கர்நாடகாவின் கிராமப்புறத்து பள்ளிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பள்ளிச் சிறார்களுக்கு காலையுணவு தரும் திட்டத்தை ‘அக்சய பாத்ரா’ என்ற பெயர் கொண்டு செயல்படுத்தியது கிருஷ்ண பக்தி இயக்கமான ‘இஸ்க்கான்’, கிராமப்புற சிறார்களுக்கு ஊட்டச் சத்து கிடைத்தது. பலரால் பாராட்டப்பட்ட திட்டமது.
(சில பள்ளிகளில் காலை உணவும் மதிய உணவும், பல பள்ளிகளில் மதிய உணவு மட்டும் )
புதுவையில் அப்படியொரு திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. அடித்தட்டுப் பிள்ளைகளுக்கு ஊட்டச் சத்து கிடைக்கும். தொடக்கத்தில் சில பல குறைபாடுகள் வரலாம், களையப்படலாம், பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டம் மிக அருமையான முன் மாதிரியான, அரசியல் தாண்டி பாராட்டப்பட வேண்டிய திட்டம்! வாழ்த்துகிறோம்!
- பரமன் பச்சைமுத்து
சென்னை
21.07.2020
Facebook.com/ParamanPage