தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருந்த ‘முதியவர்களுக்கான – வீட்டிலிருந்தே வாக்களிக்கும் திட்டம்’ ஒரு பெரும் புரட்சித் திட்டம்.
பல ஊர்களில் கிராமப் பணியார்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் சிறப்பாக இது நிறைவேற்றப்பட்டாலும், அதே அளவு பல ஊர்களில் இந்தத் திட்டத்தை கூடுதல் பணி என்று சொல்லி தவிர்த்த பணியாளர்களும் அதிகாரிகளும் உண்டு.
இன்று தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டமும் மிக முக்கியமானது, சரியாக செயல்படுத்தப்பட்டால் மிகச் சிறந்த பலன்களை அது தரக்கூடும் என்பது என் கருத்து.
ரத்த அழுத்தம், சர்க்கரை என தொற்றா நோய்களால் துன்புறும் முதியவர்களைத் தேடி வீட்டுக்கு வந்து செய்யப்படும் மருத்துவம் என்பது சிறந்த சேவை.
தொடரட்டும் இது. சரியான கட்டமைப்பு கொண்டு சிறக்கட்டும் இந்த சேவை.
வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
21.08.2021