இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, வலியில்லா தடுப்பூசி, ‘உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி’, அதிக அளவில் வீணாகாது தட்ப வெப்பம் தாங்கும், இந்திய விஞ்ஞானிகள் சாதனை, 3 கட்ட சோதனைகள் முடிந்தது, 66.6% செயல் திறன் கொண்டது, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி தந்தது என இவர்கள் சொல்லும் பலதையும் தாண்டி நாம் பார்ப்பது….
வந்து விட்டது குழந்தைகளுக்கான அனுமதி பெற்ற தடுப்பூசி! 12 வயதிலிருந்து போட்டுக் கொள்ளலாமாம்!
‘ஸைகோவ் – டி’ – இந்தியாவிலிருந்து இன்னுமொரு கொரோனா தடுப்பூசி!
‘சைடஸ் கேடிலா’ நிறுவனம் தயாரித்திருக்கும் இது, ‘கேடில்லா’ ஊசியா என்பது போகப் போகவே தெரியும். 3 கட்ட சோதனைகள் முடிந்து, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதலும் வழங்கியிருக்கிறது. மூன்றாம் அலையிலிருந்து பிள்ளைகள் காப்பாற்றப் படட்டும்.
– பரமன் பச்சைமுத்து
21.08.2021