‘கவனித்த செய்தி’ :
கோதுமை கொள்முதல் எம்எஸ்பி தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு செலுத்துவதை எதிர்த்து வந்தன பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள். விவசாயிகளின் கோதுமைக்கான எப்சிஐ (உணவுக் கழகம்) தரும் தொகையை இது நாள் வரை தனியார் நிறுவனங்கள் கமிஷன் முறையில் பெற்று வந்தன. அவர்களிடமிருந்து விவசாயிகளுக்கு பணம் சரியாக தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன.
இந்நிலையில் மத்திய உணவுக் கழகம் விவசாயிகளுக்கு கோதுமைக்கான எம்எஸ்பி தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. பஞ்சாப் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 13.71 கோடி, ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ரூ. 735 கோடி என ஏப்ரல் 16 வரையிலான எம்எஸ்பி் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் தருவதை பஞ்சாப் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை மத்திய அரசு ஏற்கவில்லை. நேரடியாக விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
(கவனித்த செய்தி, ‘இந்து தமிழ்’, ஏப்ரல் 21. கடைசிப் பக்கம்)
– மணக்குடி மண்டு.