செய்தித்தாள்களைக் கூட வாசிக்காமல் வெறும் மீம்ஸை படித்துவிட்டு பேசும் இளசுகளாக இருக்கிறார்களே, வாசிப்புப் பழக்கமே குறைகிறதே என்று கவலைப்படுவோர்க்கு ஒரு சிறு புள்ளி வெளிச்சம் தந்திருக்கிறது தமிழ்நாட்டு அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம்.
சமீபத்தில் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இளைஞர்களை கலை பண்பாடு நோக்கி நகர்த்தும் முயற்சியாக ‘வேள் பாரி’ புதினம் பற்றியும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றியும் கேள்விகள் வைக்கப்பட்டிருந்தனவாம்.
வாசிக்கும் பழக்கத்தை நோக்கி ஒரு சிறு அளவு இளைஞர்களாவது நகர்வர். இது நம் சமுதாயத்திற்கு நல்லது.
வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
09.01.2021
சென்னை
Facebook.com/ParamanPage