தடுப்பூசி செலுத்த பதிவு செய்து விட்டு கேரளாவில் மக்கள் காத்திருக்க, இங்கே தமிழகத்தில் தடுப்பூசி முழுநாள் முகாம்கள் நடத்தி செப்டம்பர் மாதம் மட்டும் 70.71 லட்சம் தடுப்பூசி செலுத்தி கலக்கியிருக்கிறது தமிழக அரசு.
முழுநாள் தடுப்பூசி முகாம்களுக்கு அரசு ஊழியர்கள் களப்பணியாளர்கள் ஞாயிறு காலை 7 மணியிலிருந்து இரவு வரை பணி புரிய வேண்டும் என்பது அவர்களுக்கு, காலை 6 மணிக்கோ அதற்கு முன்போ புறப்பட வேண்டும் போன்ற நிறைய சிக்கல்களை தரவே செய்ததுதான். அதன் பொருட்டு செவிலியர்கள் பணியாளர்கள் போராட்டம் செய்ய, ‘அடுத்த நாள் விடுமுறை’ என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. இதுவும் நல்லதே.
தமிழக அரசுக்கு ‘சபாஷ்!’
– மணக்குடி மண்டு
28.09.2021