நல்ல நதி நாளை வரும்…

​வெள்ளையர்கள் கொள்ளையர்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லைதான். கொள்ளை கொண்டதை தள்ளிக் கொண்டு போக அவன் பயன்படுத்தி பின் தந்துவிட்டுப் போன உன்னத நீள நீர்வழித் தடத்தை சாக்கடையாக்கி நாறச் செய்துவிட்டோம். 
நல்லதையே சாக்கடையில் வீசக்கூடாது, நாம் நல்லதில் சாக்கடையையே கொண்டு வந்து விட்டுவிட்டோம்.
திரும்பவும் இது ஓர் நதியாகி, இதன் வழியே நீர்ப் போக்குவரத்து நடந்தால் எப்படி இருக்கும்! 
ஏன் நடக்காது? நாளை நடக்கலாம்! கங்கையை சுத்தம் செய்வேன் என்று ஒருவர் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கி நிற்கும் இந்நாட்டில், நாளை ஓர் அழகிய தமிழ்மகன் பங்கிங்காம் கால்வாயை பக்காவாக பராமரிப்போம் என்று இறங்கலாமே! வருவான்!
பெரும் நம்பிக்கையுடன்,

பரமன் பச்சைமுத்து

மாமல்லபுர எல்லை

19.10.2016  

Www.ParamanIn.com 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *