மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை…

wp-image-889211178.jpg

நேற்று மலர்ச்சி உரை நிகழ்ந்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரிமிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது.

ஆசிரியர் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மலர்ச்சி உரை ஆற்ற அழைக்கப்பட்டேன். பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றுமுள்ளோர் என இருநூற்றைம்பது பேர் இருந்த அந்த அரங்கில் வியர்வை சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் நிகழ்த்திய உரை உள் நுழைந்திருக்கிறது மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது என்பதற்கான ஒரு ஆதாரமாகத் தெரிகிறது இக் குறுஞ்செய்தி.

நான் பேச்சாளனில்லை. ஆசிரியன். என் ஆசிரிய மனதுக்கு இக் குறுஞ்செய்தி ஒரு நறுஞ்செய்தி, இந்த ஆதாரம் ஓர் ஆரவாரம், இந்தச் சிறு தொடக்கம் பெறும் மாற்றம்.

மாற்றத்தில் சிறியது பெரியதென்று இல்லை. மாற்றம் மாற்றம்தான். சிறிய மாற்றங்களே வாழ்வைப் புரட்டிப் போடும் மாற்றங்களாக வளர்ந்து உருவெடுக்கின்றன. எல்லாப் பெரிய விஷயங்களும் சிறியதாகவே தொடங்குகின்றன.

தொடங்குதல் முக்கியம், தொடர்தல் அதை விட முக்கியம்!

மாற்றங்களும் ஏற்றங்களும் கூடட்டும்! இறைவன் துணை புரியட்டும் – வளர அவர்களுக்கும், இன்னும் ஏராளமானோர் வாழ்வில் வளர்ச்சியூட்ட எனக்கும்.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து

08.09.2017

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *