ஐயிரண்டு திங்கள் கருவில்
சுமந்தவரை
ஆயுள் முழுக்க தன் நெஞ்சில்
சுமக்கிறவரை
கைகளில் ஏந்தி சுமக்கும் அனுபவம் பெற்றேன் இன்றே
நிமிடங்களுக்கு அனுபவம் கூட்டி அடர்த்தியாக்கினேன்
நிகழ்ந்ததை கடந்தும் பதிந்து
மகிழ்கிறேன்
இன்னொரு சென்மமிருந்தால் நீ எனக்கு குழந்தையாய் இல்லை
இன்றே இப்போதே சுமக்கிறேன்
இக்கணமே வாழ்கிறேன்
வெட்கமில்லை, கூச்சமில்லை
ஆர்வமும் அன்பும் மட்டுமே!
இறைவா நன்றி!
– பரமன் பச்சைமுத்து
திருச்செந்தூர்
16.06.2025
#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #amirthampachaimuthu #ParamanPachaimuthu #arupadaiveedu #travel #ParamanLifeCoach #Alaivai #அலைவாய் #Thiruchendur #திருச்செந்தூர் #lordmurugan #திருப்புகழ் #Thirupugazh #Kumaraguruparar #Tholkappiyam