Monthly Archive: June 2025

குன்றுதோறாடல் போயிருக்கிறீர்களா?

குன்றுதோறாடல் – போயிருக்கிறீர்களா,கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உருவ வழிபாடு கூடாது, மதச் சின்னங்கள் கூடாது, சோதியையே வணங்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன வள்ளலார் இளம்வயதில் தியானத்தில் இருந்த போது காட்சி தந்ததாக சொல்லப்படுவது எந்த கடவுளர் தெரியுமா? முருகனுக்கு திருமணம் எங்கே நடந்தது? ஒன்றுமில்லாத குட்டியூண்டு தெருமுனை முருகன் கோவில்களிலெல்லாம் சூரசம்ஹாரம் நடத்தும் போது, ஒரு பெரிய… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , ,

திருவேரகம் : மனுஷன் கட்டி உருவாக்கின மலையா இது!?

‘என்னாதூ பரமன், மனுஷன் கட்டி உருவாக்கின மலையா இது? இது ஒரு மலைன்னு நெனச்சிட்டு இருக்கேன் இத்தனை வருஷமா? எவ்வளோ தடவ இங்க இந்த கோவிலுக்கு வந்துருக்கேன், தெரியலையே!’ மலைகளே இல்லாத சோழ தஞ்சைப்பகுதில் ஒரேயொரு மலைக்குன்று மட்டும் எப்படி வந்தது? திருவேரகம் போயிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எவனாயிருந்தாலும் சிவனாயிருந்தாலும் ஆசிரியனுக்கு பணிவு முறைமை தரவேண்டும் என்று… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , , ,

மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் குடி…

‘என்னது, பழநி அறுபடை வீடு பட்டியல்லயே இல்லையா? என்ன சொல்றீங்க பரமன்?’ … முல்லைக்குத் தேர் கொடுத்த பரம்பின் பாரி போல, மயிலுக்கு போர்வை தந்தவன் பொதினியின் வையாவி கோப்பெரும் பேகன். நாம் பாடங்களிலும் சங்க இலக்கியங்களும் படித்த கடையேழு வள்ளல்களில் ஒருவனான இந்த பேகனின் குடி ஆவியர்குடி. இவர்களது பெயராலேயே இந்த பகுதியின் (ஊர்)… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , , , , , , , , , ,

சோலைமலை இளவரசன்…

மதுரையிலிருந்து பயணித்த ஔவையார் பயணக்களைப்பிலும் பசியிலும் வாடி மரங்களடர்ந்த ஒரு சோலையை நாட, அங்கே… நிற்க. ஔவையார் என்பவர் ஒருவரல்ல, ஆத்திச்சூடி பாடியது 12 ஆம் நூற்றாண்டின் ஔவை, விநாயகர் அகவல் பாடியது 14 ஆம் நூற்றாண்டின் ஔவை, அதியமானிடம் நெல்லிக் கனி பெற்றது பண்டைத் தமிழ் ஔவை என வேறு வேறு காலகட்டங்களில் தமிழ்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , ,

கைகளில் ஏந்தி சுமக்கும்…

ஐயிரண்டு திங்கள் கருவில் சுமந்தவரை ஆயுள் முழுக்க தன் நெஞ்சில் சுமக்கிறவரை கைகளில் ஏந்தி சுமக்கும் அனுபவம் பெற்றேன் இன்றே நிமிடங்களுக்கு அனுபவம் கூட்டி அடர்த்தியாக்கினேன் நிகழ்ந்ததை கடந்தும் பதிந்து மகிழ்கிறேன் இன்னொரு சென்மமிருந்தால் நீ எனக்கு குழந்தையாய் இல்லை இன்றே இப்போதே சுமக்கிறேன் இக்கணமே வாழ்கிறேன் வெட்கமில்லை, கூச்சமில்லை ஆர்வமும் அன்பும் மட்டுமே! இறைவா… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம், ஆ...!, கவிதை

50 வருஷத்துக்குப் பிறகு…

‘தம்பி, மணக்குடியிலேருந்து எல்லாரும் வந்தாங்க. ரெண்டரை வயசு வால் பையனையும் ஏழரை வயசு பொண்ணையும் கூட்டிட்டு கணவன், மாமியாரோடு ஒரு மனுஷியும் வந்தா. முருகனை கும்புடலாம்னு வந்தா.’ ‘சரி!’ ‘இதோ இந்த இடத்தில, இந்த இடத்திலதான் அவளை மட்டும் இங்கயே நிறுத்திட்டு, குழந்தைகளை தூக்கிட்டு கோயிலுக்குப் போய்ட்டாங்க கணவனும் மாமியாரும் மத்தவங்களோட.’ ‘ஏன்? ஏன் அந்த… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , ,

அலைவாய் போயிருக்கிறீர்களா?

அலைவாய் போயிருக்கிறீர்களா? சரி, சீரலைவாய் தெரியுமா? தொல்காப்பியமே மிகவும் பழமையானது. அந்தப் பழந்தமிழ் தொல்காப்பியமே ஒரு கோவிலைக் குறிப்பிட்டால், அது எவ்வளவு பழமையாக இருக்கும்? கடற்கரையிலிருந்து வெறும் 65மீ ஒரு கோவில், அது கூட பரவாயில்லை தரை மட்டத்திலிருந்து 10 அடி கீழேயும் கடல் மட்டத்திலிருந்து 15 அடி கீழேயும் கருவறை மூலவர் குகை, ஆனால்… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

பறந்து செல்ல லண்டனுக்கு டிக்கெட் எடுத்து பரலோகம் போனவர்களுக்கு…

தங்களது இறுதியாத்திரைக்கு தாங்களாகவே புறப்பட்டுப் போனார்கள் ஐஏ-171ல் அவசர வழியின் அந்த இருக்கையில் இருந்தவன் ஐந்து நொடிகள் தூங்கியிருந்தால் மரணித்திருப்பான் மற்ற இருக்கைகளின் 241 பயணிகளும் விழித்திருந்தும் மரணித்துப் போயினர். உணர்வதற்குள் உடல்களை விட்டுவிட்டு உயிரை தின்றுவிட்டது தீ. கரிக்கட்டைகளாக மனிதர்கள் ஆன பின்பு கருப்புப் பெட்டியால் பயன் என்ன இனி! பறந்து செல்ல லண்டனுக்கு… (READ MORE)

பொரி கடலை

, , ,

பயணங்களே மனிதனை வளர்த்தெடுக்கின்றன

பயணங்களே ஒரு மனிதனை வளர்த்தெடுக்கின்றன. நூல்களைப் போலவே பயணங்களும் ஒரு மனிதனை ஒரே நேரத்தில் அகத்திற்கும் புறத்திற்கும் தயார் செய்கின்றன. நல்ல பயணங்களை கொண்டவன் பேறு பெற்றவன், நீண்ட நெடிய பயணங்களை கொண்டவன் நற்பேறு பெற்றவன். கிணற்றுத் தவளையாய் கிடக்கும் மனிதனை வெளியிலெடுத்து உலகத்திற்கு விரிவாக்கி உயிர்ப்பூட்டி விடுவது பயணங்களே. பயணத்தின் ஊடே மனிதன் எதிர்கொள்ளும்… (READ MORE)

Paraman Touring