சிறுவர்களை பின்பக்கமாகத் தூக்கி அந்தரத்தில் சுழற்றியெறிந்து முன்பக்கம் பிடிப்பது ஒரு த்ரில் அனுபவம். தூக்கி காற்றில் விடும் போது, சிறுவன் கையை விட வேண்டும், இல்லையென்றால் களேபரமாகிவிடும். வரும் மே மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குரு என்கிற மோகனேஸ்வரன் ( பேட்ச் 8) குழந்தையாக இருந்த போது பயந்து கையை இறுக்கி விட, தலைகுப்புற கீழே விழுந்து தலையில் அடி வாங்கினான். என்னைத் திட்டவும் முடியாமல் தாங்கவும் முடியாமல் அவனம்மா ( உமாக்கா) மனதுக்குள் திட்டியும் அவனை அடித்ததும் உச்சம். அதற்குப்பிறகு பிள்ளைகளை தூக்கி எறிவது குறைந்து போயிற்று.
இன்று நெய்வேலி ஹோட்டல் ராதா பார்க் வளாகத்தில் டாக்டர். ராஜலட்சுமியின் மகன் அமுதினியன் நல்லனுபவம் பெற்றான், தந்தான்.
😄🌸
பரமன் பச்சைமுத்து
நெய்வேலி
17.08.2018