரர் காமராஜுக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

குறுந்தொகை ஆடிப்பாவை – மாலன்

🌸 இவ்வார குமுதமில் மாலனின் கட்டுரை மிக நன்று. உலகில் முதன் முதலில்கண்ணாடியை உருவாக்கியவர்கள் துருக்கியர்கள், மெருகேற்றியவர்கள் எகிப்தியர்கள், இல்லை சீனம்தான் முதலில் என்று கூகுளில் கதைகள் பல இருக்க, கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ‘குறுந்தொகை’யில் ஆலங்குடி வங்கனார் ‘ஆடிப்பாவை’யில் கண்ணாடியைப் பற்றியும் அதில் தெரியும் பிம்பத்தை உவமையாக வைத்தும் எழுதியிருக்கிறார் என்று… (READ MORE)

பொரி கடலை

, , ,

ஆனை ஆனை அழகர் ஆனை

சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் எழுதுவது எளிதில்லை என்பதை பல ஆண்டுகளாக ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதை பகுதியில் எழுதி வருவதால் அடிக்கோடிட்டு சொல்ல முடியும்.(சிறுவர்களுக்காக நாம் செய்யும் அந்தப் பகுதியை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது வேறு கதை) இயல்பாக வருவதை சிறுவர்களுக்கான எளிய நடையில் மாற்றிதான் நாம் எழுதுகிறோம் என்று நாமே… (READ MORE)

பொரி கடலை

வசுதேவனுக்காக நண்பன் கம்சன்!?

பர்சானபுரியின் தேவகர் தனது செல்ல மகள் தேவகியை, குலத் தொழில் மாறி நூல் கற்று அமைச்சனாகிப் போன வசுதேவனுக்குத் தந்து விடக் கூடாதென்பதற்காகவே, திமிலும் திமிறும் கொண்ட ஏறுவை மன்றிலில் அடக்குபவனே மகள் கொண்டு போவான் என்றறிவிக்க, வசுதேவனால் முடியாதிது  என்றெல்லோரும் எண்ணியிருக்கும் வேளையில் களத்தில் குதித்து காளையையடக்கி தங்கையைத் தூக்கிச் சென்றானாம் ஆளும் கம்சன்… (READ MORE)

பொரி கடலை

, ,

பச்சையப்பாஸ் சில்க்ஸ் திருவண்ணாமலை

🌸 ‘திருவண்ணாமலை வகுப்புக்கு வர்றீங்க! அப்படியே நம்ம புது ஷோருமூக்கு வரணும்!’ என்று நம் மலர்ச்சி மாணவரின் அழைப்பின் பேரில், திருவண்ணாமலை ‘பச்சையப்பா சில்க்ஸ்’க்கு போயிருந்தேன். (அவர்கள் விரும்பியபடி அங்கிருந்த பிள்ளையாருக்கு தீபம் காட்டினேன். நான் விரும்பிய படி கண் மூடி பிரார்தனை செய்தேன்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அசந்து போனேன். ஒரு திருமணத்திற்கு என்று… (READ MORE)

பொரி கடலை

இயக்குநர் வசந்த் : புத்தகக் கண்காட்சியில்

இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

ஆசிரியனாக அகமகிழ்கிறேன்

‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது.  சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு,  புதிய இலக்குகள்,… (READ MORE)

MALARCHI, Malarchi Maanavargal, பொரி கடலை

, , , ,

wp-16452038669085980429362768020932.jpg

என்னது திருக்கோஷ்டியூரா…!

பிள்ளையார்பட்டி கோவிலிலிருந்து வெளியே வந்து காரிலேறி ‘சிவனையும் பெருமாளையும் வணங்குவோர்க்கேயுள்ள திமிர்…’ என்ற முந்தைய பதிவை செல்லிடப் பேசியில் மூழ்கி எழுதி பதிவிட்டுவிட்டு நிமிர்கையில், ‘இறங்குங்க சார்!’ என்கிறார்கள். ‘இது என்ன ஊரு?’ ‘திருக்கோஷ்டியூர்?’ ‘அடடா! ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கத்துகிட்டாரே, அதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரே… அந்த ஊரா?’ ‘ஆமாம்!’ ‘ரெண்டு நாள் முன்னால… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-1645200769336.jpg

வணக்கம் பிள்ளையார்பட்டி

சிவனை பெருமாளை வணங்குவோர்க்கேயுள்ள திமிர் நமக்கும் கொஞ்சம் இருக்கிறது. ‘பிள்ளையாரைப் போய் பாக்கனுமா? சரி, நமக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பன்றாங்க, போயிடுவோம்!’ என்றுதான் பிள்ளையார்பட்டி போனேன். அற்புதமான கட்டமைப்பு உள்ள கோவில். நேராக பிள்ளையார் அருகிலேயே கொண்டு போய் உட்கார வைத்தார்கள். விஐபி தரிசன ஏற்பாடுகள்! மாலை போட்டார்கள், பெரிய ஃப்ரேம் போட்ட படம் தந்தார்கள்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

சார்பதிவாளர் அலுவலகங்கள் அசத்தல்

குடும்ப சொத்து ஒன்றை முறைப்படி எங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்காக புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன். வெளியில் பத்திரம் விற்பனையாளர், பத்திரம் எழுதித் தருபவர் என அந்த நிலை பணிகளும் பணியாளர்களும் அப்படியேதான் உள்ளனர். ஆனால், அரசின் பதிவாளர் அலுவலகம் அசத்துகிறது. ‘இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் உங்கள் வேலை, அப்போது வந்தால் போதும்!’… (READ MORE)

பொரி கடலை

,

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’

‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’ பல்வேறு பணிகளுக்கிடையே, எதை எழுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாத ஆனால் பத்திரிக்கைக்கு முக்கிய முகப்புக் கட்டுரை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கெடு நிலையில், உட்கார்ந்து ஓர் அலைவரிசையில் ஏதோவொன்று பிடிபட்டு உள்ளுக்குள் அது வடிவமெடுக்க அதை எழுதத்தொடங்கி சுற்றியுள்ள உலகையே மறந்து லயித்து முடிக்கும் போது, மொத்தமாக ஒரு நல்… (READ MORE)

பொரி கடலை

,

வாழப்பாடி ஆசிரியர்: தட்றா கைய அவருக்கு!

எவ்வளவு படித்தாலும் எழுதினாலும்  பேச்சில் பயன்பாட்டில் இல்லாத மொழியில் சரளம் வராது. தமிழக மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தில் தவிப்பது இதனால்தான். உரையாடலை கொண்டு வந்து விட்டால் பழகப் பழக மொழி வசமாகும்.  பேசக் கற்றால் எழுதுவதும் படிப்பதும் இன்னும் எளிதாகும் என்னும் வழியை அடிப்படையாக வைத்து, சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளியில் சிவக்குமார் என்னும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடியைப் போலவே, வேலூர் க்ரீன் சர்க்கிள் ‘ஆர்யாஸ்’ காஃபியும் தனி வகையே! தேசிய நெடுஞ்சாலை வழியே வேலூரை கடக்கும் போதெல்லாம் மேம்பாலத்தில் ஏறாமல் இடதில் இறங்கி க்ரீன் சர்க்கிளை சுற்றி ஆர்யாஸில் நுழைவது ஒரு வழக்கம். தாயம் வகுப்புகள், வேலூர் – குடியாத்தம் – திருப்பத்தூர் மாணவர்கள் பலரின் முகங்கள் எல்லாம் வந்து போகும்…. (READ MORE)

பொரி கடலை

நீலம் – நாவல் வடிவில் பாகவதம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக படித்தும் செவி வழி கதைகள் கேட்டதுமன்றி பாகவதத்தை முழுதுமாக இதுவரை வாசித்தில்லை நான். பாகவதத்தை உள்வாங்கி நாவல் வடிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் நூல் நண்பர் மதுவின் பரிசாக நம் வாசல் வந்து சேர, பாகவதம் விரிகிறது என் முன்னே என்னுள்ளே. சில அத்தியாயங்கள் படித்ததுமே வியப்பில் உறைந்து கீழ்வருவனவற்றை சொல்கிறேன்:… (READ MORE)

Books Review, பொரி கடலை

எப்படி நடக்கிறது இது

என்ன சொல்வது, எப்படி சொல்வது இதை! ஓர் இடத்தில் ஒருவருக்கு உயிர் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றி எதுவுமே தெரியாத வேறொரு ஊரில் இருப்பவனுக்கு அவரது நினைப்பே தொடர்ந்து வருமா!? மகனை மகளை கொண்டாடுவதை விட இன்னும் அதிகமாய் பேரன் பேத்திகளை கொண்டாடுவர் தாத்தாக்கள். ஒருவருக்கு எத்தனை பேரன்கள் பேத்திகள் இருப்பார்கள்! ஒன்று, இரண்டு, மூன்று,… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

தாத்தாவாம்

நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒன்றும் செய்யாமலிருந்தாலும் உலகம் இயங்கத்தானே செய்கிறது. அக்காவின் பையனையே இன்னும் சின்னவன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அவனது பிள்ளைக்கு இன்று காதுகுத்தல் செய்து பொன்நகை பூட்டும் நிகழ்வு திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில்.  எல்லாக் குழந்தைகளையும் போல மொட்டையடிக்க அழுதான், காது குத்தும் போது கேவினான் சிறுபிள்ளை லித்தீஸ்வரன். அக்காவின் பேரன் என்பதால்… (READ MORE)

பொரி கடலை

ஜென் நிலைக்கு முன் நிலை

‘அந்த பனாரஸ் காட்டுங்க’ ‘மேடம், இது பனாரஸ் இல்லை. கோட்டா’… ‘இதில மொத்தம் மூணுதான் இருக்கு மேடம். அதே பேட்டர்ன், டிசைன். கலர் மட்டும் வேற. இதோ ரெட், க்ரீன், ப்ளூ! மூணு இருக்கு!’ ‘ஓ! வேற கலர்ஸ் இருக்கா?’ … ‘நீங்க கேட்ட அதே புடவை, பெட்டர் மெட்டீரியல் ‘தஸ்ஸாரா’ல இருக்கு பாருங்க. இதோ!’… (READ MORE)

பொரி கடலை

, ,

நீலம் : என்ன விலை கொடுத்தால் தகும்?

சில நேரங்களில் நமக்கு தரப்படும் சிலவற்றை எதைக் கொண்டும் அளவிட முடியாது.  தாகத்தில் தவிப்பவனுக்கு தரப்படும் ஒரு குவளை நீரைப் போன்று, வேண்டிய நேரத்தில் வரும் அவை விலைமதிப்பற்றவை, என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதவை. வாங்கி வைத்திருந்து வாசிக்காமலே இரண்டாண்டுகள் கடந்து, பிற்பாடே கையிலெடுத்த ‘வெண்முரசு’ வரிசையின் ‘முதற்கனல்’ மெல்ல மெல்ல என்னை… (READ MORE)

Books Review, பொரி கடலை

, , ,

பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள். உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே… (READ MORE)

Politics, பொரி கடலை

, ,

முதல் நாள்

படித்து தேர்வாகி  வென்று வேலைக்கு போவது ஓர் உணர்வு என்றால் நம் பிள்ளைகள் வேலைக்கு போவது வேறொரு நிலை, வேறோர் உணர்வு. தனது ப்ரொஃபஷனல் வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கும் என் மகள், இண்ட்டர்ன்ஷிப்பிற்காக ஒரு நிறுவனத்தில் சேரும் முதல் நாளான இன்று நாமே சேர்வது போல பயபக்தியோடு போய் அவளை விட்டு வந்தேன்…. (READ MORE)

பொரி கடலை

சில பாடல்களின் வரிகளினிடையே

சில பாடல்களின் இடையே ஊடுபயிர் போல பழைய வேறு பாடலின் துண்டை வைத்து அனுப்புவது இசையமைப்பாளரின் சித்து. ‘ஹம் ஆப் கே ஹேன் கவுன்’ பாடல்களில் நடு நடுவே ‘மைனே ப்யார் க்யா’ பாடல்கள் வைத்தது, நதியாவை கேட்டு ‘மாமா உன் பொண்ணக் குடு, ஆமாம் சொல்லிப்புடு’ என்று ரஜினி ஆடிப்பாடும் பாடலில் இடையில் ராஜா…… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

wp-1632332717868.jpg

மனிதர்கள் மீதான என் வியப்பு கூடிக்கொண்டேதான் போகின்றது

ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றனதான். வடுக்கள், படிப்பினைகள், பூக்கள், அனுபவங்கள், நினைவுகள் என எவ்வளவோ இருக்கின்றன ஒவ்வொரு மனிதனிடமும்.  ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஒரு புத்தகம். சில புத்தகங்கள் பலராலும் புரட்டப்பட்டும், சில புத்தகங்கள்  திறக்கப்படாமலேயும் இருக்கின்றன. மறையும் ஒவ்வொரு மனிதனையும் சிங்களர்களால் கொளுத்தப்பட்ட யாழ்ப்பானத்து நூலகமாகவும், ஆப்கானியர்களின் படையெடுப்பால் அக்காலத்தில் எரிக்கப்பட்ட நாலந்தா… (READ MORE)

VALARCHI Tamil Monthly, பொரி கடலை

வாழ்க்கை என்பது தேடலா

செந்தில் நாதன்: ‘விடைதேடுவதா வாழ்க்கை, வாழ்க்கை என்பது வாழுவதில்லையா?’ பரமன்: தேடலே வாழ்வாக அமையலாம் சிலருக்கு. தேடிக் கண்டடைதல் கடைசியில் நிகழலாம் சிலருக்கு. தொடக்கத்திலேயே கூட நிகழலாம் இன்னும் சிலருக்கு. கண்டடைய வேண்டியது கைக்கு வந்துவிட்டதே தெரியாமல் கால் கடுக்க ஓடிக்கொண்டேயிருப்பதும் வாழ்க்கையாகி விடுகிறது சிலருக்கு. கண்டடைய ஒன்றுமேயில்லை. ‘தேடித் துழாவ ஒரு துரும்பும் இல்லை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,

வேகவதி வேகமாய் காப்பாற்றப் படட்டும்!

வேகவதி ஆற்றை நீக்கிவிட்டு காஞ்சியின் சிறந்த மன்னனான மகேந்திர பல்லவனின் வரலாற்றை எழுதவே முடியாது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்த வந்த போது,  அந்தப் பக்கம் சாளுக்கிய படை, இந்தப் பக்கம் கோட்டை மூடப்பட்ட காஞ்சி மாநகரம் என வரலாற்றின் இடையே வேகமெடுத்து ஓடுகிறது வேகவதி ஆறு.  சங்ககால பத்துப்பாட்டின் அரசன் ‘தொண்டைமான் இளந்திரையர்’… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம்.  யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும். இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி! -பரமன் பச்சைமுத்துமணக்குடி,18.09.2021… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

மறைந்தவர்களுக்கு செய்யப்படும் மிகச்சிறந்த நினைவு அமைப்பு.

மறைந்த ஒருவரின் நினைவாக சிலை வைப்பார்கள், மணி மண்டபம் கட்டுவார்கள், பெரிய படம்  வைத்து மரியாதை செய்வார்கள்.ஓர் ஊருக்கே பயன்படும் அளவிற்கு ஓர் ஊருணியை செப்பனிட்டு ஊருக்கே பயன்படக் கொடுத்தவர்களும்   இருக்கிறார்கள். மறைந்த எழுத்தாளர் அசோகமித்ரனின் மகன் அதைச் செய்து மிகச் சிறந்த முன் மாதிரியாக உயர்ந்து நிற்கிறார்.  சிதம்பரம் வட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த குமுடிமூலை… (READ MORE)

பொரி கடலை

,

பிள்ளகள் என்றால்

நாம ரொம்ப பெரிய ஆளுங்க இல்லன்னாலும், கொஞ்ச பேர் நம்ம நேரத்துக்காக காத்துகிட்டு இருக்காங்க. நம் ஆஃபீஸில நிறுவனத்துல பலர் வேலை செய்யறாங்க. பலர் சேர ஆசைப்படறாங்க. எல்லா வேலையையும் விட்டுட்டு ஒதுக்கி வச்சிட்டு உட்கார்ந்துருக்கோம் ஒரு அலுவலகத்தின் வெளியே ஒரு இருக்கையில் ஒன்றரை மணி நேரமாக. உள்ளே மகள் இண்டர்வ்யூக்கு போயிருக்கிறாள் என்பதற்காக. அவளாகவே… (READ MORE)

பொரி கடலை

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு?

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு? ‘யோவ்! நான் இல்ல, யாரு துளசிய வாயில போட்டாலும் ஒரே சுவைதான், சுருக்கென்று வரும் கார்ப்புதான்! போவியா!’ என்கிறீர்களா? (ஜப்பானில் வேலை பார்த்த காலத்தில் டோக்கியோவின் உணவகம் ஒன்றில் காரமான பீட்ஸா வேண்டுமென நான் ஆர்டர் செய்திருந்த போது, அதில் துளசியை தூவித் தந்தார்கள். அவர்களுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

முன்னாடியிலேருந்தே இதை அணியறேன்!

கை மடிச்சு வுட்ட ஹாஃப் குர்தாவ ‘அண்ணாத்த’ டீசர் பாத்துட்டுதான் நான் போடறேன்னு சொல்லிடாதீங்க. நான் 12 வருஷமா அப்படிதான் டிரெஸ் பன்றேன், அத போட்டுட்டு இருக்கேன். ஆமா! நன்றி! பரமன்

பொரி கடலை

சர்ச் வெட்டிங் அனுபவம்

‘சர்ச் வெட்டிங்’ எனப்படும் கிறிஸ்துவ முறை திருமணம் நான் பார்த்ததில்லை.  இன்று மலர்ச்சி மாணவன் விஜய்சிவா – தான்யா திருமணம் சர்ச்சில் நடந்ததால் அதில் பங்குபெறும் அனுபவம் பெற்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் முகுந்தனும் கொல்லத்தில் நடந்த அலெக்ஸ் அப்ரஹாம் திருமணத்திற்குப் போயிருந்தோமென்றாலும் அது சர்ச்சில் நடக்கவில்லை, நாங்களும் ‘குமாரகோம் – ஆலப்புழா’ பற்றி… (READ MORE)

பொரி கடலை

மொத்த மீடியாவும் காத்திருக்க…

நம் பத்திரிக்கையின் அஞ்சல் பதிவிற்கு விண்ணப்பித்து நீதிபதி முன் ஆஜராகியே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அரசு விதிப்படி இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழைகிறேன். இயல்புக்கு மாறாக ஏக கூட்டம்! மதிற்சுவருக்கே வெளியிலிருந்து உள்ளே குறிபார்த்து வரிசையாக தயாராக நிற்கும் ஆளுயர வீடியோ கேமராக்கள், ஊடகவியலாளர்கள் என பெருங்கூட்டம். இயல்புக்கு மாறாக விறைப்பாய்… (READ MORE)

பொரி கடலை

ஜெயமோகன் – பொன்னியின் செல்வன் – – விகடன் நேர்காணல்

ஜெயமோகனின் நேர்காணல் விகடனில் – நன்று. ஏன் விருதுகளைப் புறக்கணிக்கிறார், பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஏன் எழுதுவதில்லை? (பல காலமாக அவரை இதையே கேட்கிறார்கள், அவரும் திரும்பத் திரும்ப பதில் சொல்கிறார்), பொன்னியின் செல்வன் வசனம் அனுபவம் என கேட்கப்பட்டதற்கு சரியான பதில்கள்.  ஆனாலும், ‘விருது கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன்!’ ‘ஞானியாவற்கான தகுதிகள் கொண்டவனாக… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வந்தது!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, வலியில்லா தடுப்பூசி, ‘உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி’, அதிக அளவில் வீணாகாது தட்ப வெப்பம் தாங்கும், இந்திய விஞ்ஞானிகள் சாதனை, 3 கட்ட சோதனைகள் முடிந்தது, 66.6% செயல் திறன் கொண்டது, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி தந்தது என இவர்கள் சொல்லும் பலதையும் தாண்டி… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-16294374282851962198108112523958.jpg

இண்டிகோ ராமாயி

‘பிபி சூட் அணிந்திருக்கிறீர்களா?’ விமானப் பயணத்தில் நடைவழிக்கு அருகே அமர்ந்திருப்பவர்களுக்கும்,இரண்டு பயணிகளுக்கு இடையே அமர்பவர்களுக்கும் ‘அணிந்தே ஆக வேண்டும்!’ என்று கட்டாயமாக கொடுக்கப்படும் ‘ஒரு முறை பயன்படுத்தி எறிந்து விடக் கூடிய கவச உடை’ ஒரே வீட்டிலிருந்து கணவனும் மனைவியுமாக வந்தாலும், தந்தையும் மகளுமாக வந்தாலும் அடுத்தடுத்து அமரும்போது ஒருவர் பிபி சூட் அணிய வேண்டும்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

wp-16294351639235545552684397536543.jpg

தாமிர பரணி தந்த அனுபவம்

‘சார் மொறப்ப நாட்டுக்கா? இவ்ளோ இருட்டிட்டு. ஒண்ணும் தெரியாது சார் பாத்துக்கோங்க!’ ‘தாமிரபரணியில எறங்கனுமே! ராத்திரின்னாலும் பரவாயில்லை. இருட்டாருந்தாலும் பரவாயில்ல. செல்ஃபோன்ல லைட் போட்டுக்கலாம்! கூட்டிட்டுப் போங்க!’ ‘அதில்லை சார், இருட்டுல வழியில பாம்பு பல்லி பூச்சி பொட்டு இருக்கும்’ ‘அதெல்லாம் நண்பர்கள் நமக்கு, அக்ரிமெண்ட் உண்டு கிட்டயே வராதுங்க. போங்க!’ ‘மொறப்பநாடு தூரம் சார்…. (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-1629016304303.jpg

குழந்தைகளோடிருக்கையில்…

குழந்தைகளோடிருக்கையில் இருக்கும் இடத்திலிருந்தே வேறோர் உலகிற்கு உடனடியாகக் கடத்தப்படுகிறோம். ஒரு குழந்தையைத் தூக்கும் போது உண்மையில் நாமே தூக்கப்படுகிறோம். (திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை பயண வழி உணவக வளாகத்தில் மகிழ்ந்திருந்த தருணங்கள்) #Children #Dhuruvan பரமன் பச்சைமுத்து15.08.2021

பொரி கடலை

, , ,

கலக்குது கல்லக்குடி பேரூராட்சி!

பல ஆண்டுகளாக மலை போல் கொட்டப்பட்டு குப்பைக் கிடங்காக பாழ்பட்டுக் கிடந்த 1.30 ஏக்கர் பகுதியை வளமீட்பு பூங்காவாக மாற்றி மண்புழு உரம், இயற்கை உரம் தயாரித்து விற்று விவசாயிகளுக்கும் உதவி செய்து வருவாயையும் பெருக்கி கலக்கியிருக்கிறார்கள் கல்லக்குடி பேரூராட்சியினர். மீன் கழிவுகளிலிருந்து மீன் அமிலம், முட்டை ஓடுகளிலிருந்து கல்ரோஸ் உரம் தயாரித்து விற்பது, இயற்கை… (READ MORE)

பொரி கடலை

, ,

இந்தியாவும் மேலெழட்டும்

முதல், இரண்டு, மூன்று என மூன்று இடத்தையும் பிடித்து அசத்திய  ஜமைக்கா வீராங்கனைகளின் ஓட்டத்தை பார்த்தவன், நீரஜ் சோப்ராவின் அதகளத்தை தவற விட்டு, மறு ஒலிபரப்பிலேயே பார்த்தேன். சிரஞ்சீவி படங்களில் பார்ப்பதைப் போன்ற ஒரு காட்சியை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டிவிட்டார் நீரஜ் சோப்ரா.  தான் பணிபுரியும் ராணுவத்திற்கும் மொத்த இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்து இளைஞர்களின்… (READ MORE)

பொரி கடலை

, ,

கண்ணப்பர் நிகழ்வு நடந்த ஊர்

சென்னைக்கு வந்திருந்த அந்நாட்களில் ஞாயிறு அல்லது தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை வந்தால் செந்தில் பாபு போன்ற நண்பர்களோடு சேர்ந்து மேக்ஸ் 100 ஆர் பைக்கில் நெடும்பயணம் செய்யக் கிளம்பிடுவது உண்டு. ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி அந்நாளைய அடிக்கடி தேர்வுகளில் ஒன்று.  நெடும் பயணத்திற்கு தோதான தூரத்தில் ஓர் இலக்கு வேண்டும், குறைந்த செலவில் வெளிமாநிலத்திற்கு… (READ MORE)

பொரி கடலை

wp-1627654482828.jpg

மாலை மஞ்சள் வெயிலும்…

மாலை மஞ்சள் வெயிலும்நீள நீல வானும்அறுவடை முடிந்த அன்னவயலும்ஓங்கி வளர்ந்த ஒத்தப் பனையும்ஆளரவமே இல்லா வெளியில்ஆட்காட்டி குருவியின் ஆரவாரமும் எனவாய்க்காங்கரையில் வாயெல்லாம் பல்லாக நான் கொண்டது நாட்படு தேறல் அனுபவம்! பரமன் பச்சைமுத்துமணக்குடி30.07.2021 Manakkudi Keezhamanakkudi Vayal Chakrasana Yoga

பொரி கடலை

, , ,

தலையாலங்கானத்துப் போர் மற்போராம்!

தலையாலங்கானத்துப் போர் பற்றி பாடமாகப் படித்திருக்கிறோம். ஆட்சியில் இருப்பது சிறுவன்தானே என எண்ணி, சோழன் பெருநற்கிள்ளி, சேரன் சேரல் இரும்பொறை, வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (பெயர்களை கவனியுங்கள்!) ஆகிய எழுவரும் படையெடுத்து வந்ததும், ‘தன் கால் கிண்கிணி களைந்து ஒண்கழல் அணிந்து, தன் முதற்போருக்குப் புறப்பட்ட அன்றுதான் பால் குடித்தலை… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

மெட்ராஸ்

‘மெட்ராஸ்’ சிறு வயதில் போதையேற்றிய எங்கோ தூரத்திலிருந்த, ‘ஒரு நாளு அந்த ஊரைப் போய்ப் பாக்கனும்!’ என்று ஆசையூற வைத்த ஒரு கனவு நகரம். ‘மெட்ராஸ்’ – பிரித்தானியர்கள் தங்கள் வசதிக்கேற்ப வழுவிச் சூட்டிய பெயர். மெட்ராஸ் சென்னையாக மாறிக்கொண்டிருந்ததை கண்ணெதிரே கண்ட தலைமுறையில் நானும் ஒருவன். மவுண்ட்ரோடு, ஜெமினி ஃப்ளை ஓவர், ஏவிஎம் ஸ்டுடியோ,… (READ MORE)

பொரி கடலை