பழைய படங்களைப் பார்ப்பது பல சமயங்களில் பரவசம் தரும்.
மணக்குடியின் வடக்குவெளி வயலின் பேரு வரப்பின் பாட்டையோன்றில் என் மகள்களோடும் சிவப்பிரியன் என்னும் குட்டியோடும் அமர்ந்திருந்த ஒரு மாலையில் எடுத்த படம். எடுத்தது மோகநேச்வரன் எனும் குரு என்று நினைவு.
20.07.2010 என்று நினைவூட்டி சொல்கிறது ஃபேஸ்புக்.
படத்திலிருக்கும் பிள்ளைகள் மூவரும் வளர்ந்து இளங்கலை முடித்து முதுகலை பயிலத் தொடங்கிவிட்டனர்.
‘நாம மட்டும் ஒன்னுமே பண்ணாம அப்படியே இருக்கோமோ!’ என்று எண்ணம் வருகிறது
20.07.2020