Monthly Archive: February 2025

சென்னையில ஏறி காஃபி குடிச்சா பெங்களூரூ!

சென்னையில் ரயிலில் ஏறி உட்கார்ந்து ஒரு காஃபி குடித்து விட்டு கழிப்பறை போய் விட்டு வெளியே வந்தால் பெங்களூரூ வந்து விட வேண்டும் என்பது என் பல காலத்தைய வியப்பான கற்பனை. ஜப்பானில் பணி புரிந்த காலத்தில் ‘ட்துஜிகாவோக்கோவோ’ மெட்ரோ நிலையத்தில் என் இளம் வயது கற்பனைகளில் ‘டோக்கியோவிலிருந்து இந்த புல்லட் ட்ரெயினை அப்படி கடத்தி… (READ MORE)

பொரி கடலை

சிவப்பு நிலா

அந்தக் காலத்துப் பேய்ப் படங்களில் வானத்து வெள்ளை நிலா பேய் வரும் போது மட்டும் ரத்த சிவப்பு நிலாவாகத் தெரியுமே (குளியறை குழாயில் தண்ணீருக்குப் பதில் ரத்தம் வரும்) அப்படியொரு ரத்தச் சிவப்பு நிலாவை பார்த்திருக்கிறீர்களா? சூரியனிலிருந்து 150 கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சந்திரன் (இந்தத் தூரத்தை தரையில் கணக்கிட்டால் காஷ்மீருக்கும் கன்னியாகுமரிக்கும்… (READ MORE)

பொரி கடலை

205741099-hombre-feliz-con-los-brazos-extendidos-sobre-su-cabeza-disfrutando-de-la-vida-dibujo-de-tinta-de

சார் நீங்க…?!

பல ஆண்டுகள் ஆயிருந்ததாலும், வேறு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டியிருந்ததாலும், ‘உங்களுடைய அடையாள படிவங்களை எடுத்துக் கொண்டு நீங்களே நேரில் வரவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டதாலும் இதுவரே போயிராத அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்திற்குப் போயிருந்தேன். (‘தெரிந்தவர்கள் எவரும் இல்லை! ம்… அந்த கவுண்டர்ல கேப்போம்!’) ‘மேடம்… எனக்கு பேங்க் அக்கவுண்ட் சேஞ்ச் பண்ணனும்’… (READ MORE)

Paraman's Program, பொரி கடலை

, , ,

‘காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி’ – 5 : நிறைவு பகுதி

*5* ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விருப்பங்கள் உண்டுதானே! காடும் மலையும் மலையேற்றமும் ஈர்த்த அளவிற்கு துடுப்பு படகில் செல்வது ஈர்க்கவில்லை எங்களை. குழந்தைகள் கொண்டாடுவார்கள். பத்தனம்திட்டா மலைப்பகுதியிலிருந்து ‘ட்ரெக்கிங்’ முடித்து கவியாறு கேரள அரசு சுற்றுலா மையம் வந்ததும் துடுப்புப் படகில் அழைத்துப் போனார்கள். படகில் பயணித்ததை விட படகில் பயணித்த போது சூழலில் இருந்த… (READ MORE)

Paraman Touring

காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி’ – 4 : பரமன் பச்சைமுத்து

*4* யானைகளைப் புரிந்து கொள்ளாமல் காட்டைப் புரிந்து கொள்ள முடியாது. யானைகளைப் புரிந்து கொள்கிறவன் காட்டைப் புரிந்து கொள்கிறான். காட்டைப் புரிந்து கொள்கிறவன் யானைகளை புரிந்து கொள்கிறான். யானைகளால் மனிதர்களும் மனிதர்களால் யானைகளும் இறந்து போன சம்பவங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டென்றாலும் யானைகளோடு மனிதர்களின் தொடர்பு ஆதிகாலம் தொட்டே இருந்து கொண்டுதான் இருக்கிறது. யானை உருவத்தில்… (READ MORE)

Paraman Touring

, , ,

காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி – 3 : பரமன் பச்சைமுத்து

*3* காடென்பது வெறும் காடல்ல. கடலைப் போல அது ஒரு தனி உலகம். இந்த உலகம் சீராக இயங்குவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் உலகம். காடென்பது வெறும் மரமல்ல, ஓர் உயிரியல் கூட்டமைப்பு. புல், பூண்டு, மரம், செடி, கொடி, புழு, பூச்சி, பறவை, விலங்கு, ஒட்டுண்ணி, பாக்டீரியம், நுண்மி என பல்லுயிரும் சேர்ந்து இயங்கும் ஒரு… (READ MORE)

Paraman Touring

, , , , , , ,

காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி – 2 : பரமன் பச்சைமுத்து

ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் மடகாஸ்கர் பகுதியோடு இருந்து, புவித் தட்டுகளின் நகர்வால் பிய்த்துக்கொண்டு ஆசிய இந்தியாவில் இப்போது இருக்கும் இடத்தில் ஒட்டிக் கொண்டதாக சொல்லப்படும், மராட்டிய குஜராத் எல்லையில் தொடங்கி கோவா, கர்நாடகம், கேரளம் என விரிந்து தமிழக கன்னியாகுமரியில் முடியும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ஒரு பகுதியில் பெய்யும் பெருமழை நீர் முழுக்க… (READ MORE)

Paraman Touring

, , , , , , , , ,

காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி. – 1 : பரமன் பச்சைமுத்து

மலைகள் அழகு, காடுகள் அழகு என்றால் மலையும் காடும் புணர்ந்த குறிஞ்சி முல்லை இடம் எப்படி இருக்கும் அழகோ அழகுதானே! கூடவே வற்றாத ஒரு பெரிய காட்டாறும் சேர்ந்து விட்டால் எப்படியிருக்கும் கற்பனை செய்யுங்கள். காலங்காலமாக மன்னன், பளியன், ஊராளி இன பழங்குடி மக்கள் மகிழ்ந்து குலாவி வாழ்ந்த இந்தப் பகுதி பல்வகை விலங்குகள் செறிந்திருந்த… (READ MORE)

Paraman Touring

, , , , ,